விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label வினவு. Show all posts
Showing posts with label வினவு. Show all posts

Sunday, 11 August 2013

மே 17 இயக்கத்தின் இயலாமையைப் பழிக்கும் வினவின் 'வீராவேசம்'!

இளவரசன் மரணத்தையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பல்வேறு இயக்கத்தினர் தமிழகம் எங்கும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.அந்த வரிசையில் மே-17 இயக்கமும் சுவரொட்டி ஒட்டியது.மகஇக குழுமமும் சுவரொட்டி ஒட்டியது.

இப்படி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் மிகச்சிறந்தது எது என்ற அதிமுக்கிய விவாதத்தை,தமிழ்ச்சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும், ஏன் அதற்கு மேலும் பார்ப்பனியம் உயிர்வாழும் நேபாளம்,இலங்கை உட்பட அனைத்து சமூகங்களுக்கும் அவசியமான விவாதத்தை மக இக குழுமத்தின் வினவு இணையதளம் துவக்கி வைத்திருக்கிறது.

இளவரசன் – திவ்யா தம்பதியினர் பிரிக்கப்பட்டு , இளவரசனும் மரணத்தை தழுவிய பிறகு இந்த விவாதத்தை துவக்கிய வினவு அதற்கு முன்பே அவர்களை எப்படிக்காப்பது, வாழவைப்பது என்பதை பற்றிய விவாதத்தை துவக்கியிருந்தால் போட்டியிட்டிருந்தால் சாதிமறுப்பு தம்பதிகளை காப்பாற்றி இருக்க முடியும்.

அப்படி செய்திருந்தால் அதை ஆலோசனைகளாக மட்டுமல்லாது ,அந்த ஆலோசனைகளை நடைமுறையோடு இணைக்கவும் பாடுபட வேண்டிய தேவை தவிர்க்கவியலாத ஒன்றாக ஆகியிருக்கும்.

எல்லாம் முடிந்த பிறகு யார்வைக்கும் ஒப்பாரி சிறந்தது என்ற பட்டிமன்றத்தை காரசாரமாக துவக்கியிருக்கிறது வினவு.

இளவரசன் தம்பதியை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் தாங்கள் சுயவிமர்சனத்தோடு சுவரொட்டி முழக்கத்தை எழுதியுள்ளதாக மே-17 இயக்கம் கூறுவதில் நிச்சயம் ஒரு நேர்மை இருக்கிறது.

அதே நேரத்தில் மக இக கூறுவதைப் போன்று இளவரசனை போன்றே மே-17 இயக்கமும் பாமகவை கண்டு அச்சம் அடைந்தது உண்மையோ,இல்லையோ சாதி வெறியர்களை வெல்ல முடியாது என்று இளவரசன் மட்டுமல்ல மே-17 இயக்கமும் விரக்தியடைந்ததுள்ளது  என்பதுதான் உண்மை.

இப்படி விரக்தியடைந்ததின் வெளிப்பாடுதான் மே-17 இயக்கத்தின் சுவரொட்டி முழக்கங்கள்.இந்த விரக்தி மனப்பான்மை மே-17 இயக்கத்தின் தனித்தன்மையோ,பலவீனமோ மட்டுமல்ல! அதுதான் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சமூக உணர்வுள்ள இயக்கங்களின் நிலையுமாகும்.

இப்படி விரக்தியடைவதின் வெளிப்பாட்டு அளவு ஒவ்வொரு தனிநபரிடமும், இயக்கங்களிடமும் வேறுபடலாம்.ஆனால் இது பொதுத்தன்மையாகும். மகஇக குழுமம் தங்களுக்கு அப்படியொரு உணர்ச்சியே எழவில்லை,எழாது என்று உறுதியாக வாதிடுகிறது.
சாதிய விவகாரங்களில் மட்டுமல்ல வேறு எந்த ஒரு விவகாரத்திலும் ஒருத்தனிநபரோ,இயக்கமோ விரக்தி மனப்பான்மைக்கு உள்ளாகவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.

·           குறிப்பிட்ட விவகாரத்தின் ஆதரவாளராகவும் அதன் மூலம் அவர்கள் ஆதாயமடையக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

அல்லது

·          குறிப்பிட்ட அந்த விவகாரத்தைப் பற்றிய ஞானமும் அதை சரிசெய்வதற்கான தீர்வையும் உடையவர்களாக இருக்க வேண்டும்.

மேலே உள்ளவற்றில் மகஇக குழுமம் எந்தக் காரணத்தினால் விரக்தி நிலைக்கு செல்லவில்லை என்பதைப்பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் நேர்மறையான அல்லது எதிர்மறையான படிப்பினையை அதிலிருந்து நாம் பெறமுடியும்.

”இந்துக்களிடம் இந்து மதவெறியையும்,இஸ்லாமியர்களிடத்தில் இசுலாமிய மதவெறியையும் ,வன்னியர்களிடத்தில் வன்னிய சாதிவெறியையும் , தலித் மக்களிடம் பிழைப்புவாத தலித் அரசியல் கட்சிகளையும் கண்டித்து பேசுகிறோம்.இதில் எங்களுக்கு அச்சமில்லை என்பதோடு அந்த பிரிவு மக்களை மெல்ல,மெல்ல உணர வைத்து இறுதியில் வர்க்க உணர்வுக்கு கொண்டு வருகிறோம்.மேலும் மதஉணர்வு,சாதி உணர்வு அனைத்தும் அந்தந்த மக்களுக்கும் சேர்ந்தே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தொடர் போராட்டத்தின் மூலம் புரியவைக்கிறோம்”

இது மகஇக குழும அமைப்பான வினவின் கட்டுரையில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களாகும்.

மேலே கண்ட நிலைப்பாட்டின் மூலம் சாதியம் பற்றிய முரண்பாட்டை கையாள்வதில்,அதை முறியடிப்பதில் தாங்கள் மிகச்சிறந்த ஞானத்தையும் மிகத் துள்ளியமான வழிமுறைகளையும் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.இதன் மூலம் தாங்கள் சாதித்தவற்றை பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவதாக சொக்குப்படியும் போட்டுள்ளார்கள்!

இதன் மூலம் அந்தச்சாதனையைப் பற்றி கூறுங்கள் என்று நாம் கேட்டுவிடாமல்  நமது வாயை அடைத்துவிட்டார்கள்!
மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனியத்தை எதிர்த்து அனைவரும் தோற்றுப் போயுள்ளனர் அல்லது அதனுடன் ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு நூற்றாண்டாக இந்திய கம்யுனிச இயக்கங்கள் சாதிய முரண்பாட்டை தீர்க்க முடியாததால் மக்களிடையே வர்க்க உணர்வை ஏற்படுத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளனர்.

சாருவாகனர்கள்,புத்தர்,மகாவீரர்,சித்தர்கள்,களப்பிரர்கள்,அம்பேத்கார்,பூலே,பெரியார் ஆகியோர் சாதிக்க முடியாததை மகஇக குழுமம் சாதித்திருக்கிறது என்றால் நோய்நாடி நோய் முதல் நாடி என்பது போல சாதியத்தின் மூலத்தைப் பற்றிய நிபுணார்களாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும். அப்படியானால் இதுவே இந்திய வரலாற்றில் தலையாய சாதனையாகவும் இருக்க முடியும்.

இந்த வரலாற்றுச் சாதனையை பற்றி இவ்வளவு காலம் மகஇக குழுமம் மௌனம் சாதித்தாலும் இப்போதாவது அதைப்பற்றி 

வெளியில் சொல்லப் போவதாக அறிவித்திருப்பது நமது பெரும் பாக்கியமாகும்!

அண்மையில் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் ”இந்து மதம் இத்தனை ஆயிரம் ஆண்டு காலம் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது”, என்று அருள்வாக்கு தந்துள்ளார்.ஆனால் அது என்ன என்று கூறவில்லை.

மகஇக குழுமம் கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் நீடித்து, நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.அந்த ஏதோ ஒன்று என்னவென்று எவருக்கும் புரியவில்லை.இந்தப்புதிருக்கான விடை ஒரு வேளை அவர்கள் எழுதப்போகும் சாதனைப்பட்டியலில் ஒளிந்து கொண்டிருக்கலாம்.அனைவரும் தமது ஐம்புலன்களையும் ஓருமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதாக அவர்கள் அருளப்போகும் அருளாசியை தவறவிட்டுவிடாதீர்கள்!

அப்படி அவர்கள் எழுதப்போகும் சாதனைப்பட்டியலில் எமக்குத்தெரிந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளை உங்களுக்கு முன்கூட்டியே தருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

·          தில்லை நடராசர் ஆலயத்தில் தமிழில் தேவாரம்,திருவாசகத்தை பாடக்கூடாது என்று பல நூற்றாண்டுகளாக தீட்சித பார்ப்பனர்கள் தடுத்து வந்ததை பெரியார் அவர்களுக்கு பின்னர் அதிகாரத்திற்கு வந்த எந்த திராவிட கட்சியின் ஆட்சிகளால் கூட தடுக்க இயலவில்லை.

இந்த அநீதிக்கு எதிராக தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக மகஇக குழுமம் போராடி வெற்றி பெற்றது.

தமிழில் தேவாரம் ,திருவாசகத்தை ஆறுமுகசாமி என்ற சிவனடியாரை பாடவைத்து சாதனைப்படைத்தது.

இந்தப் போராட்டத்தில் பாமக,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் தன்னோடு இணைத்துக்கொண்டு இந்தச் சாதனையை செய்து காட்டியது.இதனோடு கருணாநிதி தலைமையிலான ஆட்சியையும்,நீதிமன்றத்தையும் கூட மிகவும் லாவகமாக பயன்படுத்திக்கொண்டது.

இந்த எட்டு ஆண்டுகால போராட்டத்தில் மகஇக குழுமம் அமைப்பு தமது தோழர்கள் பலரை இப்போராட்டத்தில் முன்னிறுத்தியது. இப்படி முன்னிறுத்தப்பட்ட அனைவரும் பிறப்பால் வன்னிய சாதியை சேர்ந்தவர்கள்.தவறியும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் எவரையும் முன்னிறுத்தவோ,மேடை ஏற்றவோ இல்லை.

தொடர்ச்சியாக சாதிவெறியை சுட்டிக்காட்டிப் போராடி மெல்ல,மெல்ல மக்களிடையே வர்க்க உணர்வை ஏற்படுத்தி சாதனை புரிந்துள்ள மகஇக குழுமம் தில்லைப் போராட்டத்தை பார்ப்ப்பனியத்திற்கு எதிரான தமிழர்களின் அல்லது உழைக்கும் மக்களின் போராட்டமாக நடத்தாமல்.ஆறுமுகசாமி என்ற சிவனடியார் வன்னியர் என்பதாலும், அவரே இப்போராட்டத்தின் கதாநாயகன் என்பதாலும், அவர் வன்னிய சாதி உணர்வாளார் என்பதாலும், இப்போராட்டத்தை தீட்சித பார்ப்பனர்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையிலான முரண்பாடாகவே கையாண்டது என்பதற்கான ஆதாரம்தான் பிறப்பால் வன்னிய சாதியினரை மட்டுமே இப்போராட்டத்தில் இவர்கள் முன்னிறுத்திய செயலாகும்.

இது பற்றி அந்த குழும அமைப்பின் ஒருப்பகுதியை சேர்ந்தோர் கேட்டபோது அதை அவர்கள் மறுக்கவில்லை. அதற்கு மாறாக “ஒரு போராட்டத்தில் யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது அமைப்பு தலைமையின் உரிமையாகும் இதில் யாரும் தலையிட முடியாது ,என்று பதிலளித்தனர்.

·          ஆணோ,பெண்ணோ ஒருவர், மற்றவரை விரும்பலாம், தனது விருப்பத்தை குறிப்பிட்ட நபரிடமும் வெளிப்படுத்த, விரும்புவதும் , விருப்பத்தை வெளிப்படுத்துவதும் ஒருவரின் உரிமை.அதே போல அவ்விருப்பத்தை ஏற்பதும்,நிராகரிப்பதும் கூட மற்றவரின் உரிமை. இவைகளை ஒவ்வொரு தனி மனிதனின் ஜனநாயக உரிமையாக – தனி மனித உரிமையாக நாம் அங்கீகரித்துள்ளோம்.

ஆனால்,தனது விருப்பத்தை மற்றவரிடம் தெரிவிப்பது மட்டும்தான் தனிமனித உரிமை, அதை நிராகரிப்பது,நிராகரிப்பவரின் ’சாதி புத்தி’ என்று பட்டம் சூட்டிய ஒருவரைத்தான் மகஇக குழுமத்தினர் தனது மனித உரிமை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக, மனித உரிமை போராளியாக முன்னிறுத்தியுள்ளது. அந்த மனித உரிமைப் போராளியை பற்றியும் மே-17 இயக்கம் தன்னுடைய கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளது.

·          இளவரசன் , திவ்யா தம்பதியினரைப் போன்றே சாதிமறுப்பு திருமம் செய்து கொண்ட இருவர் ஒரு கிராமத்தில் தனது நண்பர் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தனர்.இதை தெரிந்து கொண்ட பெண் வீட்டாரும்,போலிசும் அந்த பெண்ணை நள்ளிரவில் அடித்து இழுத்துச் சென்றனர். இந்த அக்கிரமச்செயலை அத்தெருவில் உள்ள பொதுமக்களும் , மகஇக குழும அமைப்பைச் சேர்ந்த சிலரும் தடுத்து அப்பெண்ணை காப்பாற்றினர்.மறுநாள் காலையில் அத்தம்பதியினரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைப்பதாக எழுதித் தந்த பின்னரே அப்பெண் அப்போதைக்கு விடுவிக்கப்பட்டார்.

ஆனால் தாங்கள் காவல்துறைக்கு எழுதித்தந்ததை போன்று நடந்துக் கொள்ளாமல், நேர்மையற்ற வகையில் அவர்களை பாதுகாப்பாக வேறு ஒரு கிராமத்துக்கு கொண்டு சென்றனர் அவ்வூரில் இருந்த மகஇக குழும அமைப்புத் தோழர்கள். இது பற்றி அவர்கள் தமது தலைமையான மகஇக குழும அமைப்பிற்கு தகவல் தந்த போது தலைமை அவர்களுக்கு இட்ட உத்தரவை கேட்டால் அனைவரும் புல்லரித்துப் போவீர்கள்!

“தம்பதிகளைக் காப்பாற்றியதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இதற்கு மேல் நேரடியாக அந்த விவகாரத்தில் ஈடுபடாதீர்கள்.ஆலோசனைக் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட வேலைகளால் நமது அமைப்பு வேலை கெட்டுப்போகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.இனிமேல் இப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் எங்களுக்கு தகவல் கொடுங்கள், நாங்கள் கொடுக்கும் ஆலோசனைப் படிதான் நீங்கள் நடக்க வேண்டும்.அமைப்பு வேலை பாதிக்கும் வகையில் நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படக்கூடாது,அப்படி செயல் பட்டால் அது மத்தியத்துவத்தை மீறிய அமைப்பு விரோத செயலாகும்”!

சாதிவெறியை முறியடிப்பதில் இவர்களுக்கு எவ்வளவு அக்கரையுள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள்!

·          விடுதியில் தங்கி படித்த 13 வயது பாரத் தலித் என்ற மாணவன் விடுதியில் மர்மமான முறையில் இறந்து போனான்.விடுதி காப்பாளரும்,போலிசும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.பெற்றோரும் ,உறவினர்களும் அது கொலை என்றனர்.இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர இதில் தலையிடுமாறு மகஇக குழும மனித உரிமை அமைப்பை குழும அமைப்பின் மற்றொரு அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி கோரியது.

இறந்து போன மாணவனும், குற்றம்சாட்டப்படும் விடுதிக் காப்பாளரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். “அது ஒரு சாதிக்குள் நடந்த விவகாரம் அவர்கள் பின்னர் ஒன்றாகி விடுவார்கள். நாம் அதில் தலையிடத் தேவையில்லை”.இதுதான் மனித உரிமைப் போராளிகளின் பதில்! மக்களிடையே சாதி கடந்த வர்க்க உணர்வை சாதித்ததற்கான வழிமுறை இதுதான் போலும்!

மேலே கண்டுள்ள செயல்பாடுகளின் மூலம் அவர்கள் மக்களிடையே சாதி கடந்த வர்க்க உணர்வை உருவாக்கியதை,உருவாக்குவதை பற்றி மிக விரிவாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுவார்கள் காத்திருங்கள்..........!

மேலே நாங்கள் கொடுத்துள்ள தகவல்களில் இருந்து மகஇக குழுமம் பார்ப்பனியத்தால் ஆதாயம் அடையும், அதை ஆதரிக்கும் பிரிவினரா அல்லது சாதியத்தை ஒழிப்பதற்கான மிகத்தெளிவான புரிதலையும், அதன் அடிப்படையிலான வழிமுறைகளையும் கொண்டுள்ள அமைப்பா என்பதைப் பற்றி வாசகர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நம்புகிறோம்.

பார்ப்ப்பனியத்தை- சாதியத்தை பழைமைவாத பார்ப்பனியத் தலைமைகள் போன்று நடைமுறைப் படுத்தும் ,ஆதாயம் அடையும் பழமைவாதிகளில்லை மகஇக குழுமத்தினர்.காலத்திற்கு ஏற்ப பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்துபவர்கள். நால்வருணத் தருமத்தை தமது கட்சியிலும், வெகுசன அரங்குகளிலும் மிகலாவகமாக எவரும் அறிந்து கொள்ளவோ,உணர்ந்து கொள்ளவோ முடியாத வடிவத்தில் நடைமுறைப்படுத்தும் நிபுணர்கள் வர்கள்.

யாரை எந்த வேலையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தீர்மானிப்பது தலைமையின் உரிமை.இதை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

·          மகஇக என்ற மக்கள் கலை இலக்கியக்கழகம் அமைப்பின் தலைமைக்கு தகுதியானவர் மருதையன்தான்.இவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் அல்ல.அவருக்குத்தான் இயல்பாகவே அந்த அறிவாற்றல் உள்ளது.

·          கீழைக்காற்று வெளியீட்டகத்திற்கு துரைசண்முகம்தான் தலைமை ஏற்க முடியும்.அவர் வைசியர் என்பதால் அல்ல.அவரிடம் தான் இயல்பாகவே வியாபார ஞானம் இருக்கிறது.

அவரவர்க்கு விதிக்கப்பட்ட வேலையைத்தான் அவரவர் செய்ய வேண்டும். அடுத்தவர் வேலையில் தலையிடக்கூடாது.அப்படி செய்வது இந்துமதத்தில் நால்வருண தர்மத்திற்கு எதிரானது.

மகஇக குழுமத்தில் மீறுவதோ,கேள்வி எழுப்புவதோ ஜனநாயக மத்தியத்துவத்திற்கு எதிரானது.

தமக்கு விதிக்கப்பட்ட வேலைக்கு மாறாக, அமைப்புக்கு தெரியாமல் அதை மீறி மகஇக குழும அமைப்பில் சிலர் விவசாயிகளிடம் ஆய்வுசெய்து அந்த ஆய்வறிக்கையை தலைமைக்கு அளித்தனர்.

“கொடுத்த வேலையை செய்ய வக்கில்லை, ஆய்வு பண்றாங்களாம் ஆய்வு”, இதுதான் புரட்சிகர தலைமையின் மறுமொழி.இப்படி ஆய்வு செய்தவர்களின் நடவடிக்கை, மத்தியத்துவத்தை மீறும் அமைப்பு விரோத செயல்.இதற்காக அவர்களுக்கு இவர்கள் வழங்கிய தண்டனை என்ன தெரியுமா? ஒதுக்கி வைத்தல்!

அன்று பார்ப்பனியத்தை ஏற்க மறுத்தவர்களையும்,மீறியவர்களையும் பள்ளு,பறை,சக்கிலி என்று சேரிகளில் ஒதுக்கி வைத்ததார்கள் இவர்கள் அமைப்பிற்குள்ளேயே ஒதுக்கி வைக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் மே-17 இயக்கத்தினரே மகஇக குழுமத்தின் இந்த திறமையும், சாதுரியமும் உங்களுக்கு வருமா? அது இருந்தால் மட்டுமே அவர்களோடு போட்டியிட நீங்கள் தகுதி உள்ளவர்களாவீர்கள்.

அவர்கள் உங்களை மட்டுமல்ல அனைவரையும் எதிர்ப்பதற்கும் , ஒதுக்கி வைப்பதற்கும் காரணமே அவர்களின் அகராதியில் நால்வருண தர்மத்தை நீங்களெல்லாம் மீறுவதே ஆகும்.

முற்போக்கு, புரட்சிகர சக்திகளில் நவீன வர்ணதர்மத்தின் உலகலாவிய தலைமை மகஇக குழும தலைமை மட்டுமே.அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட புரட்சிகர பூசாரி வேலையில் உங்களைப் போன்றோர் தலையிட்ட பின்னரும் அவர்கள் சும்மா இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்!?

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69% இடஒதுக்கீட்டால் நாங்கள் எவ்வளவுதான் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் எங்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்கிடைக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மேல்வர்ணத்தார் மனு செய்தார்கள். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 69%  இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மேல்வர்ணத்தாருக்கு 19% கூடுதல் இடங்களை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதை மே-17 இயக்கத்தினர் அறிந்திருக்க மாட்டார்களா என்ன!

யார் இந்த உரிமையை முற்போக்கு , புரட்சிகர அமைப்புகளுக்கான பூசாரி – தலைமை – பொருப்பை மகஇக குழுமத்திற்கு வழங்கியது!? நாங்கள் இதை ஏற்க மாட்டோம் என்று மே-17 இயக்கத்தை போன்றோர் வாதிடலாம்.

பார்ப்பனர்களுக்கு இந்துமதத்தின் தலைமையை தந்தது யார்?

காஞ்சி மடத்தை போன்று இந்தியா முழுக்க உள்ள மடங்களுக்கு பார்ப்பனர்களை மட்டுமே சங்கராச்சாரிகளாக நியமிப்பது யார்?
உங்களை போன்றோர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்துக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அவர்கள்தான் இந்தியாவில் பெரும்பான்மை. உங்களால் என்ன செய்ய முடியும்?

மகஇக- குழுமத்தலைமை உங்களைப் போன்றோர் ஏற்றுக்கொண்டால் என்ன, ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன?

அவர்களை அவர்களின் அணிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் தலைமையாக!

இந்து மதம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கு அது ,அதில் உள்ளோரை சாதியாக கூறுபோட்டு, அதை தொடர்ந்து பாதுகாப்பதே காரணமாகும்.

மகஇக குழுமமும் 35 ஆண்டுகளாக உயிர்வாழ்வதற்கு அவர்களின் அணிகளுக்கிடையே ஒற்றுமைக்கான கூறுகள் ஏற்படாத வண்ணம் பாட்டாளி வர்க்க அமைப்பு பெயரிலான விதிகளை கறாராக கடைபிடிப்பதுதான் காரணமாகும்.

கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் மனித சமூகத்தில் எவ்விதமான முன்னேற்றமும், மாற்றமும் ஏற்பட்டாலும் அவைகள் அனைத்தையும் தமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதுதான் பார்ப்பனியத்தின் ஆற்றல்.

பாட்டாளி வர்க்க அமைப்பின் ஜனநாயக மத்தியத்துவம், பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உட்பட அனைத்து கோட்பாடுகளையும், தமது புதிய பார்ப்பனிய வர்ண தர்மத்திற்கு ஏற்ப திரித்து செயல்படுத்துவதுதான் மகஇக குழுமத் தலைமையின் ஆற்றல்.

இந்து மதம் நீடிக்க எது காரணமோ அது , அதுவேதான் மகஇக குழுமமும் நீடித்திருப்பதற்கான காரணமுமாகும்.

பார்ப்பனியத்தில் உள்ளார்ந்த புலமை உள்ளவர்களால் மட்டுமே அதன் நிபுணர்களாக இருக்க முடியும்.அந்த வகையில் மகஇக குழுமம் பார்ப்பனிய நிபுணர்களைக் கொண்ட தலைமையாகும்.

இவர்கள் அதில் வல்லவர்கள் என்பதற்கான ஆதாரம் சிலவற்றைப் பார்ப்போம்.

நால்வருணத்தில் முதல் வருணமான பார்ப்பனர்களுக்கு ஏனைய வர்ணத்தாருக்கு இல்லாத பல்வேறு சிறப்புரிமையை பார்ப்பனியம் வழங்கியுள்ளது.அதில் இந்த பூலோகத்தில் உள்ள எந்த ஒரு பொருள் மீதும் அவர்களுக்கு உரிமை உண்டு. 

தேவைப்படும் போது அதன்மீது அவர்கள் உரிமை கோரமுடியும். எந்த வர்ணத்தாரின் உழைப்பின் மீதும், அதிலும் சூத்திர வர்ணத்தாரின் உழைப்பின் மீது எல்லாவித உரிமையும் பார்ப்பனர்களுக்கு உண்டு என்று மனுதர்மம் கூறுகிறது.

மொத்தத்தில் தான் உழைக்காமலேயே , மற்றவர்களின் உழைப்பில் வாழ்வதைப்பற்றி சிறிதும் அவர்கள் வெட்கப்படுவதில்லை.அதற்கு மாறாக உடல் உழைப்பே இழிவானது என்பதுதான் அவர்களின் உரத்த சிந்தனை!

இதை மகஇக குழுமத்தினர் நவீன வடிவத்தில் செயல்படுத்துகின்றனர்.

·          முத்துக்குமார் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார்.சாராம்சத்தில் முத்துக்குமார் புலி ஆதரவு தரப்பைச் சேர்ந்தவர்.இதன் மூலம் புலிகளின் அரசியல், சித்தாந்த மேலாண்மையால் கவரப்பட்டு அதற்காகவே தன்னுயிரை ஈந்த தியாகி.

ஆனால் மகஇக குழுமமோ புலிகளை பாசிச அமைப்பாகவும்,புலிகளின் தலைவர் பிரபாகரனை ஈழத்து எம்.ஜி.ஆர் ,பாசிச கோமாளி என்றும் இன்றுவரை கூறிவருகிறது.

அந்த பாசிச கோமாளியின் அரசியல்,சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு உயிரிழிந்த முத்துக்குமாரின் சாவை தனது அரசியல் நோக்கத்திற்காக அறுவடை செய்துகொள்ள தேவையான அனைத்து தந்திரங்களையும் கையாண்டனர் மகஇக குழுமத்தினர்.

பார்ப்பனர்கள் எங்கு சென்றாலும் அங்கு தமது மேலாண்மையை நிருவுவதற்கு பல்வேறு தந்திரங்களை கையாளுவார்கள்.

அதில் முதன்மையாக தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்வது.இதற்காக தம்முடைய தனித்த அடையாளங்களை அதாவது பூணூல்,பேச்சு முறை ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள்.மற்றவர்களை பேசவிடாமல் சள,சளவென்று வாயடிப்பார்கள். அதே போன்றுதான் மகஇக குழுமம் முத்துகுமாரின் தியாகத்தை அறுவடை செய்து கொள்ள தாம்தான் தமிழகத்திலேயே ஈழத்தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு என்பதைப் போன்று காட்டிக்கொள்ள திட்டமிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தமது அமைப்புக் கொடிகளோடு சென்று முழக்கம்மிட்டு அனைவரும் சோகத்தில் முழ்கியும்,இந்திய,இலங்கை அரசுகள் மீதும் தீராக் கோபம் கொண்டிருந்த தருணத்தை, சூழலை உனார்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு தம்மை முதன்மைப்படுத்திக் காட்டிக்கொண்டனர்.

இதன்மூலம் அங்கு யாருடைய தியாகத்தினைலோ, உழைப்பினாலோ திரட்டப்பட்டிருந்த, திரண்டிருந்த ஈழ ஆதரவாளர்களை அபகரித்துக்கொள்ள முயன்றனர். இப்படிச் செய்வது தமது உரிமை என்று தமது அணிகளுக்கு பாடமும் புகட்டுகின்றனர்.

·          கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களைத்திரட்டி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழுவினர் போராடி வருகின்றனர். இப்போராட்டம் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியது.இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் எழுந்த மிகச்சிறப்பான போராட்டம் இதுவே ஆகும்.

இப்போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக கூடங்குளம் பகுதி மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ள எழுச்சியில் மகஇக குழுமத்திற்கு எள் முனையளவு பங்கு கூட கிடையாது.ஆனால் அந்தப் போராட்டக் களத்தில் திடீரென நுழைந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழுவிடம் இருந்து தலைமையைக் கைப்பற்ற இக்கும்பல் மிகத்தீவிரமான திட்டத்துடன் சென்று முயற்சி செய்தது. ஆனால் இது எதையும் அப்பகுதி மக்களோ, போராட்டக்குழுவோ கண்டு கொள்ளாததால் இறுதியில் ச்சீ,ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று வந்த வழியே திரும்பிவிட்டது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் இக்கும்பலின் பார்ப்பனிய குணாம்சத்தை அம்பலப்படுத்தும் உதாரணங்களாகும்.

உழைக்காமலேயே வாய்வீச்சின் மூலம் மட்டுமே அனைவரையும் பழித்து, அதன்மூலம் ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள், அதரவாளர்களை வென்றெடுத்துவிட முடியும் என்று முப்பத்து ஐந்து ஆண்டுகளாக கனவு காண்கிறது இக்கும்பல்.இந்த அடிப்படையில் மே-17 இயக்கத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறது. இளவரசன் சாதிமறுப்பு திருமண விவகாரத்தில் எவ்வித உழைப்பை செலுத்தாமலேயே வாயிருக்கிறது என்பதற்காக ஓங்கி ஊளையிடுகிறது.பேனா இருக்கிறது என்பதற்காக ஒன்றுக்கும் ஆகாதவற்றை அள்ளித் தெளிக்கிறது.

ஆலோசனை கொடுப்பது மட்டுமே தன்னுடைய வேலையாக கருதும் இக்கும்பல் ஏரி மதகு நொண்டித்திருடன் என்பதை நெருங்கிப் பார்த்தவர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.அது தெரியாதவர்கள்தான் ஏரிப்பக்கம் போவதையே தவிர்த்து விடுகிறார்கள்.

“ ஒரு மனிதனின் அறவிழுமியங்கள் வேறு,வேறு பிரச்சனைகளுக்கு வேறு மாதிரி இருக்காது”,  என்று மகஇக குழுமம் கூறுவது உண்மைதான்.இது மற்றவர்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் பொருந்தக்கூடியதுதான்.ஆனால் அது தனக்கு பொருந்தாது என்பதுதான் இவர்களின் அறக்கோட்பாடு!

நால்வருண அறவிழுமியங்களே இவர்களின் செயல்பாட்டுக்கான ஆதாரமாக அடிப்படையாக இருக்கிறது.
அதனால்தான் உழைக்காமலேயே மற்றவர் உழைப்பை சுரண்டத்துடிக்கிறது இக்கும்பல்.

பார்ப்பனியத்திற்கு எதிராக குலமரபை இக்கும்பல் முன்னிறுத்துகிறது.குல தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கிறது.
ஆரிய வருகைக்கு முன்பே பூர்வகுடி மக்களிடமிருந்த பண்பாடான குலமரபுகளை பார்ப்பனியத்திற்கு மாற்றாக உயர்த்தி பிடிக்கிறார்கள் இவர்கள்.

அதாவது புலிக்கு பயந்து புற்றுக்குள் கையை விடுங்கள் என்கிறார்கள்.

இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் தாங்கள் வரும் போதே பூர்வகுடி மக்களை ஒடுக்குவதற்கு தயாராக பார்ப்பனிய – சாதிய – கோட்பாட்டை இங்கு கொண்டு வரவில்லை.பூர்வகுடி குலக்குழு மக்களிடையே நிலவிய குல மரபுகள் , பகை ஆகியவற்றின் விளை பொருளான ஒற்றுமையின்மையை ஆதாரமாக , அடிப்படையாக கொண்டுதான் அவற்றை நிரந்தரப்படுத்தும் பார்ப்பனியத்தை- சாதியத்தை – வளர்த்தெடுத்தனர்.

அதாவது பார்ப்பனியத்திற்கான மூலமான குலமரபு காட்டுமிராண்டித்தனங்கள்தான் பார்ப்பனியத்திற்கு மாற்றாம்!
இந்த குலமரபு அறவிழுமியங்கள்தான், தாய்வழிச் சமூக காட்டுமிராண்டித்தனமான சகோதர முறை திருமணங்களை மகஇக குழுமத்தினரை ஆதரிக்க வைக்கிறது. சகோதர முறைத்திருமண உறவை எதிர்ப்போரை ஜனநாயக விரோதிகள் என்றும் பேச வைக்கிறது.

இந்த காட்டுமிராண்டி அறவிழுமியங்கள்தான் அடுத்தவர் உழைப்பை , பொருளை கொள்ளையடிப்பதையும் நியாயம் என்று இவர்களை சிந்திக்கவும் தூண்டுகிறது.

இளவரசன் சாவை ஒட்டி மே-17 இயக்கத்தின் சுவரொட்டி முழக்கங்கள் பார்ப்பனியத்திற்கு எதிரான அதன் கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் முழக்கங்கல்தான்.

ஆனால் மே-17 க்கு எதிராக கிளம்பியுள்ள மகஇக குழுமத்தினரோ பார்ப்பனியத்தை –சாதியத்தை –தமது பிழைப்பிற்காக உயர்த்திப் பிடிக்கும் ,பாதுகாக்கும் கருங்காலிகள்!

கருங்காலித்தனத்தோடு ஒப்பிடும் போது கையாலாகாத்தனம் பெரும் குற்றமல்ல!


தொடர்புடைய கட்டுரைகள்:


 1.  காயடிக்கும் கட்சி 
                      





 















11. சகோதர முறை திருமணங்கள் : தனி மனித உரிமையா? பாலியல் சீரழிவா?

 

12. அக்காவையும், தங்கச்சியையும் கட்டிக்கலாங்கிற, மகஇக காரன பார்த்தா கேளுங்க..

                                                                                                                                                                                          


Monday, 6 August 2012

வின(வு)விடம் வினவாதே விபரீதம்……!

ம.க.இ.க- வில் இருந்து விலகிய  சரவணராஜா, ரூபக்காந்த் காந்தன் மற்றும் ம.க.இ.க ஜனக்குமரன் ஆகியோருக்கிடையே அண்மையில் இணையத்தில் விவாதங்கள் நடைபெற்றுள்ளது.அதன் சுட்டி(https://www.facebook.com/photo.php?fbid=332810350143496&set=a.256342241123641.60945.100002436007436&type=1&theater) இதனூடாக சில சுவையான செய்திகள் வெளிவந்துள்ளது.



இந்தியாவிலேயே ஒரே புரட்சிகர அமைப்பு என்று தம்மை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மகஇக கும்பல் தம்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் கூறாததைப் பற்றியது அந்த விவாதம்.

மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய  பொதுவுடைமைக் கட்சி (மாலெ) என்ற  கட்சி ஆரம்பித்து ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த முப்பது ஆண்டுகளில் மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு,ம.உ.பா.மையம் ஆகிய அமைப்புகளையும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகிய இதழ்களையும், வினவு இணையத்தளத்தையும் நடத்தி வருகிறது.

மேலே கண்ட அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவைகளின் மூலம் இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தப் போவதாக இந்த கட்சி கூறிக்கொள்கிறது. இக்கட்சி தான் கூறிக்கொள்ளும் புதிய ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி எந்த அளவிற்கு சென்றுள்ளது  அதற்காக அது கையாளும்  அமைப்பு முறைகள் பற்றிய மேற்கண்ட தோழர்களின் விவாதத்தில் எம்முடைய கருத்துக்களை இனி பார்ப்போம்.  

ஒரு புரட்சிகர அமைப்பை பற்றி விமர்சித்தால் அதுவும் சூறாவளி, சரவணராஜா போன்றோர் எழுதிய கட்டுரைக்கு பதில் ஏன் கூறவில்லை என்று இந்த இணையதள புரட்சியாளர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் தனி மனிதர்கள், தனி மனிதர்களின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் அளிப்பதெல்லாம் ஒரு புரட்சிகர அமைப்பிற்கு தேவையில்லாதது என்று சொல்கிறார்கள். ஏனென்றால் தனி மனிதர்கள் ஆயிரம் பொய்களை கூறுவார்கள் அதற்கு பதில் அளிக்க தேவையில்லாதது என்று கூறும் இவர்கள் அமைப்பு ரீதியாக, கட்சி ரீதியாக விமர்சனம் வந்தால் பதில் அளிப்பார்களாம்”

மகஇக கும்பலைப் பற்றி  ரூபக்காந்த் காந்தன்  கூறியுள்ள மேலே கண்ட செய்தியிலிருந்து தனி மனிதர்கள் அனைவரும் பொய் மட்டுமே சொல்வார்கள். அமைப்புகள் மட்டுமே உண்மையை பேசும் என்று பொருளாகிறது.ஆனால் பல நேரங்களில் தமிழகத்திலும், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் பொய் சொல்வதாக இவர்கள் கூறியிருக்கிறார்கள்.  இப்படி கூறியிருக்கிறார்கள் என்று கூறுவதன் மூலம் அமைப்புகளும் பொய் சொல்லும் என்றும் கூறுகிறார்கள். அப்படியானால் தனி மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதற்காக பதில் கூறமாட்டோம் என்பதை விட அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற இவர்களின் அகம் பாவமும், இருமாப்பும் தான் இப்படி கூறவைக்கிறது.

 முன் வைக்கப்படும் விமர்சனங்களும், கேள்விகளும் தனிமனிதர்களால் வைக்கப்பட்டதா அல்லது அமைப்பு ரீதியாக வைக்கப்பட்டதா என்பதை விட, அவைகள் சரியானவையா, இல்லையா, அவைகள் புரட்சியின் நலன்களுக்கு ஏற்புடையதா, இல்லையா என்று பார்ப்பதுதான் நேர்மையான செயலாக இருக்க முடியும்.

சூறாவளி, சரவணராஜா போன்றோர் தனிமனிதர்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் அளிப்பது நம்முடைய வேலை இல்லை என்ற வதந்தியை இவர்கள் பரப்பினாலும் உண்மையில் இதற்கு நேர்மாறாகத்தான் அவர்களின் செயல்கள் அமைந்துள்ளது. தனி மனிதர்கள் என்று இவர்கள் கூறினாலும் உண்மையில் அவர்களைக் கண்டு இவர்கள் அஞ்சி நடுங்கவே செய்கிறார்கள். தமது பிழைப்பிற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அலறுகிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் சரவணராஜா பற்றி அந்த அமைப்பு கூறியதாக அந்த அமைப்பை சேர்ந்த ஜனக்குமரன் எழுதியுள்ளதையும், அதற்கு சரவண ராஜா அளித்துள்ள பதிலையும்  கீழே தருகிறோம் பாருங்கள்.

மகஇக வின் அருள் வாக்கு கட்டுரையில் அரசியல் விமர்சனத்தை விட அமைப்பு தலைமையை திட்டித் தீர்க்கும் வன்மையும், இழிவுப்படுத்துவதும் இருந்தது.

மேலும் அந்தக் கட்டுரையை ஒட்டி உங்களைப் பற்றி கேட்டதற்கு சொந்த வாழ்க்கையை பார்க்க போகிறேன். அமைப்பின் மீது எந்த விமர்சனமும் இல்லை”, என சொல்லி வந்தீர்கள் என சொன்னார்கள்.

ஜனக் குமரனின் மேற்கண்ட செய்திக்கு, ”பொது வெளியில் ஒரு விமர்சனம் வைத்த பிறகு அது யார் வைத்தால் என்ன அதற்கு பதில் சொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு கடமை உண்டு. அதை விடுத்து என்னைப் பற்றி என்னென்ன அவதூறுகள் தனிப்பட்ட முறையில் பரப்பபடுகின்றன என நன்கறிவேன்” என்று சரவண ராஜா கூறியுள்ளார். இந்த அனுபவம் சரவண ராஜாவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உண்டு.

உண்மையில் தனி மனிதர்கள் என்று இவர்கள் கூறும் நபர்களைக் கண்டு இவர்கள் அஞ்சவில்லை என்றால் எதற்காக அவர்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பான வதந்திகளை பரப்புகிறார்கள்? அச்சம்தான் இப்படி வதந்தி பரப்ப இவர்களை தூண்டுகிறது.

தனி மனிதர்களின் விமர்சனங்களுக்கு பதில் தரமாட்டோம் என்பதும்,அமைப்பு ரீதியாக விமர்சனங்கள் வந்தால் மட்டுமே பதில் கூறுவோம் என்று கூறுவதும் தமது பிழைப்பிற்கு ஆதாரமான அணிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகத் தான். ஆனால் பாவம் இந்த அணுகுமுறை மிகவும் கிழடு தட்டி போனதாகும்.

ஏனென்றால் இது எழுபதுகளில் உருவாக்கப்பட்ட அணுகுமுறை.அன்று தனிமனிதர்கள் ஊடகங்களை நட்த்த முடியாது,இதன் காரணமாக தனி மனிதனின் செயல்பரப்பு மிகவும் குறுகியதாகும்.ஆனால் இன்றோ விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இணையதளம் என்ற ஊடகம் ஒவ்வொரு மனிதனின் கைக்குள்ளேயே வந்து விட்டதால் இந்தக் கும்பல் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கிறது. இதன் மூலம் இக்கும்பலின் நேர்மையின்மையும் தவிர்க்க வியலாமல் வெளிப்பட்டு விடுகிறது.
அடுத்து அமைப்பு ரீதியாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மட்டுமே பதில் அளிப்போம் என்று கூறுவதும் இவர்களின் நேர்மையின் வெளிப்பாடல்ல. அது அமைப்பு ரீதியாக வைக்கப்படும் விமர்சனங்கள், அந்த விமர்சனங்களை வைக்கும் அமைப்புகளின் ஊடகங்களின் வாயிலாக வெளியிடப்படுவதால் அது தனது பிழைப்பிற்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடும் என்பதால்தான் பதில் கூறுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதிலும் ஒரு தந்திரத்தை இப்போது கையாள்கிறார்கள். அதாவது அவர்களின் கண்ணோட்டத்தின் படி அவர்களைத் தவிர தமிழகத்தில் வேறு புரட்சிகர அமைப்புகளே கிடையாது. இவர்களைத் தவிர வேறு புரட்சிகர அமைப்புகளே இல்லாதபோது அமைப்பு ரீதியாக விமர்சனங்களும் இல்லை, அதற்கு பதில் அளிக்க வேண்டிய தேவையும் இல்லை.
இதை அணிகளையும் ஏற்கவைத்துவிட்டால்,இப்போது இருக்கிற அணிகளை தக்கவைத்துக்கொள்வது,பிரச்சனையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.ஆனால் புதிய அணிகளை உருவாக்குவதிலும்,அதிலும் குறிப்பாக மக்களைத் திரட்டுவதில் இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப்பற்றி அவர்களுக்கு எந்தவித கவலையுமில்லை.ஏனென்றால் இந்த முப்பதாண்டு காலத்தில் மக்களைத்திரட்டுவதற்கு அவர்கள் தவறுதலாகக் கூட சிந்தித்தது கிடையாது.இந்த நிமிடம் வரை கட்சிக்கு முழுநேர,பகுதி நேர ஊழியர்களை உருவாக்குவதுதான் அவர்களின் இலக்கு.

இதற்கு ஏற்பத்தான் வர்கள் தமது அனைத்து செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்கிறார்கள்.வெகுசன அமைப்புகள்,ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படும் மைய இயக்கங்கள்,பிரச்சாரங்கள்,தனிநபர்களை சந்திப்பது உட்பட அனைத்து செயல்பாடுகளும் இதற்காகத்தான்.இது நிறைவேறிய பிறகுதான் மக்களைத்திரட்ட முடியும் என்கிறார்கள்.

முழுநேர,பகுதி நேர ஊழியர்களை திரட்டிய பிறகுதான் மக்களை திரட்ட முடியும் என்று தலைமைக்கூறுவதை அந்த அமைப்பில் உள்ளவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதனடிப்படையில் தான் ஆண்டு இலக்குகளும்,மாதாந்திர வேலைத்திட்டமும் போடப்படுகிறது.இந்த முப்பதாண்டு காலத்தில் ஒரு ஆண்டில் கூட தம்முடைய இலக்கை இவர்கள் பத்து விழுக்காடு அளவுக்குக்கூட அடைந்ததில்லை.இப்படி இலக்கை அடைய முடியாததற்கு அணிகளின் திறமையின்மையும்,அற்பணிப்பு இன்மையும்தான் காரணம் என்று தலைமைக்கூறுவதை அணிகளும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

போகாத ஊருக்கு வழி சொல்லுவதைப் போன்று அடைய முடியாத, இயங்கியலுக்கு புறம்பான திட்டத்தை தருவதன் மூலம் அது தோல்வியடைகிறது.ஆனால் இந்த தோல்விக்கு அணிகள்தான் காரணம் என்றுக்கூறி அவர்களை குற்ற உணர்வுள்ளவர்களாக மாற்றுகிறார்கள்.அணிகளின் இந்த குற்றவுணர்வுதான் தலைமை மீதான விசுவாசமாக உருவெடுக்கிறது.

தாம் கொடுக்கும் திட்டம் நிறைவேறாது என்பது தெரியாமல் அல்ல,மிக நன்றாக தெரிந்தேதான் தருகிறார்கள்.இவர்கள் தரும் திட்டத்தின் உண்மையான நோக்கமே, இச்சமூகத்தில் சமூக உணர்வுள்ள ஒரு சிலரையும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி அவர்களின் சிந்தனா சக்தியை இல்லாமல் ஆக்குவதுதான்.

கட்சியை பலப்படுத்தினால்தான் புரட்சியை சாதிக்க முடியும் என்பதை நாம் மறுக்கவில்லை.இப்படி கூறுவது தவறான கண்ணோட்டம் என்றும் கூறவில்லை.கட்சி அணிகளை வென்றெடுப்பதையும்,மக்களை அணி திரட்டுவதையும் தனித்தனியான,இரு வெவ்வேறான நடவடிக்கைகளாக காட்டுவதுதான் இயக்க மறுப்பியல் கண்ணோட்டம் என்கிறோம்.
மக்களை திரட்டுவதற்கு முழு நேர,பகுதிநேர ஊழியர்கள் குறிப்பிட்ட அளவிற்கு தவிர்க்கவியலாத தேவையை,அவசியத்தை நாம் உணராதவர்களில்லை.இந்த குறிப்பிட்ட அளவு சக்தி கிடைத்த பிறகு,அதைக்கொண்டு மக்களை திரட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.இதன் மூலம்தான் வெகுசன அரங்கு வேலைகளின் மூலம் கட்சிக்கான முழுநேர,பகுதிநேர ஊழியர்களும் வென்றெடுக்கப்படுவதற்கான பரப்பு விரிவாக்கபடுகிறது.

இப்படி கட்சி ஊழியர்கள் மக்களைத் திரட்டுவதும்,இதன் ஊடாக கட்சி பலப்படுத்தப்படுவதுமான இயங்கியல் போக்கினால் புரட்சிகர செயல்பாடுகள் புதிய உத்வேகத்தோடு முன்னேற்றத்தைக் காணும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக கட்சி அணிகளை வென்றெடுப்பதையும்,மக்களைத் திரட்டுவதையும் இரு வெவ்வேறான, தனித்தனியான பணிகளாக பார்க்கும், இயங்கியலுக்கு புறம்பான இவர்களின் கண்ணோட்டமும்,செயல்பாடுகளுமே முப்பதாண்டுகளுக்கும் மேலாக இவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறது.

இயங்கியலின் படி இவ்வுலகில் உள்ள அனைத்தும் இடைவிடாது இயங்கிக்கொண்டும்,மாறிக்கொண்டும்தான் உள்ளது.எதுவும் நிலையாக அப்படியே இருப்பதில்லை. இந்தக்கும்பல் இயங்கியலுக்கு புறம்பான தமது செயல்பாடுகள் மூலம் வளர்ச்சிக்கு பதில் தேய்வையே சந்தித்து வருகிறது.
இந்த தேய்வின் மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கு தவிர்க்கவியலாமல் முன்பு தான் கடைபிடித்த சில வழிமுறைகளுக்கு மாறாக, அதற்கு நேர்மாறான வழிமுறைகளை இப்போது கையாள தொடங்கிவிட்டனர்.

இதன்படிதான் மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பையும்,வினவு என்ற ஊடகத்தையும் உருவாக்கி புதிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்திப் பார்த்து அவற்றை பிற அரங்குகளுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தி வருகின்றனர்.
*
* ஆதிக்க சாதிவெறி,இலஞ்சம்,ஊழல்,கந்துவட்டி,ஆரம்பர வாழ்க்கை உட்பட எப்படிப்பட்ட பிற்போக்குத்தனத்தோடும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் இணைந்துகொள்ளலாம்.இவைகளை கைவிட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

* குடிக்கவே கூடாது,குடிப்பவர்களை அமைப்பில் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று விதி வைத்திருந்தவர்கள்,இப்போது எப்போதாவது குடிப்பதில் தவறில்லை என்று அறிவித்து தம்மை தீவிரமான ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்கிறார்கள்.

* இழப்பதற்கு ஏதுமற்றவர்களாக தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்.இதன் படி கட்சி உறுப்பினர்கள் தமது வருவாயில் அத்தியாவசிய செலவுகள் போக ஏனையவற்றை கட்சிக்கு தரவேண்டும் என்று முன்பு விதி வைத்திருந்தனர்.

இப்போது இதற்கு நேர்மாறாக ஒருசில மாதங்களிலேயே அரைகோடி ரூபாய்க்கும் மேல் கட்சி உறுப்பினர் ஒருவர் சொத்து சேர்த்ததை,அது எப்படி வந்தது? என்றக் கேள்வியை அமைப்புரீதியாக நாங்கள் எழுப்பிய பின்னரும் கூட அந்த சொத்து தவறான வழியில் வந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள்”,என்று கேள்வி எழுப்பிய எங்களிடமே கேள்வி கேட்டதன் மூலம் அதை நியாயப்படுத்துகிறார்கள்.ஆனால் இப்படிபட்ட உத்தமர்கள்தான் தனி மனிதர்களுக்கு பதில் சொல்ல மாட்டோம்,அமைப்பு ரீதியாக கேட்டால்தான் பதில் சொல்லுவோம் என்கிறார்கள்.

* தங்கையை தாரமாக்கிக்கொண்ட தனது அண்ணனின் இழிசெயலை ஆதரித்த ஒருவனை அன்று நாங்கள் அமைப்பில் இருந்து வெளியேற்றினோம்.இப்போது அவனை தமது அமைப்பில் மீண்டும் இணைத்துக்கொண்டு செயல்படுகின்றனர்.தனது முந்தைய தவறுக்காக சுயவிமர்சனம் செய்துகொண்டிருக்கலாம், அதனால் அந்நபரை மீண்டும் அமைப்பில் இணைத்துக்கொண்டிருக்கலாம் என்று பலரும் நினைத்துக்கொள்ளலாம்.ஆனால் அவனோ மேலும் இரு அண்ணன்,தங்கை தகாத உறவுக்கு ஆதரவளிப்பதுடன்,இப்படிபட்டவர்களை ஒருங்கிணைக்கும் வேலையிலும் ஈடுபட்டுவருகிறான்.

மேலே நாங்கள் பட்டியலிட்டுள்ளவைகளின் மூலம் இந்த கும்பல் அனைத்து பிற்போக்குதனங்கள் மூலமே தம்மை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.இவைகள் புத்தகங்களில் எழுத்தாக உள்ள கோட்பாட்டு விவகாரங்கள் மட்டுமல்ல,நடைமுறையில் அசைக்க முடியாத ஆதாரங்களாகவும் உள்ளன.

தனி மனிதர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுவதன் மூலம் தம்முடைய தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று கருதுகிறது இந்தக்கும்பல்.நாங்கள் இவைகளை இப்போது எழுப்பவில்லை.அமைப்பில் இருந்த போதே எழுப்பினோம்.ஆனால் இவைகளுக்கு அவர்கள் தந்த பதில் எங்களை அமைப்பை விட்டு வெளியேற்றிவிட்டோம் என்பதுதான்.நாங்கள் குழுவாகத்தான் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.அன்றில் இருந்து அமைப்பாகவும்தான் செயல்பட்டுவருகிறோம்.         

இவர்களுக்கு வெளியில் புரட்சிகர அமைப்புகளே இல்லை என்று இவர்கள் கருதுவதால் இப்படிப்பட்ட விமர்சனங்கள் இவர்களின் அமைப்பிற்குள்ளே இருந்து வந்தால்தான் உண்டு. அப்படி வருமா? அப்படி வந்தால் அதை எப்படி சமாளிப்பார்கள் என்பதை இனி பார்ப்போம்.

இவர்களிடம் கட்சி, வெகுசன அரங்கு என்று இரண்டு உள்ளது.இதில் ஆதரவாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆதரவாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகள், அரங்கு பொருப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், விகு,கதுகு, பகுதி பொருப்பாளர்கள், மாவஅக,மாஅக, புஜ, புக பத்திரிக்கை ஆசிரியர் குழு, வினவு ஆசிரியர் குழு இப்படி எல்லாருமாக சேர்த்து ஒரு ஐநூறு பேர் தேறுவார்கள்.
இவர்கள் வகிக்கும் பொறுப்புகளுக்கான தகுதியே கேள்வி கேட்காத விசுவாசம் தான். அதாவது சுயமாக சிந்திக்கும் தகுதியை இழந்து விடுவதுதான் அந்த விசுவாசம். இவ்வளவு கடுமையான கோட்டைக்குள்ளே தான் சூறாவளி, சரவண ராஜா போன்றோர் நுழைந்து விடுகிறார்கள். தமது குழுக்களில் கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்புகிறார்கள். அவைகள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு நிராகரிக்கப்பட்டும் விடும்.

தப்பித் தவறி எம்மைப்போன்ற போன்ற குழுவினர் ஒரு மனதாகவோ அல்லது பெரும்பான்மையாகவோ விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பி விட்டால் அவைகள் பகுதி பொருப்பாளர் அல்லது மாஅக  ஆகியோரால் நிராகரிக்கப்பட்டு விடும்.

இதன் பிறகும் தமது விமர்சனங்களின் மீது,  எழுப்பியவர்கள் உறுதியாக நின்றால் ஜனநாயக மத்தியத்துவ மீறல் என்று கதையை முடித்து விடுவார்கள். மொத்தத்தில் அங்கே விமர்சனம் வைப்பவர்கள் அனைவரும் தனி மனிதர்களாகி விடுவார்கள்.

அமைப்பிற்குள்ளவே விமர்சனம் வைப்பவர்கள் தனி மனிதர்கள் என்றால் அமைப்பிற்கு வெளியில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் இவர்களின் கோட்பாட்டின்படி தனி மனிதர்கள் தானே!?

எனவே இவர்களை கேள்வி கேட்கவோ, இவர்கள் மீது விமர்சனம் வைக்கவோ இந்த நாட்டில் எவருக்கும் தகுதி இல்லை. ஏனென்றால் இவர்கள் அகராதியில் கேள்வி கேட்பவர்கள், விமர்சனம் வைப்பவர்கள் அனைவரும் தனி மனிதர்கள்.

அமைப்பில் உள்ளவர்கள் விமர்சனங்கள் வைத்தால் அவர்கள் தனி மனிதர்களாக்கப்படுவதோடு, தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்படுகிறார்கள். இப்படி தீண்டத்தகாதவர்களோடு அமைப்பில் உள்ள யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. இதை மீறுபவர்களும் தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டு விடுவார்கள். இதற்கு பயந்துதான் அங்கே உள்ளவர்கள் அதை மீறுவதே இல்லை.(இந்த பயத்திற்கான காரணம் பற்றி யாராவது தெரிந்து கொள்ள கேளுங்கள் அப்போது அதைப்பற்றி விவாதிப்போம்)

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தான் அவர்கள் தனி மனிதர்களான மக்களிடத்திலே தொடர்பு வைத்துக் கொள்வதும் இல்லை.
ம்ம்..... என்றைக்கு நாட்டில் உள்ள மக்களில் பெரும்பான்மையினர் இவர்களின் அணிகளைப் போன்று சிந்திக்கும் திறனை மூட்டைக் கட்டி வைப்பது.... அதன் பிறகு இவர்கள் அவர்களை அமைப்பாக்கி புரட்சி நடத்துவது!

பிறகு எதற்காக மக்கள் திரள் பாதை என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?

மக்கள் திரள் பாதை என்றால் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போன்று மக்களை திரட்டி புரட்சியை நடத்துவது அல்ல. பேருந்துகளிலும்,ரயில்களிலும் உண்டியல் குலுக்குவதற்கு பெயர்தான் மக்கள் திரள் பாதை!

அங்கேயும் எவனாவது கேள்வி கேட்டு விட்டால் என்ன செய்வார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? சந்தேகமே வேண்டாம். அப்படிப் பட்டவர்களிடம் உண்டியலை காட்டவே மாட்டார்கள் நமது தோழர்கள்! வற்புறுத்தி தந்தாலும் புரட்சிகர உறுதியோடு அவற்றை நிராகரித்து விடுவார்கள்! அவ்வளவு கொள்கை உறுதியுடையவர்கள் அவர்கள்.
அமைப்பில் கேள்விகள், விமர்சனங்கள் வைப்பவர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்குவதில் இவர்களின் நிபுணத்துவம் உங்களை மலைக்க வைக்கிறதா?

அந்த நிபுணத்துவம் அவர்களின் ரத்தத்தில் அவர்களின் பார்ப்பன மூதாதையர்களின் வழியே வந்ததாகும்.

சங்க காலத்தில் தமிழகத்தில் ஊடுருவிய இவர்களின் பார்ப்பன மூதாதையர்கள் தமது சாதிய சித்தாந்தத்தை ஆளுவோர் மூலம் மக்கள் மீது திணித்தார்கள். அதை ஏற்காமல் கேள்வி கேட்டவர்களையும், விமர்சனம் வைத்தவர்களையும் தீண்டத்தகாத சாதிகளாக வட இந்தியாவைப் போன்றே ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர்.

சாதிய சமூகத்தை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக படிநிலை வடிவத்தின் மூலம் இன்று வரை அவர்களால் பாதுகாக்க முடிகிறது. இதே போன்று தான் மகஇக கும்பலும் கீழிருந்து மேலாக படியடுக்கு முறையில் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு குழுவும் எதில் உறுதியாக இருக்கிறதோ, இல்லையோ விமர்சனம் வைப்பவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதுவதில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்து தமது விசுவாசத்தை தலைமைக்கு நிரூபிக்கின்றனர்.இதன் பிறகும் அவர்களோடு விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது?இந்த கழிசடைகளை மக்களிடையே அம்பலப்படுத்தி விரட்டியடிக்கின்ற பணிதான் நம்முன்னே காத்திருக்கின்றது.

தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      


4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2