விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Thursday, 9 February 2017

ஏறு தழுவுதல்:போராட்டமும், படிப்பினைகளும்! மின்னூல். சூறாவளி வெளியீட்டகம்.





                                              

Thursday, 13 September 2012

கூடங்குளம் : உயிர் வாழ ஒன்று சேர்வோம்!

              தமிழக வரலாற்றிலேயே மிகவும் உறுதியான, தீரமிக்க போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் போராட்டமே ஆகும். எதிர்பார்த்தது போன்றே போராடும் மக்கள், போலீசின் கடுமையான  தாக்குதலுக்கும், தொடர் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.




     போராட்டக்குழு தலைவர் திரு சுப.உதயக்குமார் போலீசில் சரணடையப் போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை ஏற்காமல் தொடர்ந்து தமது போராட்டத்திற்கு வழிகாட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

     சுப.உதயக்குமார் மற்றும் போராட்டக்குழுவினரை கைது செய்ய இந்திய அரசால் உளவு விமானம் பயன்படுத்தப்படுகிறது.  நிலத்தில் போலீசின் அதிரடிப்படை அவரைத் தேடுகிறது. இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை  காக்க வராத, இந்திய கடலோர காவல்படை கூடங்குளம் மக்களை தாக்குவதற்கு கடலில் முற்றகையிட்டுள்ளது.

     கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு வகையான சமூக அமைப்புகள், தனிநபர்கள் அனைவரும் கூடங்குளம் மக்கள் மீதான போலீசின் தாக்குதலை கண்டித்துள்ளனர். தம்மை புரட்சிகர அமைப்பு என்றுக் கருதிக் கொள்ளும் சில அமைப்புகள் கூடங்குளத்தில் முற்றுகையிட்டுள்ளன. சில இணையதளங்கள் கூடங்குளம் பகுதியின் நிலையை நேரடி வர்ணனை செய்கின்றன.

     போராட்டக்குழு தலைவர் தன்னை  காந்தியவாதியாக அறிவிக்கிறார். போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அன்னா அசாரே குழுவிற்கு அவர்கள் அழைப்பு விடுத்ததின் பேரில் அரவிந்த் கேஜ்ரிவால் கூடங்குளத்திற்கு நேரிடையாக வந்து சென்றுள்ளார்.

     இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் காந்தி அறிவித்த எந்த ஒரு போராட்டமும் தவிர்க்க வியலாமல் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் போது, மக்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் காந்தி மக்களின் செயலை வன்முறையாக சித்தரித்து போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டு,  கைதாவது என்பது வழமையான ஒன்றாக அமைந்தது. இதன் மூலம் காந்தியின் கைதே முக்கியமான நிகழ்வதாக மாற்றப்பட்டு போராட்டம் திசை திருப்பப்பட்டது. இப்படி போராட்டம் திசை திருப்பப்படுவதற்கு காந்திக்கும்,வெள்ளை ஆட்சியாளர்களுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இருந்தது.

     கூடங்குளத்திலும் மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது போலீசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டபோது மக்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சுப.உதயகுமார் அவர்கள் கைதாக போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்., போராட்டக் குழுவிற்கும்,அரசுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் காந்தியை போன்று மக்களை வன்முறையாளர்களாக காட்டி கைதாவது சாத்தியமில்லை என்றப் புரிதல் திரு சுப.உதயகுமாருக்கு இல்லை. அவரின் இந்தச் செயல் காந்தியைப் பற்றிய அவரின் அறியாமையையே காட்டுகிறது, அதோடு போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக தாம் நடத்தி வந்தப் போராட்டம் இப்போது முட்டுச்சந்தில்  சிக்கிக் கொண்டுவிட்டது என்பதையும் தெளிவாக உணர்ந்ததாக தெரியவில்லை. இனி அணு உலைக்கு எதிரான சிறு முணு, முணுப்பைக்கூட ஆட்சியாளர்கள்  அனுமதிக்க போவதில்லை. இதன் மூலம் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட போராட்ட வடிவம் அதன் உயர்ந்த வடிவத்தை எட்டிவிட்டது. இதற்கு மேலும் இப்போராட்டத்தை இதுவரை கடைபிடித்த வழிமுறைகள் மூலம் கொண்டு செல்வதற்கான அடிப்படை ஏதுமில்லை.

     இதற்கு மேல் ஆட்சியாளர்கள் எந்த ஒரு போராட்டத்தையும் அனுமதிக்க போவதில்லை என்பதோடு மக்களும் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட வழிமுறையை  தொடரப் போதில்லை. சமரசமற்ற போராட்டத்தையே தமது அன்றாட வாழ்வாக கொண்டுள்ள மீனவமக்களின் இந்தப் போராட்டம், அதே சமரசமற்ற  தன்மையைத்தான்  கோருகிறது. கடல் தாயை மட்டுமே காலம், காலமாக தமது வாழ்விற்கான ஆதாரமாக கொண்டுள்ள மக்கள், அந்த தாயின் அழிவு, தமது அழிவு என்பதை உணர்ந்தே போராடுகின்றனர்.

     போராடும் மக்களின் இந்த உணர்வை புரிந்து கொள்ளாத, ஏற்காத யாரும் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்த முடியாது.

     அதே நேரத்தில் இப்போராட்டம் கூடங்குளம் வட்டார மக்களின்,  அதிலும் மீனவ மக்களின் போராட்டம் என்ற அளவில் இருக்கும்வரை அடுத்தகட்ட வளர்ச்சியை, முடிவை எட்டவும் முடியாது. போராட்டம் விரிவாக்கத்தில் தான் வெற்றிக்கான அடிப்படையை கொண்டுள்ளது.

     ஆனால் கூடங்குளம் வட்டார போராடும் மக்களை போன்றே, ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளும்,நெசவாளிகளும் அதற்கெதிராக புலம்பலை மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர்.

     தமது வாழ்வாதாரம் பாதிக்கபடுவதற்கு எதிராக இவர்களை அணிதிரட்ட இயலாமல் இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் தவிக்கினறன. மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறை என்ன வென்று அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. இதன் காரணமாகவே இந்த அமைப்புகள் வலது,இடது சந்தர்ப்பவாத  புதைக்குழிக்குள் வீழ்ந்து கிடப்பது தொடர்கதையாகிப்  போனது.மொத்தத்தில் இவர்கள் தமது இயலாமையை, சமவெளிப்பகுதியில் வாழும் மக்களை அணிதிரட்ட இயலவில்லை”, என்கின்றனர்.

     இந்தியாவிலுள்ள புரட்சிகர அமைப்புகள் அனைத்துமே பழங்குடி மக்களிடம் மட்டுமே தம்மை  ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிகிறது. கூடங்குளம் போராட்டமும் மீனவ பழங்குடி  மக்களிடம் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ளது.

     இந்திய நாட்டின் மக்களில் 90 விழுக்காட்டிற்கு மேலானவர்களை உள்ளடக்கிய சமவெளி பகுதி மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறையை உள்ளடக்கிய, சமூக மாற்றத்தை தமது இலக்காக கொணடிருக்கும் இயக்கங்களால் மட்டுமே கூடங்குளம் போராட்டத்திற்கு இனி தலைமை ஏற்க இயலும். இப்போதைய சூழலில் இதற்கு மாற்று ஏதுமில்லை.

     ஏனென்றால் கூடங்குளம் அணு உலை என்பது வங்கத்து சிங்கூர் போராட்டத்தை போன்று குறுகிய பொருளாதார வடிவிலான போராட்டம் அல்ல. இதன் பயனாளிகள் டாடாவோ, டாடாவின் அரசியல் பிரதிநிதிகளான இந்திய அரசியல் கட்சிகளோ மட்டுமல்ல. இது மேல்நிலை வல்லரசுகளின்  நலனை உள்ளடக்கியதாகும். அதாவது இந்திய நலன் என்ற வரம்பை தாண்டியதாகும். மேல்நிலை வல்லரசுகள் தமது நாடுகளில் இனியும் சோதித்து பார்க்க முடியாத அணு தொழில் நுட்பத்தையும், அதிலிருந்து பெறப்படும் பலன்களையும் இந்தியா போன்ற தமது அடிமை நாடுகளின் மூலமே பயன்படுத்தி ஆதாயமடைய முடியும்.

     எனவே நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது பொருளாதார போராட்டம் என்ற எல்லையை கடந்து அரசியல் போராட்ட உள்ளடக்கத்தை கொண்டதாகும்.

     கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உள்ளடக்கத்தில் மேல்நிலை வல்லரசுகளுக்கும் அதன் நலன்களுக்கும் எதிரானது.  இதனால்தான் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அனைத்து விவகாரங்களிலும் எதிரும் புதிருமாக நின்றாலும், கூடங்குளம் விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத கட்சிகள் மட்டுமே கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதாக கூறுகின்றன. ஆனால் இவர்களும் உண்மையில் மேல்நிலை வல்லரசுகளுக்கும், அதன் நலன்களுக்கும் எதிரானவர்கள் இல்லை.

     தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற ஆட்சியாளர்களின் கொள்கைகளை ஏதோ ஒரு வடிவில், வகையில் ஆதரிப்பவர்கள் அனைவரும் மேல்நிலை வல்லரசுகளின் நலன்களை ஆதரிப்பவர்கள்தான். இதை இன்னமும் கூர்மையாக பார்த்தால், நிலவுகிற இந்த சமூக அமைப்பை ஆதரிப்பவர்கள், ஏற்பவர்கள் அனைவருமே அதன் ஆதரவாளர்கள் தான். ஏனென்றால் நிலவுகிற இந்த சமூக அமைப்பு முழுக்கவே மேல்நிலை வல்லரசுகளின் அவர்களின் நலனையே உள்ளடக்கிய அடிப்படையைக் கொண்டதுதான்.


     எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் சமூக மாற்றத்தோடு இணைந்த ஒன்றாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஊடாகத்தான், அதன் ஒரு அங்கமாத்தான் கூடங்குளம் போராட்டத்தை இனி முன்னெடுத்து செல்ல முடியும். எனவே இந்த அடிப்படையில் போராட்டத்தை எப்படி வளர்த்தெடுத்து விரிவாக்கம் செய்வது,அதற்கான செயல்வடிவம் என்ன என்பதை அடுத்தத் தொடரில் பார்ப்போம்!

தொடர்புடைய கட்டுரைகள்:

Wednesday, 21 March 2012

கூடங்குளத்தில் வெறிநாய்களும்,தெரு நாய்களும்! எச்சரிக்கை!

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலையை அறிவித்திருக்கிறது.ஈழத்தமிழர்கள் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து இப்போது தமிழக தமிழர்கள் மீதான படுகொலைக்கு ஆயத்தமாகி வருகிறது இந்தியா! இந்தியாவின் ஒரு அங்கம் தமிழகம் என்று கூறும் இந்திய அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே முற்றுகை இட்டுள்ளது.ராதாபுரம் வட்டத்தில் 144 தடை உத்தரவும் ,இடிந்தகரைக்கு மின்சாரம் ,குடிநீர்,பால்,காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே கூட இந்த தாக்குதல்கள் கூடங்குளம் மக்கள் மீது நடந்துகொண்டிருக்கலாம்.





தற்போது கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலிசு வெறிநாய்கள்.


தமிழக அரசு அணு உலையை திறக்க எடுத்துள்ள முடிவும்,தமிழ மக்கள் மீது இந்திய அரசு தொடுக்கப்போகும் தாக்குதல்களும் நாம் எதிர்பாராதது அல்ல.காவல்துறை என்றப் பெயரில் திரியும் வேட்டை நாய்களுக்கு வேட்டையாட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.அவைகள் மக்களின் ரத்தம் குடித்து ஆனந்தக்கூத்தாட நாக்கை தொங்க விட்டுக்கொண்டு திரிகின்றன.

மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும், அதை நியாயப்படுத்துவதற்கும் போராட்டக்குழுவையும்,மக்களையும் பயங்கரவாதிகளாக உருவகப்படுத்தும் வதந்திகளை வேட்டைநாய்கள் ஊடகங்கள் மூலம் பரப்பிவருகின்றன.இதை உறுதிப்படுத்தும் வகையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டால், போலீசு மீது போராட்டக்காரர்கள் வெடுகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுப்பார்கள் என்று உளவுத்துறையினர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

ஆனால் தமது போராட்டத்தையும்,இந்திய அரசு தம்மீது தொடுக்கப்போகும் தாக்குதல்களையும் மக்கள் பலத்தால் மட்டுமே போராட்டக்குழு எதிர்கொண்டது,எதிர்கொள்ளப்போகிறது.
இந்திய அரசை ஆயுதபலத்தால் எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாது என்பது அவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

கூடங்குளம் மக்களை வேட்டையாட இந்திய அரசு ஆயத்தமாகிவிட்ட அதே நேரத்தில்,இந்த வேட்டையை காரணம் காட்டி போராட்டக்குழு மீது பழிபோட்டு அதில் ஆதாயமடையகூடங்குளம் மக்களை தன்பக்கம் இழுக்க-தெரு நாய்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.

எதிரிகள் ஏவிவிட்டுள்ள வேட்டைநாய்களை அடையாளம் கண்டுள்ள கூடங்குளம் மக்கள், இந்த தெருநாய்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஏனென்றால் வேட்டை நாய்கள் தலைமையை ஆயுதத்தால் தாக்கி மக்களை வேட்டையாட துடிக்கிறது.தெரு நாய்களோ தலைமை மீது பழிபோட்டு,தகுதியற்றது என்றுக்கூறி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆதாயம் அடைய துடிக்கிறது.

இருவகைநாய்களும் இருவேறு வழிமுறைகளை கையாண்டாலும் இருவரின் நோக்கமும் ஒன்றுதான்.வேட்டை நாய்களின் வேலையை எளிமையாக்குவதே தெருநாய்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியாகும்.வேட்டைநாய்களை எதிர்கொள்ள,கூடங்குளம் மக்களே தெருநாய்களை உங்கள் அருகில் விட்டுவிடாதீர்கள்,எச்சரிக்கை!

தொடர்புடைய கட்டுரைகள்:

Tuesday, 20 March 2012

கூடங்குளம்:உறுதிப் பயணமா? இறுதி பயணமா?

தமிழக வரலாற்றிலேயே மிகவும் உறுதிமிக்க போராட்டம் கூடங்குளம் போராட்டம்தான் என்றால் அது மிகையில்லை.இந்த உறுதிக்கு காரணம் இப்போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்தான்.இம்மக்கள் இப்போராட்டத்தில் உறுதியாக ஈடுபடுவதற்குக்காரணம் அவர்கள் ஒவ்வொருவரும் அறிவுபூர்வமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதுதான்.இப்படிப்பட்ட போராட்டம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக இப்போது பரவலாக பேசப்பட்டுவருகிறது.

இப்படி பேசுவதற்கும் ,விவாதிப்பதற்கும்  தமிழக அரசு இப்போராட்டம் குறித்து, இதுநாள் வரை தான் கடைபிடித்துவந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ளப்போகிறது என்பதைக் காரணமாகக் கூறுகிறார்கள். தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையும் அதனைத் தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் ஆளும் கட்சியினர் மக்கள் மத்தியில் தற்போது செய்துவரும் பிரச்சாரமும் இதற்கான ஆதாரமாக காட்டப்படுகிறது.



மேற்கண்ட இரு அம்சங்களும் தமிழக அரசு கூடங்குளம் போராட்டத்தில் இதுநாள்வரை, தான் கடைபிடித்துவந்த அணுகுமுறையின் - நாடகத்தின் - இறுதிக்கட்டத்தை காட்டுகிறதே தவிர, இவைகள் கூடங்குளம் மக்களின் அணு உலைக்கெதிரான போராட்டத்தின் இறுதி நிலையைக் காட்டவில்லை.தமிழக அரசு தனது நாடகத்தை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பதையே, போராட்டத்தின் முடிவாக சித்தரிக்கிறார்கள்.
கூடங்குளம் மக்கள் அணு உலைக்கெதிரான தமது போராட்டத்தை தமிழக அரசின் பிரதிநிதியாக இருந்து-கூலி ஆட்களாக இருந்து - நடத்தவில்லை.இப்போராட்டத்திற்கு தமிழ அரசு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஆதரவளிக்கவில்லை.”கூடங்குளம் மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணுமின்நிலையத்தை மத்திய அரசு திறக்கக்கூடாது ”, என்ற தமிழக அரசின் நிலைப்பாடே ,இப்போராட்டத்தை நேரடியாக அது எதிர்க்கவில்லை,ஆனால் இந்த நிலைப்பாட்டின் உள்ளே மக்கள் போராட்டத்திற்கு எதிரான தன்மையையே கொண்டிருக்கிறது.

தமிழக அரசு ”மக்களின் அச்ச உணர்வு”, என்று கூறுவதன் மூலம் தான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாளன் இல்லை என்பதை உணர்த்துகிறது.ஏனென்றால் கூடங்குளம் மக்கள் அணு உலைக்கெதிராக ஊகத்தின் அடிப்படையிலான அச்சத்தை கொண்டிருக்கவில்லை.விஞ்ஞான பூர்வமான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே, அதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.மக்களின் இந்த விஞ்ஞான பூர்வமான நிலைப்பாட்டைத்தான் அச்சம்’ என தமிழக அரசு சித்தரிக்கிறது.உண்மையில் மக்களிடையே அச்ச உணர்வுதான் உள்ளது என்று தமிழக அரசு கருதியிருந்தால், தான் நியமித்த நிபுணர் குழு மூலம் அவற்றை போக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.அதற்கு மாறாக மத்திய அரசின் அதே அணுகுமுறையைத்தான் தான் நியமித்த நிபுணர் குழு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.

தமது போராட்டத்திற்கு எதிரான நயவஞ்சக அணுகுமுறையை தமிழக அரசு கொண்டிருந்தாலும், தமது நடவடிக்கைத்தான் போராட்டத்திற்கு எதிராக தமிழக அரசு திரும்புவதற்கு காரணம் என்றாகிவிடக்கூடாது என்பதால் தமிழ அரசு அணுகும் அதே முறையில், அதை கூடங்குளம் மக்களும் எதிர்கொள்கிறார்கள்.

எனவே இந்தப்போராட்டத்தை எந்த நிலையிலும் தமிழக அரசை நம்பி கூடங்குளம் மக்கள் ஆரம்பிக்கவும் இல்லை, தொடரவுமில்லை,தமது சொந்த பலத்திலேயேதான் ஊன்றி நிற்கிறார்கள்.விஞ்ஞானபூர்வமான ஆதாரத்துடன் தமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக போராடுகின்றனர்.

மத்திய அரசு ,மாநில அரசு ஆகியவற்றின் நிபுணர் குழுக்களும், அப்துல்கலாம் போன்ற அரைகிறுக்குகளும் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பேசுகிறார்கள்.ஆனால் மக்களோ கட்டிட உறுதிதன்மை குறித்த பிரச்சனைகளுக்காக போராடவில்லை.அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சு கழிவுகளால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தே போராடுகிறார்கள்.

கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பவன் ஒவ்வொருவனும், இதற்கு பதில் சொல்வதை தவிர்த்து கட்டிட உறுதித்தன்மை குறித்து பேசி திசைதிருப்புவதன் மூலம் தாங்கள் அயோக்கியர்கள், நேர்மையற்றவர்கள்,தேசத் துரோகிகள் என்பதை நிரூபிக்கின்றனர்.

ஆனால், இவர்களோ தற்போது தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை காரணம் காட்டி கூடங்குளம் மக்களின் போராட்டத்தை நாட்டுக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கின்றனர்.இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து, அதை தீர்ப்பதற்காகத்தான் கூடங்குளம் அணு உலையை மத்திய அரசு உருவாக்கியது போன்று இந்த கழிசடைகள் ஊளை இடுகிறார்கள்.தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை தமிழகத்தை இதுவரை ஆண்ட ஆட்சியாளர்களின், தமிழக நலன் மீதான அக்கறையின்மையின் வெளிப்பாடேயாகும்.தமிழகத்தில் இதுவரை வரலாறுகாணாத மின் பற்றாக்குறை நிலவினாலும் தமிழக அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதை ஒரு சிறிதும் குறைத்துக்கொள்ளவில்லை.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரத்தேவையும்,பற்றாக்குறையும் தமிழக மக்களின் மின்தேவை அதிகரிப்பால் உருவானது அல்ல.மாறாக பன்னாட்டு நிறுவனங்களின் மின் தேவை அதிகரிப்புதான் மின் பற்றாக்குறைக்கு அடிப்படையாகும்.யாரால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோ அவர்களுக்கு தமிழக அரசு மின்சாரம் வழங்குவதை குறைக்காமல் அதற்கு மாறாக மின்பற்றாக்குறைக்கான தண்டனையை தமிழக மக்களுக்கு வழங்குகிறது.இந்த தண்டனையின் உச்சக்கட்ட நடவடிக்கைதான் கூடங்குளம் அணு உலையாகும்.

கூடங்குளம் அணு உலை தமிழக மக்களுக்கு அளிக்கப்படும் தண்டனைதான் என்றாலும் இதுவும் கூட மின்பற்றாக்குறையை தீர்த்துவிடப் போவதில்லை.இப்போது கூடங்குளம் அணு உலை செயல்படத்தொடங்கினாலும் அதில் இருந்து மின்சாரம் வெளிவர 2 ஆண்டுகளாகும்.அடுத்து இந்தியா முழுக்க உள்ள 20 அணு மின்நிலையங்கள் மூலம் மொத்தமாக 4130 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.இதில் 4000 மெகாவாட் மின்சாரத்தை இந்த 20 அணு மின்நிலையங்களே பயன்படுத்திக்கொள்கின்றன.எஞ்சிய 130 மெகாவாட் மின்சாரம் மட்டுமே மத்திய மின் தொகுப்பிற்கு கிடைக்கிறது.

கூடங்குளம் அணு உலையில் இருந்து 2000 மெகாவாட் மின்சாரத்தை  உற்பத்தி செய்யப்போவதாக கூறுகிறார்கள்.இதில் பாதி மின்சாரத்தை தமிழகத்திற்கு தரப்போவதாக தூண்டில் போடுகிறார்கள்.20 அணு மின்நிலையங்களில் இருந்து கிடைக்காத மின்சாரம் கூடங்குளத்தில் இருந்து மட்டும் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? ஒருவேளை கூடங்குளம் அணு மின்திட்டம் மிகவும் நவீனமானது என்றால் காலாவதியான தொழில்நுட்பத்தை உடைய ஏனைய 20 அணு உலைகளையும் மத்திய அரசு மூடிவிடுமா? உண்மையில் தமிழகத்தின் நலனுக்காகத்தான், கூடங்குளத்தில் இருந்து உற்பத்தியாகப் போவதாக சொல்லப்படும் மின்சாரத்தில் பாதியை தரப்போவதாக மத்திய அரசு கூறுமானால், அதை இப்பொழுதே நெய்வேலி அனல்மின்நிலையத்தில் இருந்தும் மத்திய மின் தொகுப்பில் இருந்தும் வழங்களாமே? ஏன் வழங்கவில்லை?

மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் தொகுத்துபார்க்கும் போது, இந்தியாவில் உள்ள அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது இந்திய அரசின் நோக்கமல்ல என்பது தெளிவாகிறது.அதோடு கூடங்குளம் அணு உலையின்  மூலம் உற்பத்தியாகப் போவதாக கூறப்படும் மின்சாரத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு தருவோம் என்று மத்திய அரசு கூறுவதும் ஏமாற்றும் தந்திரமே என்பதும் விளங்குகிறது,
எனவே கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகளின் செயல்பாடுகள் அனைத்துமே மக்களை ஏமாற்றும் செயல்பாடுகள் மட்டுமல்ல, அவைகள் தேசத்துரோக செயல்பாடுகளுமாகும்.

அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துகள் எந்தளவிற்கு உண்மையோ,தவிர்க்கவியலாததோ அந்தளவிற்கு அதற்கெதிரான போராட்டமும் தவிர்க்கவியலாமல் நடந்தே தீரும்! இதை ஒருபோதும் யாராலும் தடுத்துவிட முடியாது.கூடங்குளம் அணு உலை செயல்பாடே மக்கள் போராட்டத்தின் முடிவல்ல.அது போராட்டத்தில் வடிவ மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும்!  

(இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது)

தொடர்புடைய கட்டுரைகள்: