விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Saturday, 31 March 2012

தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-2

ஆரிய வருகையும்,போரும் ஆரிய வெற்றியும் விந்திய மலைக்கு வடக்குப்பகுதியில் நடந்தேறியது என்பதையும்,பார்ப்பனியம் ஆரியத்தின் மற்றும் பூர்வகுடி மக்களின் பண்பாட்டின் கூறுகளை உள்ளடக்கிய புதிய வடிவம் என்பதையும் சென்றத்தொடரில் பார்த்தோம்.இன்றைய வட இந்தியப்பகுதிகளில் ஆரியர்கள் வெற்றியாளர்கள் என்பதால் ஆரிய-பார்ப்பனிய பண்பாடு பூர்வகுடி மக்களுக்கு தேவையாக இருந்தாலும்,இல்லாவிட்டாலும்,விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் அவைகள் அவர்கள் மீது நிர்பந்தமாக திணிக்கப்பட்டது.

ஆனால் விந்திய மலைக்கு தெற்கில் பார்ப்பனர்கள் ஊடுருவல்வாதிகள் என்பதால் நயவஞ்சகம்,சூழ்ச்சி,தந்திரம் ஆகியவற்றையே தமது அணுகுமுறைகளாக கொண்டிருந்தார்கள் என்பதையும் சென்றத்தொடரில் பார்த்தோம்.

ஈழப்படுகொலை


வட இந்தியப்பகுதிகளில் ஆரிய வெற்றி,பூர்வகுடி மக்களுடான இனக்கலப்பு,ஆரிய மேலாண்மையின் கீழ் பூர்வக்குடி மக்களின் பண்பாட்டு கூறுகளில் தமது நலன்களையும் உள்ளடக்கிய பார்ப்பனிய பண்பாட்டு முறைகளை உருவாக்கி, அதைக் கொண்டு சாங்கியம்,சமணம்,பவுத்தம் ஆகிய பண்பாட்டு எதிர்ப்பாளர்களையும் முறியடித்து சமூகத்தில் வெற்றிகரமாக நிலைநாட்டிய செழுமையான அனுபவம் ஆகியவற்றை ஆரிய பார்ப்பனர்கள் பெற்றுக் கொண்ட பின்னர்தான் தென்னிந்தியப்பகுதிகளில் ஊடுருவினர்.

செழுமையான அனுபவங்களோடு ஊடுருவியதால் வட இந்திய நிலைமைகளோடு ஒப்பிடும்போது புதிய பகுதி முற்றிலும் வேறுபட்டிருந்தாலும் அதற்கேற்ப தமது அணுகுமுறைகளை உருவாக்கிக் கொள்வதில் பெரும் சிரமம் அவர்களுக்கு ஏதும் ஏற்படவில்லை.

பெரும்பான்மை மக்களிடையே பார்ப்பனர்களும் பார்ப்பனியமும் முதலில் ஆதரவை பெற முடியாவிட்டாலும் பார்ப்பனியம் ஆட்சியாளர்களுக்கு மிகச்சிறந்த அரசத் தந்திர முறையாக இருந்ததால் அவர்களிடையே செல்வாக்கு பெற்றது.

பார்ப்பனியம் ஆட்சியாளர்களிடையே செல்வாக்கு பெறுதல் என்ற நடைமுறை தென்னிந்தியப் பகுதிகள் முழுவதுமே ஏறத்தாழ ஒரே சீரான முறையில் நடந்தேறியதுஆனால் செல்வாக்கு பெறும் தன்மை மக்களிடையே ஒரே சீராக அமையவில்லை.இது ஏற்றத்தாழ்வான போக்கையே கொண்டிருந்தது.

இந்த ஏற்றத்தாழ்வு அந்தந்த பிரதேசங்கள் அல்லது வட்டாரங்களின் சமூக,பொருளாதார,நாகரீகம்,மொழிவளம் இவற்றின் தேவை ஆகியவற்றை பொருத்து அமைந்தது.மேற்கண்ட தேவையின் அடிப்படையில் பார்ப்பனிய நிலைநாட்டலும் வேறுபட்டு இருந்தது.

தென்னிந்திய பகுதிகள் முழுக்கவே திராவிட இனக்குடும்பத்தை சேர்ந்த மக்களே ஆவர். ஆனால் ஒரே இனக்குடும்பத்தை சேர்ந்தவர்களாயினும்  வட்டார அளவில் சமூகம், பொருளாதாரம், நாகரீகம், மொழி ஆகிய துறைகளில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியே நிலவியது. இந்த ஏற்றத்தாழ்வும் இதன் மேம்பாட்டிற்கான தேவை எந்த அளவிற்கு இருந்ததோ அந்த அளவிற்கு பார்ப்பனீயம் நிலைபெறும் தன்மையும் வேறுபட்டிருந்தது.

அதிலும் மொழி, சமூக, பொருளாதாரம், நாகரீகம் ஆகியவற்றின் செழுமையின் வெளிப்பாடு என்பதால் அதற்கேற்பவே மொழியின் வளர்ச்சி அமைந்திருந்தது. எனவே பார்ப்பனியம் முதலில் ஆட்சியாளர்களிடமும் இவர்களின் ஊடாக மொழியிலும் மேலாதிக்கம் பெறத்தொடங்கியது. இதன் அடிப்படையில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது தென்னிந்திய  புதியநிலைமைகளுக்கு ஏற்ப புதிய வடிவிலான பார்ப்பனிய பண்பாடு படிப்படியாக மக்களிடையேயும் செல்வாக்குப் பெறத்தொடங்கியது.      

திராவிட மொழிக்குடும்பத்தின் பல்வேறு வட்டார வழக்குகளில் தமிழ் தவிர்த்த ஏனைய வழக்குகள்,அவற்றின் வளர்ச்சியின் போதாமை,தேவைக் காரணமாக பார்ப்பன,சமஸ்கிருதம் அவற்றில் ஊடுருவி ஆக்கிரமித்தது.இந்த ஊடுருவலுக்கு பின்னரே திராவிட மொழிக்குடும்ப வட்டார வழக்குகளில் இன்று நாம் அறியும் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ஆகியவை உருப்பெற்றன.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு முன் இம்மொழிகள் பல்வேறு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன.

ஆனால் இதற்கு முற்றிலும் வேறுபட்ட நிலையுடன் தமிழ் விளங்கியது.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு பின்னரே பிற திராவிட வட்டார வழக்குகள் ஒரு மொழியாக உருபெற்றதைப் போன்றல்லாமல், தமிழ் பார்ப்பன ஊடுருவலுக்கு வெகுகாலத்திற்கு முன்பே தனிச்சிறப்பான தன்னிறைவான வளர்ச்சியடைந்து செழுமைப்பெற்றிருந்தது.

நாம் ஏற்கனவே பார்த்தது போன்று மொழியின் உருவாக்கம் வளர்ச்சி என்பது சமூகம்,பொருளாதாரம்,நாகரீகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டதாகும்.இதன் படி தமிழ் மொழியின் செழுமை இம்மொழி பேசப்பட்ட பகுதியின் சமூக,பொருளாதார நாகரீக வளர்ச்சியின் அடையாளமாகும்.

எனவே,இன்று தமிழகம் என்று அறியப்படும் பகுதியில் பார்ப்பனியமும்,சமஸ்கிருதமும் இவ்வாட்டாரப் பகுதிகளில் செழுமைப்படுத்த வேண்டிய தேவையின்மையால் இவைகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற முடியவில்லை.அதிலும் தமிழில் அதியுயர்ந்த இலக்கண செழுமை காரணமாக பார்ப்பன சமஸ்கிருதம் எள் முனையளவுக்குக் கூட இதில் நுழைய முடியவில்லை.

ஆட்சியாளர்கள் மக்களை பிரித்தாள பார்ப்பனிய பண்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் கூட அவர்களும் சமஸ்கிருதத்தை தமிழில் நுழைக்க வேண்டிய தேவையேதும் எழவில்லை.அந்த அளவிற்கு தமிழ் மிகச்சிறப்பான,உன்னதமான வளர்ச்சியை கொண்டிருந்தது.

அதே நேரத்தில் விந்திய மலைக்கு தெற்கில் திராவிட இனமக்கள் வாழ்ந்த பகுதிகளில் பார்ப்பனியம் ஊடுறுவிய போது, அது முதலில் ஆட்சியாளர்களிடமும்,பின்பு சமூக பண்பாட்டு,மொழி ஆகியவற்றின் தேவையை பொருத்து படிப்படியாக மக்களிடையேயும் செல்வாக்கு பெறத்தொடங்கியது.

ஆனால் தமிழகத்திலோ,இது ஏனைய திராவிட வட்டார பகுதிகளில் நடந்தேறியதைப்போன்று அந்துணை எளிதாக அமையவில்லை.தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பார்ப்பனிய சமஸ்கிருதம் முழு முற்றான தேவையின்மையால் நிராகரிக்கப்பட்டது.இதே போன்று சமூக,பொருளாதாரம்,நாகரீகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பார்ப்பனியத் தேவை ஏதும் எழவில்லை.ஆனாலும் கூட சங்க காலத்தில் மன்னர்களுக்கு மக்களை பிரித்தாள வேண்டிய தேவைக் காரணமாக அவர்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு,அதை சமூகத்தின் மீது நிர்பந்தமாக திணிக்க முயன்றனர்.

இப்படி பார்ப்பனியத்தை திணிக்க முயன்ற ஒவ்வொரு சமயத்திலும் அதை சமூகம் நிராகரித்தது.இவ்வாறு சமூகம் எந்த அளவிற்கு எதிர்த்து நிராகரித்து முறியடித்ததோ அந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் மக்கள் மீது நிர்ப்பந்தமாக ஒடுக்குமுறைகள் மூலம் பார்ப்பனியத்தை திணிக்க முயன்றனர்.இந்த ஒடுக்குமுறை எந்த அளவில் இருந்ததோ ,அந்த அளவிற்கு அதை எதிர்கொள்ளும் திறனும் தமிழ்சமூகத்திற்கு இருந்தது.

இந்த எதிர்ப்பாற்றல் அதன் செழுமையான வளர்ச்சியின் காரணமாக தமிழ்ச் சமூகம் முழுமைக்கும் சீராக அமைந்திருந்தாலும் அவைகள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக இல்லை.இதுவும் அந்தந்த வட்டார வாழ்வியலின் அங்கங்களாகவும் அதற்கேற்ப வேறுபட்டவைகளாகவும் இருந்தது.இது ஒரே சீரான பொதுமையாக்கப்பட்ட வாழ்வியல் முறையை உள்ளடக்கிய பார்ப்பனியத்தை எதிர்க்கொள்வதற்கு போதுமானதாக இல்லை.இந்த வகையில் அதற்கான தேவை இப்போது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டது.

தொடரும்……..



Friday, 30 March 2012

மின்கட்டண உயர்வுக்கு காரணம்:விவசாயிகளா,பன்னாட்டு நிறுவனங்களா?

தமிழக மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் இன்னல்களில் இப்போது முதன்மையான இடம் பிடித்துள்ளது மின்வெட்டே ஆகும்.அன்றாடம் எப்போது மின்சாரம் வரும்,போகும் என்பது யாருக்கும் தெரியாது.குறைந்தது ஒரு நாளைக்கு பத்துமணி நேரமாவது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் மக்களின் அன்றாட வாழ்வே நிலை குலைந்து போகிறது.சிறு தொழில்கள்,விவசாயம் ஆகியவை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.


மின்கட்டண உயர்வு



மின் வெட்டு


மேற்கண்ட இன்னலோடு மேலும் ஒன்றும் சேரப்போகிறது என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயா அறிவித்துள்ளார்.தமிழநாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.இதை தடுக்க இழப்பை குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.விரைவில் மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சந்திக்கும் இழப்பின் காரணமாக திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் இந்த இழப்பு யாரால்,எதனால் ஏற்பட்டது என்பதை அறிவிக்கவில்லை.
ஆனால்,இந்த இழப்பை ஈடுகட்ட அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறையான மக்கள் மீதான மின்கட்டண உயர்வின் மூலம் இழப்பிற்கு மக்கள்தான் காரணம் எனபதை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.அதிலும் தமிழக மக்களில் பெரும்பான்மையினரான விவசாயிகள் மீதுதான் இக்குற்றச்சாட்டை மறைமுகமாக ஜெயா சுமத்தியுள்ளதுடன், அதற்கான தண்டனையையும் அறிவித்துள்ளார். அதுதான் மின்கட்டண உயர்வு.

மின்கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அறிவித்துள்ளாரே தவிர விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்வேன் என்று முதல்வர் அறிவிக்கவில்லையே.அப்படியிருக்கும் போது விவசாயிகளுக்கு தண்டனை அறிவித்துள்ளார் என்று எப்படி கூறமுடியும் என்ற வினா எழலாம்.உண்மைதான் முதல்வர் நேரடியாக விவசாயிகளுக்கு தண்டனை அறிவிக்க வில்லைதான்.

ஆனால் மின்கட்டண உயர்வால அனைத்து பொருட்களின் விலையும்,மின்கட்டண உயர்வுக்கு ஏற்ப உயர்ந்துவிடும்.நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களும்,நாட்டின் இதரப்பிரிவு மக்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவான வருவாய் உடையவர்களுமான விவசாயிகள், விலைவாசி உயர்வின் காரணமாக தமது வாங்கும் சக்தியை மேலும் இழப்பார்கள்.இதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.

நாட்டிலுள்ள மக்கள் பிரிவினரிலேயே விவசாயிகளுக்கு மட்டும்தான் அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது.எனவே மின்வாரியம் சந்திக்கும் இழப்புக்கு காரணமே விவசாயிகள்தான் என்ற தோற்றத்தையும் அரசு மக்களிடையே தோற்றுவித்துள்ளது,உண்மையில் மின்வாரியம் சந்திக்கும் இழப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தால் தான் ஏற்படுகிறதா?வேறு ஏதாவது காரணங்கள் உண்டா?போன்ற வினாக்களுக்கு ஆம்,இல்லை என்ற ஒற்றை வார்த்தை மூலம் விடை காண முடியாது.

மின் உற்பத்தி,நுகர்வு,நிர்வாகம் ஆகிய அம்சங்களை முழுமையாக கணக்கிலெடுத்து ஆய்வு செய்தால்தான் இன்று மின்சார வாரியம் சந்திக்கும் இழப்புக்கான உண்மையான காரணத்தை நம்மால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.இப்படி உண்மை விவரங்களிலிருந்து சரியானதொரு முடிவுக்கு வந்தால்தான், இதை களைவதற்கான தீர்வு என்ன என்பது பற்றிய சரியான முடிவுக்கும் நாம் வரமுடியும்.

எனவே 1947-க்கு பிந்தைய தமிழகத்தின் மின் உற்பத்தி,மின் தேவை,நுகர்வு,மின் ஆற்றல் மூலம் விளைந்த பொருளுற்பத்தி அகியவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்,

வ.எண்
ஆண்டு
மின் பயன்பாட்டு
அளவு மெகாவாட்டில்
மின் பயன்பாட்டு அதிகரிப்பின் அளவு மெகாவாட்டில்
1
1951
110
-
2
1951-61
301
191
3
1961-74
1470
1169
4
1974-80
2224
954
5
1980-90
3344
920
6
1990-97
6019
2675
7
1997-2002
7924
1905
8
2002-2007
10100
2176
9
2007-2011
12000
1900

மேலே கண்ட அளவில்தான் தமிழகத்தின் மின்தேவை அதிகரித்துவந்துள்ளது.இந்த தேவை அதிகரிப்பில் யார்,யார் எந்த விதத்தில் மின்சாரத்தை நுகர்ந்துள்ளனர் என்ற விவரத்தையும் இப்போது பார்ப்போம்.

வ.எண்
நுகர்வோர் பட்டியல்
மின்சார பயன்பாடு சதவிகிதத்தில்
மொத்த நுகர்வோரில் எண்ணிக்கை சதவிகிதத்தில்
1
தொழிற்சாலை
34.92
2.41
2
வர்த்தக நிறுவனங்கள்
10.43
12.63
3
வீடுகள்
27.5
66.56
4
விவசாயம்
20.93
8.83
5
பிற
6.67
9.57

மேலே கண்ட புள்ளி விவரங்களில் இருந்து எந்தத்துறையினர் மிகக் கூடுதலாக மின்சாரத்தை நுகருகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும்.
விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்துவோர் மொத்த நுகர்வோரில் 75.39% பேர்.இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவு 48.05%

மொத்த நுகர்வோரில் வெறுமனே 15.05% பேரே உள்ள தொழிற்துறையினரும்,வர்த்தக நிறுவனத்தினரும் நுகரும் மின்சாரத்தின் அளவோ 45.35%

விவசாயம் என்று தனியே பிரித்து பார்த்தால் மொத்த நுகர்வோரில்  8.83% பேரான இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவோ வெறுமனே 20.93% மட்டுமே

ஆனால் மொத்த நுகர்வோரில் 2.41% பேரான தொழிற்துறையினர் நுகரும் மின்சாரத்தின் அளவோ 34.92% ஆகும்.

அப்படியானால் மின்சாரத்தை அதிகமாக நுகரும்துறை தொழிற்துறையே தவிர விவசாயம் அல்ல.

இனி எதிர்காலத்தில் விவசாயத்திற்கும்,வீடுகளுக்கும் மின்தேவையின் அளவு அதிகரிக்கப் போவதில்லை.ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு வேளாண் பரப்பளவு குறைந்துவிட்டது.இது இனிவரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதேபோன்று தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஏறத்தாழ மின்வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டதால் இதற்கான மின்தேவையும் அதிகரிக்கப்போவதில்லை.

ஆனால் இதற்கு நேர் எதிராக தொழிற்துறைக்கும்,வர்த்தகத்திற்குமான மின் தேவை அதிகரிக்கும்.

எனவே எதிர்கால மின்சாரத்தேவை என்பது முக்கியமாக தொழிற்துறைக்குதான் அவசியமாகிறது.

ஆனால் நமது ஆட்சியாளர்களோ, மின்சாரத்தின் தேவை அனைத்துப்பிரிவு மக்களுக்கும் அதிகரிக்கும் என்பது போல பேசிவருகின்றனர்.மின்சார உற்பத்தியின் அளவை அதிகரிக்காவிட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பீதியூட்டுகிறார்கள்.இப்படி பீதியூட்டுவதன் மூலம் அணு சக்தியினால் மூலம் கடல்வளம்,விவசாயம்,சுற்றுச்சூழல்,மக்களின் உடல்நலம் ஆகியவற்றுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை மறைத்துவிட முயற்சிக்கிறார்கள்.
அதாவது தொழிற்துறையின் தேவைக்காக மொத்த நாட்டு மக்களின் வாழ்வையும் குழிதோன்ற புதைக்க முயற்சிக்கிறார்கள்.

 இங்கு தொழிற்துறையினர் என்றால் அவர்களில் பெருபான்மையினர் வெளிநாட்டு நிறுவனங்கள்தான்.இவர்களின் வருகைதான் நாட்டின் முன்னேற்றம் என்று மத்திய,மாநில அரசுகள் மக்களிடையே கூறிவருகின்றனர்.இப்படி கூறுவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு எல்லாவிதமான சலுகைகளையும்,வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.இவர்களால் நமது நாட்டிற்கு எவ்வித நன்மையும் இல்லை.
அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கினால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாகவும்,அதன் பிறகு சலுகை விலையிலும் மின்சாரம் தருகின்றனர்.தண்ணீரூம் இலவசமாக தருகின்றனர்.இதே போன்று வரியும் விதிப்பதில்லை.

இந்தியாவில் தொழில் தொடங்குவதால் இலவசமாக மின்சாரம்,தண்ணீர்,மலிவான விலையில் மனித உழைப்பு,வரி இல்லாதது ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அந்நிய நிறுவனங்கள் இங்கு படையெடுக்கின்றனர்.

அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவ்வளவு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய,மாநில அரசுகள் உள்நாட்டு தொழிற்துறைக்கு குறிப்பாக சிறு தொழில்களுக்கு எவ்வித சலுகையும் வழங்குவதில்லை.

மேற்கண்ட விவரத்தை தொகுத்து பார்க்கும் போது எதிர்காலத்தில் மின் தேவைக்கான அதிகரிப்பு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஏற்படப்போகிறது.அதோடு இப்போது தொழிற்துறைக்கு அளிக்கப்படும் மின்சாரத்தில் பெருமளவை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உறிஞ்சிக்கொள்கின்றன.அதுவும் இலவசமாக.
ஆனால் நாட்டில் 80% மக்களுக்கு இன்றளவும் வாழ்வுக்கான ஆதாரமாக உள்ள விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் மின்வாரியம் இழப்பை சந்திக்க நேருவதற்கான காரணம் என ஆட்சியாளர்கள் வதந்தி பரப்புகின்றனர்.

மின்வாரியம் மிகப்பெரிய இழப்பை சந்திப்பதற்கான மிக முக்கியக் காரணம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதும்,மின் வாரிய நிர்வாக சீர்கேடு,ஊழல்,மின் திருட்டு,மின் கம்பிகள் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவைதான் மின்சாரத்துறையின் இழப்புக்கு காரணமாகும்.
மின்சாரத்துறையை இழப்பிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மேற்கண்டவற்றை சரி செய்ய வேண்டும்.இதை செய்வதன் மூலம் மின்வாரித்தை லாபகரமான நிலைக்கு உயர்த்த முடியும்.

ஆனால் தமிழக அரசோ இதை செய்வதற்கு பதில் மின்கட்டணத்தை உயர்த்தி அப்பாவிகளான தமிழக மக்களுக்கு தண்டனை தர முயற்சிக்கிறது.

மத்திய அரசோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக, கூடங்குளம் அணு உலை மூலம் தமிழக மக்களின் உயிர்களை காவு கேட்கிறது.அணுக்கதிர் வீச்சின் மூலம் கடல்,நீர்,நிலம்,காற்று,சுற்றுசூழல் அனைத்தையும் மாசுபடுத்தி தமிழகத்தை பாலைவனமாக்கத்துடிக்கிறது.

இந்த அநீதிகளை இனியும் நாம் சகித்துக்கொள்ள போகிறோமா? தொடரும்….. 


 18 டிசம்பர்-2011 அன்று சூறாவளியில் பிரசுரம் ஆன கட்டுரை, தற்போது மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.


தொடர்புடைய கட்டுரைகள்:

தொடர்புடைய கட்டுரைகள்:



Monday, 26 March 2012

தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-1

இந்தத் தலைப்பைப் படித்தவுடனே பலருக்கும் வியப்பையும் ஆச்சரியத்தையும் சிலருக்கு ஆத்திரத்தையும் கூட ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம்.உண்மை கசக்கத்தான் செய்யும்.வேறு வழியில்லை இதை பற்றி நாம் விவாதிப்பதைத்தவிர!. இப்படி செய்வது நம்மை நாமே புண்படுத்திக்கொள்வதற்காக அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இதைப்பற்றி பரிசீலிக்காமல் இருந்ததும், இருப்பதுமே தோல்விகள் தொடர்கதையாவதற்கு காரணமாகும்.

தமிழகத்தில் வாழும் தமிழர்களாகினும்,இன்றைய இந்தியாவில் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களாயினும்,ஈழம் முதல் உலகில் எந்த பாகத்தில் வாழும் தமிழனும் நிம்மதியாக வாழ்ந்ததாகவோ,வாழ்வதாகவோ நாம் அறிந்தவரையில் ஆதாரம் ஏதுமில்லை.

தமிழர்களின் தோல்வியின் வரலாறு 1500 ஆண்டுகால பழமையானது.இப்படி 1500 ஆண்டுகளுக்கு முன் வீழ்ந்த நாம் இன்றுவரை அதிலிருந்து மீண்டெழவேயில்லை.தோல்வியே தொடர்கதையாகிப்போனது நமக்கு! இந்த நீண்ட நெடிய காலத்தில் நாம சந்தித்த தோல்விகள் கூறித்து தந்தை பெரியாரைத்தவிர வேறு யாரும் பரிசீலித்ததாக தெரியவில்லை.ஆனால்,அவரின் பரிசீலனையும்,செயல்பாடும் கூட அவரின் காலத்திலேயே, அவரின் கண் முன்னாலேயே மீண்டும் ஒரு தோல்வியை தழுவிக்கொண்டுவிட்டது.

1500 ஆண்டுகளுக்கு முன் நாம் தோல்வி அடைந்ததற்கு எது காரணமோ ,அடிப்படையோ அதுதான் இன்றுவரை நமது தோல்விகளுக்கு அடிப்படையும், காரணமும் ஆகும்.உலகில் இந்த நீண்ட நெடியகாலத்தில் ஆயிரமாயிரம்  மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், நமது தோல்விக்கான அடிப்படையில் மட்டும் இன்றுவரை மாற்றமேதும் இல்லை.இது வியப்பையும்,சந்தேகத்தையும் ஏற்படுத்தலாம்.இது இயங்கியலுக்கு புறம்பானதாகவும் கூட நீங்கள் கருதலாம்.மேலோட்டமாக பார்க்கும் போது, இது அப்படித்தான் தோன்றினாலும் நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும் போது இதுவே உண்மையாக உள்ளது.

சமூகம்,பொருளாதாரம்,பண்பாடு,நாகரீகம் ஆகிய துறைகளில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை இன்றைய நிலையோடு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான்.ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் நமது வினையாற்றல்களின் விளைவாக உருவான,உருவாக்கப்பட்ட மாற்றங்கள் இல்லை.இவைகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்களால்,செலுத்துபவர்களால் அவர்களின் தேவைக்கும்,நலன்களுக்கும் உகந்தவாறு திணிக்கப்பட்ட,திணிக்கப்படும் மாற்றங்களாகும்.

மாற்றங்கள் திணிப்பின் மூலம் உருவாக்கப்பட்டவைகள் என்பதால், இந்த மாற்றங்களை நம்மீது திணித்தவர்களின் தேவையும்,நலன்களுமே பிரதானமானது என்பதால், அதனால் ஏற்பட்ட வளர்ச்சியும்,மாற்றங்களும் இயற்கையானதாக அமையவில்லை.அதற்கு மாறாக நான்குதலை,எட்டு கைகளும் உடைய பார்ப்பன கடவுள்களை போன்றும்,ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் விசித்திரமான உருவங்களை போன்றும் விகாரமாக, இயற்கைக்கு புறம்பானதாக காட்சித்தருகிறது.
உடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அளவுக்கு, இச்சமுக மாற்றம் சிந்தனையில் தாக்கத்தை உருவாக்கவில்லை.1500 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கண்ட தோல்விக்கு பின்னர் நம்மீது திணிக்கப்பட்ட பண்பாடும்,வாழ்வியலும் வடிவமாற்றத்தை கண்டிருக்கிறதே அன்றி,அவைகள் மறைந்து போய்விடவில்லை.மேலும், மேலும் அவைகள் தமக்கே உரித்தான வகையில் நேர்மையற்ற முறையிலும்,கூர்மையாகவும் மாற்றம் அடைந்துள்ளன.

எனவே,இவைகளைப்பற்றி நன்கு பரிசீலித்து ,ஆய்வுக்குட்படுத்தி அவற்றை அடையாளம் காணும்போதுதான், அவைகளை தூக்கி எறிவதற்கான வழிமுறைகளை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.ஆகவே,இனி அவற்றைப் பற்றி முடிந்தவரையில் கூர்மையாகவும்,அதே நேரத்தில் சுருக்கமாகவும் பரிசீலிப்போம்.இந்தப் பரிசீலனை நாம், நமது இலக்கை நோக்கிய பயணத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தமிழர்களின் வரலாற்றில் வசந்தகாலமாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் காலம் சங்க காலமேயாகும்.இக்காலம் தமிழர்களின் வாழ்வில் வசந்தகாலமாக விளங்கியதற்கான அடிப்படைகளைப்பற்றி, அதற்கு பிந்தைய நமது வாழ்வியலோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது சங்கக்காலத்தில் நாம் இன்றுள்ள பார்ப்பனிய சாதி மதமற்று வாழ்ந்த வாழ்வியலே அடிப்படை என்பதை நம்மால் அறிய முடிகிறது.மதமும்,சாதியும் ஏற்படுவதற்குரிய சமூக அடிப்படையேதும் சங்கக்காலத்தில் தமிழ் சமூகத்தில் எழவில்லை.இதே நிலை நமக்கு மட்டுமல்ல விந்திய மலை கடந்த, இன்றைய வட இந்தியாவிற்கும் பொதுவானதாகவே இருந்துள்ளது.

சாதியும்,மதமும் இச்சமூகங்களில் இல்லாததால் அக்காலகட்டத்தில் இச்சமூகங்களின் வாழ்வு மனிதகுல வாழ்வின் ஆரம்ப நிலையிலும் இல்லை.உலகில் ஏனைய சமூகங்களைப் போன்றே இயற்கையான வளர்ச்சியை உள்ளடக்கியே இருந்துள்ளது.இதற்கு ஆதாரமாக தமிழகத்தில் சங்ககாலத்தைப் போன்று வடக்கே ஹரப்பா,மொகஞ்சதாரோ ஆகிய நாகரிங்கள் உள்ளன.

அதன் பின்னர் ஆரிய வருகை அதற்கெதிரான பூர்வகுடி மக்களின் போராட்டம் ஆகியவற்றில் பூர்வகுடி மக்களின் தோல்வி,இனக்கலப்பு ஆகிய நிகழ்வுகளுக்கு பின்னரே பார்ப்பனிய பண்பாடு,நாகரீகம்,சமூக வாழ்வியல் ஆகியவை தோல்வியடைந்த பூர்வகுடி மக்கள் மீது வெற்றியாளர்களின் திணிப்பாக அமைந்தது.

ஆனால் இந்த ஆரிய வெற்றியாளர்களின்  திணிப்பு  விந்திய மலைக்கு வடக்கில் நடந்ததேயன்றி தெற்கே நிகழவில்லை.ஆரியம் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப பார்ப்பனியமாக வளர்த்தெடுக்கப்பட்டு, விந்திய மலைக்கு வடக்கே ஆழ வேரூன்றி, நிலைப்பெற்றது. இன்றைய வட இந்திய மக்களிடையே நிலைநாட்டப்பட்டுள்ள பார்ப்பனிய வாழ்வியலும்,பண்பாடும் ஆரிய வருகைக்கும், அதன் வெற்றிக்கும் எது சவாலாகவும்,இடையூறாகவும் அமைந்திருந்ததோ அது மீண்டும் ஒரு முறை நிகழ்ந்துவிடாமல் தடுப்பதற்கான உள்ளடக்கத்தை கொண்டதாகும்.

அதாவது ஆரிய வெற்றிக்கு சவாலை ஏற்படுத்தியது அன்றைய வட இந்திய பூர்வகுடி மக்களின் சாதி,மத மற்ற வாழ்க்கையும் அதனால் அவர்களிடையே ஆழ நிலைபெற்றிருந்த ஒற்றுமை உணர்வும்தான்.இவற்றை தகர்த்தெரியும் உள்ளடக்கத்துடனேதான் பார்ப்பனியம் உருவாக்கப்பட்டது.
பார்ப்பன மதமும் அதன் நடைமுறை வடிவமாக சாதியும் உருவாக்கப்பட்டு, அவைகள் சமூகத்தில் வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டது.இந்த மாற்றங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக படிப்படியாக உருவாக்கப்பட்ட மாற்றங்களாகும்.இவைகள் , இவைகளை உருவாக்கியவர்களின் நோக்கத்தை அவர்கள் எதிர்ப்பார்த்ததைவிட மேலும் கூடுதலான பலனைத்தந்தது.மக்களிடையேயான ஒற்றுமை உணர்வும்,தன்மானமும் முற்றாக துடைத்தெறியப்பட்டது.

மக்கள் சாதியாக கூறுபோடப்பட்டு ,ஒவ்வொரு சாதியும் கீழிருந்து மேலாக,ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு நெருக்கமான கட்டமைப்பாக்கப்பட்டது.இதற்கு இசைவான முறையில் ஒன்றின் வாழ்வு,இன்னொன்றை சார்ந்ததாகவும்,இந்த சார்புத்தன்மை, ஒன்றின் வாழ்வை மற்றவை பாதிக்ககூடியதாகவும், இவைகளை ஏற்க மறுத்தால் அதற்கு வெளியில் வாழ முடியாத சூழலும் உருவாக்கப்பட்டது.

அதாவது அன்றைய வாழ்வின் அடிப்படையான நிலங்கள் அனைத்தும் மன்னனுக்கு சொந்தமானதாகவும்,இந்த கட்டமைப்பை ஏற்பவர்கள் மட்டுமே இதைச்சார்ந்து வாழ அனுமதிக்கப்பட்டதாலும்,இதை எதிர்த்து முறியடிப்பதற்கு தடையாக சாதி மக்களை கூறுப்போட்டுவிட்டதாலும் அதை ஏற்பதைத் தவிர மக்களுக்கு வேறுவழியில்லை.
மேலே விவரிக்கப்பட்ட வாழ்வியல் முறையும், அதற்குரிய அடித்தளமும் உருவாக்கப்பட்டு சமூக வாழ்வியலாக நிலைநாட்டப்பட்டது.

இப்படி வெற்றியடைந்த பார்ப்பனியத்தை எதிர்த்துதான் சாங்கியம்,சமணம்,பெளத்தம் ஆகிய வாழ்வியல் முறைகள் வட இந்தியாவில் உருவாகின.ஆனால் அவைகளும் தான் போதித்த, பார்ப்பனியத்தை எதிர்த்த வாழ்வியல் முறையை நிலைநாட்டுவதற்கான சமூக அடித்தளமின்மையால் நாளடைவில் பார்ப்பனியத்தால் உள்ளிருந்தே செரிக்கப்பட்டு பார்ப்பனியத்தின் ஒரு அங்கமாக்கப்பட்டது.

இப்படி வட இந்தியாவில் பார்ப்பனியம் வெற்றிக்கொடி நாட்டினாலும்,அது விந்திய மலைக்கு தெற்கில் நிகழவில்லை.பிற்காலத்தில் தெற்கில் ஊடுறுவிய பார்ப்பனர்கள் ஆட்சியாளர்களிடையே பார்ப்பனியத்தை நிலைநாட்டினார்கள்.படிப்படியாக ஊடுறுவிய பார்ப்பனர்களும்,பார்ப்பனியமும் அரசுகளின் செல்வாக்கை பெற்றனர்.

வடக்கில் பூர்வகுடி மக்களை வெற்றிக்கொண்டதால், தாம் உருவாக்கிய பண்பாட்டை மக்கள் மீது வெற்றியாளர்களுக்குரிய அதிகாரத்தின் மூலம் நிர்பந்தமாக திணித்தனர்.ஆனால் அதே பார்ப்பனியமும்,பார்ப்பனர்களும் தெற்கே ஊடுறுவல்காரர்கள் என்பதால் தமது பண்பாட்டை ஆட்சியாளர்கள் மூலமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகாரணமாக தமது அணுகுமுறையை அதற்கேற்ப அமைத்துக்கொண்டனர்.

எனவே தெற்கே இவர்களின் அணுகுமுறை நயவஞ்சகம்,சூழ்ச்சி,தந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.இவற்றைக்கொண்டு ஆட்சியாளர்களின் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டனர்.

இவைகளினால் தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட விளைவுகளையும்,மாற்றங்களையும் அவைகள் தென்னிந்திய பிரதேசங்களில் ஒரே சீரான விளைவுகளை ஏற்படுத்தியதா? அல்லது அவைகளில் ஏற்றாத்தாழ்வுகள் ஏதேனும் உண்டா? அவைகள் என்னென்ன என்பதைப் பற்றி அடுத்தத்தொடரில் பார்ப்போம்…..



தொடர்புடைய கட்டுரைகள்:

 

1.மல்லாந்து துப்பினால் மார்பில்......................பாகம்-I

 

 

2.மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II

Wednesday, 21 March 2012

கூடங்குளத்தில் வெறிநாய்களும்,தெரு நாய்களும்! எச்சரிக்கை!

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலையை அறிவித்திருக்கிறது.ஈழத்தமிழர்கள் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து இப்போது தமிழக தமிழர்கள் மீதான படுகொலைக்கு ஆயத்தமாகி வருகிறது இந்தியா! இந்தியாவின் ஒரு அங்கம் தமிழகம் என்று கூறும் இந்திய அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே முற்றுகை இட்டுள்ளது.ராதாபுரம் வட்டத்தில் 144 தடை உத்தரவும் ,இடிந்தகரைக்கு மின்சாரம் ,குடிநீர்,பால்,காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே கூட இந்த தாக்குதல்கள் கூடங்குளம் மக்கள் மீது நடந்துகொண்டிருக்கலாம்.





தற்போது கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலிசு வெறிநாய்கள்.


தமிழக அரசு அணு உலையை திறக்க எடுத்துள்ள முடிவும்,தமிழ மக்கள் மீது இந்திய அரசு தொடுக்கப்போகும் தாக்குதல்களும் நாம் எதிர்பாராதது அல்ல.காவல்துறை என்றப் பெயரில் திரியும் வேட்டை நாய்களுக்கு வேட்டையாட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.அவைகள் மக்களின் ரத்தம் குடித்து ஆனந்தக்கூத்தாட நாக்கை தொங்க விட்டுக்கொண்டு திரிகின்றன.

மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும், அதை நியாயப்படுத்துவதற்கும் போராட்டக்குழுவையும்,மக்களையும் பயங்கரவாதிகளாக உருவகப்படுத்தும் வதந்திகளை வேட்டைநாய்கள் ஊடகங்கள் மூலம் பரப்பிவருகின்றன.இதை உறுதிப்படுத்தும் வகையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டால், போலீசு மீது போராட்டக்காரர்கள் வெடுகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுப்பார்கள் என்று உளவுத்துறையினர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

ஆனால் தமது போராட்டத்தையும்,இந்திய அரசு தம்மீது தொடுக்கப்போகும் தாக்குதல்களையும் மக்கள் பலத்தால் மட்டுமே போராட்டக்குழு எதிர்கொண்டது,எதிர்கொள்ளப்போகிறது.
இந்திய அரசை ஆயுதபலத்தால் எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாது என்பது அவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

கூடங்குளம் மக்களை வேட்டையாட இந்திய அரசு ஆயத்தமாகிவிட்ட அதே நேரத்தில்,இந்த வேட்டையை காரணம் காட்டி போராட்டக்குழு மீது பழிபோட்டு அதில் ஆதாயமடையகூடங்குளம் மக்களை தன்பக்கம் இழுக்க-தெரு நாய்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.

எதிரிகள் ஏவிவிட்டுள்ள வேட்டைநாய்களை அடையாளம் கண்டுள்ள கூடங்குளம் மக்கள், இந்த தெருநாய்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஏனென்றால் வேட்டை நாய்கள் தலைமையை ஆயுதத்தால் தாக்கி மக்களை வேட்டையாட துடிக்கிறது.தெரு நாய்களோ தலைமை மீது பழிபோட்டு,தகுதியற்றது என்றுக்கூறி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆதாயம் அடைய துடிக்கிறது.

இருவகைநாய்களும் இருவேறு வழிமுறைகளை கையாண்டாலும் இருவரின் நோக்கமும் ஒன்றுதான்.வேட்டை நாய்களின் வேலையை எளிமையாக்குவதே தெருநாய்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியாகும்.வேட்டைநாய்களை எதிர்கொள்ள,கூடங்குளம் மக்களே தெருநாய்களை உங்கள் அருகில் விட்டுவிடாதீர்கள்,எச்சரிக்கை!

தொடர்புடைய கட்டுரைகள்: