சங்கரன்கோயில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலையை அறிவித்திருக்கிறது.ஈழத்தமிழர்கள் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து இப்போது தமிழக தமிழர்கள் மீதான படுகொலைக்கு ஆயத்தமாகி வருகிறது இந்தியா! இந்தியாவின் ஒரு அங்கம் தமிழகம் என்று கூறும் இந்திய அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே முற்றுகை இட்டுள்ளது.ராதாபுரம் வட்டத்தில் 144 தடை உத்தரவும் ,இடிந்தகரைக்கு மின்சாரம் ,குடிநீர்,பால்,காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே கூட இந்த தாக்குதல்கள் கூடங்குளம் மக்கள் மீது நடந்துகொண்டிருக்கலாம்.
தற்போது கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலிசு வெறிநாய்கள்.
தமிழக அரசு அணு உலையை திறக்க எடுத்துள்ள முடிவும்,தமிழ மக்கள் மீது இந்திய அரசு தொடுக்கப்போகும் தாக்குதல்களும் நாம் எதிர்பாராதது அல்ல.காவல்துறை என்றப் பெயரில் திரியும் வேட்டை நாய்களுக்கு வேட்டையாட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.அவைகள் மக்களின் ரத்தம் குடித்து ஆனந்தக்கூத்தாட நாக்கை தொங்க விட்டுக்கொண்டு திரிகின்றன.
மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும், அதை நியாயப்படுத்துவதற்கும் போராட்டக்குழுவையும்,மக்களையும் பயங்கரவாதிகளாக உருவகப்படுத்தும் வதந்திகளை வேட்டைநாய்கள் ஊடகங்கள் மூலம் பரப்பிவருகின்றன.இதை உறுதிப்படுத்தும் வகையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டால், போலீசு மீது போராட்டக்காரர்கள் வெடுகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுப்பார்கள் என்று உளவுத்துறையினர் வதந்தி பரப்பி வருகின்றனர்.
ஆனால் தமது போராட்டத்தையும்,இந்திய அரசு தம்மீது தொடுக்கப்போகும் தாக்குதல்களையும் மக்கள் பலத்தால் மட்டுமே போராட்டக்குழு எதிர்கொண்டது,எதிர்கொள்ளப்போகிறது.
இந்திய அரசை ஆயுதபலத்தால் எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாது என்பது அவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.
கூடங்குளம் மக்களை வேட்டையாட இந்திய அரசு ஆயத்தமாகிவிட்ட அதே நேரத்தில்,இந்த வேட்டையை காரணம் காட்டி போராட்டக்குழு மீது பழிபோட்டு அதில் ஆதாயமடைய –கூடங்குளம் மக்களை தன்பக்கம் இழுக்க-தெரு நாய்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.
எதிரிகள் ஏவிவிட்டுள்ள வேட்டைநாய்களை அடையாளம் கண்டுள்ள கூடங்குளம் மக்கள், இந்த தெருநாய்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஏனென்றால் வேட்டை நாய்கள் தலைமையை ஆயுதத்தால் தாக்கி மக்களை வேட்டையாட துடிக்கிறது.தெரு நாய்களோ தலைமை மீது பழிபோட்டு,தகுதியற்றது என்றுக்கூறி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆதாயம் அடைய துடிக்கிறது.
இருவகைநாய்களும் இருவேறு வழிமுறைகளை கையாண்டாலும் இருவரின் நோக்கமும் ஒன்றுதான்.வேட்டை நாய்களின் வேலையை எளிமையாக்குவதே தெருநாய்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியாகும்.வேட்டைநாய்களை எதிர்கொள்ள,கூடங்குளம் மக்களே தெருநாய்களை உங்கள் அருகில் விட்டுவிடாதீர்கள்,எச்சரிக்கை!
தொடர்புடைய கட்டுரைகள்:

.jpg)


