விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label ஜெயகாந்த்சிங் உரை. Show all posts
Showing posts with label ஜெயகாந்த்சிங் உரை. Show all posts

Wednesday, 22 September 2010

நாலரை அடி சன்னலில் ஐந்து அடி மாணவன் தூக்கில் தொங்க முடியுமா?

            நாலரை அடி சன்னலில் ஐந்து அடி மாணவன் தூக்கில் தொங்க முடியுமா?
         பெண்ணாடம் அரசினர் ஆதிதிராவிடர் நல விடுதியில் கடந்த 02.09.2010 அன்று விடுதிக் காப்பாளர் மற்றும் இரு சமையல்காரர்களால்,பள்ளி மாணவன் பாரத் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 04.09.2010 அன்று செய்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
        இப்படுகொலையை கண்டித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியை சார்ந்தவர்கள் 20.092010 அன்று பெண்ணாடம் நகரில் தோழர் ரமேஷ் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

        இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாணவன் பாரத்தின்,தாயின் கதறல் கல்மணம் கொண்டோரையும் கரையவைத்தது.பின்னர் மாணவனின் சிறிய தந்தைகள் சுடர்மணி,ஜெயகாந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.அவர்கள் தமது உரையில் மாணவன் பாரத்திற்கு இரு தங்கைகள் உள்ளனர்.இவர்களில் ஒருவருக்கு இருதயத்தில் சரிசெய்ய முடியாத அளவிற்கு கோளாறு இருப்பதாகவும்,தாயிக்கு காச நோய் இருக்கிறது என்றும் கூறினர்.மாணவன் பாரத் அக்குடும்பத்திற்கு ஒரே ஆரோக்கியமான் ஆண் வாரிசு என்றும் கூறியது அனைவரையும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
        அடுத்து உரையாற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திரு.செல்வகுமார் மற்றும் வழக்கறிஞர் திரு.புஷ்பதேவன் ஆகியோர் மாணவன் கொலையில் போலிசார் சட்டத்திற்கு புறம்பாக எப்படி நடந்துகொண்டுள்ளனர் என்பதை தோலுரித்துக்காட்டினர்.
        பின்னர் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த  தோழர்கள் நாகராசன்,ஜெயகாந்த்சிங் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.மாணவர் பாரத்தின் தாயின் கதறல் அனைவரையும் அழவைத்தது.தோழர் ஜெயகாந்த்சிங் பேச்சு பலநூற்றுக்கணக்கானோரை சுண்டி இழுத்ததுடன் அனைவரையும் கொதிப்படைய வைத்தது.
       தோழர் ஜெயகாந்த்சிங் பேச்சு மட்டுமல்ல இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பினரால் போடப்பட்ட முழக்கங்களும் மக்களை உணர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.  
பெண்ணாடம் நகர வரலாற்றில் இப்படி ஒரு எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் இதுவரை நடந்ததே இல்லை என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொணட பகுதிமக்கள் அனைவரும் கூறினார்கள்.இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்,இதில் வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சி வேறு எந்த அமைப்பினராலும் உருவாக்க முடியாது.விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே உருவாக்க முடியும் என்பது மிகையல்ல.ஏனேன்றால் இதே சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(CPI) நடத்திய ஆர்ப்பாட்டம் இப்படிப்பட்ட எந்தவிதமான உணர்ச்சியையும்,கருத்தையும் மக்களிடையே உருவாக்கவில்லை.மாறாக அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்து போனது என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் ஜெயகாந்த்சிங் உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

-தகவல் சூறாவளி செய்திக்குழு-கடலூர் மாவட்டம்.தமிழ்நாடு

தொடர்புடைய பதிவுகள்: 
பெண்ணாடம் பள்ளி விடுதியில் அநீதியைதட்டிக்கேட்ட மாணவன் படுகொலை