விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Wednesday, 28 December 2011

லோக்பால்,அன்னா அசாரே:நாய் வாலை நிமித்த முடியுமா?

தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான,உணர்ச்சி பூர்வ நிகழ்வு என்றால் அது முல்லை பெரியாறு! இந்திய அளவில் பரபரப்பான செய்தியாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி லோக்பால் மசோதா! அன்னா ஹசாரே என்ற கிழடை வைத்து பார்ப்பன கும்பல் நடத்தும் மாயாஜால வித்தைதான் லோக்பால் விவகாரம்.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் ,சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கும் களங்கத்தையும் ஏற்படுத்தும் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு லோக்பால் மசோதாவே ஒரே வழியென்று பார்ப்பன ஊடகங்கள் ஒருமித்தக்குரலில் எழுதுகின்றன.

சமூக ஆர்வலர் என்று அன்னாவுக்கு பட்டமும் அளித்து கவுரவிக்கின்றனர்.இந்த கிழட்டு நரிக்கு இப்போது வயது என்பது.இத்துணை ஆண்டு காலம் வராத ஞானோதயம் இப்போதுதான் வந்துள்ளது.

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1990- களிலிருந்து நடந்துவரும் போராட்டத்தை மறைத்துவிட்டு,இத்தனை ஆண்டுகளாக போராடமால்,இப்போது அணு உலையை எதிர்த்து போராடும் போராட்டக்குழுவின் நோக்கம் என்ன? என்று கேட்கும் பார்ப்பன கும்பல்,இதே கேள்வியை அன்ன ஹசாரேவை கேட்காமல் அவருக்கு மலர் மகுடம் சூட்டுகிறார்கள்.

இந்தியாவில் ஊழல் வரலாறு நேருகாலத்திலிருந்து துவங்கிவிட்டது.மூக்கிருக்கும் வரை சளியிருக்கும் என்பதைப்போன்று அன்று தொடங்கிய ஊழல் இன்று 2G,3G என ஆலமரமாய் வளர்ந்து சமூகமெங்கும் வேர் பரப்பிவிட்டது.அது இல்லாத இடம் என்று எங்குமில்லை.ஊழல் இன்று ஒவ்வொரு இந்தியன் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.லஞ்சமும்,ஊழலும்!



கிராமத்தில் உள்ளூராட்சி அமைப்பிலிருந்து,டெல்லி செங்கோட்டை வரை அது இல்லாத இடமேயில்லை.அரசுத்துறையானாலும்,தனியார் துறையானாலும் அவற்றில் எது இருக்கிறதோ,இல்லையோ நிச்சயம் அது இருக்கிறது!

லோக்பால் மசோதா பற்றியும், அதை நிறைவேற்றுவதைப்பற்றியும் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர்,சிபிஐ,டி பிரிவு ஊழியர்கள் வரை சேர்க்கவேண்டும் என்று காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது.

ஆனால்,நாட்டின் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம்,ஊழலில் ஈடுபடுவர்களிடம் அதன் சுவடுகூட தென்படவில்லை.வழக்கம் போல அவர்களின் பணியை செவ்வனே செய்துவருகின்றார்கள்.
தமிழகத்தில் TNPSC முன்னால்,இன்னால் அதிகாரிகளின் வீடுகளில், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் தீவிர சோதனை நடத்துகிறார்கள் என்ற செய்தி நாளேடுகளிலும்,தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது.அதே நேரத்தில் சத்துணவு,அங்கன்வாடி பணியாளர்கள் 28 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு பணியிடத்திற்கு ஒன்றைரை லட்ச ரூபாய் விலை போகிறது.ஒரு ஆசிரியர் பணியிடம் 5 லட்சம் வரை …..இங்கு எங்கேயும் லோக்பாலின் எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதோடு மட்டுமா, தமிழக அரசின் இலவசத்திட்டங்கள் கூட இதில் இருந்து தப்பிக்கவில்லை.

1.இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற ரூபாய் 2 ஆயிரம்.

2.பசுமை குடில் பெறுவதற்கு ரூபாய் 25 ஆயிரம்.

3.சாதி மாற்றி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் அதன் விலை ரூபாய் ஐந்து ஆயிரம்.                   

4.குடும்ப அட்டை ரூபாய் 5 ஆயிரம்,அட்டை வீடு தேடி வரும்.

5.அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சீட்டுவாங்க ஐந்து ரூபாய்.சீட்டே இல்லாமல்  பத்து ரூபாய் கொடுத்தால் இரண்டு ஊசி.

இவை எல்லாமே அன்றாடம் மிக இயல்பாக நடக்கிறது.இப்படி செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்,நான் லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு வந்தேன்.எவனாவது எனக்கு இலவசமாகவா வேலை கொடுத்தான்!

எந்த வேலையும் இலவசமாக கிடைப்பதுமில்லை!,லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருவோர்.அதை திருப்பி செய்வதற்கு கூச்சப்படுவதுமில்லை!.நூறு சதவீத வேலைகளும் லஞ்சம் பெற்றுதான் தரப்படுகிறது.எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் யாராவது ஒருவர் நேர்மையாக நடந்துகொண்டால், அவர் தனது வேலையை விரைவிலேயே இழந்துவிடுவார்.
ஊழலை தடுப்பதற்கு என்று எத்தனையோ துறைகளும், நூற்றுக்கணக்கான சட்டங்களும் உள்ளன.ஆனால் இந்த சட்டங்கள் அனைத்தும் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருகின்றவர்கள் மூலம்தான்  நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

லோக்பால் சட்டம் வந்தாலும்,அந்த சட்டமும் மனிதர்களால்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.எப்படிப்பட்ட சிறந்த சட்டமாக இருந்தாலும் அதை மனிதர்கள் தான் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தான் அதன் நோக்கம் நிறைவேறுவதில்லை.அதனால் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை பணி அமர்த்தலாம் என்றாலும், அந்த ரோபோக்களுக்கும் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பவர்களும் மனிதர்கள்தான்.சரி மிருகங்களை அமர்த்தலாம் என்றால் அவைகளை பழக்குபவர்களும் மனிதர்கள்தான்.

எனவே சட்டங்கள் ஆயிரங்கள் இருந்தாலும்.அவற்றை நடைமுறைப்படுத்துவது இந்த சமூக அமைப்பில் சாத்தியமில்லை.

இந்த எளிய உண்மை ஹசாரேவுக்கும்,பார்ப்பன ஊடகங்களுக்கும் தெரியாதா என்ன? தெரியும்!பிறகு எதற்காக உயிரற்ற சட்டத்திற்காக இவ்வளவு வரிந்துக்கட்டி கொண்டு நிற்கிறார்கள்?



இதற்கான பதிலும் மிகவும் எளிமையானதுதான்.நிலவுகிற இந்த சமூக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்  போக்கு மிக வேகமாகி வருகிறது.இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கிறது.

இந்த சமூக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையின்மைதான் ’வால் தெரு’ போராட்டமாக உலகெங்கிலும் வெடித்திருக்கிறது.இதில் இருந்து மக்களின் கவனத்தை முடிந்தவரை திசை திருப்புவதுதான் இவர்களின் நோக்கம்.இதை போய் யார் நம்புவார்கள் என்கிறீர்களா? இந்த திசை திருப்பும் நாடகங்கள் உலகின் வேறு பகுதிகளில் எடுபடுகிறதோ, இல்லையோ இந்தியாவில் அது நிச்சயம் நடக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஒரு சாதிக்காரன் ஏற்றுக்கொண்டால்,அதை இன்னொரு சாதிக்காரன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.ஒரு மாநிலம் சரி என்றால் இன்னொரு மாநிலம் முடியாது எனக் கூறும்.ஒரு மதம் ஒப்புக்கொண்டால் இன்னொரு மதம் ஒப்புக்கொள்ளாது.இவர்கள் இவற்றில் ஏதோ ஒன்றை துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.பிறகென்ன! அவர்கள் நினைப்பது நடக்காமலா போய்விடும்!

சரி இதற்கு என்ன தான் வழி! லஞ்சம் ஊழலை எப்படித்தான் ஒழிப்பது! அது முடியாதா என்றால் அதற்கான பதில் இதுதான்.

நிலவுகிற இந்த சமூக அமைப்பின் அடிப்படை போட்டி உற்பத்தி. பொருள் உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகள் சந்தையை கைப்பற்றுவதற்கும் அதை தக்கவைத்து கொள்வதற்கும்,தமது அரசியல் பிரதிநிதியான அரசியல் கடசிகளுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் கோடி,கோடியாய் கொட்டிகொடுக்கிறார்கள்.இவ்விரு பிரிவினரையும் வைத்துக்கொண்டு,தமக்கு வேண்டியதை சாதித்துகொள்கிறார்கள்.உலகில் உள்ள  ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு பிரிவு முதலாளிகளின் நலனை பாதுகாக்க செயல்படுபவைதான்.

இதுதான் ஊழலுக்கான ஆணி வேர்.அரசியல் கட்சிகளின் தலைமை, அரசு எந்திரத்தின் உயர்மட்டம் ஆகியோரின் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் கீழ்மட்டங்களும் அதே வழியை பின்பற்றுகிறார்கள்.இது கிளையாக வளர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் போட்டியும், பற்றாக்குறையும் சமூகத்தில் இருக்கும் வரை லஞ்சமும்,ஊழலும் இருந்துகொண்டே இருக்கும்.

நிலத்தில் கோரையை ஒழிக்கவேண்டுமானால்,அதன் கிழங்கோடு பிடுங்கி எறியவேண்டும்.கிழங்கை விட்டுவிட்டு அதன் மேல் பகுதியை கிள்ளுவதால் மட்டும் அது ஒழிந்துவிடாது.கிழங்கு மண்ணிற்குள் மறைந்து இருக்கும்வரை,அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.இதைப் போன்றுதான் ஊழலின் ஆணி வேரான போட்டி பொருளுற்பத்தியை தூக்கியெறியாமல் லஞ்சமும்,ஊழலும் மீண்டும், மீண்டும் முளைவிட்டுகொண்டேதான் இருக்கும்.

மறைந்து இருக்கும் ஆணிவேரை பற்றி பேசாமல் வெளியில் தெரியும் கிளையைக்காட்டி நம்மை திசை திருப்புவதுதான் ஹசாரே கும்பலின் இலக்கு,நோக்கம்!
அதுமட்டுமல்லாமல்,ஹசாரேவும் இதை இயக்கும் கும்பலும் நாய் வாலை நிமிர்த்தி விடப்போவதாக கொக்கரிக்கிறார்கள்.இதை நம்மையும் நம்ப சொல்கிறார்கள்!
இதை நம்புவதற்கு நீங்கள் தயாரா?  

(இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது)

Friday, 23 December 2011

அன்னா அசாரேவும்-நாய்வாலும்!

தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான,உணர்ச்சி பூர்வ நிகழ்வு என்றால் அது முல்லை பெரியாறு! இந்திய அளவில் பரபரப்பான செய்தியாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி லோக்பால் மசோதா! அன்னா ஹசாரே என்ற கிழடை வைத்து பார்ப்பன கும்பல் நடத்தும் மாயாஜால வித்தைதான் லோக்பால் விவகாரம்.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் ,சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கும் களங்கத்தையும் ஏற்படுத்தும் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு லோக்பால் மசோதாவே ஒரே வழியென்று பார்ப்பன ஊடகங்கள் ஒருமித்தக்குரலில் எழுதுகின்றன.

சமூக ஆர்வலர் என்று அன்னாவுக்கு பட்டமும் அளித்து கவுரவிக்கின்றனர்.இந்த கிழட்டு நரிக்கு இப்போது வயது என்பது.இத்துணை ஆண்டு காலம் வராத ஞானோதயம் இப்போதுதான் வந்துள்ளது.




கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1990- களிலிருந்து நடந்துவரும் போராட்டத்தை மறைத்துவிட்டு,இத்தனை ஆண்டுகளாக போராடமால்,இப்போது அணு உலையை எதிர்த்து போராடும் போராட்டக்குழுவின் நோக்கம் என்ன? என்று கேட்கும் பார்ப்பன கும்பல்,இதே கேள்வியை அன்ன ஹசாரேவை கேட்காமல் அவருக்கு மலர் மகுடம் சூட்டுகிறார்கள்.
இந்தியாவில் ஊழல் வரலாறு நேருகாலத்திலிருந்து துவங்கிவிட்டது.மூக்கிருக்கும் வரை சளியிருக்கும் என்பதைப்போன்று அன்று தொடங்கிய ஊழல் இன்று 2G,3G என ஆலமரமாய் வளர்ந்து சமூகமெங்கும் வேர் பரப்பிவிட்டது.அது இல்லாத இடம் என்று எங்குமில்லை.ஊழல் இன்று ஒவ்வொரு இந்தியன் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.லஞ்சமும்,ஊழலும்!

கிராமத்தில் உள்ளூராட்சி அமைப்பிலிருந்து,டெல்லி செங்கோட்டை வரை அது இல்லாத இடமேயில்லை.அரசுத்துறையானாலும்,தனியார் துறையானாலும் அவற்றில் எது இருக்கிறதோ,இல்லையோ நிச்சயம் அது இருக்கிறது!

லோக்பால் மசோதா பற்றியும், அதை நிறைவேற்றுவதைப்பற்றியும் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர்,சிபிஐ,டி பிரிவு ஊழியர்கள் வரை சேர்க்கவேண்டும் என்று காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது.

ஆனால்,நாட்டின் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம்,ஊழலில் ஈடுபடுவர்களிடம் அதன் சுவடுகூட தென்படவில்லை.வழக்கம் போல அவர்களின் பணியை செவ்வனே செய்துவருகின்றார்கள்.
தமிழகத்தில் TNPSC முன்னால்,இன்னால் அதிகாரிகளின் வீடுகளில், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் தீவிர சோதனை நடத்துகிறார்கள் என்ற செய்தி நாளேடுகளிலும்,தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது.அதே நேரத்தில் சத்துணவு,அங்கன்வாடி பணியாளர்கள் 28 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு பணியிடத்திற்கு ஒன்றைரை லட்ச ரூபாய் விலை போகிறது.ஒரு ஆசிரியர் பணியிடம் 5 லட்சம் வரை …..இங்கு எங்கேயும் லோக்பாலின் எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதோடு மட்டுமா, தமிழக அரசின் இலவசத்திட்டங்கள் கூட இதில் இருந்து தப்பிக்கவில்லை.

1.இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற ரூபாய் 2 ஆயிரம்.

2.பசுமை குடில் பெறுவதற்கு ரூபாய் 25 ஆயிரம்.

3.சாதி மாற்றி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் அதன் விலை ரூபாய் ஐந்து ஆயிரம்.                   

4.குடும்ப அட்டை ரூபாய் 5 ஆயிரம்,அட்டை வீடு தேடி வரும்.

5.அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சீட்டுவாங்க ஐந்து ரூபாய்.சீட்டே இல்லாமல்  பத்து ரூபாய் கொடுத்தால் இரண்டு ஊசி.

இவை எல்லாமே அன்றாடம் மிக இயல்பாக நடக்கிறது.இப்படி செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்,நான் லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு வந்தேன்.எவனாவது எனக்கு இலவசமாகவா வேலை கொடுத்தான்!

எந்த வேலையும் இலவசமாக கிடைப்பதுமில்லை!,லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருவோர்.அதை திருப்பி செய்வதற்கு கூச்சப்படுவதுமில்லை!.நூறு சதவீத வேலைகளும் லஞ்சம் பெற்றுதான் தரப்படுகிறது.எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் யாராவது ஒருவர் நேர்மையாக நடந்துகொண்டால், அவர் தனது வேலையை விரைவிலேயே இழந்துவிடுவார்.

ஊழலை தடுப்பதற்கு என்று எத்தனையோ துறைகளும், நூற்றுக்கணக்கான சட்டங்களும் உள்ளன.ஆனால் இந்த சட்டங்கள் அனைத்தும் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருகின்றவர்கள் மூலம்தான்  நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

லோக்பால் சட்டம் வந்தாலும்,அந்த சட்டமும் மனிதர்களால்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.எப்படிப்பட்ட சிறந்த சட்டமாக இருந்தாலும் அதை மனிதர்கள் தான் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தான் அதன் நோக்கம் நிறைவேறுவதில்லை.அதனால் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை பணி அமர்த்தலாம் என்றாலும், அந்த ரோபோக்களுக்கும் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பவர்களும் மனிதர்கள்தான்.சரி மிருகங்களை அமர்த்தலாம் என்றால் அவைகளை பழக்குபவர்களும் மனிதர்கள்தான்.

எனவே சட்டங்கள் ஆயிரங்கள் இருந்தாலும்.அவற்றை நடைமுறைப்படுத்துவது இந்த சமூக அமைப்பில் சாத்தியமில்லை.

இந்த எளிய உண்மை ஹசாரேவுக்கும்,பார்ப்பன ஊடகங்களுக்கும் தெரியாதா என்ன? தெரியும்!பிறகு எதற்காக உயிரற்ற சட்டத்திற்காக இவ்வளவு வரிந்துக்கட்டி கொண்டு நிற்கிறார்கள்?

இதற்கான பதிலும் மிகவும் எளிமையானதுதான்.நிலவுகிற இந்த சமூக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்  போக்கு மிக வேகமாகி வருகிறது.இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கிறது.

இந்த சமூக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையின்மைதான் ’வால் தெரு’ போராட்டமாக உலகெங்கிலும் வெடித்திருக்கிறது.இதில் இருந்து மக்களின் கவனத்தை முடிந்தவரை திசை திருப்புவதுதான் இவர்களின் நோக்கம்.இதை போய் யார் நம்புவார்கள் என்கிறீர்களா? இந்த திசை திருப்பும் நாடகங்கள் உலகின் வேறு பகுதிகளில் எடுபடுகிறதோ, இல்லையோ இந்தியாவில் அது நிச்சயம் நடக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஒரு சாதிக்காரன் ஏற்றுக்கொண்டால்,அதை இன்னொரு சாதிக்காரன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.ஒரு மாநிலம் சரி என்றால் இன்னொரு மாநிலம் முடியாது எனக் கூறும்.ஒரு மதம் ஒப்புக்கொண்டால் இன்னொரு மதம் ஒப்புக்கொள்ளாது.இவர்கள் இவற்றில் ஏதோ ஒன்றை துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.பிறகென்ன! அவர்கள் நினைப்பது நடக்காமலா போய்விடும்!

சரி இதற்கு என்ன தான் வழி! லஞ்சம் ஊழலை எப்படித்தான் ஒழிப்பது! அது முடியாதா என்றால் அதற்கான பதில் இதுதான்.

நிலவுகிற இந்த சமூக அமைப்பின் அடிப்படை போட்டி உற்பத்தி. பொருள் உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகள் சந்தையை கைப்பற்றுவதற்கும் அதை தக்கவைத்து கொள்வதற்கும்,தமது அரசியல் பிரதிநிதியான அரசியல் கடசிகளுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் கோடி,கோடியாய் கொட்டிகொடுக்கிறார்கள்.இவ்விரு பிரிவினரையும் வைத்துக்கொண்டு,தமக்கு வேண்டியதை சாதித்துகொள்கிறார்கள்.உலகில் உள்ள  ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு பிரிவு முதலாளிகளின் நலனை பாதுகாக்க செயல்படுபவைதான்.

இதுதான் ஊழலுக்கான ஆணி வேர்.அரசியல் கட்சிகளின் தலைமை, அரசு எந்திரத்தின் உயர்மட்டம் ஆகியோரின் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் கீழ்மட்டங்களும் அதே வழியை பின்பற்றுகிறார்கள்.இது கிளையாக வளர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் போட்டியும், பற்றாக்குறையும் சமூகத்தில் இருக்கும் வரை லஞ்சமும்,ஊழலும் இருந்துகொண்டே இருக்கும்.

நிலத்தில் கோரையை ஒழிக்கவேண்டுமானால்,அதன் கிழங்கோடு பிடுங்கி எறியவேண்டும்.கிழங்கை விட்டுவிட்டு அதன் மேல் பகுதியை கிள்ளுவதால் மட்டும் அது ஒழிந்துவிடாது.கிழங்கு மண்ணிற்குள் மறைந்து இருக்கும்வரை,அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.இதைப் போன்றுதான் ஊழலின் ஆணி வேரான போட்டி பொருளுற்பத்தியை தூக்கியெறியாமல் லஞ்சமும்,ஊழலும் மீண்டும், மீண்டும் முளைவிட்டுகொண்டேதான் இருக்கும்.

மறைந்து இருக்கும் ஆணிவேரை பற்றி பேசாமல் வெளியில் தெரியும் கிளையைக்காட்டி நம்மை திசை திருப்புவதுதான் ஹசாரே கும்பலின் இலக்கு,நோக்கம்!

அதுமட்டுமல்லாமல்,ஹசாரேவும் இதை இயக்கும் கும்பலும் நாய் வாலை நிமிர்த்தி விடப்போவதாக கொக்கரிக்கிறார்கள்.இதை நம்மையும் நம்ப சொல்கிறார்கள்!
இதை நம்புவதற்கு நீங்கள் தயாரா?  

Sunday, 18 December 2011

மின்வெட்டுக்கு காரணம்:விவசாயிகளா,பன்னாட்டு நிறுவனங்களா?

தமிழக மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் இன்னல்களில் இப்போது முதன்மையான இடம் பிடித்துள்ளது மின்வெட்டே ஆகும்.அன்றாடம் எப்போது மின்சாரம் வரும்,போகும் என்பது யாருக்கும் தெரியாது.குறைந்தது ஒரு நாளைக்கு பத்துமணி நேரமாவது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் மக்களின் அன்றாட வாழ்வே நிலை குலைந்து போகிறது.சிறு தொழில்கள்,விவசாயம் ஆகியவை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.



மேற்கண்ட இன்னலோடு மேலும் ஒன்றும் சேரப்போகிறது என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயா அறிவித்துள்ளார்.தமிழநாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.இதை தடுக்க இழப்பை குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.விரைவில் மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சந்திக்கும் இழப்பின் காரணமாக திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் இந்த இழப்பு யாரால்,எதனால் ஏற்பட்டது என்பதை அறிவிக்கவில்லை.

ஆனால்,இந்த இழப்பை ஈடுகட்ட அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறையான மக்கள் மீதான மின்கட்டண உயர்வின் மூலம் இழப்பிற்கு மக்கள்தான் காரணம் எனபதை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.அதிலும் தமிழக மக்களில் பெரும்பான்மையினரான விவசாயிகள் மீதுதான் இக்குற்றச்சாட்டை மறைமுகமாக ஜெயா சுமத்தியுள்ளதுடன், அதற்கான தண்டனையையும் அறிவித்துள்ளார். அதுதான் மின்கட்டண உயர்வு.
மின்கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அறிவித்துள்ளாரே தவிர விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்வேன் என்று முதல்வர் அறிவிக்கவில்லையே.அப்படியிருக்கும் போது விவசாயிகளுக்கு தண்டனை அறிவித்துள்ளார் என்று எப்படி கூறமுடியும் என்ற வினா எழலாம்.உண்மைதான் முதல்வர் நேரடியாக விவசாயிகளுக்கு தண்டனை அறிவிக்க வில்லைதான்.

ஆனால் மின்கட்டண உயர்வால அனைத்து பொருட்களின் விலையும்,மின்கட்டண உயர்வுக்கு ஏற்ப உயர்ந்துவிடும்.நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களும்,நாட்டின் இதரப்பிரிவு மக்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவான வருவாய் உடையவர்களுமான விவசாயிகள், விலைவாசி உயர்வின் காரணமாக தமது வாங்கும் சக்தியை மேலும் இழப்பார்கள்.இதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.

நாட்டிலுள்ள மக்கள் பிரிவினரிலேயே விவசாயிகளுக்கு மட்டும்தான் அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது.எனவே மின்வாரியம் சந்திக்கும் இழப்புக்கு காரணமே விவசாயிகள்தான் என்ற தோற்றத்தையும் அரசு மக்களிடையே தோற்றுவித்துள்ளது,உண்மையில் மின்வாரியம் சந்திக்கும் இழப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தால் தான் ஏற்படுகிறதா?வேறு ஏதாவது காரணங்கள் உண்டா?போன்ற வினாக்களுக்கு ஆம்,இல்லை என்ற ஒற்றை வார்த்தை மூலம் விடை காண முடியாது.

மின் உற்பத்தி,நுகர்வு,நிர்வாகம் ஆகிய அம்சங்களை முழுமையாக கணக்கிலெடுத்து ஆய்வு செய்தால்தான் இன்று மின்சார வாரியம் சந்திக்கும் இழப்புக்கான உண்மையான காரணத்தை நம்மால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.இப்படி உண்மை விவரங்களிலிருந்து சரியானதொரு முடிவுக்கு வந்தால்தான், இதை களைவதற்கான தீர்வு என்ன என்பது பற்றிய சரியான முடிவுக்கும் நாம் வரமுடியும்.

எனவே 1947-க்கு பிந்தைய தமிழகத்தின் மின் உற்பத்தி,மின் தேவை,நுகர்வு,மின் ஆற்றல் மூலம் விளைந்த பொருளுற்பத்தி அகியவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்,
வ.எண்
ஆண்டு
மின் பயன்பாட்டு
அளவு மெகாவாட்டில்
மின் பயன்பாட்டு அதிகரிப்பின் அளவு மெகாவாட்டில்
1
1951
110
-
2
1951-61
301
191
3
1961-74
1470
1169
4
1974-80
2224
954
5
1980-90
3344
920
6
1990-97
6019
2675
7
1997-2002
7924
1905
8
2002-2007
10100
2176
9
2007-2011
12000
1900


மேலே கண்ட அளவில்தான் தமிழகத்தின் மின்தேவை அதிகரித்துவந்துள்ளது.இந்த தேவை அதிகரிப்பில் யார்,யார் எந்த விதத்தில் மின்சாரத்தை நுகர்ந்துள்ளனர் என்ற விவரத்தையும் இப்போது பார்ப்போம்.

வ.எண்
நுகர்வோர் பட்டியல்
மின்சார பயன்பாடு சதவிகிதத்தில்
மொத்த நுகர்வோரில் எண்ணிக்கை சதவிகிதத்தில்
1
தொழிற்சாலை
34.92
2.41
2
வர்த்தக நிறுவனங்கள்
10.43
12.63
3
வீடுகள்
27.5
66.56
4
விவசாயம்
20.93
8.83
5
பிற
6.67
9.57

மேலே கண்ட புள்ளி விவரங்களில் இருந்து எந்தத்துறையினர் மிகக் கூடுதலாக மின்சாரத்தை நுகருகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும்.

விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்துவோர் மொத்த நுகர்வோரில் 75.39% பேர்.இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவு 48.05%

மொத்த நுகர்வோரில் வெறுமனே 15.05% பேரே உள்ள தொழிற்துறையினரும்,வர்த்தக நிறுவனத்தினரும் நுகரும் மின்சாரத்தின் அளவோ 45.35%

விவசாயம் என்று தனியே பிரித்து பார்த்தால் மொத்த நுகர்வோரில்  8.83% பேரான இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவோ வெறுமனே 20.93% மட்டுமே

ஆனால் மொத்த நுகர்வோரில் 2.41% பேரான தொழிற்துறையினர் நுகரும் மின்சாரத்தின் அளவோ 34.92% ஆகும்.

அப்படியானால் மின்சாரத்தை அதிகமாக நுகரும்துறை தொழிற்துறையே தவிர விவசாயம் அல்ல.

இனி எதிர்காலத்தில் விவசாயத்திற்கும்,வீடுகளுக்கும் மின்தேவையின் அளவு அதிகரிக்கப் போவதில்லை.ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு வேளாண் பரப்பளவு குறைந்துவிட்டது.இது இனிவரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.




இதேபோன்று தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஏறத்தாழ மின்வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டதால் இதற்கான மின்தேவையும் அதிகரிக்கப்போவதில்லை.
ஆனால் இதற்கு நேர் எதிராக தொழிற்துறைக்கும்,வர்த்தகத்திற்குமான மின் தேவை அதிகரிக்கும்.

எனவே எதிர்கால மின்சாரத்தேவை என்பது முக்கியமாக தொழிற்துறைக்குதான் அவசியமாகிறது.

ஆனால் நமது ஆட்சியாளர்களோ, மின்சாரத்தின் தேவை அனைத்துப்பிரிவு மக்களுக்கும் அதிகரிக்கும் என்பது போல பேசிவருகின்றனர்.மின்சார உற்பத்தியின் அளவை அதிகரிக்காவிட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பீதியூட்டுகிறார்கள்.இப்படி பீதியூட்டுவதன் மூலம் அணு சக்தியினால் மூலம் கடல்வளம்,விவசாயம்,சுற்றுச்சூழல்,மக்களின் உடல்நலம் ஆகியவற்றுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை மறைத்துவிட முயற்சிக்கிறார்கள்.

அதாவது தொழிற்துறையின் தேவைக்காக மொத்த நாட்டு மக்களின் வாழ்வையும் குழிதோன்ற புதைக்க முயற்சிக்கிறார்கள்.

 இங்கு தொழிற்துறையினர் என்றால் அவர்களில் பெருபான்மையினர் வெளிநாட்டு நிறுவனங்கள்தான்.இவர்களின் வருகைதான் நாட்டின் முன்னேற்றம் என்று மத்திய,மாநில அரசுகள் மக்களிடையே கூறிவருகின்றனர்.இப்படி கூறுவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு எல்லாவிதமான சலுகைகளையும்,வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.இவர்களால் நமது நாட்டிற்கு எவ்வித நன்மையும் இல்லை.





அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கினால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாகவும்,அதன் பிறகு சலுகை விலையிலும் மின்சாரம் தருகின்றனர்.தண்ணீரூம் இலவசமாக தருகின்றனர்.இதே போன்று வரியும் விதிப்பதில்லை.
இந்தியாவில் தொழில் தொடங்குவதால் இலவசமாக மின்சாரம்,தண்ணீர்,மலிவான விலையில் மனித உழைப்பு,வரி இல்லாதது ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அந்நிய நிறுவனங்கள் இங்கு படையெடுக்கின்றனர்.




அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவ்வளவு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய,மாநில அரசுகள் உள்நாட்டு தொழிற்துறைக்கு குறிப்பாக சிறு தொழில்களுக்கு எவ்வித சலுகையும் வழங்குவதில்லை.

மேற்கண்ட விவரத்தை தொகுத்து பார்க்கும் போது எதிர்காலத்தில் மின் தேவைக்கான அதிகரிப்பு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஏற்படப்போகிறது.அதோடு இப்போது தொழிற்துறைக்கு அளிக்கப்படும் மின்சாரத்தில் பெருமளவை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உறிஞ்சிக்கொள்கின்றன.அதுவும் இலவசமாக.

ஆனால் நாட்டில் 80% மக்களுக்கு இன்றளவும் வாழ்வுக்கான ஆதாரமாக உள்ள விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் மின்வாரியம் இழப்பை சந்திக்க நேருவதற்கான காரணம் என ஆட்சியாளர்கள் வதந்தி பரப்புகின்றனர்.

மின்வாரியம் மிகப்பெரிய இழப்பை சந்திப்பதற்கான மிக முக்கியக் காரணம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதும்,மின் வாரிய நிர்வாக சீர்கேடு,ஊழல்,மின் திருட்டு,மின் கம்பிகள் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவைதான் மின்சாரத்துறையின் இழப்புக்கு காரணமாகும்.

மின்சாரத்துறையை இழப்பிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மேற்கண்டவற்றை சரி செய்ய வேண்டும்.இதை செய்வதன் மூலம் மின்வாரித்தை லாபகரமான நிலைக்கு உயர்த்த முடியும்.

ஆனால் தமிழக அரசோ இதை செய்வதற்கு பதில் மின்கட்டணத்தை உயர்த்தி அப்பாவிகளான தமிழக மக்களுக்கு தண்டனை தர முயற்சிக்கிறது.

மத்திய அரசோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக, கூடங்குளம் அணு உலை மூலம் தமிழக மக்களின் உயிர்களை காவு கேட்கிறது.அணுக்கதிர் வீச்சின் மூலம் கடல்,நீர்,நிலம்,காற்று,சுற்றுசூழல் அனைத்தையும் மாசுபடுத்தி தமிழகத்தை பாலைவனமாக்கத்துடிக்கிறது.

இந்த அநீதிகளை இனியும் நாம் சகித்துக்கொள்ள போகிறோமா? தொடரும்…..

Tuesday, 13 December 2011

மலையாள இனவெறியும்,கம்பம் விவசாயிகளின் எழுச்சியும்!

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு பொருளாதார முற்றுகையே தீர்வு என்ற எமது சென்ற கட்டுரைக்கு பதிவர்கள் நியாயமான தமது ஐயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் அதேபோல் தமிழகத்தில் பரவலாக இது பற்றிய விவாதங்களும் நடைபெற்றுவருகின்றன இவைகளுக்கு விடையளிக்கும் வகையில் இக்கட்டுரையை வெளியிடுகிறோம்!

கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகையினால் தமிழக விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பது தவிற்கவியலாத ஒன்றாகும்.நோயின் தீவிரம் அறுவைசிகிச்சையைத்தான் கோருகிறது.அறுவை சிகிச்சை செய்துகொண்டால் ரத்த இழப்பு ஏற்படும் என்பதால் மறுப்பது,தற்கொலைக்கு சமமானது ஆகும்.எனவே பொருளாதார முற்றுகை எனும் அறுவைசிகிச்சையை மேற்கொண்டுதான் ஆகவேண்டும்.இந்த உண்மையை கம்பம் வட்டார விவசாயிகள் உணர்ந்துதான் நீண்டகால நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமான இழப்பை மனப்பூர்வமாக ஏற்று தற்போது செயல்படுத்துகின்றனர்.விவசாயிகளின் இந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்துவதும்,கூர்மைபடுத்துவதும் மிகவும் அவசியமான செயலாகும்.



நாங்கள் எமது கட்டுரையில் இருப்பவர்கள் கொடுக்க மறுப்பதன் மூலமும்,பெறவேண்டியவர்கள் அதை விட்டுக்கொடுப்பதன் மூலமும் இந்திய ஆளும்வர்க்கங்களின் நோக்கத்திற்கு சேவை செய்வதாக கூறியிருந்தோம்.எமது இந்த வரையைறையை நிரூபிக்கும் வகையில் தமிழ ஆட்சியாளர்கள்,கம்பம் வட்டார விவசாயிகள் மீது போலிசின் மூலம் தடியடி நடத்தியுள்ளனர்.தமிழ அரசின் சட்டபூர்வ அணுகுமுறைகள் அதாவது,உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுப்பது,மத்திய ஆட்சியாளர்கள் மூலம் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் பிரச்சனையை முடிவே இல்லாமல் இழுத்தடித்து ஆறப்போடுவதன் மூலம் தமிழகத்தின் உரிமைகளை மறைமுகமாக விட்டுக்கொடுக்கும் செயல்தான், தமிழகத்தில் யார் ஆட்சியாண்டாலும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் கையாள்வார்கள். தாங்கள் ஆட்சி பொருப்பில் இருப்பதைவிட  தமிழகத்தின்,தமிழக மக்களின் உரிமைகளும்,நலன்களும் இவர்களுக்கு முக்கியமானது அல்ல.

எனவே,விவசாயிகள் தான் தமது வாழ்வை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகையை ஒருபோதும் தமிழக ஆட்சியாளர்களின்,ஓட்டுகட்சிகளின்  உதவியோடு செயல்படுத்த முடியாது.விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு இவர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள்.ஆகவே,தமிழக அரசு தமக்கு ஆதரவாக செயல்படும் என கருதி விவசாயிகள் எல்லையில் முற்றுகையிடுவது தவறான கணிப்பேயாகும்.

ஆகவே,கேரளத்திற்கு அனுப்பும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும்,இவற்றை கேரளத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளும் தமக்கிடையே கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம்தான் இந்த பொருளாதார முற்றுகையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும்.

பொருளாதார முற்றுகை கேரள மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பரிந்துரைக்கவில்லை.மாறாக மலையாள இனவெறியில் இருந்து அவர்களை மீட்பதற்காகத்தான்.ஆகவே பொருளாதார முற்றுகை எனும் இந்த போராட்ட வடிவம் நிரந்தரமான ஒன்றல்ல.இது தற்காலிகமானது ஆயினும்,தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை மாற்று சந்தையை ஏற்படுத்திகொள்வதன் மூலம் ஈடுசெய்துவிட முடியும்.விவசாயிகள்,வியாபாரிகள் கூட்டமைப்பால் நிச்சயம் இதை சாதிக்கமுடியும்.
:அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் ஒரு இலக்கை நோக்கி கொண்டு செல்லும் வகையில் ஒருங்கிணைக்கப்படவில்லை.கம்பம் வட்டாரத்தில் நடக்கும் போராட்டத்தை தவிர தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மலையாளிகளின் நிறுவனங்களுக்கு  எதிராக நடத்தப்படும் தாக்குதல்களும்,போராட்டங்களும் எவ்வகையிலும் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவாது.அதற்கு மாறாக மலையாள இனவெறியை மேலும் வளர்ப்பதற்குத்தான் இந்த போராட்டங்கள் பயன்படும்.கம்பம் வட்டார மக்களின் போராட்டத்தின் வழியில் கேரளத்தோடு உள்ள 13 வழிகளிலும் பொருளாதார முற்றுகை போராட்டம் நடபெறும் வகையில் தமிழக போராட்ட சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

நண்பர் தமிழ்மலர் அவர்கள் பொருளாதார முற்றுகையினால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பில்லை என்று மலையாள இனவெறியுடன் எமது கட்டுரைக்கு பின்னூட்டம் அனுப்பியுள்ளார்.அதோடு இந்த பிரச்சனைக்கு தீர்வாக கம்பம் மற்றும் இடுக்கி மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்களின் ஆலோசனையையும் எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்த தீர்வு பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில் பிரச்சனையை திசைதிருப்புவதற்கு மட்டுமே பயன்படும்.ஏனென்றால்,முல்லை பெரியாறு அணை பலவீனம் அடைந்துவிட்டதாக கேரளாதான் முற்றிலும் உண்மைக்கு புறம்பான பொய்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.கேரளத்தின் இந்த கூற்று அப்பட்டமான பொய் என்பதை தமிழகம் நிரூபித்துள்ளது.இதில் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறோம்.

முல்லைபெரியாறு அணையின் கொள்ளளவை விட இடுக்கி அணையின் நீர் கொள்ளளவு 7 மடங்கு அதிகமாகும்.அதே போன்று இடுக்கி அணையின் நீர் வெளியேற்றும் திறனும் வினாடிக்கு 60 லட்சம் கன அடியாகும்.இதனால் முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் இடுக்கி அணையில் தேக்கி வைக்கவோ அல்லது வெளியேற்றிடவோ முடியும்.முல்லைபெரியாறு அணை உடைந்து முழு தண்ணீரும் வெளியேறினாலும் அதனால் மக்கள் வாழும் பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பையும் அது ஏற்படுத்தாது.ஏனென்றால்,முல்லைபெரியாறு அணையில் இருந்து மேற்கு பகுதியில் மக்கள் குடியிருப்புகள் இருந்தாலும்,அவைகள் முல்லைபெரியாறு அணையை விட உயரமான பகுதிகளாகும்.எனவே,முல்லைபெரியாற்றில் 100 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றாலும்,மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.இதனால் பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்துள்ளவர்கள் மட்டுமே.
எனவே,முல்லைபெரியாறு அணையின் கீழ் மட்டத்தில் இருந்து 34 அடி ஆழ்த்தில் இருந்து சுரங்கப்பாதைகள் வழியே தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லலாம் என்று இவர்கள் கூறி இருக்கிறார்கள்.இவர்கள் இருவரும் விவசாயிகளின் நிலையில் இருந்து இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.ஆனால்,முல்லை பெரியாறு அணைப்பற்றிய பிரச்சனையின் காரணகர்த்தாக்களான கேரள ஆட்சியாளர்கள்,அரசியல் கட்சிகளின் நோக்கம் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதுதான்!இவர்களின் இந்த நோக்கத்தை பற்றி நாங்கள் எமது முந்தைய கட்டுரைகளில் தெளிவாக நிரூபித்துள்ளோம்.

எனவே,இந்த தீர்வை முதலில் நண்பர் தமிழ்மலர் அவர்கள் கேரள ஆட்சியாளர்கள்,அரசியல் கட்சிகளிடம் கூறி ஏற்கவைக்கட்டும்.அதன் பின்னர்,தமிழகத்தில் இத்தீர்வை முன்வைக்கலாம்.

*தேவையற்றவன்,தேவையுள்ளவன் அதை பெறுவதற்கு உரிமையுள்ளவன் என்பதை மறுக்கும் அடாவடித்தனத்தை கைவிட தயாராக வேண்டும்!

*தமது உரிமையை பெறுவதற்கு உரிமையுள்ளவன் எப்போதும் தயாராகவே இருக்கிறான்,இருப்பான்! நன்றி.  

தொடர்புடைய பதிவுகள்:



2.முல்லை பெரியாறு:தற்கொலைக்கு முயலும் கேரளா!



Sunday, 11 December 2011

கூடங்குளம்:திரு.உதயகுமாருடன் நேர்காணல்.இடிந்தக்கரையில் இருந்து.

கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்களின் போராட்டத்தை மத்திய ஆட்சியாளர்கள்,வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலில் நடப்பதாகவும்,மக்கள் பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என்றும் கொச்சை படுத்திவருகின்றனர்.இதோடு கூடங்குளம் அணு உலையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் புளுகிவருகின்றனர்.

இந்தச் சூழலில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய உயர்திரு உதயக்குமார் அவர்கள் சூறாவளிக்கு அளித்த நேர்காணலை
கீழே தருகிறோம்!



1. கூடங்குளத்தில் அணு உலை அமைக்கம் திட்டத்தை எந்த ஆண்டில் இருந்து எதிர்த்து வருகிறீர்கள்?என்ன,என்ன வடிவங்களில் எதிர்த்து போராடி வருகின்றீர்கள்?

1997-98 காலகட்டத்தில் இருந்து இந்த கூடங்குளத்திற்கு எதிரான ஒரு லிப்ட் சர்வ் வச்சிருந்த நான், கம்யுனிசம் வாட்ச் அன் கவர்னர் மானிட்டர் அப்படிங்கர ஒரு லிப்ட் சர்வ் அதுல கூடங்குளம் சம்பந்தமான செய்திகளை தொகுத்து ஒரு செய்தி மடல் மாதிரி தொகுத்து போட்டு கொண்டு இருந்தேன் அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன்.இத்திட்டம் தொடங்கப்பட்ட 1988-89 காலக்கட்டதிலேயே இதற்கு எதிராக நாகர்கோவிலில் பல முயற்சிகள் செய்து இருக்கிறோம்.பிறகு சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகு,கோர்ப்பசோவ் பதவி இழந்த பிறகும்,ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பிறகும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அதற்கு பிறகு 1997-98 காலகட்டத்தில் இதற்கு எதிரான லிப்ட் சர்வில் செய்திகளை தொகுத்து போட்டுகொண்டு இருந்தேன்..பிறகு 2001-ல் திரும்பவும் நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த பிறகு 2001 நவம்பர் மாதம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை மதுரையில்       தொடங்கினோம். இதில் இருந்து தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.

2.அணு உலையால் மீன்வளம் எந்தளவிற்கு பாதிக்கப்படும்?

மீன் வளம் எந்தளவுக்கு பாதிக்கிறது என்றால் அணு உலையின் மையப்பகுதியை கோர் என்று சொல்லுவார்கள்,அதை குளிர்விப்பதற்கு கடலில் இருந்து தண்ணீர் எடுப்பார்கள்.அந்த தண்ணீர் அணு உலையை சுற்றிவரும் போது சூடாகிவிடும்.பின்பு கடலில்  கொட்டுவார்கள்அப்படி கொட்டும் போது,அணு சக்தி துறை என்ன சொல்லுகிறது என்றால் தண்ணீர் 7 டிகிரி தான் சூடாகும் என்கிறது.கல்பாக்கத்தில் 12 டிகிரி தண்ணீர், சூடாகிறது.இந்த தண்ணீரை தொடர்ந்து 24 மணி நேரமும்,வாரத்தில் 7 நாட்களும்,வருடத்தில் 365 நாட்களும் முழுவதும் கடலில் கொட்டும் போது நிச்சயம் அது கடலில் மாற்றத்தை உண்டுபண்ணும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு இருக்கும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு அளவு குறைவாக இருக்கிறது என்று சொன்னாலும் சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் கொஞ்சம், கொஞ்சமாக சிறுக,சிறுக 60 ஆண்டுகளில் இதன் கதிர்வீச்சும் அதிகமாகிவிடும்.இந்த சூடான ,கதிர்வீச்சு கலந்த  தண்ணீர் 60 ஆண்டுகள் கடலில் விடுவதால் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.கதிர்வீச்சால் கடலுக்கு ஆபத்தில்லை என்று சொல்லுவது பொய்.

அதே மாதிரி உப்பகத்தி ஆலை(Desalltation paln) 4 இடத்தில் வைத்துள்ளார்கள்,இதில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும் வெளிவரும்.இது 4 ஆலைகளில் இருந்தா அல்லது ஒரு ஆலையில் இருந்தா என்பது தெரியவில்லை.இப்படி ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும்,கழிவுகளும் உற்பத்தி செய்து இதையும் கொண்டு போய் கடலில் கொட்டினால்,இவைகள் கடலில் உப்பும்,அமிலத்தன்மையும் நிச்சயம் அதிகரிக்கும்.இதனால் இப்பகுதியில் உள்ள மீன் பிடி கிராமங்கள் மீன் பிடி தொழில் நிச்சயம் பாதிக்கப்படும்.அதாவது மீன் வளம் குறையும்,அப்படியே மீன் கிடைத்தாலும் நோய்வாய் பட்டு இருக்கும்.கல்பாக்கத்தில் உள்ள மீனவர்கள் சொல்கிறார்கள், எங்கள் பகுதியில் மின்வளம் குறைந்துவிட்டது பல வகையான மின்கள் கிடைப்பதில்லை”, என்று கூறுகிறார்கள்.அங்கு கல்விரால் மீன்கள் தான் கிடைக்கிறது,இதை மக்கள் விரும்பி சாப்பிடுவதில்லை,அப்படியே கிடைத்தாலும் அது நோய்வாய் பட்டு கிடைக்கிறது என்கிறார்கள்.ஆகையால் இந்த கூடங்குளம் அணு உலை செயல்பட ஆரம்பித்தால் இப்பகுதியில் உள்ள தூத்துக்குடி,கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்ட மீன்பிடி தொழில் நிச்சயம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

3.அணு உலையால் விவசாயத் தொழிலில் என்ன,என்ன பாதிப்பு ஏற்படும்?

இதே மாதிரி தான்.கடலில் எப்படி இந்த கழிவுகளை கொண்டு போய் விடுகிறார்களோ,அதே மாதிரி தான்.அதாவது புகை போக்கிகளில் இருந்துதொடர்ச்சியாக தினசரி வெளியேற்றுதல்என்ற முறையில் சாதாரணமாகவே கழிவுகள் வெளிவரும்.அதில் அயோடின்,சிசியம்,ஸ்ராந்தியம்,டெலோரியம் இந்த மாதிரியான கதிர்வீச்சு தன்மை கொண்ட தனிமங்கள் காற்றில் கரைந்து,மிதந்து கொண்டே இருக்கும்,அன்று காற்று எந்தப்பக்கம் வீசுகிறதோ அந்த பக்கம் போய் இந்த கதிர்வீச்சு கணிமம் மண்ணில் போய் விழும்.கொஞ்சம் தப்பி வானத்துக்கு போகும்,அப்படி போவது கூட மேகங்களில் அமர்ந்திருந்து விட்டு மழை தண்ணீர் மூலம் மண்ணை அடைகிறது.இது போல தொடர்ந்து 60 ஆண்டுகள் நடைபெறும் போது மண்ணும் கதிர்வீச்சு தன்மையுள்ள மண்ணாகும்.இந்த மண்ணில் விளையும் பயிர்களும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.பசு மாட்டின் பால் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.நாம் சாப்பிடும் காய்கறிகள்,பழங்கள் என அனைத்து உணவு பொருட்களும் இப்படி விஷமாகி போகும்.இதனால் நிச்சயம் விவசாயம் பாதிக்கப்படும்.

4.அணு சக்தி சுற்றுச் சூழலை எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

சுற்றுச்சூழல் என்று பார்க்கும் போது மேலே கூறியது போல், காற்று நாசமாகி போகிறது.காற்றில் கதிர்வீச்சு பொருள் மிதந்து வருகிறது.கடல் நாசமாகிப்போகிறது.நிலம் பாழாகிறது.நிலத்தடி நீர் பாழாகிறது.இப்படி ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாழாகிப் போகும்.

5.சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

இப்படி பாதிப்புக்கு உள்ளாகும் போது,இது 60 ஆண்டுகளுக்கு நம்  மண்ணும்,தண்ணீரும்,காற்றும்  தொடர்ந்து கதிர்வீச்சால் பாதிக்கும்.இதனால் நமது உணவு சங்கிலி(food chain) ஆன உணவிற்குள்ளும் கதிர்வீச்சு போகும்.இதனால் நாம் உண்ணும் உணவு,காற்று,குடிக்கின்ற தண்ணீர் அனைத்தும் விஷமாகும்.இதனால் நிச்சயமாக பலவித நோய்கள் உருவாகும்.பலவிதமான நோய் என்று பார்க்கும் போது கதிர்வீச்சு நோய்(Radiational ill) முக்கியமானது.கதிர்வீச்சு என்று பார்க்கும் போது அது எல்லோர் உடலும் ஏற்றுக்கொள்ளாது.

அது வந்தால் எல்லோருக்கும் காய்ச்சல்,தலைவலி,வயிற்றுப்போக்கு வரும்.கதிர்வீச்சு அதிகமாகும் போது தோல் கருத்து புண்ணாகிப்போகும்.உடல் அளவில் பலமாக இருப்பவர்கள் நாளடைவில் கதிர்வீச்சின் தாக்கத்தால் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி புற்று நோய் ஏற்படும்.இவர்களின் குழந்தைகள் புற்றுநோய்,மனவளர்ச்சி குறைபாடு,உடல் உறுப்புகள் குறைபாடு உடையவர்களாக பிறப்பார்கள்.

உதாரணமாக கைகால் குட்டையாக,விரல்கள் குட்டையாக அல்லது குறைவாக இருக்கும்.ரத்த புற்று நோய்,ஒருக்கண்ணோடு பிறக்கும்.இப்படி ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வாழ்வில் அமைதி,நல்வாழ்வு அனைத்தும் பாதிக்கப்படும்.

6.அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழலை மீண்டும் சரி செய்ய முடியுமா?

செய்யலாம்,ஆனால் அது மிகவும் சிரமமானப் பணியாகும்.செர்னோபில் விபத்து நடந்து பக்கத்து நாடுகளான பெலுரு,லாட்வியா,எஸ்டோனியா போன்ற நாடுகளில் எல்லாம் கதிர்வீச்சு கழிவுகளின் படிவம் படிந்து, அந்த நாடுகளின் மண்வளம் பாழாகிவிட்டது.அதற்கு பல லட்சம் டாலர் செலவு செய்து அம்மண்ணை சுத்தம் செய்து, கதிர்வீச்சு இல்லாத உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இப்போது ஜப்பானிலுள்ள புகுஷிமாவில் விபத்து நடந்து 9 மாதங்கள் ஆகப்போகிறது.அங்கு புவியின் மேலடுக்கு மண் நீக்கப்பட்டு கதிர்வீச்சு இல்லாத மண்ணாக்க முயற்சி செய்கிறார்கள்.ஆனால் இதற்கு மிகப்பெரிய பொருட் செலவு பிடிக்கும்.நம்மை போன்ற ஏழை நாடுகள் இது போன்ற தேவையற்ற செலவு செய்ய முடியாது.அப்படியே செய்தாலும் அது 100 சதவீதம் சுத்தமானதும் அல்ல.

7.மக்களை இந்த போராட்டத்தில் இவ்வளவு உணர்வு பூர்வமாக பங்கேற்க வைக்க 
எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாண்டீர்கள்?

2001-ல் இருந்து கிட்டதட்ட ஒவ்வொரு மாதமும் கடலோர கிராமங்களுக்கு சென்று இளைஞர் அமைப்புகள்,பெண்கள் அமைப்புகள்,மீனவ சங்கங்கள்,விவசாய அமைப்புகளில் இந்த அணுமின்நிலையம் வந்தால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதைப்பற்றி பேசினோம்.அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன,அணுக்கரு பிளவு,சேர்ப்பு என்றால் என்ன,புற்றுநோய் இப்படி பல அடிப்படை தகவல்களை மக்களிடம் கொடுத்துள்ளோம்.இதை தொடர்பணியாக 11 ஆண்டுகள் செய்தோம்.இதன் மூலம் மக்களுக்கு அடிப்படை தகவல்கள் சென்று சேர்ந்தது.இவ்வாறு நடந்துகொண்டு இருக்கும் போதே புகுஷிமா அணு உலை விபத்து நடந்தது.இதனால் நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்று மக்கள் தெரிந்து கொண்டனர்.ஆகையால் நாங்கள் சொன்னது அனைத்தும் வெறும் சவடால் அல்ல என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்.மேலும் நாங்கள் வேறு ஆதாயத்துக்கோ,தேர்தலில் நின்று ஓட்டுவாங்குவதற்கோஅல்ல, என்று இதன் அடிப்படையில்தான் மக்கள் இந்த போராட்டத்தில் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வது வேறெந்த ஆதாயங்களுக்கும் அல்ல.தமது சொந்த வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக்கொள்வதர்குத்தான்.

8.இந்தப் போராட்டத்தில் மீனவ மக்கள் மட்டும் பங்கேற்கிறார்களா?விவசாயிகளும் பங்கேற்கிறார்களா?

மீனவ மக்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.இதற்கு காரணம் மீனவ மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை கொண்டவர்கள்.அவர்களுக்குத்தான் தெரியும்,இயற்கை கெட்டுப்போனால் தமது வாழ்வும் எதிர்காலமும் போய்விடும் என்று.அதனால்தான் அவர்கள் போராட்டத்தில் பெருமளவுன் பங்கேற்கிறார்கள்.

அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் இந்த போராட்டத்தை ஆரம்பத்தில் தவறாக நினைத்தார்கள்.பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.இது மீனவர்களின் பிரச்சனை என்று எண்ணினார்கள்.குறிப்பாக,தலித்,முஸ்லிம் கிராமங்களுக்கு போனால் அவர்கள் தமது பிரச்சனையில்லை என கருதினர்.

புகுஷிமா அணு உலை விபத்திற்கு பிறகுதான் நமது,விவசாயமும் இதன் மூலம் தமது வாழ்வும் பாதிக்கப்படும் என்று உணர்ந்துகொண்டனர்.தாம் உற்பத்தி செய்யும் விலைபொருட்கள்,விலை போகாது அப்படியே போனாலும்,போதிய விலைகிடைக்காது,என்பதையும் உணர்ந்தனர்.

ஆனால் அணுசக்திதுறை 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை தருவோம்.பேச்சுப்பறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவருவோம்,இதனால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என்று பொய் சொன்னார்கள்.இது பொய் என்று மக்கள் உணர்ந்த பிறகு அணுசக்திக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவு கலந்துகொண்டார்கள்.

9.அணு உலை இயற்கை சீற்றத்தினால் மட்டும் பாதிப்பு ஏற்படுமா?மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படுமா?

மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படும்.செர்னேபில் அணு உலை விபத்து முழுக்க மனிதத் தவறுகளால் நடந்தது.

இந்திய உள்ள அணு உலைகளிலும் பல சிறு,சிறு விபத்துகள் மனிதத்தவறுகளால் நடந்துள்ளது.பெரும்பாலான விபத்துகள் மனிதத்தவறுகளால்தான் நடக்கிறது.
இந்தியாவில் அணு உலைகளில் இருந்து வெளியேறும் கன நீரை குடிநீரில் கலக்கவிட்டு,அதனால் என்ன,என்ன வியாதிகள் ஏற்படுகிறது,என்ன சோதனையும் நடந்துள்ளது.இந்தியாவில் மனிதத் தவறுகள் தெரியாமல் மட்டுமல்ல,தெரிந்தே திட்டமிட்டும் நடந்துள்ளது.

10.அணு உலையில் இயல்பாகவே விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதா?

மனித தவறுகள்,இயற்கை சீற்றம் ஆகியவற்றோடு இயல்பாகவே விபத்துக்கள் நடக்கலாம் என்று இப்போது கூடங்குளத்தில் உள்ள விஞ்ஞானிகளும்,அதிகாரிகளும் சொல்கிறார்கள்.இப்போதே பல குழாய்கள் துருபிடித்துவிட்டது.ரஷ்யாவில் இருந்து கொண்டுவரப்படும் உதிரிப்பாகங்கள் தரமற்றவைகளாக உள்ளன.இதனாலும் விபத்துக்கள் ஏற்படும்.மேலும்,இப்போதைய சோதனையின் போதே மனித கால் அளவு தடிமனான ஒயர்கள் எரிந்துவிட்டன என்று சொல்கிறார்கள்.இப்படி பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.நன்றி!
                                      
                             -சூறாவளிக்காக இடிந்தகரையில் இருந்து, முகிலன்.

குறிப்பு:நேர்காணலின் ஒலி வடிவையும் கீழே இணைத்துள்ளோம்.



தொடர்புடைய கட்டுரைகள்:


1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!