அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.சூறாவளி இணையம் கடந்த சில மாதங்களாக தவிர்க்க இயலாத காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.ஆசிரியர் குழு பொருப்பேற்றிருந்த இரு தோழர்கள் தமது பொருப்பில் இருந்து தற்காலிகமாக விலகியதால் தொடர்ந்து எம்மால் சூறாவளி இணையத்தை நடத்த இயலாமல் இருந்தோம்.தற்போதும் அதே நிலை நீடிக்கிறது.ஆகவே ஆசிரியர் குழு மூலம் கட்டுரைகள் வெளியிடுவது தொடர்ந்தும் இயலாத ஒன்றாகவே உள்ளது.ஆகையால் ஆசிரியர் குழு மறுபுணரமைக்கும் வரை வெளியில் இருந்து பெறப்படும் ஆக்கப்பூர்வமான சமூக கண்ணோட்டம் உள்ள,மக்கள் போராட்டச் செய்திக் கட்டுரைகளை பெற்று வெளியிடுவது என முடிவு செய்திருக்கிறோம்,ஆகவே வாசகர்கள் எமது முடிவிற்கு ஆதரவு தரும்படியும்,தாங்களும் கட்டுரைகள், செய்திகளை அனுப்புமாறும், தொடர்ந்து சூறாவளி இணையத்திற்கு ஆதரவு தருமாறும் சூறாவளி நிர்வாகக் குழு சார்பில் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
-இப்படிக்கு சூறாவளி நிர்வாகக்குழு
தொடர்புடைய பதிவிகள்
1.நன்றி.
