விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label முரண்பாடு. Show all posts
Showing posts with label முரண்பாடு. Show all posts

Thursday, 28 March 2013

சகோதர முறை திருமணங்கள் : தனி மனித உரிமையா? பாலியல் சீரழிவா?

சகோதர முறை திருமணங்கள் தனிமனித உரிமைகள் என, போலீசும், மனித உரிமையாளர்கள், ஜனநாயக வாதிகள் எனப் தம்மை கூறிக்கொள்ளும் மகஇக குழுமத்தினரும் கூறுகின்றனர். இந்து திருமணச்சட்டம் சகோதர முறை திருமணங்களை அங்கீகரிக்கவில்லை. இப்படி சட்டம் அங்கீகரிக்காத ஒன்றை மீறி, திருமணம் செய்து கொண்டால் என்ன செய்வது என்பதைப்பற்றியும் சட்டம் ஏதும் குறிப்பிடவில்லை.



சகோதர முறை திருணத்தைப்பற்றி இப்படி சட்டம் ஏதும் குறிப்ப்பிடவில்லை என்பதாலேயே, அது தவறில்லை என்பதுதான் மேலே நாம் குறிப்பிட்டுள்ளவர்களின் வாதமாகும்.

இந்த விவகாரத்தை சட்டப்படி பரிசீலிப்பதா அல்லது சமூக ரீதியாக பரிசீலிப்பதா என்பதைப்பற்றி வினா எழுகிறபோது இவர்கள் அனைவரும் சட்டப்படிதான் பரிசீலிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். சமூக ரீதியான அம்சங்களை புறக்கணிக்கிறார்கள்.

இந்திய சட்டங்கள் ஆனாலும், உலகின் வேறு எந்த ஒரு நாட்டின் சட்டங்களானாலும் அவைகள் சமூகத் தேவையை முழுமுற்றாக நிறைவு செய்யக் கூடிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஒரு போதும் இருக்க முடியாது.

எப்போதுமே சமூக வளர்ச்சிக்கும், தேவைக்கும் ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியவைகளாகத்தான் சட்டங்கள் இதுவரை இருந்துள்ளது மட்டுமல்ல இனி எப்போமே இருக்கும்.

இந்த வகையில் இந்திய அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட போது இந்து என்று வறையறுக்கப்பட்ட மக்கள் குழுக்களின் பண்பாடுகள் அவற்றில் தொகுக்கப்பட்டன. இதன்படி இந்து திருமணச்சட்டம் தொகுக்கப்பட்டது. இப்படி தொகுக்கப்பட்ட இந்த சட்டம் நாடுமுழுக்க ஒரே விதமாய், ஒரே சீரானதாக அல்லாமல் வட்டார, சாதி, இனம் என வெவ்வேறு பண்பாடுகளை உள்ளடக்கியதாக அவைகள் அமைந்திருந்தன. இவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளாக இருந்தாலும் அவைகள் அவற்றை  கடைபிடிக்கும் அந்தந்த மக்கள் குழுக்களால் மீறப்படாத பண்பாடுகளாக நிலவி வந்தன.

இந்திய நாடு முழுக்க பல்வேறு வகைப்பட்ட திருமண உறவுகள் அதாவது இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகள் சிறு, சிறு வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், இவை அனைத்திலும் சகோதர முறை திருமண உறவு எந்த ஒரு மக்கள் குழுக்களிலும் ஏற்கப்படவில்லை.

இதன் காரணமாகவே இந்து திருமண சட்டம் இவை அனைத்தையும் உள்ளடக்கி சகோதரமுறை திருமண உறவுகளை அங்கீகரிக்காததோடு  நிறுத்திக்கொண்டுள்ளது.

அதாவது இவற்றை மீறுவது என்ற பிரச்சனையே எழாத போது, அது சமூகத்தில் விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத போது அவற்றிற்கு தீர்வு எதையும் ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமும் அன்று எழவில்லை போலும்!

ஆனால் இன்று சகோதர முறை திருமணங்கள் பரவலாக ஒவ்வோரு ஊரிலும் சமூக நியதிகளுக்கு மாறாக நிகழும்போது, இதனால் சமூகத்தில் அவைகள் குறிப்பிடும்படியான விளைவுகளை ஏற்படுத்தும் போது, இவற்றை எதிர்கொள்ளும் மக்கள் சமூகமும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளும் இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றத் தேவை இப்போதுதான் எழுகிறது.

சகோதர முறை திருமணம் என்ற ஒழுக்கக் கேடு மட்டுமல்ல, அனைத்துவிதமான பாலியல் ரீதியான ஒழுக்கக் கேடுகளும் இன்று இந்திய சமூகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியச் சமூகம் வெறெப்போதும் இல்லாத வகையில் முற்றிலும் புதிய வடிவிலான பாலியல் வன்முறைகளை சந்தித்து வருகிறது.

டெல்லி என்பது இந்திய நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல அது பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்திற்கும் தலைநகரம் என்பதை நிரூபித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அதிர்வுகள் அடங்குவதற்கு முன்பாகவே, கடந்த மார்ச் 1- ம் தேதி 7 வயதே நிரம்பிய பச்சிளம் பெண் தளிர் காமவெறி மிருகங்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள்.

டெல்லி மருத்துவ மாணவியின் மீதான பாலியல் பலாத்காரம், சாவு ஆகியவற்றிற்கு பின் அது நாடுமுழுக்க வெறேப்போதும் இல்லாத அளவுக்கு அதிர்வையும், இதனூடாக பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள், பாதுகாப்பு பற்றியெல்லாம் நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றன.

இவற்றிற்கு எதிரான மிகக் கடுமையான சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. ஆனாலும் இவைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தவோ, தடுக்கவோ பயன்படவில்லை என்பதைத்தான் ஏழு வயது சிறுமியின் மீதான பாலியல் பலாத்கார சம்பவம் நிரூபித்துள்ளது.

இது நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் இவற்றை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்கக்  முடியாது, என்பதைத்தான். இது சமூக ரீதியாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

1990 – களுக்கு பின்னர் இந்திய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தும் உலகமயக் கொள்கைகளின் தவிர்க்க வியலாத ஓர் அங்கமாகத்தான் நுகர்வு பண்பாடு இந்திய சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சமூகம் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து, ஒரே ஒரு சமூக வளர்ச்சியை, முன்னேற்றத்தைக்கூட தனது சொந்த தேவையிலிருந்து உருவாக்கிக் கொள்ளவில்லை. அன்று முதல் இன்று வரை திணிப்பின் ஊடாகத்தான் அனைத்து மாற்றங்களையும்,வளர்ச்சியையும் கண்டுள்ளது.

எனவே, இச்சமூகத்திற்கென்று தனித்துவமான பண்பாடுகள், வாழ்க்கை முறைகள்என எதையும் கொண்டிராமல் திணிப்பின் ஊடாக வரும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் உலகிலேயே மிகவும் பிற்போக்கான சமூகம் என்பதால் தான், பாலியல் சீரழிவுகள் இப்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்நாட்டில் வலிமைப்பெற்று திகழ்கிறது.

பொதுவில் நாடுமுழுக்க பாலியல் சீரழிவுகளுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிப்பது போன்று நமக்கு தென்பட்டாலும் இவைகள் உண்மையில்லை. போலித்தனமான உண்மைகள்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் ஆனாலும், சமூகவியலாளர்கள் ஆனாலும் பொதுமக்களானாலும் போலித்தனமான வாழ்க்கை முறைகளையே அடித்தளமாகக் கொண்டவர்கள்!

ஊடகங்களால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெரிதாக காட்டப்பட்டாலும், இவைகள் எழுவதற்கு அடிப்படையான காரணிகளை இவர்கள் அனைவரும் தழுவிக்கொள்பவர்களாகவே உள்ளனர். இதன் காரணமாகத்தான் சட்டங்களைப் பற்றி தவறுசெய்வோர் கவலைப்படுவதில்லை.

இந்திய சமூகத்தின் அனைத்து அங்கங்களும் குற்றவாளிகளை இல்லாமல் செய்வது என்பதற்கு மாறாக அவர்களை பாதுகாக்கும் வகையிலான நடைமுறைகளையே தமது அன்றாட வாழ்வியல் முறையாக கொண்டிருப்பவர்கள்.

இந்த வாழ்வியல் முறையின் செயல்வடிவம் சமூக உண்ர்வின்மையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது அனைத்தையும் தனக்கான தனிப்பட்ட ஆதாயத்தையே ஆதாரமாக கொண்ட சிந்தனா முறையாகும்.
இப்படியான ஆதாய சிந்தனா முறையே எதையும் தீர்மானிக்கும் அளவு கோலாக இருப்பதால், ந்த ஒரு சமூக சீரழிவானாலும், அநீதியானாலும், அதனால் தனக்கு தனிப்பட்ட முறையில் நேரிடையாக இழப்பு இல்லை என்றால் அது தனக்கு சம்பந்தமில்லாதவைகள் என்று ஒதுங்கிக் கொள்ள வைக்கிறது.

இதே சிந்தனாமுறைதான் தவறு செய்பவர்களை தனக்கு அதில் ஆதாயம் இருக்கிறது என்ற அடிப்படையில் ஒருங்கிணைத்து செயல்படவும் வைக்கிறது.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அவற்றில் தம்மோடு ஈடுடபடுவோருக்கு, இச்செயலில் தான் ஈடுபடுவதன் மூலம் அடையும் ஆதாயத்தில் ஒருப்பகுதியை பங்காக தருகின்றனர்.

இந்த வகையில் இப்படிப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான அதிகாரம் பெற்ற கட்டமைப்பை சேர்ந்தவர்களே முதன்மையான ஆதாயவாதிகளாக திகழ்கின்றனர்.

இந்த வலுவான அடித்தளம்  காரணமாகத்தான் குறிப்பிட்ட சில விவகாரங்கள் பெரும் அநீதியாக ஊடகங்களிலும், அபூர்வமாக சில நேரங்களில் சமூகத்திலும் விவாதிக்கப்பட்டாலும், அதனால் அதில் ஈடுபடுவோரிடம் அது பெருத்த மாற்றம் எதையும் ஏற்படுத்திவிடுவதில்லை. அதற்கு மாறாக தமது செயலை மேலும்  திறமையான வழிகளில் தொடர ஊக்கம் பெறுகிறார்கள்.

இந்திய சமூகத்தில் உள்ள ஒவ்வொரு சாதியும் தான் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் அதே நேரத்தில் ஒடுக்கு முறையாளராகவும் உள்ளது. இது சிந்தனா முறை ஒடுக்கு முறையாக மட்டுமல்லாது நடைமுறை ரீதியான ஒடுக்கு முறையாகவும் உள்ளதால் அதிகார கட்டமைப்பில் உள்ளர்களின், சமூகத்தின் மேல்நிலையில் உள்ளவர்களின் செயல்பாடுகளை அநீதியானதாக காண்பதில்லை.  மாறாக அந்த இடத்தில் இருந்தால் அதைத்தான் தானும் செய்ய முடியும் என அங்கீகாரத்தையும் வழங்குவதோடு   தனது ஏக்கத்தையும் வெளிப்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.

சமூகத்தின் இந்த யதார்த்த நிலையை, சமூக நலனில் அக்கறை உடையோர் கணக்கில் கொள்வதேயில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக சமூக அக்கறையற்றோர் இதை மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். இதிலிருந்துதான் அவர்கள் தமது செயலை எவ்வித அச்சமும் இன்றி செய்கின்றனர்.

உண்மையில் சமூகத்தில் நடைபெறும் எந்த ஒரு அநீதியானாலும், அதிலும் குறிப்பாக பாலியல் சீரழிவுகள் சம்பந்தமாக சமூகத்தின் மேற்கண்ட எதார்த்த நிலையை சமூக நலனில் அக்கறையுடையோர் கணக்கில் கொண்டால் மட்டுமே தமது செயலில் முன்னேற்றம் எதையும் காணமுடியும்.

இதற்கு மாறாக சகோதர முறை திருமணங்கள் எனப்படும் ஒழுக்கக்கேட்டை பாலியல் சீரழிவாக கருதாமல் 
தனிமனித உரிமையாக காண்பதும், இவைகளுக்கு முற்போக்கு, இயங்கியல் முலாம் பூசுவதும் உலகமயமாக்கலுக்கு மேலும் வலுவையே தரும் என்பதை மறந்து விடக்கூடாது.

மனித இனத்தில் உறவு முறைகள் என்பவைகள் மனிதர்களால் இடையில் ஏற்படுத்தப்பட்டது. அவைகள் ஒரு நாளையில் இல்லாமலும் போகும்”.

”இப்போது நடைமுறையில் உள்ள உறவு முறைகள் நிலபிரபுத்துவ  கா பிற்போக்குத்தனம். இதை மதங்கள் தான் புனிதமானவைகளாக கருதி தூக்கிப் பிடிக்கின்றன”.

”மனிதர்களுக்கு இடையிலான உறவு முறைகள் சமூக வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் ஏற்ப மாறக்கூடியவைகள்  என்றும் இதனால் சகோதர முறை திருமண விவகாரங்களை இந்த வகையில் தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் இது சரி, என்றோ, தவறு என்றோ கூறாமல் தந்திரமான நடைமுறைகளை கையாள வேண்டும்.

தவறு என்று முடிவெடுத்தால் அது நம்மை இயங்கியல் வாதிகள் என்பதை மறுப்பதோடு, பிற்போக்கு வாதிகளாகவும் ஆக்கிவிடும். இதனால் மக்களை சமூக மாற்றத்திற்காக திரட்டும் நமது இலக்கும், நோக்கமும் சீர்குலைந்து போகும் என்றும்”, நீண்ட நெடிய வகுப்பொன்றையும் நடத்துகின்றனர்.
இதன் மூலம் ஏகாதிபத்திய நுகர்வு வெறி, சீரழிவு ஆகியவற்றையும் சமூக இயக்கதின் தவிர்க்கவியலாத அங்கமாக வாழ்வியல் முறையாக அங்கீகரித்து விடுகிறார்கள். அவைகளை இவர்கள் சீரழிவுகளாக காண்பதில்லை.

இதன் மூலம் இத்தகையோர் இப்பண்பாடுகளை உருவாக்குகிற உற்பத்தி முறையையும், சமூகத்தையும் தாங்கள் அங்கீகரிக்கிறோம் என்பதை நாம் அறியமாட்டோம் என்று கருதுகின்றனர் போலும்
மேலும் மனிதன் இன்று கடைபிடிக்கும் வாழ்வியல் முறைகள் நாகரீகம், பண்பாடு அனைத்தும் மனிதன் குரங்கிலிருந்து மனிதானக மாறிய காலத்திலிருந்து மனித சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் தொடர்ச்சி, தொகுப்புதான்.

மனித சமூகம் தன்னுடைய வளர்ச்சி, முன்னேற்றங்கள் ஒவ்வொன்றின் போதும் தனது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் முன்னையதிலிருந்து மேலும், மேலும் மேம்படுத்திக்கொள்கிறது. ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்தவுடன் முந்தைய சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, முந்தையதற்கு முற்றிலும் தொடர்பற்ற, முற்றிலும் புதியனவற்றை கட்டிக்கொள்வதில்லை.

அதற்கு மாறாக முந்தையதிலிருந்து சரியானதை, தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை புறந்தள்ளுகிறது. மொத்தத்தில் ஒவ்வொரு சமூக முன்னேற்றம், மாற்றங்களின் போதும் தனது வாழ்வியல் முறையை மனித சமூகம் மேலும் செழுமைப்படுத்திக் கொள்கிறது. குறிப்பாக நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள மனிதர்களுக்கிடையிலான உறவு முறைகள் அதாவது இனப்பெருக்கத்திற்கான உறவு முறைக்கான வரையறை என்பது மனித இனம் உள்ளவரை  தவிர்க்கவியலாத தேவையாகும்.

இவற்றை நிராகரிப்பது என்பது மனிதனை மீண்டும் மிருக நிலைக்கு தாழ்த்தும் செயலாகும். அதாவது மனிதனை சமூக உணர்வற்றவனாக மாற்றும் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.

மனிதனை சமூக உணர்வற்றவனாக ஆக்குவதே, ஏகாதிபத்திய உற்பத்தியின் வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாகும். இந்த சமூக உணர்வின்மை பூமியில் உயிரினங்கள்  உயிர்வாழ்வதற்கு தேவையான வளங்கள் அனைத்தையும் சூறையாடும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் இப்பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அழிவுக்குள் தள்ளிவிடுகிறது. 

இச்சூறையாடும் பொருளாதார நலன்களுக்கு ஆதரவான வறைமுறையற்ற இனப்பெருக்க உரிமையான சகோதர முறை திருமணங்களை நிலபிரபுத்துவ  கால பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான கலகம் என வெட்கமின்றி இவர்கள் பிதற்றித் திரிகின்றனர்.

இக்கேடுகெட்ட தனத்திற்கு எதிராக போராட வக்கற்றவர்கள், இவைகளில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளும் தந்திரத்தை கையாள வேண்டும் என்று உபதேசிக்கிறார்கள்.

இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகள் நிலபிரபுத்துவ கால பிற்போக்குத்தனம், தந்திரமாக  ஒதுங்கிக் கொள்ளல்  ஆகிய செயல்பாடுகள், அவற்றை வளர்தெடுத்து மனிதர்களை கார்த்திகை மாதத்து நாய்களாக மாற்றிவிட்ட பிறகு, இம்மிருகத்தனத்தை முன்னேற்றமாகத் கருதுவோர். இம்மிருகங்களை வைத்துத் கொண்டுதான் சமூக மாற்றத்தை  சாதிக்கப் போகிறார்களாம்?!

மனிதன் காட்டு மிராண்டி நிலையிலிருந்து நாகரீகமடைந்த காலத்திலிருந்து உருவாக்கிக் கொண்ட இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகள் தனது, வளர்ச்சி முன்னேற்றம் ஆகிய தேவையிலிருந்து உருவாக்கிக் கொண்டதே ஆகும்.

அதாவது இந்த இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகளை எந்த ஒரு தனிமனிதனின் கருத்துகளில் இருந்தும் அல்லாமல், அதற்கு முந்தைய சமூக நிகழ்வுகள், விளைவுகளில் இருந்து எழுந்த தேவையில் இருந்து உருவாக்கிக் கொண்டவைகள். இதை இன்னமும் பச்சையாக கூறுவதென்றால் உலகில் உள்ள உயிரினங்களில் மனிதனை தவிர்த்த ஏனையவற்றில் ஆண், பெண் சேர்க்கைக்கான காலம் குறிப்பிட்ட பருவகாலம் மட்டுமே ஆகும்.

ஆனால் மனிதனின் இனச்சேர்க்கைக்கான உந்துதல் மிருகங்களைப்போன்று வெறுமனே உடல் சார்ந்த தேவையாக மட்டுமல்லாது, அது மனம் சார்ந்த தேவையாகவும் இருப்பதால் இதற்கு பருவகாலம் ஏதுமில்லை. ஆண்டுமுழுக்க இதற்கான உந்துதல் மனிதர்களை ஆட்கொள்கிறது.

பருவமே ஆனாலும் இக்குறிப்பிட்ட காலத்தில் மிருகக் கூட்டத்தில் பெருத்த ஒற்றுமை இன்மையை ஏற்படுத்தி விடுகிறது. இப்பருவ காலம் முடிந்த பின்னர் அவைகள் இயல்பு நிலைக்கு திரும்புகினறன. இதற்கு நேர்மாறான விளைவுகளை மனிதர்களிடையே உருவாக்கும். நிரந்தர பகை, பழிவாங்குதல் ஆகியவைகள் ஒற்றுமை இன்மையையும், அழிவையும் நிரந்தரமாக்குவதில் இருந்து மனிதர்கள் காக்கும் தவிர்க்க வியலாத தேவைதான் உறவுமுறைகள்.

இந்த தவிர்க்க வியலாத தேவை, இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் மனித இனத்திற்கு இல்லாமல் போய்விட்டதா?

ஆண், பெண் இனச்சேர்க்கைக்கான உறவு முறைகளை மீறுபவர்களும், இதை ஆதரிப்பவர்களும், மேலே கண்ட நிலையிலிருந்துதான் இதை மீறுகிறார்களா, ஆதரிக்கிறார்களா?

நாகரீக மனித சமூகம் உருவாக்கியுள்ள பாலியல் உறவுகளுக்கான உறவு முறைகளை மீறுபவர்கள் மனித குலத்தின் முன்னேற்றம் நலன் ஆகியவற்றின் தேவையிலிருந்து இவற்றை மீறவில்லை. இவற்றை அழிவுகுள்ளாக்கும், மனிதனை மிருக நிலைக்கு தாழ்த்தும், ஏகாதிபத்திய சூறையாடும் பொருளாதார நலன்களிலிருந்து எழும் உந்துதல்களிலிருந்து இவற்றை மீறுகின்றனர்.

இந்திய சமூக அமைப்பை பற்றிய மிகையான தமது விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அதன் மீது திணிக்க முயன்று தோற்றுப் போனவர்களும், திணிக்க முயல்பவர்களும் எந்த சமூக மாற்றத்திற்காக, முன்னேற்றத்திற்காக தாங்கள் பாடுபடுவதாக கூறிக் கொள்கிறார்களோ, இவர்கள் சமூக யதார்த்தத்திற்கு புறம்பான சமூக மதிப்பீடுகளால் வலது, இடது சந்தர்ப்பவாதிகளாக மக்களிடமிருந்து தனிமைப்பட்டு, எப்படியாவது தம்மை  நிலைநிறுத்திக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயங்குவதில்லை என்பதற்கான ஆதாரம் தான்.சகோதர முறை திருமண விவகாரங்களில் கையாளும் வழிமுறைகள் ஆகும்.

இவர்கள் எவருமே சமூக வாழ்வையும், தனது சொந்த வாழ்வையும் ஒன்றாக பார்ப்பவர்கள் இல்லை. இரண்டுக்கும் வெவ்வேறான வழிமுறைகளை கொண்டவர்கள்.
சகோதர முறை திருமணங்களை ஆதரிப்பவர் எவரும் தனது பிள்ளைகளுக்கும் அது பொருந்தும் என்பதை ஏற்பதில்லை!

சமூகத்தில் நடைபெறும் சகோதர முறை திருமணங்களில் தலையிடாமல் நைச்சியமாக நடந்து கொள்பவர்கள் தமது குடும்பத்திடம் அந்த முறையை கடைபிடிப்பதில்லை!

இவர்கள்தான் நம்முடைய அனைத்து உரிமைகளுக்காகவும் போராடும் தலைவர்கள், பிரதிநிதிகள்!
இப்படிப்பட்டவர்கள் இந்தியாவின் 120 கோடி மக்களுக்கும் தலைமை ஏற்க எப்படி முடிகிறது? நமது 

அறியாமையினாலா?
இல்லை! அவர்கள் ஜாடிக்கேற்ற மூடிகள்!

தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      


4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2







Sunday, 3 June 2012

அக்காவையும், தங்கச்சியையும் கட்டிக்கலாங்கிற, மகஇக காரன பார்த்தா கேளுங்க..


உலகில் உள்ள உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டுமே ஆறாவது அறிவை உடைய உயிரினம். இதனால் தான் மனிதர்கள் தமக்கிடையே உறவு முறைகளை உருவாக்கிக் கொண்டார்கள். இந்த உறவு முறைகளை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாயினும், அவற்றை இன்றளவும் மனித குலம் கடைப்பிடித்து வருகிறது. மனித இனம் இந்த பூமியில் உள்ள வரை இது தவிர்க்கவியலாத அம்சமாகும். ஏனென்றால் ஏனைய உயிரினங்களிடையே, இனப்பெருக்க காலங்களில் ஏற்படும் ஒற்றுமையின்மை, சீர்குலைவு ஆகியவற்றிலிருந்து மனித குலத்திற்கு இது மிகச் சிறந்த பாதுகாப்பளிக்கிறது.





மனித குலம் காலத்தின் தேவைக்கேற்ப பழையனகழிதலும், புதியன புகுதலும் என்ற கோட்பாட்டை கடைபிடித்தாலும், இந்த உறவு முறைகள் என்றென்றும் இளமை மாறாமல் இன்று வரை நீடித்து நிற்பதற்கு காரணம், அது மனித குல வளர்ச்சிக்கு என்றுமே தீங்கிழைத்ததில்லை. இதிலிருந்து உறவு முறைகள் மனித வாழ்வின் தவிர்க்கவியலாத அங்கமாகி விட்ட பிறகு, அது தேவையா என்று கேள்வி எழ வேண்டிய அவசியம் என்ன  என்று நீங்கள் கேட்பது எமக்குப் புரிகிறது.

ஆனால் அது தேவையில்லை என்று கூறும் ஒரு கும்பல் உருவாகி இருக்கிறது என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா! ஆனால் இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு கும்பல் உருவாகி இருப்பது மட்டுமல்ல அது பகிரங்கமாக செயல்பட்டும் வருகிறது. அது தனது செயலை நியாயப்படுத்துவதுடன், தமிழகத்தில் தம்மை முற்போக்கு, புரட்சிகர சக்தி என்று கூறிக்கொண்டு திரியும் ஒரு கும்பலின் ஆதரவையும் பெற்றுக்கொண்டதோடல்லாமல், அதன் ஓர் அங்கமாகியும் இருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் செயல் பட்ட கிராமம் ஒன்றில் சகோதர உறவுடைய இருவர் ஊரை விட்டு ஓடி கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த மிருகங்கள் ஊருக்குள் நுழைய முயற்சித்த போது அதை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அதோடு இவைகள்  எப்போதுமே ஊருக்குள் நுழையக்கூடாது என நிரந்தரமாகவும் தடைவிதித்தோம்.

இப்படி நாங்கள் தடை விதித்தவுடன் எங்களோடு இருந்த அம்மிருகத்தின் சகோதரன் ஒருவன் எங்களிடமிருந்து விலகிக்கொண்டதுடன், தம்மோடு பாலியல் ரீதியாக சீரழிந்த சிலரையும் சேர்த்துக்கொண்டு ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

வரைமுறையற்றவர்கள் ஊருக்குள் நுழையக்கூடாது என்று நாங்கள் தடைவிதித்தவுடன், அப்போது நாங்கள் செயல்பட்ட அமைப்பின் தலைமை எங்களின் செயல்பாட்டை ஏற்க முடியாது என்று நிராகரித்தது.  நாங்கள் ஏனென்று கேட்ட போது உறவு முறைகள் என்பது காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது. அதில் நாம் தலையிடக்கூடாது. இப்படி தலையிடுவதன் மூலம் அதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாததுடன், அதனால் நமது வழமையான பணிகளும் பாதிக்கப்பட்டு நமது இலக்கு திசை திரும்பி விடும் என்றனர்.

இதைப் போன்ற செயல்களை நாம் கண்டு கொள்ளாவிட்டால் மனித இனமே மிருகங்கள் ஆகி விடுமே, அப்போது யாரிடம் போய் நமது இலக்கைப் பற்றி பேச முடியும்! என்று நாங்கள் கேட்ட போது, நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம், நீங்கள் நமது வேலைகளுக்கு பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”, என்று மிகவும் சாமர்த்தியமாக நழுவிக்கொண்டனர்.

இதைப் போன்ற பல்வேறு காரணங்களால் அந்த அமைப்பில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் நாங்கள் வெளியேறி விட்டோம். நாங்கள் வெளியேறியதும் மேற்கண்ட சகோதர முறை திருமணத்தை ஆதரிக்கும் கும்பலை தமது அமைப்பில் இணைத்துக் கொண்டு ஆசி வழங்கியுள்ளனர்.

தமக்கு தமிழகம் தழுவிய தலைமை கிடைத்து விட்ட பூரிப்பில், இக்கும்பலில் உள்ள மேலும் மிருகம் தனது தங்கை முறை பெண்ணோடு திருமண உறவுக்கு கால் கோல் விழா நடத்திருக்கிறது.

மேற்கண்ட தகவல் எமக்கு கிடைத்து விட்டது என்பதை அந்த கும்பல்  தெரிந்து கொண்டவுடன், தமது நோக்கத்திற்கு எங்களால் இடையூறு ஏற்படும் என்பதை கணித்து எம்மை பயமுறுத்த முயற்சிக்கிறது.
·        
   இந்த விடயத்தில்  நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் சீரழிவுக் கும்பல் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பகிரங்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
·         
   ஆனால் சகோதர திருமண உறவை எதிர்ப்பவர்கள்தான் சமூகத்தில் பெரும்பான்மை என்றாலும் இவர்கள் தமக்கிடையே ஒருங்கிணைப்பின்றி பிரிந்து கிடக்கின்றனர்.

பெரும்பான்மை மக்களின் இந்த சமூக அக்கறையற்ற போக்கு, குறிப்பிட்ட இந்த விடயத்தில் மட்டுமல்ல, அனைத்து விடயங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. இதுதான் சமூகத்தின் அனைத்து அங்கங்களிலும் நடைபெறும் எல்லாவித அநீதி, அக்கரமங்களுக்கும் உந்து சக்தியாக சமூக விரோதிகளுக்கு பயன்படுகிறது.

சகோதர உறவு முறைக்குள் திருமண உறவு கொள்வது என்பது எங்கோ ஓரிடத்தில் அரிதாய் நடைபெறும் செயல் என்பதற்கு மாறாக, இம்மிருகத்தனம் இப்போது பரவலாக நாடு முழுக்கவே தென்பட ஆரம்பித்து விட்டது. இது உருவாவதற்கான சமூக அடிப்படையும் நிலவுகிறது. வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்ற கோட்பாடுதான் இதற்கான அடித்தளமாகும். இதைத்தான் இன்றைய திரைப்படங்கள், தொலைக்காட்சிகளின் ஊடாக வலுவாக சமூகத்தின் மீது திணிக்கப்படுகின்றது.

வயிற்றுப் பசியைப்போன்று, காமமும் ஒருவித பசிதான், இவற்றை போக்கிக் கொள்வதற்கு தடையேதும் இருக்கக்  கூடாது. அப்படிபட்ட தடையான உறவு, முறைகள் தேவையில்லை என்பதுதான் இது போன்ற கும்பல்களின் நிலை.

காமப் பசிக்கு அண்ணன் தங்கை என்ற கட்டுப்பாடு கூடாது என்றால், வயிற்றுப் பசிக்கு இன்று புழக்கத்தில் உள்ள உணவு முறைகள் என்ற கட்டுப்பாடு தேவையா? இக்கட்டுப்பாட்டை மீறி பன்றியைப் போல இவர்கள் பீயைத் திண்பார்களா என்றுதானே கேட்கிறீர்கள்!

இந்தக் கேள்வியை சகோதர உறவு முறைக்குள் திருமண உறவை ஆதரித்து நடைமுறைப்படுத்தும் கும்பலை தம்மோடு இணைத்துக் கொண்டு தமது பலத்தை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டுள்ளதாகக் கருதும் ம.க.இ.க வினரை பார்த்தால் கேளுங்கள்!

அதோடு உங்கள் கருத்துக்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படிச்செய்தால் புரட்சியாளர்கள் நம்மை பிற்போக்கு வாதிகள் என்று முத்திரை குத்துவார்கள் என்று தானே யோசிக்கிறீர்கள். பரவாயில்லை நாம் அப்படிப் பட்டவர்களாகவே இருந்து விட்டு போவோம்!



தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      


4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2








Friday, 19 August 2011

சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2

                                                                    மீள்பிரசுரம்.



சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2
பூனை கண்ணை மூடிக்கொண்டு,
பூலோகமே இருண்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளுமாம்!
சமச்சீர் கல்வி விவகாரத்தில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும்,அதிலும் குறிப்பாக இவர்களின் புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம்,வினவு ஆகிய ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நிலைப்பாட்டை முதன்மையானது என கூறிவருகின்றன.இதை எமது முந்தைய கட்டுரைகளிலும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்
எமது விமர்சனங்களுக்கு மேற்கண்ட அமைப்புகளும்,அவற்றின் ஊடகங்களும் இதுவரை பதிலேதும் தரவில்லை.அதற்குமாறாக தமது நாலாந்தர ஆதரவாளர் ஒருவர் மூலம் எமது விமர்சனத்துக்கு உள்நோக்கம்  கற்பித்து எம்மை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.நாங்கள் இப்படி கூறுவதற்கு என்ன ஆதாரம் என்று வாசகர்களும்,மேற்கண்ட அமைப்பினரும் கேட்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.மேற்கணட அமைப்புகளின் நாலாந்தர ஆதரவாளர் எமது நோக்கத்துக்கு உள்நோக்கம் கற்பித்து கொச்சைப்படுத்துவதையும்,எமது விமர்சனக்கட்டுரைகளுக்கு பதிலேதும் கூறாமல்,இவர்களின் மேற்கண்ட நாலாந்தர ஆதரவாளர் கூறுவதை போன்று எமது விமர்சனக்கட்டுரையை எவரும் சீந்தவில்லை என்ற கருத்துதான் இவர்களிடமும் உள்ளது.என்பதைத் தான் இவர்களின் மெளனம் எமது கணிப்புகளுக்கு ஆதாரம் ஆகும்.தம் மீது விமர்சனம் வைப்பவர்கள் யார் என்பதைவிட அவர்கள் என்ன விமர்சனம் வைத்திருக்கிறார்கள் என்று தான் எந்த ஒரு ஜனநாயகவாதியும்,அதிலும் பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் ஆகும்.
     எமது இரு கட்டுரைகளையும் பார்த்துவிட்டு அவற்றின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளாமலேயே தியாகு,இயக்கம் ஆகியோர் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினர் என்ன எழுதுகிறார்கள் என்பதை பார்க்கமறுத்துவிட்டு அவர்கள் எதை செய்தாலும்,அதை எதிர்ப்பது என்ற கண்ணோட்டத்துடன் தமது இணையத்தளங்களில் அரைவேக்காட்டுத்தனமாக பிதற்றிவருகின்றனர்.தங்களை போன்றேதான் சூறாவளியும்,மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் எதிர்ப்பதாக எமது தலைப்புகளை மட்டுமே பார்த்துவிட்டு எமது கட்டுரைக்கு ஆதரவளிப்பதாக பின்னூட்டம் இட்டிருந்தனர்.இதன் பிறகு தான் நாங்கள் அவர்களின் இணையத்திற்கு சென்று அவர்களின் கட்டுரைகளை வாசித்து,அந்த கட்டுரைகளின் தரத்தை தீர்மானித்தோம்.அதே போன்று எமது இருகட்டுரைகளையும் வாசித்துவிட்டு தற்போது மக இக-அதன் தோழமை அமைப்புகளோடு ஈழ விவகாரத்தில் முரண்பட்டு மேற்கண்ட அமைப்புகளின் தோழமை உறவை இழந்திருக்கின்ற தோழர் இரயாகரன் அவர்கள் எமது இருக்கட்டுரைகளும் சரியான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுவருவதாகவும்,அவற்றை தாங்கள் கவனமாக அவதானித்து வருவதாகவும் பின்னூட்டம் இட்டிருந்தார்.ஈழ விடயத்தில் தோழர் இரயாகரனோடு, அவரின் நிலைப்பாட்டை விமர்சித்து சூறாவளியின் முன்னால் ஆசிரியர் தோழர் மூடக்கிழவன் கூர்மையான விமர்சனக்கட்டுரை ஒன்றை எழுதி, நாங்கள் சூறாவளி இணையம் ஆரம்பிப்பதற்கு முன்பே தோழர் இரயாகரனுக்கும்,வினவுக்கும் அனுப்பியிருந்தோம்.இன்னமும் தோழர் இரயாகரன் மீதான எமது விமர்சனத்தை நாங்கள் மாற்றிக்கொள்ளவில்லை.அதே போன்று வினவு எதை எழுதினாலும்,அதை ஆதரிப்பது என்ற அவர்களின்  ரசிகர்களைப் போன்று வினவுக்கு ஆதரவாக அந்த கட்டுரையை நாங்கள்  எழுதவுமில்லை.இப்படி ஈழவிடயத்தில் எமக்குள் முரண்பாடு நீடித்தாலும் கூட தோழர் இராயாகரன் அவர்களை மிகச்சிறந்த தோழராகவே சூறாவளி கருதுகிறது.தாம் எதை எழுதினாலும்,எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும்,அதை எந்த சந்தர்ப்பத்திலும்,எந்த காரணத்திற்காகவும் மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று கருதும் வரட்டுவாதியல்ல தோழர் இராயாகரன் என்பதை அவரின் இணையதளத்தில் அவர் வெளியிடும் கட்டுரைகளில் இருந்தே ,நாங்கள் கவனமாக ஆவதானித்து வருகிறோம்.அதோடு நாங்கள் மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் சமச்சீர்கல்வி விடயத்தில் அவர்களின் சீர்த்திருத்தவாத கண்ணோட்டத்தை எதிர்ப்பதை,எதிரிக்கு,எதிரி நண்பன் என்ற கண்ணோட்டத்தில் தோழர் இராயாகரன் எம்மை ஆதரிக்கிறார் என்று, வினவின் இரசிகர் பட்டாளம் கருதும்.ஆனால் நாங்கள் அப்படி கருதவில்லை.தோழர் இராயாகரனையும்,அவரது குழுவையும் இன்னமும் மிகச்சிறந்த தோழர்களாக கருதிதான் அவர்கள் எமக்கு தந்த ஆதரவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதற்காக எமது நன்றியை அவர்களுக்கு தோழமை உணர்வோடு தெரிவித்திருக்கிறோம்.எமது கட்டுரைகளுக்கு போலியான பரபரப்பான, விளம்பரமும், ஆதரவும் தேவை என்பதற்காக.,யார் எம்மை ஆதரித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நேர்மையற்ற தனம்,குறுக்கு புத்தி எம்மிடம் கிஞ்சித்தும் இல்லை என்பதை சுட்டிக்காட்டவே மேற்கண்ட விடயங்களை நாங்கள் பதிவு செய்கிறோம்.
     மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் எதை செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.என்று கருதுவர்களின் உளறல்களுக்கெல்லாம் பதில்சொல்லித்தான் தீரவேண்டும் என்று நாங்கள் வாதிடவில்லை.அப்படி செய்வது புரட்சிகர அமைப்புகளின் இணையம் நடத்துவதற்கான நோக்கத்தையையே திசைதிருப்பிவிடும்,என்பதையும் நாங்கள் மிக நன்றாகவே அறிவோம்.
     மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும்,எதை செய்தாலும் அதை எதிர்க்கவெண்டும் என்பதும் மக இக-விடமும் அதன் தோழமை அமைப்புகளிடமும் வெளிப்படுகிற தவறுகளையும்,திசைவிலகல்களையும்,புரட்சியின் மீதுள்ள மாளாகாதலாலும்,மேற்கணட புரட்சிகர அமைப்புகளின்,மீதான தோழமை உறவினாலும்.சூறாவளியில் வெளியிடப்படுகின்ற கட்டுரை என்று பார்க்காமல் அது எதுவாயினும்,எப்படிப்பட்டதாயினும்,அவற்றை தமக்கு எதிராக பார்ப்பது,அதை தமது நாலாந்தர ரசிகர்கள் மூலம் கொச்சைப்படுத்தி ரசிப்பதும்,மேற்கண்ட இருபிரிவினரும் எதிரும்,புதிருமாக நின்றாலும்,இவர்கள் இருவரிடமும் வெளிப்படும் மார்சிய-லெனினியத்திற்கு விரோதமான,அதிகாரவர்க்கத்தின் நலனை பிரதிபலிக்கும் சித்தாந்தமே அடிப்படையாகும்.
     முதலாளிகள் தமக்கிடையில் தொழிற்போட்டியின் காரணமாக இருவேறு முகாம்களாக பிரிந்துகிடப்பதின் பிரதிபலிப்புகள்தான் வினவையும்,அதன் எதிர்ப்பாளர்களையும் அதிகாரவர்க்கம் என்னும் ஒரே சித்தாந்தம் வழி நடத்தினாலும் இருவரும்  ஒரே குடையின் கீழ் ஒன்று சேருவதற்கான தேவை ஏதும் இப்போது இவர்களுக்கு எழவில்லை.ஒருவேளை மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சமச்சீர்கல்வி விவகாரத்தில் மட்டுமல்ல அனைத்துவிவகாரங்களிலும் சீர்திருத்த பாதையில் முழுமுற்றாக மூழ்கி அதிகாரவர்க்கம் என்னும் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாய் முற்றாகமாறிய பின்பு,இப்பிரிவினர்இருவரும் ஒன்றுசேர்வதற்கான தேவையும்,வாய்ப்பும் புரட்சிகர சக்திகள் தவிர்க்கவியலாத பெரும் சக்தியாய் ஆளும்வர்க்கத்தை முறியடிக்கும் அளவிற்கு பலம்பெரும் போது மட்டுமே ஏற்படும் என்பதை உலகின் பல நாட்டு பாட்டாளிவர்க்க வரலாறுகளில் நாம் பார்த்துதான் வருகிறோம்.
     எமது ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு இவ்வமைப்புகள் நேரடியாக பதிலேதும் தராமல்,பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதாக கருதிக்கொள்ளுவதை போன்று எமது விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதன் மூலம் அப்படி ஒரு விமர்சனம் எழவில்லை என்றே கருதிக்கொள்கின்றனர்.எமது விமர்சனங்களுக்கு வாசகர்கள் மத்தியில் பெருத்தவரவேற்பு இல்லை என்றும்,எமது கட்டுரைகளை சீந்துவதற்கு நாதியில்லை என்று வினவின் ரசிகர் எம்மை ஏளனம் செய்வதை வாசகர்கள் அறிவார்கள்.இப்படி அவர் கூறுவதை பார்த்து நாங்கள் வருத்தப்படவில்லை.இப்படி அவர் கூறுவதன் மூலம் அவர் தனது அரசியல் தரத்தையையும்,தனது கதாநாயகன் அரசியல் தரத்தையுமே பறைசாற்றிகொள்கிறார்.அதற்காக அவருக்கும்,அவரை இயக்குபவருக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.    
     தமிழகத்தின் ஒரே புரட்சிகரசக்தி என்று மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் நாங்கள் வரையறுத்து கூறும்போதே சமச்சீர்கல்வி விவகாரத்தில் அவ்வமைப்புகள் சீர்த்திருத்த புதைகுழியில் சிக்கிவிட்டதாக நாங்கள் கூறுவது,முரண்பாடு என்றும்,இதன் மூலம் நாங்கள் எமது நேர்மையின்மையை வெளிப்படுத்துவதாகவும்,ஆள்காட்டி வேளை செய்வதாகவும்,வினவின் ரசிகர்மன்ற தலைவர் தனது அறியாமையை எம்மை கொச்சைப்படுத்துவதாக கருதிக்கொண்டு வெளிப்படுத்திக்கொள்கிறார்.அந்த நபரைப்பற்றி நாங்கள் அறிந்துகொண்டவகையில் அவர் அந்த அமைப்புகளில் ஏதோ ஒன்றில் உள்ளவர் என்பதும்,அதிலும் முக்கிய பொருப்பு வகிப்பவர் என்றும் அடையாளம் கண்டிருக்கிறோம்.எனவே அவர் கூறுகின்றவற்றை அவரின் தனிப்பட்ட பிதற்றலாக நாங்கள் கருதவில்லை.இந்த அமைப்புகளின் சார்பில் இணையதளங்களில் குரல் கொடுப்பவர் என்றே,அவர் எம்மோடு பேஸ்புக்கில் எழுதுவதில் இருந்தும் உறுதியாக நம்புகிறோம்.எனவே அவரின் கூற்றுகள் அனைத்தையும் மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் நிலைபாடாகவே எடுத்துக்கொள்ளுகிறோம்.
     சோவியத்யூனியனில் தோழர் ஸ்டாலின் ஆட்சியின் போது ஏகாதிபத்தியங்களும்,கட்சியில் இருந்த அதிகாரவர்க்க பாதையாளர்களின் சீர்குலைவு வேலைகளினாலும்,சோவியத்யூனியனும்,அதன் மக்களும் பெரும் இழப்புகளை சந்தித்தனர்.இதை சமாளிக்க தோழர் ஸ்டாலின் மிகக்கடுமையாக போரடினார்.இப்போரட்டத்தின் போது அதிகாரவர்க்க கயவாளிகள் உண்மையான கட்சி தோழர்களையும்,மக்களையும் சதிகாரர்கள், தேசத்துரோகிகள் என்று குற்றம்சாட்டி,படுகொலை செய்தனர்.நாட்டில் இவர்களால் ஏற்படுத்தப்பட்ட பெரும்குழப்பத்தின் விளைவாக கட்சியிலும்,ஆட்சியிலும் துரோகிகள் யார்,நேர்மையானவர்கள் யார் என்பதை மிகத்தெளிவாக வரையறுத்து,துரோகிகளை களையெடுக்க முடியாததால்,கட்சிக்குள் இருந்த துரோகிகள் மூலம்,ஏகாதிபத்தியங்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டன.இவர்களின் இந்த எல்லா செயல்களுக்கும் தோழர் ஸ்டாலினே பொறுப்பு என்றும் அவரின் உத்தரவின் பேரிலேயே இப்படுகொலைகள் அனைத்தும் நிகழ்த்தப்பட்டதாகவும் உலகெங்கிலும் ஏகாதிபத்தியங்களும்,ஏகாதிபத்திய ஊடகங்களும் அவர்களின் ஆதரவாளர்களும்,தோழர் ஸ்டாலினை மட்டுமல்ல பொதுவுடமை சித்தாந்தத்தையும் கொச்சைப்படுத்தினர்.முற்றிலும் உண்மைக்கு புறம்பான கதைகளை,ஹாலிவுட் சினிமா பாணியில் ஏகாதிபத்தியங்கள் வீசிய எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்டு தோழர் ஸ்டாலினுக்கு எதிராக புத்தகங்களை எழுதிக்குவித்தனர்.
     சோவியத்யூனியனில் நடந்த மேற்கண்ட நிகழ்வுகளைப்பற்றி ஆய்வு செய்து பரிசிலித்த தோழர் மாவோ,தோழர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டை 60% சரியானது என்றும்,40% தவறானவை என்றும் வரையறுத்தார்.சோவியத்யூனியனின் அனுபவங்களில் இருந்து சீன கம்யுனிஸ்ட் கட்சியின் அதிகாரவர்க்க பாதையாளர்கள்,கட்சியிலும்,ஆட்சியிலும் பெரும்பான்மை பெற்று அவற்றை கைப்பற்றிய போது சீன மக்களின் தன்னிகற்ற தலைவராகவும்,நாட்டின் அதிபராகவும் இருந்த போதும் தோழர் மாவோ ராணுவரீதியான நடவடிக்கை எடுத்து,அதிகாரவர்க்க பாதையாளர்களை ஒடுக்கவில்லை.அதற்குமாறாக எமது மாபெரும் ஆசான் 6 மாதம் தலைமறைவாக இருந்து மக்களைத் திரட்டி மாபெரும் கலாச்சாரப்புரட்சியின் மூலம் அதிகாரவர்க்க பாதையாளர்களின் முதுகெலும்பை முறித்தார்.
     தோழர் ஸ்டாலினின் செயல்பாட்டில் 40% தவறானது என்று தோழர் மாவோ வரையறுத்ததால், தோழர் ஸ்டாலின் அவர்களை கம்யூனிஸ்ட் இல்லை என்று அறிவிக்கவில்லை.அதற்கு மாறாக தோழர் ஸ்டாலின் மக்கள் சக்தியை பயன்படுத்தி அதிகாரவர்க்க பாதையாளர்களை முறியடித்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.இச்சுட்டிக்காட்டுதலை ஊருக்கு உபதேசம் செய்யும் பாணியில்,போகிற போக்கில் சொல்லிவிட்டு போகாமல் தாம் கூறிய மக்கள் திரள் பாதை மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும்,ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்திய அதிகாரவர்க்க பாதையாளர்களுக்கு எதிராக செய்தும் காட்டினார்.
     மேற்கண்ட எமது ஆசான் தோழர் மாவோ உருவாக்கிய கோட்பாட்டு ஒளியில்தான் மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் நாங்கள் எமது நிலைப்பாட்டை வரையறுத்தோம்.சமச்சீர் கல்வி விவகாரத்தில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்திருத்தவாத பாதையில் செயல்படுகின்றன என்ற ஒரு அம்சத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த அமைப்புகளை புரட்சிகர சக்திகள் இல்லை என்று அறிவிக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் கோட்பாட்டு ரீதியான வரட்டுவாதிகளோ,பத்தினிகளோ அல்லர்.அப்படி ஒரு முடிவுக்கு வருவது பாட்டாளிவர்க்க கண்ணோட்டமோ அணுகுமுறையோ அல்ல என்பதை நாங்கள் மிக நன்றாகவே அறிவோம்.
\     அதேவேளையில் மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் சீர்த்திருத்தவாத கண்ணோட்டம்,சமச்சீர்கல்வி விவகாரத்தின் மூலம் அப்பட்டமாக இப்போது வெளிப்பட்டுவிட்டாலும்,அவர்களின் இந்த சீர்த்திருத்தவாத கண்ணோட்டம்,இவ்விவகாரத்தில்தான் முதன் முறையாக ஏற்பட்டதாக நாங்கள் கருதவில்லை.இவர்களிடம் இச்சீர்த்திருத்தவாத சித்தாந்தம் எப்போது,எங்கிருந்து,எந்த வடிவத்தில் உள்ளே நுழைந்தது, அது தற்போது இப்புரட்சிகர அமைப்புகளில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது, இதற்கெதிராக இப்புரட்சிகர அமைப்புகளில் உள்ள உண்மையான,புரட்சிகர தோழர்கள் மத்தியில் இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.இதற்கெதிராக அவர்கள் உட்கட்சி போரட்டம் ஏதேனும் நடத்துகிறார்களா? என்பன போன்ற ஏராளமான விவரங்களை  நாங்கள் சேகரிக்க வேண்டியுள்ளதோடு,இவர்களின்  பல்வேறு கோட்பாட்டு முடிவுகளையும்,செயல்பாடுகளையும் இவர்களின் அதிகாரப்பூர்வ இதழ்களான புதியஜனநாயகம்,புதியகாலாச்சாரம்,வினவு ஆகிய ஊடகங்களில் வந்துள்ள கோட்பாட்டுரீதியான கட்டுரைகளையும்,செய்திகட்டுரைகளையும்,நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.அதற்கான பணியை நாங்கள் ஏற்கனவே துவக்கிவிட்டோம்.எமது இந்த ஆய்வுபணிக்கு இக்குறுகியகாலத்திலேயே மிகமுக்கியமான ஆதாரங்களை திரட்டியிருக்கிறோம்.எமது இந்த பணிக்கு உதவவிரும்பும் தோழர்கள் தம்மிடம் உள்ள ஆதாரங்களை எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்குமாறு தோழமையுடன் கோருகிறோம்.அப்படி மின்னஞ்சல் அனுப்பும் தோழர்களின் பெயர்களை எந்த சந்தர்பத்திலும் வெளியிடமாட்டோம்,அதே நேரத்தில் எமது பணி மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளிடம் வெளிப்படும் பாட்டாளிவர்க்கத்துக்கு விரோதமான கோட்பாடுகளை,இணையதளத்தில் எழுதி அதன் மூலம் திருப்தி அடைவதுமட்டுமே எமது நோக்கமோ,இலக்கோ அல்ல.மேற்கண்ட தோழமை அமைப்புகளின் புரட்சிகர நிலைப்பாடுகள்,செயல்பாடுகள் அனைத்தையும் இணையதளத்தின் மூலம் மட்டுமே ஆதரித்தவர்கள் இல்லை  நாங்கள்!மேற்கணட அமைப்புகளின் ஆதரவாளர்களாக இருந்து அவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றவர்கள் நாங்கள்.இன்னமும் கூட நாங்கள் மேற்கண்ட அமைப்புகளின் உண்மையான ஆதரவாளர்கள்தான்.இப்புரட்சிகர அமைப்புகளின் சீர்திருத்தவாத பாதையை எதிர்ப்பதாலேயே நாங்கள் இவ்வமைப்புகளுக்கு எதிரானவர்கள் இல்லை.இவ்வமைப்புகளோடு நாங்கள் சித்தாந்த ரீதியாக, அடிப்படை நிலைப்படுகளில் மாறுபடவில்லை, ஆயினும் அவர்களிடம் வெளிப்படுகிற புரட்சிகர சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்த எமது அகநிலை மட்டுமே காரணம் என மேற்கண்ட அமைப்புகளும்,அரசியல் சித்தாந்த ரீதியாக அனைத்தையும் சீர்தூக்கி பார்க்க முடியாத காரணத்தால் எம்மீது குற்றச்சாட்டையும்,அவதுறுகளையும் அதன் ரசிகர்கள் பரப்புவார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம்.எமது இந்த எதிர்பார்ப்பின் படியேதான் மேற்கண்டவர்கள் செயல்படுவதையும்,வாசகர்கள் கவணமாக அவதானித்து வருகிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.எமது கட்டுரைகளுக்கு இணையதள வாசகர்களிடையே போதிய ஆதரவு,பின்னூட்டங்கள்  வரவில்லை என்பதாலேயே எமது கருத்துகள்,நிலைபாடுகள் தோற்றுவிட்டதாக மேற்கண்ட அமைப்பினர் வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம்.
     மேற்கண்ட இந்த பணியை  கட்டாயம் செய்வோம் என்றோ,செய்யமாட்டோம் என்றோ முன் தேதியிட்டோ,பின் தேதியிட்டோ முடிவு எதையும் நாங்கள் எடுக்கவில்லை.வரலாறு எமக்கிட்டுள்ள பணியைத்தான் நாங்கள் துவக்கியுள்ளோம்.எமது இந்த பயணத்தில் நாங்கள் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டுமா,இல்லையா? என்பதை எமது குழுவின் அகநிலையல்ல,வரலாற்றின் தேவை தான் அதை தீர்மானிக்க வேண்டும்.வரலாறு எம்மிடம் எதை கோருகிறதோ,அதை எப்படி கோருகிறதோ,எந்த வடிவத்தில் கோருகிறதோ அதை இணையத்தில் மட்டுமே செய்தால் போதுமா அல்லது மக்கள் மத்தியிலும் செய்ய வேண்டுமா? என்பதை வரலாறுதான் தீர்மானிக்க வேண்டும்.ஆகவே இணையத்தில் எமது விமர்சனத்தை கண்டும்காணாமல் இருந்துவிட்டாலே,நாளடைவில் நாங்கள் சோர்ந்துபோவோம் என்று மேற்கண்ட அமைப்பினர் கருதினால் அது எவ்வளவு மூடத்தனம் நிறைந்தது என்பதை வரலாறு அவர்களுக்கு நிரூபிக்கும்.ஒருவேளை இப்பணியை எமது குழுவில் உள்ள தோழர்களின் இறப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளால் தடைபட்டு நின்று போனாலும்,இதை செய்வதற்கு நிச்சயம் வரலாறு பலரை படைக்கும்,என்பதை எம்மை ஏளனம் செய்யும் அன்பர்களுக்கு தோழமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.மார்சியத்தை வரட்டு சூத்திரமாக அல்லாது இயங்கியல் கோட்பாடாக சமூகவிஞ்ஞானமாக கற்றுத்தேறுங்கள்.இதன் மூலம் இந்தியாவில் புரட்சிக்கு தடைகற்களாக உள்ள அனைத்தையும் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அயாராது பாடுபட்டாலும்,குறிப்பிடும் படியான முன்னேற்றம் ஏதும் அடையவில்லை,இனியும் அடையாது என்று கருதுவோரின் கனவுகளை களைப்போம்.இவ்வமைப்புகளின் முன்னேற்றம் என்பது முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டதற்கான காரணத்தை கண்டறிந்து அவற்றை களைய பாடுபடுவோம்! புரட்சிகர பயணத்தில் முன்னேறுவோம்!  
                                          தொடரும்…….
                                  புரட்சிகர வாழ்த்துகளுடன்  
                                  சூறாவளி நிர்வாகக்குழு. 

தொடர்புடைய கட்டுரைகள்:
                      


3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2

6.முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4
             
    

Monday, 15 August 2011

சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -1


சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1(மீள்பிரசுரம்).





      சமச்சீர்கல்வி விவகாரத்தில் மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்த்திருத்த கோரிக்கையை எடுத்துப் போராடி,சீர்திருத்த புதைகுழியில் சிக்கிக்கொண்டுள்ளன.தமிழகத்தில் ஒரே புரட்சிகர அமைப்பான இந்த அமைப்பைகளை இதில் இருந்து மீட்டு, மீண்டும் அவர்களை புரட்சிகர நீரோட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் சூறாவளியில் கட்டுரை ஒன்றை(சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி ) வெளியிட்டு இருந்தோம்.
இக்கட்டுரையை கண்ட இந்த அமைப்பினர் எமது விமர்சனத்துக்கு நேரிடையாக பதில் ஏதும் தராமல்,தனது ஆதரவாளர்கள் இருவர் மூலம் அரட்டை பாணியில் சில அர்த்தமற்ற கேள்விகளை கேட்டனர்.கட்டுரையின் உள்ளடகத்தில் என்ன உள்ளது என்பதைவிட யார் அதை எழுதியது என்பதில் தான் அவர்கள் முழுகவனத்தையும் செலுத்தினர்.போலிஸ் பாணியில் துருவித்,துருவி கேள்விகேட்டனர்.பெரியண்ணன் பாணியில் அவர்களின் அனுகுமுறை அமைந்துள்ளது.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் தன்மீது தோழமை ரீதியாகக் கூட எவரேனும்  விமர்சனம் வைத்தால்,அப்படி விமர்சனம் வைத்தவர்கள் அமேரிக்காவின் சிஐஏ உளவுத்துறையினராக இருப்பார்களோ என்று யோசிக்கும் அளவுக்கு அவர்கள் அணுகுமுறை அமைந்துள்ளது.
      நாங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் மிகவும் அழுத்தமான உள்ளடக்கத்தை சுருக்கமாக எழுதியுள்ளதால் அதை வாசிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு சிரமப்படுவார்கள் என்பதாலும் இக்கட்டுரையை நாங்கள் தவறான அடிப்படையிலும்,நோக்கத்திலும் வெளியிட்டுள்ளோம்  என்று எம்மீது அவதூறு பரப்பப்பட்டு வருவதாலும்,எமது அந்த கட்டுரையை விரிவான முறையில் அரசியல்,சித்தாந்த ரீதியாக எழுதி வெளியிடுவது என முடிவுசெய்துள்ளோம்.
      நாங்கள் யார் என்ற வினவு ஆதரவு தோழர்கள் கேள்விக்கு எமது பதில் இதுதான்.நாங்களும் மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் உண்மையான ஆதரவாளர்கள் தான்.இதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.ஆனால் நாங்கள் அம்மா பாணி விசுவாச தொண்டர்கள் அல்ல,அரசியல் சித்தாந்தத்திற்கு மட்டுமே விசுவாசிகள்.நாங்கள் உண்மையான ஆதரவாளர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் தவறுகளை சுட்டிக்காட்டி போராடுகிறோம்.இது நமது கடமை என உறுதியாக கருதுகிறோம்.ஒரு வேளை எமது கட்டுரையும்  அதில் எழுதப்பட்டுள்ள நிலைப்பாடும் தவறானவை எனறு வினவும்,அதன் தோழமை அமைப்புகளும் நிருபித்தால் எமது தவறுக்காக சுயவிமர்சனங்களை ஏற்க சிறிதும் தயங்கமாட்டோம்.அதே நேரத்தில் எந்த வகையிலும் அரசியல்,சித்தாந்த ரீதியாக சமரசம் எதையும் செய்துகொள்ளவும் மாட்டோம்.அப்படி சமரசம் செய்துகொள்ள இது ஒன்றும் எமது தனிப்பட்ட விவகாரம் அல்ல என்பதால்,அப்படி சமரசமாக போக எமக்கு உரிமை ஏதும் இல்லை.முன்பு சூறாவளி இணையத்தில் ஆசிரியராக இருந்தவரும்,மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளில் ஒருவருமான தோழர் மூடக்கிழவனிடம் அரசியல்,சித்தாந்தம் பயின்றவர்கள் தான் நாங்கள் அவர் எமக்கு தந்த பயிற்சியின் அடிப்படையில் தான் செயல்படுகிறோம்,அந்த அடிப்படையில் தான் எமது கட்டுரைகளை வெளியிடுகிறோம்.என்ன தோழர்களே எங்களை பற்றிய அறிமுகம் போதுமா என்ன?


சமச்சீர் கல்வியை கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்ததற்கும்,உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் சமச்சீர்கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதற்கும் கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து விரிந்த தேவைதான் அடிப்படை காரணம் என்பதை இதற்கு முந்தையக் கட்டுரையில் எழுதியிருந்தோம்.
     சமச்சீர் கல்வியை நிறுத்தி கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து விரிந்த தேவைக்கு முட்டுக்கட்டை போட்ட பார்ப்பன ஜெய தலைமையிலான பார்ப்பன மூடக்கும்பல் மூக்குடைப்பட்டது என்பதையும் எழுதியிருந்தோம்.
     சமச்சீர் கல்வியை கொண்டு வந்ததற்கான பொருளியல் காரணத்தை புறக்கணித்துவிட்டு,இதை கொண்டு வந்ததற்கும்,நீதிமன்றங்கள் அதை உறுதிபடுத்தியதற்கும் கல்வியில் தனியாரின் கட்டணக்கொள்ளையை தடுப்பதற்கும்,கார்ப்பரேட் மயத்தை தடுப்பதற்கு தான் என்றும் மக இக வும் அதன் தோழமை அமைப்புகளும் எதிரும்,புதிருமான இருவேறு கருத்துக்களை மக்களிடையே விதைப்பதையும்,இப்படி இவர்கள் செய்வதற்கு தமிழகத்தில் சமச்சீர் கல்வியை ஆதரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யவோ,குறைந்தது நீதிமன்றங்களில் சட்ட    போரடுகிற அளவுக்கு கூட ஜனநாயக சக்திகள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு தனிநபர்களைத் தவிர சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்த இருக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்கமெங்கும் மக்களிடையே பிரச்சாரத்தையும்,போரட்டங்களையும் நடத்தியதோடு,உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தியது மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும்.
     மக இக மற்றும்  அதன் தோழமை அமைப்புகளை தவிர மேற்கண்ட  கல்வி பிரச்சனைகளுக்காக மட்டுமல்ல வேறெந்த மக்கள் நலனுக்காக போரடக்கூடிய ஜனநாயக அமைப்புகளே ஒருவரும் இல்லை என்ற மிக அவலமான சூழலில் தமிழக மக்கள் அரசியல் ரீதியாக அனாதையாக்கப்பட்டுள்ளனர்.இந்த வெற்றிடத்தை நக்சல்பாரி புரட்சியாளர்களாகிய மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் இட்டு நிரப்பும் வகையில் தான் தன்னுடைய முழுபலத்தையும் பயன்படுத்தி போராடி வருகிறது இந்த அமைப்புகளின் தோழர்கள் அள்ளும்,பகலும், அயராது போராடி வருகிறது.
     சமச்சீர் கல்வி,கல்விகட்டண நிர்ணயம் ஆகிய பிரச்சனைகளில் இப்புரட்சிகர அமைப்புகளின் போரட்டங்களை சமச்சீர் கல்வி ஆதரவு ஊடகங்கள் தவிர்க்கவியலாமல் வெளியிட்டே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக வரம்புக்கு உட்பட்டு வெளியிட்டு வருகின்றன.இப்படி கிடைத்த விளம்பரங்களின் மூலம் இவ்வமைப்புகள் வேறேப்போதும் இல்லாத வகையில் ஆளும்வர்க்க ஊடகங்களால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக தாம் நடத்தும் போரட்டங்களில் பெருமளவில் மக்கள் அதிலும் பெற்றோர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் இதன் மூலம் தமது அமைப்புகளில் இணைவார்கள் என்றும் வேறேப்போதும் இல்லாதவகையில் தந்து சக்தியை அதிகரித்துக்கொள்ளமுடியும் என்று எதிர்பார்த்தனர்.ஆனால் இவர்களின் எதிர்பார்ப்பு,குறிப்பிட்டு சொல்லும்படியான அளவிற்கு நிறைவேறவில்லை.இதன் காரணமாக தமது வழமையான புரட்சிகர செயல்பாடுகளில் சிற்சில சமரசங்களை செய்துகொண்டனர்.இதை தம்து மக்கள் திரள் அமைப்புகளான மக இக,புமஇமு,புஜதொமு,விவிமு ஆகிய அமைப்புகள் மூலம் அல்லாது மனித உரிமை பாதுகாப்பு மையம் மூலம் நடைமுறைப்படுத்தினர்.இவர்கள் மூலம் நீதிபதி கோவிந்தராசன் குழு,நீதிபதி ரவிராசன் குழு ஆகிய இரு குழுகளும் நிர்ணயத்தை தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நடைமுறைப்படுத்த கோரி தமிழகம் எங்கும் போரட்டங்களை நடத்தினர்.இது மக்களிடையே போதுமான தாக்கதை ஏற்ப்படுத்தாத காரணத்தினால் மக இக,புமாஇமு ஆகிய அமைப்புகளையும் களத்தில் இறக்கி மேலும் ஒரு சமரசத்தை செய்துகொண்டனர்.புஜதொமு,விவிமு ஆகிய அமைப்புகளை இவ்விரு விவகாரங்களிலும் ஈடுபடுத்தாமல் இருந்த இவர்கள் தற்போது விவிமு அமைப்பையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளனர் என்பதை 27.07.2011 அன்றைய நாளிதழ்களில் வந்துள்ள செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.இரு நீதிபதி குழுக்களின் கட்டணநிர்ணயத்தை நடைமுறைப்படுத்த கோருவது கல்வியில் தனியார்மயத்தை ஆதரிப்பதாகும் என்பதை பற்றிக்கூட கவலைப்படாமல்,எப்படியாவது மக்களிடையே பிரபல்யம் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவருகின்றனர்.
     தமிழகத்தில் சமச்சீர்கல்விக்காக அமைப்பு ரீதியாக வேறு எவரும் போராடாத சூழலில் இவ்வமைப்புகள் மட்டுமே தன்னந்தனியாக நின்று போராடி இதில் வரலாற்றில் குறிப்பிடும் படியான வெற்றியையும் சாதித்துள்ளன.இவ்விவகாரத்தில் சிபிஎம் போலிகள் சமச்சீர்கல்விக்கு பார்ப்பன ஜெயா கொண்டுவந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு சமச்சீர்கல்விக்கு ஆதரவாக போராடி மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் ஈட்டியுள்ள வெற்றியின் பலனை அறுவடை செய்துகொள்ளும் ஈனச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது கருணாநிதி கட்சியும் களத்தில் குதித்துள்ளது இப்போரட்டத்தின் மூலம் மக்களிடையே தமக்கு கிடைத்துள்ள பிரபல்யம்,ஆதரவை தமது உழைப்புக்கேற்ற பலனை அறுவடை செய்துகொள்ளும் நோக்கில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தினால் அது தனியார் கல்விக்கட்டணக்கொள்ளைக்கு முடிவுகட்டிவிடும் என்று பரப்புரை செய்துவருகின்றனர்.சமச்சீர்  கல்வி நடைமுறைப்படுத்தினால்,அப்படி நடைமுறைப்படுத்திய ஒரிரு மாதங்களிலேயே தாம் கூறும் காரணம் உண்மையல்ல என்பது மக்களுக்கு தெரிந்து தாம் மக்களிடையே அம்பலப்பட்டு என்பதைப்பற்றி கூட சிறிது கவலைபடாமல் மீண்டும்,மீண்டும் அதையே கூறிவருகின்றனர்.அந்த அளவிற்கு இந்த விடயத்தை பயன்படுத்தி பிரபல்யம் அடைந்து விட வேண்டும் என்று துடியாய்துடிக்கின்றனர்.இதன் உச்சகட்டமாக உண்ணாவிரதம் என்பதையே சிறையை தவிர சமூகத்தில் வேறெங்கும் ஏற்காத இவர்கள்.மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மூலம் முதன் முறையாக உண்ணாவிரம் இருந்தனர்.
     கடந்த இருபந்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்குணமான போரட்டங்களை மட்டுமே நடத்தி தனக்கென தனி  வரலாற்றை உருவாக்கி இருந்த இவர்களை ஆளும்வர்க்கங்களும் அதன் ஊடகங்களும் நக்சலைட் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தியுள்ளதை காந்தியவழியிலான உண்ணாவிரம் போன்றவற்றை நடத்தினால் அதிலாது மக்கள் பெருமளவில் கலந்து கொள்வர்கள் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது.இந்த உண்ணாவிரதங்களில் மனித உரிமை பாதுகாப்பு மையம் தனது உறுப்பினர்களை கொண்டே நடத்த முடியாமல் தமது தோழமை அமைப்பு உறுப்பினர்களையும் மறைமுகமாக கலந்துகொள்ள செய்ததின் மூலம் ஆளும்வர்க்கங்களுக்கே உரித்தான உண்ணாவிரதம்  என்ற வடிவத்தோடு போலித்தனமும் இவர்களை தொற்றிக்கொண்டுவிட்டதை இந்நிகழ்வு அம்பலப்படுத்திவிட்டது.ஆனாலும் இப்புரட்சிகர அமைப்புகள் தம்முடன் நெருங்கி வரும் மகிழ்ச்சியில் ஆளும்வர்க்க ஊடகங்கள் இப்புரட்சிகர அமைப்புகளின் ஏனைய போரட்டங்களுக்கு தாம் தரும் முக்கியத்துவத்தை விட ஆக கூடுதலான முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிட்டன.சமச்சீர்கல்வியை கருணாநிதி கொண்டுவந்தற்கும்,இதை உயர்நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் ஆதரித்து தீர்ப்புகள் வழங்கியதற்கும்,கார்ப்பரேட் மூலதனத்தின் தேவை மற்றும் நலனுக்காகத் தான் என்ற அடிப்படை உண்மையை மக்களிடையே கூறிவிட்டால் இதன் வெற்றிக்காக சமுகத்திலும்,நீதிமன்றங்களிலும் தான் போரடியதால் தான் இவ்வெற்றி கிடைத்தது என்பதில் முக்கியத்துவம் குறைந்து மக்களிடையே தான் எதிர்பார்க்கும் பலனை அடையமுடியாது என்பதால் தான் தேர்தல் காலத்தில் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் மக்களிடையே உண்மைக்கு புறம்பான செய்திகளை கூச்சமோ,தயக்கமோ இல்லாமல் இவர்களும் சமச்சீர்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தனியார் கல்விகட்டணக்கொள்ளையை தடுத்துவிடும் உண்மைக்கு புறம்பான செய்தியை எவ்வித தயக்கமும் இன்றி மக்களிடையே பரப்புரை செய்து வருகின்றனர்.சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தால் அது தனியார் கட்டணகொள்ளையை தடுத்துவிடும் என்ற கூற்றில் உண்மையில்லை என்பதையும் இக்கூற்று உள்முரண்பாடு நிறைந்துள்ளதையும் எமது சென்றக்கட்ரையிலேயே எழுதியிருந்தோம்.சமச்சீர் கல்வியை கொண்டுவந்த கருணாநிதியும் இதை உறுதிபடுத்திய உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கல்வியில் தனியார்மய எதிர்ப்பாளர்கள் என்ற கண்ணோட்டத்தை மக்களிடையே விதைப்பதையும்,இதன் மூலம் இப்புரட்சிகர அமைப்புகளின் அயராத உழைப்பை எதிர்வரும் தேர்தல்களில் கருணாநிதியும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் அருவடை செய்துகொள்ளபோகிறார்கள் என்பதற்கு மேல் இப்புரட்சிகர அமைப்புகள் வேறு எதையும் சாதிக்க போவது இல்லை.விரைவில் இவர்களுக்கு காலம் உணர்த்தும்.ஆனால் இவர்களை ஆளும்வர்க்க ஊடகங்களால் கிடைத்த விளம்பரமும்,பிரபல்யமும் மேற்கண்ட உணமையை காணவுட்டது இவர்களின் அறிவுக்கண்ணை மறைத்துவிட்டது.சரியோ,தவறோ தமது வழமையான பாணியில் அனைத்து அமைப்புகளும் ஒரே குரலில் தமது கருத்துகளை பிரதிபலிக்காமல் தம்க்குள்ளேயே முன்னுக்குபின் முரணாக பேசியும்,எழுதியும் வருகின்றனர்.இப்படு தாங்கள் செய்வதால் அது மக்களிடையே குழப்பத்தையும் தனது முரண்பட்ட நிலை குறித்த கேளிவியை ஏற்படுத்துமே என்பது பற்றிகூட இவர்கள் சிறிதும் கலைப்படவில்லை.இப்புரட்சிகர அமைப்புகள் வாழ்நாளில் முதன் முறையாக மக்களை முட்டாள்களாகவும்,மூடர்களாகவும் கருதுவதையே மேற்கண்ட நிகழ்வுகள் உறுதிபடுத்துகிறது.மேலும மக்களை ஆக்கமற்றவர்களாக கருதுவதால் தான் மக்கள் போரட தாயாரில்லை என்று மக்களை குற்றம் சாட்டிவிட்டு தம்மை கதாநாயகர்களாக காட்டிக்கொள்ளும் நோக்கில் தான் 48 மணி நேர உண்ணவிரத போரட்டத்தை நடத்தினர்.ஆளும்வர்க்க ஊடகங்கள் துணையேடு தமது அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொருளாதார பலம்படைத்த ஒருவரை கதாநாயகனாக மக்கள் மனங்களிலே வலிந்து திணித்து வருகின்றனர்.
     அதோடு புதியஜனநாயக பத்திரிக்கைக்கு முரணான கருத்தை மக இகவின் புதிய கலாச்சாரம் முன் வைக்கிறது.இதைவிட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் இணையதளமான வினவு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் ஜெயா சமச்சிர்கல்வியை ரத்து செய்ய முனைவதாக தமது அமைப்பு நீதிமன்றத்தில் நிருபித்துள்ளதாக எழுதி புளகாங்கிதம் அடைகிறது.
     இப்படி இம்மூன்று ஊடகங்களும் மூன்று வெவ்வேறான காரணங்களை சமச்சீர்கல்வி விவகாரத்தில் முதன்மையான காரணம் என்று முன்னிலைப்படுத்துகின்றன்.ஒரே லட்சியத்திற்காக செயல்படும்  இவர்கள் இவ்விவகாரத்தில் தமக்குள்ளேயே எதிரும்,புதிருமான ,முன்னுக்குபின் முரணான கருத்துகளை முன் வைக்கிறோமே என்பதைப் பற்றி சிறிதும் இவர்கள் கூச்சப்படவில்லை.ஆனால் ஒரு விடயத்தில் மாத்திரம் இவர்கள் இடையேயான ஒற்றுமை மிக வலுவாகவே உள்ளது.
     சமச்சீர்கல்வியை ஆளும்வர்க்கங்கள் கொண்டுவந்ததற்கான அடிப்படையான பொருளியல் காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ளகூடாது என்பதில் மட்டும் இவர்களிடையே உள்ள ஒற்றுமை தான் அது.ஒருவேளை ஒரே கரணத்தை சொன்னால் அது சமூகத்தில் ஒரு தரப்பு மட்டுமே ஏற்க கூடிய இருக்கும்.ஆகையால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளை மக்களிடையே கொண்டுசென்றால்,அது சமுகத்தில் உள்ள அனைத்து பிரிவையும் திருப்தி செய்து தமக்கு வலுசேர்க்கும் என்று கருதி தமக்கிடையே வேலை பிரிவினை செய்துகொண்டிருக்கிறார்களோ என்னவோ!ஒரு வேலை சிபிஎம் இடமிருந்து இவ்வித்தையை இவர்கள் கற்றுக்கொண்டிருக்கலாம்.இதைபோன்ற நிகழ்வுகளைத் தான் அடிப்படையாக கொண்டு விரைவில் இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் அனைவரும் ஒன்று சேருவோம் என்று சில காம்ரேட்டுகள் கூறுகிறார்களோ!
     சரி,எது எப்படியோ நடக்கட்டும் நாம் இக்கட்டுரையின் விமர்சனத்துக்கு உட்படுத்தியுள்ள புரட்சிகர அமைப்புகள் வேறேப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது தமக்கிடையிலேயே ஒருவருக்கு எதிராய் ஒருவர் நிலைப்பாடுகளை முன்வைப்பது ஏன் என்பதையும்,அந்நிலைப்பாடுகள் ஒவ்வொன்றுக்குள்ளேயும் முரண்பாடுகள் உள்ளதையும்,அவைகள் என்ன,என்ன என்பதையும்,இவைகள் அரசியல் சித்தாந்த ரீதியாக எத்தகைய தன்மைகொண்டது என்பதையும்.இவைகள் எந்த வர்க்கங்களின் நலனை பிரதிபலிக்கின்றன என்பதையும்,ஒவ்வொரு சோல்லுக்கும்,செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலன் ஒலிந்துகொண்டிருக்கிறது என்ற ஆசான் மாவோ கூறிய கோட்பாட்டு ஒளியில் இனி அவற்றை பரிசிலிப்போம்.
                                                     
                           புரட்சிகர வாழ்த்துகளுடன்
                            சூறாவளி நிர்வாகக்குழு.
     .
                                                      தொடரும்


தொடர்புடைய கட்டுரைகள்:
                      


3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2

6.முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4