விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label செங்கொடி. Show all posts
Showing posts with label செங்கொடி. Show all posts

Thursday, 1 September 2011

தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!

நம் உடலுக்கு வைத்துக்கொள்ளும் தீயை, இனி எதிரிகளுக்கு பரிசாய் தருவோம் 

    இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன் சாகடிக்கப்பட்ட நேரு குடும்பத்தின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இந்திய அரசு முடிவு செய்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எட்டுவார கால இடைக்கால தடை விதித்து 30.08.11 அன்று உத்தரவிட்டுள்ளது.இம்முவரின் தூக்கு தண்டனை பிரச்சனையில்,கடந்த சில வாரங்களாக கொந்தளித்த தமிழகம், இந்த இடைக்கால தடையை வரவேற்று பட்டாசு வெடித்துள்ளது!.தூக்கு தண்டனையை நிறுத்த தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய முந்நாள் நடிகையும்,இந்நாள் முதல்வருமான ஜெயாவின் சட்டமன்றம் தூக்குதண்டனையை ரத்துசெய்துவிட்டு ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
                                                              

தூக்குமேடையில் தற்போது நிற்கும் மூவரும் ராஜுவ் கொலையில் நேரிடையாக சம்பந்தம் இல்லாதவர்கள்.கொலையாளிகளுக்கு உதவியவர்கள் என்பதுதான் அவர்களின் மீதான குற்றச்சாட்டு கொலையாளிகளுக்கு அவர்கள் தந்த பொருட்கள் எதற்காக பயன்படுத்த போகிறார்கள்,என்பது கூட தெரியாத அப்பாவிகள்.ராஜிவை கொலை செய்ததாக இவர்களே கூறும்,ஒற்றைக்கண் சிவராஜன்,தானு ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர்.ராஜீவை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறுப்படும் விடுதலை புலிகள் இயக்கமே, இன்று அதன் தலைவர் பிரபாகரன்,உளவு பிரிவு தலைவர் பொட்டுஅம்மன் உட்பட அனைவரும் ஈழ இறுதிக்கட்ட போரில் கோரமாக கொல்லப்பட்டுவிட்டனர்.இவர்கள் மட்டுமல்ல இவர்களோடு சேர்த்து தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக முள்ளிவாய்க்காளில்,50 ஆயிரம் ஈழத்தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர்.தற்போது தூக்குமேடையில் நிற்கும் மூவரும் 21 ஆண்டுகளாக சாவோமா,பிழைப்போமா? என்றுகூட தெரியாமல் தனிமை சிறையில் வைத்து கோரமாக ரசித்த பின்னரும் கூட இந்திய அரசின், தமிழர்களை பழிவாங்கும் கோரப்பசி இன்னும் அடங்கவில்லை.இந்த அடங்கா பசிக்கு ராஜீவை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்பது மட்டும்தானா காரணம்? இல்லை இவர்களின் அடங்காப் பசிக்கு, இதுமட்டுமே காரணமல்ல.ராஜூவ் காந்தி கொலைக்கு பழிவாங்குவதுதான், இவர்களின் நோக்கம் என்றால் இதற்கு முன்னரே இந்திய அரசு தனது சொந்தநாட்டு மக்களாகிய தமிழ்நாட்டு தமிழர்களையே, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து பழிவாங்கிய இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? தமது உரிமைகளுக்காக போராடிய ஈழத்தமிழர் மீது 1987 ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்போட்டு, ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றும்,ஈழத்தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? நிச்சயம் ராஜீவ் படுகொலை மட்டுமல்ல,தமிழர்கள் மீதான இந்திய ஆளும்வர்க்கத்தின்,பார்ப்பன கும்பலின் நலன்களுக்கு எப்போதுமே அது தமிழக தமிழனாக இருந்தாலும்சரி,ஈழத்தமிழனாக இருந்தாலும் சரி எப்போதுமே அடிபணிந்து போனதில்லை.வரலாற்று காலம் தொட்டு பார்ப்பன எதிர்ப்பு கோட்டையின் அடையாளமாக தமிழர்கள் விளங்குகிறார்கள்.மொழி,பண்பாடு,நாகரிகம் என அனைத்திலும் தனக்கென தனி ஒரு பண்பாட்டை உடையவர்கள்.இந்த சுயமரியாதை தன்மான உணர்வை,தமது வழ்க்கை முறையாகவே கொண்டவர்கள்.எப்போதுமே பார்ப்பன பண்பாட்டின் எதிர்ப்பு கோட்டையாகவும்,இதன் காரணமாகவே, அதன் இயல்பிலேயே இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு எதிரான சிந்தாந்த நடைமுறையை தமது வாழ்வியலோடு உள்ளடக்கியவர்கள்.


சங்ககாலத்தில் சமயமற்று வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் சோழர்கள் பார்ப்பன சித்தாந்தத்தை அரச மதமாக ஏற்று அதை தமிழ் சமூகத்தின் மீதும் திணித்தனர்.இதனால் வெகுண்டெழுந்த தமிழர்கள் களப்பிரர்கள் தலைமையில் பார்ப்பன எதிர்ப்பு சமயங்களான சமண,பெளத்தத்தை தமது சித்தாந்தமாக தழுவிக்கொண்டனர்.300 ஆண்டுகள் களப்பிரர்கள் ஆட்சி தமிழகத்தில் கோலோச்சியது.ஆனாலும் பிற்கால களப்பிரர்களில் சிலர் தமது ஆளும்வர்க்க நலனுக்காக பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.இதன் பின் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் களப்பிரர்களை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினர்.பார்ப்பனக்கும்பலின் துணையோடு சமண,பெளத்த மதங்களை கொடுரமாக கொன்றொழித்தனர்.தமிழர்கள் சாதிகளாக கூறுபோடப்பட்டனர்.ஆனாலும் பார்ப்பன எதிர்ப்பு என்பது தமது வாழ்வியலின் ஒரு அங்கமாக ஆக்கிகொண்டனர்.தென்னிந்தியாவில் ஆரியர்களாக அல்லாது பார்ப்பனர்களாகத்தான் ஊடுருவினர்,பிற்காலத்தில் சோழ மன்னர்கள் வட இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை அழைத்து வந்து சகல வசதிகளுடன் குடியமர்த்தினர்.தென்னிந்தியாவில் ஊடுருவிய பார்ப்பனர்களும்,அவர்களின் மொழியான சமஸ்கிருதமும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியவற்றில் ஊடுருவியது.தமிழகத்திலே பார்ப்பன பண்பாடு சமூகத்தின் எல்லா அங்கங்களிலும் ஊடுருவினாலும் தமிழ் மொழியின் குறைவற்ற வளம் காரணமாக தமிழ் மொழிக்குள் அதன் இலக்கண வரம்புக்குள் சமஸ்கிருத்தத்தால் ஒருபோது ஊடுருவ இயலவில்லை.
களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் தந்தை பெரியார் தமிழகத்தை பார்ப்பன எதிர்ப்புக் கோட்டையாக மீண்டும் உருவாக்கினார்.ஆனாலும் தந்தை பெரியாரின் கண்முன்னாலேயே அவர் எழுப்பிய பார்ப்பன எதிர்ப்புக்கோட்டையை அண்ணாதுரை தலைமையிலான பிழைப்புவாத கும்பல் இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு காட்டிக்கொடுத்தது.  
அன்றைய சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் முதல் இன்றைய அண்ணாதுரை,கருணாநிதி,வைகோ,ராமதாசு,திருமா போன்றோரை வைத்து, எப்போதும் கனன்று கொன்டிருக்கும் இந்த நெருப்பில் தண்ணீரை ஊற்றினாலும் அதனை முழுமையாக அணைக்க முடியவில்லை.அது எப்போதும் பற்றிக்கொள்வதற்கு தயாராக தம்மை உருவாக்கிகொண்டு காத்திருக்கிறது.பற்றவைக்கத்தான் தேவை ஒரு தீக்குச்சி மட்டுமே,அந்த தீ குச்சியாக ஈழ இறுதிப்போரின் போது முத்துக்குமாராகவும்,தற்போது செங்கொடியாகவும் இருக்கிறது!


 மூவரின் தூக்குதண்டனையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு,தமிழினத்தின் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அனைவரும் ராஜீவ் கொலையை நாங்கள் ஆதரிக்கவில்லை,அது கோரமானது.இப்படிப் பட்ட நடவடிக்கைகளை நாங்கள் என்றும் ஆதரித்ததில்லை,ஆதரிக்க போவதுமில்லை என்றுதான் சத்தியம் செய்கிறார்கள்.இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு,இந்தியாவின் தெற்காசிய மேலாதிக்க நோக்கத்திற்கு தாங்கள் எப்போதுமே எதிரிகளில்லை,என்றும் இந்தியாவின் பிராந்திய துணை வல்லரசு நோக்கங்களுக்கு சிங்களவர்களை விட,தமிழர்களே உண்மையான நண்பர்கள் என்று சாமியாடினாலும் இதை நம்புவதற்கு,இந்திய ஆளும்வர்க்கங்கள் தயாரில்லை.ஏனேன்றால் தமிழனின் தன்மானத்திற்கும்,சுயமரியாதைக்கும் சோதனை வரும்போதெல்லாம்,தனது உடலில் தீ வைத்துக்கொள்வதற்கு முன்னர் யாரென்றே தெரியாதவர்கள்,தனது சாவுக்கு பின்னர் தமிழர்களின் தலைவர்களாகிவிடுகின்றனர்.உயிரற்ற அவர்களின் உடல்கள் மொத்த தமிழினத்தையே தலைமையேற்று வழிநடத்துகிறது.


     சென்னை உயர்நீதிமன்றம் 8 வார இடைக்கால தடை விதித்திருந்தாலும் இது நிரந்தரமாகுமா? இல்லையா? என்பது இக்காலக்கட்டத்தில் தமிழர்கள் எப்படி நடந்துகொள்ளபோகிறார்கள்.என்பதை பொருத்தே அமையபோகிறது.அது இந்திய ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்கு எஞ்சியதையும் இழக்க போகிறதா? அதாவது பல்லாயிரம் ஆண்டுகளாக நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டே இருக்கும் தமிழர்களின் தனித்த அடையாளங்களை விடப்போகிறதா,இல்லையா என்பதுதான். ஆகவே இந்த தூக்குதண்டனையும்,இடைக்கால தடையும் தமிழர்களுக்கு இந்திய ஆளும்வர்க்கங்கள் வைத்திருக்கும் பரிசோதனை!  


     இப்போது நம்முன்னே இரண்டு வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
1.பார்ப்பன எதிர்ப்பு,சுயமரியாதை,தன்மானம்,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை தூக்கியெறிந்துவிட்டு அடங்கிவிடு………..
2.மேற்கண்டவைகளை விட மறுத்தால் மூவரின் தூக்கு நிச்சயம்!


     இதில் இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு நமக்கு நிபந்தனை விதித்துள்ளது.இதில் முதலாவதை செய்து மூவரையும் காப்பாற்றுவது என்று தமிழின தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள்.


ஆனால்,இதை எங்களால் ஏற்க முடியாது என்று முத்துக்குமார்,செங்கொடி தலைமையிலான சுயமரியாதை தன்மானத் தமிழர்கள் முழக்கமிடுகிறார்கள்.


ஆம் நாம் இரண்டாவதை தேரிவு செய்ய முடியுமே தவிர,முதலாவது நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது.கெஞ்சவோ,கூத்தாடவோ முடியாது அப்படியானால் அம்மூன்று தமிழர்களின் சாவு நிச்சயம் தானா?அதை தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லையா?ஏன் இல்லை. வழி இருக்கிறது.அந்த வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலும் நமக்கிருக்கிறது.தேவை தலைமை மட்டுமே.எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுபோகும்.நம் உடலில் நாம் தீ வைத்துகொள்வதற்கு பதில் இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு கனவுகளுக்கு கொல்லி வைப்போம்.இதை செய்வதன் மூலம் அம்மூவரின் உயிரை மட்டுமல்ல,பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் காத்துவரும் பார்ப்பன எதிர்ப்பு,தன்மானம்,சுயமரியாதை,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றுவோம்.



     இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு என்ற வார்த்தைக்கான பொருளை புரிந்து கொண்டால் தான்,அதை கருக வைப்பதற்கான நெருப்பை எங்கே வைப்பது என்ற துல்லியமான முடிவுக்கு நாம் வரமுடியும்.


     பொதுவாய் தெற்காசிய துணை வல்லரசு என்ற வார்த்தையை கேட்ட உடனே பலரும் நம் நாடு வல்லரசு என்று பாமரத்தனமாய்,பெருமிதம் கொள்கிறார்கள்.இந்த பெருமிதத்தை தமிழினத் தலைவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள்,தங்களால் முடிந்த அளவிற்கு பரப்ப முயற்சிக்கிறார்கள்.அது முழுமையாக வெற்றி பெறுவதில்லை,என்றாலும் தமிழகத்தில் ஆகப்பெரும்பாலோனோரை சூடு,சொரணை அற்றவர்களாக- தமிழின தலைவர்களை போன்றே- பிழைப்புவாதிகளாக மாற்றிவிடுகிறது.இதையும் மீறி பற்றிகொள்ளும்,நெருப்பு தானே தனிந்து போகிறது.ஆகவே தெற்காசிய நலன் என்றால் என்ன என்பதை  இனி சுருக்கமாக பார்ப்போம்.


இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு  நலன் என்பதன் பொருள்.


இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட        ஆண்டு 1998. அது நடைமுறைக்கு வந்த ஆண்டு 2000.


முதலீடு            
* 1990-ல் இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீட்டு அளவு  ரூபாய் 200 கோடி
* 2006-ல் இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீட்டின் அளவு ரூ.7500 கோடி


வர்த்தகம்.
* 2000-த்தில் ரூபாய் 32 ஆயிரத்து 900 கோடி
* 2007-ல் ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 300 கோடி


இலங்கைக்கான இந்திய ஏற்றுமதியின் அளவு ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி.


இலங்கையில் இருந்து இந்தியவிற்கான இறக்குமதியின் அளவு  ரூபாய் 25 ஆயிரம் 825 கோடி.


வரித்தள்ளுபடி:
1.இந்தியாவும்,இலங்கையும் 1998 சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 2000-த்திற்கு பிறகு மூன்றாண்டுகளில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் 4 ஆயிரத்து 150 பொருட்களுக்கு வரித்தள்ளுபடி செய்த்தது இந்திய அரசு.
2 இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் 3 ஆயிரத்து 932 பொருட்களுக்கு இறக்குமதி வரியை தள்ளுபடி செய்தது இலங்கை அரசு.


மேற்கண்ட விவரத்தை பார்க்கும் போது இலங்கைக்கு ஆதரவான முடிவாக நமக்கு இது தோன்றும்.உண்மையில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தேயிலை,ரப்பர்,தாவர எண்ணை,மரங்கள்-மரச்சாமான்கள்,ஏலம்,மிளகு,மீன் உணவு,தாது பொருட்கள்,ஆடைகள் போன்ற நவீன தொழில் நுட்பம் தேவையற்ற பொருட்களே ஆகும்.இப்படிப்பட்ட பொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்து அவற்றிற்கு வரியையும் தள்ளுபடிசெய்வது, அப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும், சிறு உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும் என்றாலும்,அதை பற்றி கவலைப் படாமல்.இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக, இலங்கையை எப்பொழுதுமே,தனது அடிமையாக வைத்துக்கொள்ள இப்படிப் பட்ட சலுகைகளை தந்து இந்திய அரசு திட்டமிடுகிறது.அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் அனைத்தும் நவீன தொழிற்துறை பொருட்களாகும்.


இலங்கையில் இந்தியாவின் எந்தெந்த முதலாளிகள், எந்தெந்த துறைகளில் முதலீடு செய்து கொழுத்து வருகிறார்கள்,என்ற விவரத்தை  இனி சுருக்கமாக பார்ப்போம்.


தேயிலை.
டாடா (பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் டாடாவுக்கு சொந்தம்)


ஆட்டோ மொபைல்:
1.அசோக் லேலண்டு
2.மாருதி.
3.பஜாஜ்.


இம்மூன்று நிறுவனங்களும் இலங்கையின் மொத்த சந்தையில் பாதியை கட்டுப்படுத்துகின்றன.இதில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் அசோக் லேலண்டு.


எண்ணெய் எரிவாயு:
1.இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்.
2.2006-க்கு பிறகு ரிலையன்ஸ்


தொலைத்தொடர்பு:
1.ரிலையன்ஸ் கம்யுனிகேசன்:-ரூபாய் ஆயிரத்தி 200 கோடி மூலதனம் போட்டு 50 லட்சம் இணைப்பு பெற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
2.ஏர்டெல்:- ரூபாய் 7500 கோடி மூலதனத்துடன் 2009-ல் இலங்கைக்குள் நுழைந்துள்ளது.


தகவல் தொழில்நுட்பத்துறை:
மகிந்திரா கட்டுநாயகாவில் 65 ஏக்கரில் சிறப்புபொருளாதாரமண்டலம் அமைத்துள்ளது.


இரும்பு,சிமெண்ட்:
1.அல்ட்ராடெக் 2.அம்புஜா


பெயிண்ட்:
ஏசியன் பெயிண்ட்.


·         மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் மொத்த தகவல்களில் சிறு அளவு மட்டுமே.அதாவது அரசியல்,பொருளாதாரம்,ராணுவ ரீதியாக இலங்கையை தமது அடிமையாக மாற்றத்தான் இந்திராகாந்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையை பறித்து, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்.


·         இலங்கையை மிரட்டிபணிய வைக்கத்தான் ஈழப்போராளிகளுக்கு இந்தியாவில் இராணுவ பயிற்சி தந்தார்.இலங்கை அடிபணிந்த பின்னர்,ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் போட்டு ஈழத்தை இந்திய ராணுவம் ஆக்கிரமித்தது.


·         இந்திய ராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கான தண்டனைதான் ராஜீவ்காந்தியின் சாவு.பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொலைசெய்ய,பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய காரணமான ராஜீவ் அதற்கான தண்டனையை பெற்றது,அவரே தேடிக்கொண்ட முடிவாகும்.இதற்காக நாம் வருத்தப்படவோ,கண்ணீர் சிந்திக்கவோ தேவையில்லை.


இதற்கு பின்னர் 2000-த்தில் நடைமுறைக்கு வந்த இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை,இந்திய முதலாளிகளின் நலனை பாதுகாக்கத்தான் ஈழத்தில் இறுதிப்போரை இந்தியா நடத்தியது.
விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த 1000 கணக்கான போராளிகளையும்,ஐம்பதாயிரம் ஈழத்தமிழர்களையும் கோரமாக கொன்று குவித்தது.ஈழ இறுதிபோரில் இலங்கையின் போர்க்குற்றத்தை சர்வதேச சமூகம் விசாரிக்கவிடாமல் தடுத்துவருகிறது.



இதன் தொடர்ச்சிதான் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரையும் தூக்கிலிட்டு இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கு எதிரான தமிழனின் சுயமரியாதை,தன்மானம்,நாகரிகம்,பண்பாடு,பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றை கைவிட இந்த முதலாளிகள் சார்பில் இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது..அதற்காக தமிழிர்களாகிய நமக்கு எட்டுவாரகால அவகாசத்தை சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ளது.



·         ஆகவே,மூவரின் தூக்குத்தண்டனை என்பது அம்மூவரின் தனிப்பட்ட விவகாரம் அல்ல.பத்துகோடி தமிழனின் வாழ்வாதாரப்பிரச்சினை.எனவே,இந்திய முதலாளிகள் நமக்கு வைத்துள்ள இரண்டு நிபந்தனைகளையும் நிராகரிப்போம்!



·        எந்த இந்திய முதலாளிகளின் லாப வேட்டைக்காக பல்லாயிரக்கணக்கான ஈழம்தமிழர்களை கொன்று குவித்தார்களோ,எந்த முதலாளிகளின் நலன்களுக்காக பத்துகோடி தமிழர்களின் வாழ்வாதாரத்தையே நரபலி கொடுக்க கேட்கிறார்களோ அந்த முதலாளிகளின் நலன்களுக்கு நாம் தீ வைப்போம்!



·         எந்தெந்த இந்தியமுதலாளிகள் இலங்கையின் வளத்தை கொள்ளையடிக்கிறார்களோ, தமிழகத்தில் இயங்கும் அந்த இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நிறுவனங்களை செயல்படவிடாமல் முடக்குவோம்!அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிப்போம்!



·         சென்னை உயர்நீதிமன்றத்தின் எட்டுவார கால அவகாசம் தமிழர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியல்ல! அது இந்திய முதலாளிகளால் நமக்கு வைக்கப்பட்டுள்ள நிபந்தனை! ஆகவே இந்திய முதலாளிகளின் நிபந்தனையை ஏற்க முடியாது என்று வீதியில் இறங்கி கொக்கரிப்போம்!



·         தூக்கு தண்டனையை எதிர்த்து வேலூர் கோட்டையை பத்து லட்சம் பேரைக்கொண்டு முற்றுகையிடப்போவதாக வெற்றுச்சவடால் அடிக்கும்,தமிழினத்தலைவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தமிழின துரோகிகளை புறந்தள்ளுவோம்!



·         தமிழகத்தில் இருந்தே இலங்கையில் செயல்படும் இந்திய முதலாளிகளின் நிறுவனங்களை விரட்டும் பணியை இன்றே,இப்போதே துவக்குவோம்!



இது ஒன்றே அம்மூவரின் உயிரை மட்டுமல்ல, பத்துகோடி தமிழனின் வாழ்வாதாரத்தையும்,பாதுகாக்கும்!

நம் உடலுக்கு வைத்துக்கொள்ளும் தீயை, இனி எதிரிகளுக்கு பரிசாய் தருவோம் !


                                     புரட்சிகர வாழ்த்துக்களுடன்
                                       சூறாவளி நிர்வாகக்குழு


Monday, 29 August 2011

செங்கொடி மூட்டிய தீ! உங்களையும் சுடட்டும்!! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!-வினவு


”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் செங்கொடி
கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் தன் அப்பாவை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து அவருக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அந்த விநாடி முதல், இதோ 21 வயது இளம் பெண்ணாக வளர்ந்திருக்கும் இந்த நொடி வரை, செங்கொடிக்கு எல்லாமும் சித்தப்பாதான். சகலமும் ‘மக்கள் மன்றம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான். செங்கொடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சேகருக்கு முழுமையாகத் தெரியும். அதனாலேயே செங்கொடி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். காரணம், இதே கேள்விக்கான விடையைத் தேடிதான் அவரும் பல ஆண்டுகளாக மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கை கோர்த்த படி கலந்து கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து மூவரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.
இதனை எதிர்த்துதான் அந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில்தான் இருவரும் கலந்துக் கொண்டிருந்தார்கள். செங்கொடி கேட்ட கேள்விக்கு ஒருவேளை சற்றுத் தள்ளி கைகோர்த்தபடி நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி விடையளிக்கலாம் என்ற ஆர்வத்தில் சேகர் எட்டிப் பார்த்தார். முழக்கங்கள் எழுப்புவதில் மும்முரமாக இருந்த வைகோ, இவர்களை கவனிக்கவில்லை. சரி என்று சேகரும் அமைதியாகிவிட்டார்.
தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்
தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்
ஆனால், செங்கொடி அமைதியடையவில்லை என்பதும், அவருக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை அடுத்த இரண்டு நாட்களில் அவரே கண்டடைவார் என்பதும், தனக்கு சரியென்று பட்ட அந்த விடையை தன் உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு தெரிவிப்பார் என்பதும், சித்தப்பா சேகர் அறிந்திருக்கவில்லை.
சரியாக ஆகஸ்ட் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்…’ என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.
தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல்என்னுடைய உடல்இந்த தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன்செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி
என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.
ஜன் லோக்பால் மசோதா கோரி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே, தனது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அன்று காலை 10 மணியளவில்தான் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். அதே தினத்தின் மாலையில்தான், தமிழக மக்களின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அரசை கண்டித்து செங்கொடி தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.
______________________________________
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!”இப்படி அவ செய்வானு நாங்க நினைச்சே பார்க்கலீங்க…” காஞ்சிபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் கட்டடத்தை வெறித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் சேகர். நள்ளிரவின் அடையாளம் அந்த மருத்துவமனைக்கு நூறடி தள்ளித்தான் தெரிந்ததே தவிர, பிரேத பரிசோதனை கிடங்கின் வாசல் முழுக்க உக்கிரத்தின் வெளிச்சம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
”பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி, இதோ இந்த ஆஸ்பத்திரி வாசல்லதான் சரஸ்வதி அழுதுகிட்டு நின்னா. தப்புத் தப்பு செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா. காரணம், அந்தப் பேரை வைச்சது அவ அப்பா.
ஓரிக்கை கிராமத்த சேர்ந்தவங்க நாங்க. எங்கண்ணன் பேரு பரசுராமன். செங்கொடிக்கு தங்கச்சியும், தம்பியும் பொறந்ததும் அவங்கம்மா இறந்துட்டாங்க. உடனே எங்கண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, வந்த மகராசி செங்கொடியையும் அவ தம்பி, தங்கச்சியையும் தன் கொழந்தைங்க போலவே பார்த்துகிட்டா. அதனாலயே செங்கொடி அந்த மகராசியை ‘சித்தி’னு கூப்பிட மாட்டா. ‘அம்மா’னுதான் வாய் நிறைய கூப்பிடுவா.
எங்கண்ணன் கூலித் தொழிலாளிங்க. நாடாறு மாசம், காடாறு மாசம்னு கிடைச்ச வேலைய செய்துட்டு இருப்பாரு. பல நேரம் வேலையே இல்லாம சும்மாவும் இருப்பாரு. சுபாவத்துல நல்லவரு. ஆனா, அதிகம் குடிப்பாரு. அதனாலயே அப்பப்ப அவருக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். தன் ரெண்டாவது பொண்டாட்டிய, செங்கொடிய, அவ தம்பி, தங்கச்சிய அது மாதிரி நேரத்துல அடிப்பாரு. தன்னை அடிக்கிறத கூட அந்த மகராசி தாங்கிட்டா. ஆனா, தன்னோட கொழந்தைங்களா நினைக்கிற மூத்தா தாரத்து பசங்களை எங்கண்ணன் அடிக்கிறதை அவங்களால தாங்கிக்க முடியலை.
ஒருநாள் இத தட்டிக் கேட்டாங்க. உடனே எங்கண்ணன், அந்த மகராசி மேல கெரசின் ஊத்தி கொளுத்திட்டாரு. அதிர்ந்து போய் செங்கொடியும், அவ தங்கச்சியும் இத பார்த்துட்டு நின்னாங்க. செங்கொடி சுதாகரிக்கறதுக்குள்ள அவ தங்கச்சி, ‘அம்மா’னு கத்திகிட்டே போய் அந்த மகராசிய கட்டிப் பிடிச்சிகிட்டா. இதைப் பார்த்த செங்கொடி அழுது கூச்சல் போட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து நெருப்பை அணைச்சு ரெண்டு பேரையும் இதோ, இதே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு வந்தாங்க.
கடைசில செங்கொடியோட தங்கச்சியதான் காப்பாத்த முடிஞ்சுது. ‘அம்மா’னு அவ பாசமா கூப்பிட்ட அந்த மகராசிய காப்பாத்த முடியலை. சொன்னா நம்ப மாட்டீங்க. 10 வயசு பொண்ணா, தைரியமா, செங்கொடி அவ அப்பாவ போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா.
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!‘மக்கள் மன்றம்’ அமைப்போட நான் ஆரம்பத்துலேந்தே தொடர்புல இருக்கேன். என் மூலமா செங்கொடிக்கும் அந்த மன்றத்தோட பழக்கம் உண்டு. அதனால நேரா அவ மன்றத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. நாலு வருஷம் எங்கண்ணன் வேலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தாரு. ஆனா, செங்கொடி அவரை மன்னிக்கவும் இல்ல… ஏத்துக்கவும் இல்ல. இந்த 11 வருஷங்களா தன் அப்பாகிட்ட ஒரு வார்த்த கூட அவ பேசலைனா பார்த்துக்குங்க…
அவள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன். ஆனா, அவ ‘அம்மா’வ நெருப்புக்கு பறிகொடுத்துட்டு எந்த இடத்துல நின்னு அழுதாளோ… அதே இடத்துல அதே மாதிரி எரிஞ்சு கரிக்கட்டையான அவள பார்த்து நான் அழுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க…” கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக தத்தளித்தபடி அழுத சேகர், சட்டென்று  மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பித்தார்.
காவல்துறையின் சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஒலி எழுப்பியபடி யாராவது பிரச்னை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு நகர்ந்தது. ஆங்காங்கே சிதறியிருந்த நான்கைந்து காவலர்கள் அந்த இருட்டிலும் கண்ணாடி மூடப்பட்ட வாகனத்தை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
ஆற்றாமையில் காஞ்சி மக்கள் மன்றத்தினர்
__________________________________
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் மகேஷ்
”இருளர் சமுதாயத்துக்கு எப்படியாவது கல்வி அறிவு கொடுத்து அவங்களை முன்னேற்றணும்ங்கிறதுனுதாங்க என்னோட லட்சியம். அதுக்காகத்தான் கீழ்கதிர்பூர் கிராமத்துல ‘மக்கள் மன்ற’த்தை நடத்திகிட்டு இருக்கேன்…” நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாததால், மகேஷின் (மக்கள் மன்றத்தின் அமைப்பாளர், பெண்) குரல் கம்மியிருந்தது.
”காஞ்சிபுரம் மாவட்டத்துல இருளர் இன மக்கள் அதிகம். அதுல பெரும்பாலானவங்க அவங்க குழந்தைங்களோட செங்கல் சூளைல கொத்தடிமையா இருந்தாங்க. நாங்கதான் பெரிய அளவுல போராட்டம் நடத்தி அவங்கள எல்லாம் மீட்டோம். இதுக்காக சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.
அப்படித்தான் ஓரிக்கை கிராமத்துக்கு நாங்க போயிருந்தப்ப செங்கொடி எங்களுக்கு அறிமுகமானா. அப்ப அவ 5வது படிச்சுட்டு இருந்தா. ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும். இந்தப் பொண்ணை நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு நாங்க மன்றத்துல பேசுவோம்.
இந்த நேரத்துலதான் செங்கொடியோட சித்தி இறந்து போனாங்க. அதுக்கு காரணம் அவ அப்பாங்கிறதால திரும்ப அவ தன்னோட கிராமத்துக்கு போக விரும்பலை. நேரா இங்க வந்துட்டா. எங்க அமைப்பை சேர்ந்தவங்கதான் அவள எங்க பொண்ணு மாதிரி வளர்த்தோம்.
ரொம்ப சாப்ட் டைப். அதே சமயத்துல ரிசர்வ்ட் டைப்பும் கூட. அவளுக்கு எழுத, படிக்கத் தெரியுங்கறதால எங்க கிட்ட வந்ததும் நாங்க வைச்சிருக்கிற புத்தகங்களை எடுத்து, புரியுதோ, புரியலையோ படிப்பா. சந்தேகத்தை கேப்பா. அவள தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்ப நாங்க முடிவு செஞ்சோம். ஆனா, தீர்மானமா பள்ளிக்கு போகறதை மறுத்துட்டா. இங்கேந்தே படிக்கிறேன்னு சொல்லிட்டா. வற்புறுத்தி பார்த்த நாங்க, அவ போக்குலயே விட்டுட்டோம். ஆனா, பிரைவேட்டா அவள படிக்க வைக்கிறதை மட்டும் நாங்க நிறுத்தலை.
எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா. ‘நம்ம சமுதாயம் முன்னேறணும்னா நாம எல்லாம் படிக்கணும்’னு தன்னை விட வயசு குறைஞ்சவங்ககிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவா. வார இறுதில படிக்கிற பசங்களுக்கு நாங்க டியூஷன் மாதிரி எடுப்போம். அப்ப சொல்லிக் கொடுக்கறதுல முதல் ஆளா செங்கொடிதான் வந்து நிப்பா.
அவளுக்கு இசையில ஆர்வம் அதிகம். பறைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சானா, இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்கும். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!இப்படி கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு. எந்நேரமும் புத்தகமும் கையுமா இருப்பா. ‘இவர்தான் லெனின்’ நூல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். குறைஞ்சது முப்பது முறையாவது அந்த நூலை படிச்சிருப்பா. அதை மனப்பாடமா ஒப்பிப்பா. ஆனா, அர்த்தம் புரிஞ்சுதான் அவ அப்படி செய்வா.
சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் நூல்கள்னா அவளுக்கு அவ்வளவு விருப்பம். இவங்களோட புகழ்பெற்ற வாசகங்களை அப்படியே அந்தந்த நேரத்துக்கு எது சரியா இருக்குமோ அப்ப சொல்லுவா.
‘உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ, அவரும் சே-வும் தோழரே…’ங்கிற சேகுவேராவோட வாசகம் செங்கொடிக்கு அவ்வளவு பிடிக்கும்.
ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டறியே… பேசாம தபால்ல டிகிரி படி’னு சொன்னாரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’
இப்படிதான் செங்கொடி, இருந்தா… வாழ்ந்தா. இதுக்காகவே நாங்க நடத்தற அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்லயும் கலந்துகிட்டா. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.
பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா. 2009- மேக்கு பிறகு அவ அதிகம் பாடி ஆடினது, ‘களத்திலிருக்கும் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறேன்…’, ‘இமயத்தின் சிகரத்திலே எங்கள் விடுதலையின் முழக்கங்கள்…’
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
மக்கள் மன்ற குழந்தைகளுடன்
பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. அவ்வளவு ஏன், செங்கொடி கூட தன்னோட கருத்தை முன்வைக்கும்போது இதைப் பத்தி பேசினதும் இல்ல. ஆதரிச்சதும் இல்ல.
முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பிறகு அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா. அதுக்கு பிறகு தொடர்ச்சியா ஈழம் தொடர்பா படிக்கறது, காணொளிகளை பார்க்கறதுனு இருந்தா. ராஜீவ்காந்தி கொலை வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தனோட கருணை மனுக்கள் ஜனாதிபதியால நிராகரிக்கப்பட்டதும் நிலை கொள்ளாம தவிச்சா. அவங்க மூணு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லிகிட்டே இருந்தா. அவங்களுக்காக நடந்த அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டத்துலயும் கலந்துகிட்டா.
பைக் ரேலி வேலூருக்கு போனப்ப செங்கொடியும் வந்தா. ஆனா, இயக்கம் சார்பா ஒருத்தர்தான் சிறைக்குள்ள போய் அவங்க மூணுபேரையும் பார்க்க முடியும்னு நிலை இருந்ததால என்னை உள்ள அனுப்பிட்டு அவ வேலூர் சிறைக்கு வெளிலயே காத்திருந்தா. நான் திரும்பி வந்ததும் ‘அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்க… மன உறுதி எப்படி இருக்கு’னு துருவித் துருவி கேட்டா.
சென்னை கோயம்பேடுல வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கறதை கேள்விப்பட்டதும் அங்க போகணும்னு துடிச்சா. ஆனா, படிக்கற பசங்களுக்கு பாடம் சொல்லித் தர வேலை இருந்ததால அவள நாளைக்கி (ஆகஸ்ட் 29, திங்கள்கிழமை) கூட்டிட்டு போறதா சொல்லியிருந்தோம்…”
அதற்கு மேல் பேச முடியாமல் பல நிமிடங்களுக்கு அழுத மகேஷ், சற்றே நிதானப்பட்டதும் தொடர்ந்தார்.
”சனிக்கிழமை அன்னிக்கி நளினி – முருகனோட மக, அரித்ராவோட குரலை டிவில கேட்டா. அதுக்கு அப்புறம் அவ தன்னோட வசத்துலயே இல்ல. ’21 வருஷங்கள்ல ஒரேயொருமுறைதான் தன் அப்பா – அம்மாவ அரித்ரா பார்த்திருக்காளா?’னு திரும்பத் திரும்ப கேட்டா.
முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு. முத்துக்குமாரோட இறுதி ஊர்வலத்துல கூட எங்களோட கலந்துகிட்டா. அரித்ராவோட குரல், அவளோட தழும்பை கீறி விட்டா மாதிரி இருந்திருக்கணும். ஒரு மாதிரி மவுனமாவே இருந்தா. நாங்க அவளுக்கு உடம்புதான் சரியில்லை போலனு கோயம்பேடு உண்ணாவிரதத்துக்கு இன்னிக்கி (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28) காலைல கிளம்பி போனோம்.
மாலை 5 மணி போல திரும்பி வந்த எங்களுக்கு செங்கோடிய காணாதது முதல்ல பெரிசா தெரியலை. ஏன்னா, அவ பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு அடிக்கடி போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பா. அதுமாதிரி போயிருக்கா போலனு நினைச்சோம்.
ஆனா, டிவிஎஸ் 50 எக்ஸ்எல் வண்டி, வழக்கமா நிக்கிற இடத்துல இல்ல. அலுவலகத்துல இருந்த பிள்ளைகளும் செங்கொடி அக்காவ ரொம்ப நேரமா காணும்னு சொன்னாங்க. அப்படியே உடம்பெல்லாம் பதறிடுச்சு. முந்திரிதோப்புக்கு வண்டில போக மாட்டா. அதனால நாங்க எல்லாரும் நாலா பக்கமும் சிதறி செங்கொடிய தேடினோம்.
அப்பத்தான்…”
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் செங்கொடி சடலமாக
வார்த்தைகள் தடைப்பட, குரல் மேலும் உள்ளிரங்க வெடித்து அழுதார் மகேஷ்.
அவர் விட்ட இடத்திலிருந்து சில நிமிடங்களுக்கு பிறகு மேகலா தொடர்ந்தார். ”அப்பதான் தாலுகா ஆபீஸ்ல ஒரு பொண்ணு தன்னைத்தானே எரிச்சுகிட்டதா ஃபோன் வந்தது. பதறிப் போய் ஜி.எச்.சுக்கு ஓடினோம். அது செங்கொடிதான்னு அடையாளம் தெரிஞ்சதும் அப்படியே நாங்க நொறுங்கிட்டோம்.
தாலுகா ஆபீஸ் இருக்கிற வளாகத்துலயேதான் தீயணைப்பு நிலையமும் இருக்கு. ஆனா, எங்க தன்னோட போராட்டத்தை அணைச்சுடப் போறாங்களோனு மண்ணெண்ணெய்க்கு பதிலா பெட்ரோலை செங்கொடி பயன்படுத்தியிருக்கா. இதுக்காக தாலுகா ஆபீஸ் பக்கத்துல இருக்கிற ‘வினாயகா பெட்ரோல் பங்க்’ல பாட்டில்ல வாங்கியிருக்கா.
மக்கள்கிட்டேந்துதான் பாடம் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தவ எதனால இப்படியொரு முடிவு எடுத்தானு தெரியல…” மேகலாவாலும் அதன் பிறகு பேச முடியவில்லை. திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி… என அடுத்தடுத்து தலைவர்கள் மகேஷை பார்ப்பதற்காக வந்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த களேபரத்தில் இன்று காலை 7 மணி அளவில் கலைந்த உடைகளுடன் வந்து சேர்ந்த ஒரு பெரியவர், மருத்துவமனையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டதை யாரும் கவனிக்கவில்லை.
செங்கொடியின் கடிதத்தை நகலெடுத்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பெரியவரின் கரங்களிலும் ஒரு நகலை திணித்துவிட்டு சென்றார்கள். அதில் எழுதப்பட்ட வாசகங்களையே உற்றுப் பார்த்த அந்தப் பெரியவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்:
”உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”
‘அடையாளப் போராட்டத்துக்கு பதிலா வேறு போராட்ட வழிமுறையே இல்லையா…’ என்று தன் சித்தப்பாவிடம் கேள்வி கேட்ட செங்கொடி, இந்தப் பெரியவர் சொன்ன பதிலை குறித்தும் யோசிக்க வழியின்றி சாம்பலாகிவிட்டார்.
எந்த முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல் தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடியை அழுத்தம்திருத்தமாக எழுத வைத்ததோ -அந்த முத்துக்குமாரின் அப்பாதான் அந்தப் பெரியவர் என்பதை சூழ்ந்திருக்கும் தலைவர்களை கடந்து யாரால் செங்கொடியிடம் இப்போது சொல்ல முடியும்?
அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார்முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!செங்கொடியின் உடலை வேண்டுமானால் பெட்ரோல் எரித்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண்ணின் உள்ளத்தை மொன்னையான தமிழக அரசியல் சூழல்தான் எரித்திருக்கிறது. ஆகவே இது வெறுமனே தீக்குளிப்பினால் நடந்த தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.
மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.
தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!
____________________________________________________________________
- வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து
____________________________________________________________