விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label கல்வித்துறை. Show all posts
Showing posts with label கல்வித்துறை. Show all posts

Monday, 21 April 2014

தமிழ்வழிக் கல்வியும் மகஇக‍வுக்கு பிழைப்புக்கான சாதனமே!

முலாயம் சிங் யாதவ் …. இவர் சமஜ்வாடி கட்சியின் தலைவர்.உத்திரபிரதேச முன்னால் முதல்வர்,இந்நாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை.அண்மையில் இவர் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது “ பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது இளைஞர்களின் இயல்பு .இதற்காக அவர்களுக்கு மரணதண்டனை விதிப்பது தவறு”, என்று பேசியுள்ளார்!

இப்படி அவர் பேசியது இந்தியா முழுக்க உள்ள ஜனநாயக உணர்வு படைத்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முலாயம் சிங்கின் கருத்து ஆணாதிக்க நிலையிலிருந்து சொல்லப்பட்டதாக விமர்சித்தனர். இப்படி விமர்சித்தவர்களில் உண்மையிலேயே ஜனநாயக உணர்வு படைத்தவர்கள் மட்டுமல்ல போலிகளும் அடங்குவர். ஒட்டுமொத்தத்தில் இப்போலிகள் முலாயம் சிங்கின் சிந்தானா முறையில் இருந்து வேறுபட்டவர்கள் இல்லை.இவர்களுக்கிடையே இப்படிப்பட்ட ஜனநாயக விரோத கருத்துகளை வெளிப்படுத்தும் வடிவங்களில்தான் வேறுபாடு உள்ளது.

இப்போதுமட்டுமல்ல எப்போதுமே முலாயம் சிங் அனைத்து வகையான பிற்போக்குத்தனங்களின் பிரதிநிதி என்றாலும் அவர் இதை இப்போது , இவ்வளவு வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும், அவசியமும் என்ன வந்தது என்பதை புரிந்து கொண்டால்தான் முலாயமின் கருத்தை விமர்சித்தவர்களில் போலிகள் மற்றும் உணமையான ஜனநாயக உணர்வுள்ளோரின் நோக்கத்தை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்திய நாடாளுமன்றத்துக்கான 16- வது தேர்தல் நடைபெறும் போது இப்படியான அப்பட்டமான ஜனநாயக விரோத கருத்தை ஒருவர் வெளிப்படையாக கூறமுடிகிறது என்றால், இந்த நாடு எப்படிப்பட்ட ஜனநாயக அடிப்படையை கொண்டது என்பதை வெளிப்படுத்துவதற்கான சிறந்த சான்றாகும்.உண்மையில் முலாயமின் கருத்து தேர்தலில் வெற்றி  பெறுவதை நோக்கமாக கொண்டது.இப்படியான கருத்துகள் தமக்கு தோல்வியை தந்துவிடும் என்று அவர் கருதியிருந்தால் ஒருபோதும் அப்படி பேசியிருக்க மாட்டார்.முற்போக்கை பேசுகிறோமா, இல்லை பிற்போக்கை பேசுகிறோமா என்பது முக்கியமில்லை. எதை பேசினாலும் வெற்றி என்பதே தேர்தலின் இலக்காகும். அந்த வகையில் ஆணாதிக்க கருத்துடையவர்களின் அதிலும் ஹார்மோன் செயல்பாட்டின் ஆதிக்கத்தில் உள்ள இளைஞர்களின் வாக்குகளை கவர்வதே அவரின் தந்திரம்.இந்த வகையில் அவர், தான் பிற்போக்குவாதி என்பதை சிறிதும் மறைக்கவில்லை. முழுப்பொய்யை விட, அரை உண்மை ஆபத்தானது என்பதை போன்று வெளிப்படையான பிற்போக்குத்தனத்தை விட, போலித்தனம் மிகப்பெரிய ஆபத்தானதாகும். இவையிரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

இந்தியாவில் எப்போதும் பிற்போக்குத் தனத்தை விட, போலியான முற்போக்குத்தனந்தான் மிகப்பெரிய அபாயமாக உள்ளது. இந்தப் போலித்தனம் இந்திய சமூகத்தின்  சாரமாக விளங்குகிறது. எங்கும், எதிலும் நிறைந்து காணப்படுகிறது. அதுவன்றி இங்கு ஒர் அணுவும் அசைவதில்லை.

கடந்த 11.04.2014 அன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் ஆலிசிச்குடி என்ற கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை நேரில் பார்த்த அனைவரும் அரசுப்பள்ளியில் அதிலும் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படியும் திறமைகள் உண்டா என்று வியக்கும் அளவுக்கு, அதிலும் அம்மாணவர்களின் பெற்றோர்கள் கூட தன்னுடைய பிள்ளைகளிடமா இப்படிபட்ட திறமை இருக்கிறது என்று வியக்கும் அளவுக்கு அந்த ஆண்டு விழா அமைந்திருந்தது.
பன்னிரண்டு நடன நிகழ்ச்சிகள், அரசுப்பள்ளியா, தனியார் பள்ளியா என்ற பட்டிமன்றம், பாட்டுக் கச்சேரி , தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நாடகங்கள் ஆகியவற்றை மாணவர்கள் நிகழ்த்தினர்.

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் திறமை,பொருப்புணர்ச்சி மட்டுமே போதுமானதல்ல பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தும் மறுபக்கம் என்ற குறும்படம் ஒன்றையும் இப்பள்ளியின் ஆசிரியர்களே தயாரித்து திரையிட்டும் காட்டியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இப்பள்ளி மாணவர்களிடையே உள்ள திறமையை இப்படிபட்ட கலைநிகழ்ச்சிகளின் மூலமாக மட்டுமல்ல கல்வித்தரத்திலும் வெளிக்கொணர்ந்துள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.உண்மையில் இப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தானா என வியக்கும் அளவுக்கு அவர்களின் ஆற்றல் அமைந்துள்ளது.

தனது குழந்தையை தனியார் ஆங்கிலப்பள்ளியில்தான் சேர்ப்போம் என்று பிடிவாதம் பிடித்தவர்களை மட்டுமல்ல தமது பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்திருந்த பெற்றோர்கள் மனதையும் இந்த ஆண்டு விழா மாற்றிவிட்டது. தமது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்போம் என்று அறிவிக்கவும் செய்துள்ளது.

எத்துனை கருத்தரங்குகள் விவாதங்கள் நடத்தினாலும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை ஒரு ஆண்டுவிழா செய்துகாட்டிவிட்டது. இந்த அதிசயிக்க தக்க மாற்றத்திற்கான பெருமை அனைத்தும் இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களையே சாரும்.இதற்காக அவர்களுக்கு நமது மன்மார்ந்த நன்றியை காணிக்கையாக்குவோம்.

ஆனால் இந்த ஆண்டுவிழாவில் அரசுப்பள்ளிகள் பற்றி தாங்கள் வெளிக்கொணர்ந்த கருத்துக்கள் எதுவும் தாங்களுக்கு பொருந்தாது என்றுதான் இப்பள்ளி ஆசிரியர்களின் நடைமுறையாகும். ஏனெனில் இந்த ஆசிரியர்கள் எவரும் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கவில்லை.மாறாக தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கின்றனர்.

அடுத்து மகஇக குழுமத்தின் ஒரு நிறுவனமான வினவு இணையதளம் கடந்த 11.04.2014 அன்று  அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் விருதையில் பிரச்சாரம் என்ற தலைப்பில் இதே கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்ட கிராமங்களில் தமது குழும அமைப்புகள் செய்த பிரச்சாரம் சம்பந்தமாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.



 

அதில் தமது குழுமத்தின் மனித உரிமை பாதுகாப்பு மையம்.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்கு உட்பட்ட தொட்டிக்குப்பம்,பெரிய வடவாடி,சத்தியவாடி, சாத்துக்கூடல்,செம்பளக்குறிச்சி, கோமங்கலம் ஆகிய கிராமங்களில் அரசு ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் அக்கிராம மக்களிடையே அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டங்களில் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.வீரபாண்டியன் என்பவர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அரசுப்பள்ளிகளில் , தமிழ்வழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திய மகஇக குழும அமைப்புகளின் செயலை பலரும் பாராட்டுவார்கள்.இப்படி பாராட்டுவதற்கு முன்பு இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

“அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணார்வு கூட்டங்களில் கலந்துகொண்ட மகஇக குழும அமைப்பின் உறுப்பினர்களான செந்தாமரை கந்தன்,வேலுமணி,வீரகாந்தி அதிலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருவாளர் வழக்கறிஞர் ராஜீ இவர்களின் அனைவரின் வீட்டுப்பிள்ளைகளும் ஆங்கில வழியில், தனியார் பள்ளிகளில்தான் தமது வாரிசுகளை படிக்க வைக்கின்றனர்.தமது பிள்ளைச் செல்வங்களின் கல்வி உரிமைக்காகத்தான் இப்பிரட்சியாளர்கள் பெற்றோர்கள் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். இச்சங்கத்தின் மூலம் போராட்டம் நடத்தி தமது வாரிசுகளுக்கு கட்டணச் சலுகை வெற்றெடுத்துக் கொண்ட சாதனை புரிந்துள்ளனர்.

இப்புரட்சியாளர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர் என்ற உண்மையை சென்ற ஆண்டும் நாங்கள் அம்பலப்படுத்தியிள்ளோம்.ஆனால் அதைப்பற்றி அவர்கள் ஒரு சிறிதும் அதாவது அவர்களின் மனசாட்சி கூட அவர்களை உறுத்தவில்லை.எந்த கூச்சமும் இன்றி இந்தக் கழிசடைகள் இந்த ஆண்டும் அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் என்று பிரச்சாரம் செய்ய கிளம்பி விட்டனர்.

பாலியல் பலாத்காரம் பெரிய குற்றமல்ல என்று பேசிய முலாயமின் நோக்கம் அரசியல் ஆதாயமடைவது , அதாவது அரசியல் அவரின் பிழைப்புக்கான சாதனம்.இதைப் போன்றுதான் புரட்சி , முற்போக்கு, சமூக சேவை ஆகியவை மகஇக குழுமத்தின்  பிழைப்புக்கான சாதனங்கள்.இதனால்தான் இவர்களின் மனசாட்சி கூட இவர்களை  உறுத்துவதில்லை. அப்படியென்று ஒன்று இருந்தால் தானே உறுத்துவதற்கு!

இந்த வகை பிழைப்புவாதத்தில் இந்தியாவிலேயே இந்தக்குழுமம்தான் முதலிடத்தில் திகழ்கிறது.அதிலும் தென்னிந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கே உரிய வடிவத்தில்.

அதாவது வட இந்தியாவில் பார்ப்பனியம் முரட்டுத்தனமானது தென்னிந்திய அதிலும் தமிழக பார்ப்பனிய வடிவமோ நாசுக்கான,நயவஞ்சகமானது, அதைப்போன்றதுதான் மகஇக குழுமத்தின் பிழைப்புவாதமும்.


இதுமட்டுமா,ஒருவனுக்கு ஒருத்தி, அண்ணன், தங்கை உறவு முறைகள் ஆகியவை நிலபிரபுத்து பிற்போக்குத் தனமாம்.அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடான இந்தியாவில் அவற்றை புரட்சியின் மூலம் இல்லாது ஒழிப்பதை இலக்காக கொண்டுள்ளார்களாம். இவர்கள்! இதனால் மேற்கண்ட நிலப்பிரபுத்துவ பண்பாட்டையும் ஒழிப்பதையும் இலக்காக கொண்டவர்களாம்.
அந்த வகையில்தான் சகோதர முறை திருமணம் செய்து கொண்டவர்களையும் பாலியல்  ரீதியாக சீரழிந்தவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு மாறாக அதன்மீது பெருமைப்பட வைத்து , அதைத் தொடர ஊக்கம் தருவதன் மூலம் அவர்களை தமது ஆதரவாளர்களாக அணிதிரட்டியும் வருகிறார்கள். இப்போலிகள். உலகில் இப்படிபட்ட புரட்சியாளர்களை வேறெங்காவது காண முடியுமா?

இதன் மூலம் தமது பிழைப்புவாதத்திற்கு இவர்கள் எதையும் செய்வார்கள். அந்தவகையில்தான் அரசுப்பள்ளிகளில் உங்களின் பிள்ளைகளை சேருங்கள் என்ற இவர்களின் பிரச்சாரத்தையும் மேற்கொள்கின்றார்கள்.

இப்போது சொல்லுங்கள் மகஇக குழும அமைப்புகளின் கல்வி விழிப்புணர்வு! பிரச்சாரத்தை பாராட்டலாமா என்பதை?! இவர்களுக்கும் முலாயம் சிங் போன்றவர்களுக்கும் இடையே சாராம்சத்தில் என்ன வேறுபாடு உள்ளது என்பதை!
இந்தக் கட்டுரையில் நாங்கள் குறிப்பிட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தாம் சொல்வதை தமது குடும்பத்தில் நடைமுறை படுத்தவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளோம். ஆனால் மகஇக குழும உறுப்பினர்களின் செயலை விமர்சித்த அளவுக்கு ஆசிரியர்களின் செயலை விமர்சிக்கவில்லை என்று நீங்கள் கருதலாம்.

அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் என்ற தமது பிரச்சாரத்திற்கு ஏற்ப அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நடந்து கொள்ளாவிட்டாலும், தாம் பணியாற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தையும் ,கலைத்திறமைகளையும் வளார்த்தெடுத்து, சாதித்துக் காட்டியுள்ளனர். அரசுப்பள்ளியில் , தாய்மொழியில் கல்வி அளிப்பதன் மூலம் குழந்தைகளின் புரிதலை உயர்த்தி,பகுத்தறிவாளிகளாக பிறப்பிள்ளைகளை உயர்த்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தமது பிள்ளைகளுக்கு அதை அளிக்க முன்வருவதில்லை.

இதற்கான காரணம், பிள்ளைகள் பகுத்தறிவற்றவர்களாக, ரோபாக்களாக இருந்தால்தான் எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறமுடியும்.தனியார் நிறுவனங்களுக்கு தேவை மனிதர்கள் இல்லை. மனித உருவில் நடமாடும் ரோபாக்கள்தான். இதனால்தான் தெரிந்தே தமது பிள்ளைகளை அவர்கள் மூடர்களாக வளர்த்தெடுக்கின்றனர்.
இப்படிபட்ட ஆசிரியர்கள்,பெற்றோர்கள் தனியார்மய அநீதியை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையோ,வழிமுறைகளோ ஏதும் இல்லாதவர்கள். சமூகத்திற்கு பின்னே வால்பிடிப்பவர்கள்.

ஆனால் மகஇக குழுமத்தினரோ தனியார்மயம்,தாராளமயம்,உலகமய கொள்கைகளுக்கு தாங்கள் எதிரானவர்கள்,இவைகளை ஒழிப்பதற்கான வழிமுறைகளை உலகிலேயே நாங்கள் மட்டுமே வைத்துள்ளோம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். இதை இந்த கல்வி விழிப்புணர்வு கூட்டங்களிலும் பேசியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் பிள்ளைகளை படிக்க வைப்பதால் ஏற்படும் கேடுகளை அறிந்தவர்கள் இவர்கள்.அவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் அறிந்தவர்கள் தாங்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்,ஆங்கிலவழியில் படிக்க வைப்பதுதான் பெருங்குற்றம்.

ஏனென்றால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழியில் படிக்க வைக்கும் செயலுக்கான அடிப்படை கையாலாகாத்தனமே காரணமாகும்.

ஆனால் மகஇக குழுமத்தினர் தமது பிள்ளைகளை இப்படிசெயவதற்கான காரணம் புரட்சி, முற்போக்கு ,சமூக சேவை ஆகியவற்றை தமது பிழைப்பிற்கான சாதனமாக ஆதாரமாக கொண்டிருப்பதுதான்.

சமூக மாற்றம் என்ற உன்னதமான மனிதகுல செயல்பாட்டையே தமது பிழைப்புக்கான ஆதாரமாக கொண்டிருப்பதால்தான் அதாவது சாரம்சத்தில் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயத்தை பாதுகாப்பவர்கள் என்ற வகையில்தான் இவர்களை நாங்கள் முதலாளித்துவ குழும அமைப்புகளில் ஒன்றாக  மக இக குழுமம் என்று வரையறுத்துள்ளோம்.

சமூக வளர்ச்சிக்கும் ,மாற்றத்திற்கும் , முன்னேற்றத்திற்கும் பெரும் தடைகற்களாக திகழும் மகஇக குழுமத்தை போன்ற போலிகளை களையெடுக்காமல் இவைகளை சாதிப்பது ஒருபோதும் சாத்தியமில்லை. 

தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      



 







10.தவளை தன் வாயால் கெடும் ...!                           




Wednesday, 29 August 2012

ஆசிரியர் தகுதித் தேர்வுமுடிவு: இந்திய சமூகத் தரத்தின் வெளிப்பாடு!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த சூலை-12ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் மொத்தம் 6,76,763 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த 6,74,000 பேருக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி மறுத் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

எதிர்கால சமூதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் இந்த பரிதாபகரமான நிலையைக்  கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படிப்பட்டவர்கள் ஆசிரியர்களானால் நமது இளைய சமுதாயம் என்ன ஆகும்? என்று வினா எழுப்புகிறவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில்  தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர்களாக ஆகப்போகிறவர்கள் மட்டுமல்ல. இப்போதே இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள்தான்.



இவர்கள் தான் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள்  என்றால் அப்பள்ளகளில் பயிலும் மாணவர்களின் தரம் எப்படிப்பட்டதாக இருக்கும்? தமது தகுதியையே நிரூபிக்க முடியாதவர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும்?

அரசுப்பள்ளி ஆசிரியர்களை விட பல மணிநேரம்  கூடுதலாக தனியார் பள்ளிகளில் பணிபுரிகிறார்கள் இவர்கள். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் போதே  தமது கல்வி போதிக்கும் திறனையும், தமது அறிவாற்றலையும் இவர்கள் உயர்த்திக்  கொள்ள முடியும, உயர்த்திக் கொள்ளவும் வேண்டும்.

ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதைத்தான், இந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் நமக்கு உணர்த்துகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் இவர்கள் எவ்வித  நுட்பத்தையும் கையாளவில்லை என்பதும், இதற்கு மாறாக மனப்பாடம் என்ற வடிவத்தை மட்டுமே வழிவழியாக கையாளுகிறார்கள என்பதும் தெரிகிறது. தாம் கற்பிக்கும் பாடத்தை முழுமையாக, உள்ளார்ந்து புரிந்து கொண்டு, அப்படி புரிந்து கொண்டதை ஒவ்வொரு மாணவர்களின் இயல்புக்கும், தனித்தன்மைக்கும் ஏற்ப போதிப்பதுதான் ஆசிரியர்களின் அடிப்படையான பணியாகும். ஆனால் இவர்களிடம் அதற்கான அறிகுறி எதுவுமே இல்லை என்பதைத்தான் தேர்வு முடிவுகள் வெளிப்படுத்துகிறது.

ஆசிரியர் பணிக்கான இந்த அடிப்படை பண்பு இவர்களிடம் உருவாகாததற்கு, இவர்கள் உருவாக்கப்பட்ட விதம் தான் அடிப்படையாகும்.

தற்போது தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளவர்கள், தனியார் பள்ளிகளில் கல்வி கற்று, தனியார் ஆசிரியர் நிறுவனங்களில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள். இப்படிப்பட்டவர்களை  கொண்டு நடத்தப்படும் தனியார் பள்ளிகள் தான் தரமானவை என்று நாட்டு மக்களிடம் போதிக்கப்பட்டு, அவர்களும் அதை  எவ்வித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் நம்புவதோடு அதையே உயர்வானதாகவும் கருதுகின்றனர்.

இவர்களின்  இந்த கண்ணோட்டமே அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை இழிவாக பார்க்கவும் வைக்கிறது.  அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பதை தரக்குறைவாக கருதும் இவர்கள்தான், அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக வேலைபார்ப்பதையே தமது இலக்காக வைத்துள்ளனர். தற்போது நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 24,343 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வே ஆகும்.

அரசுப்பள்ளிகளில்  கல்வி கற்க விரும்பாதவர்கள் அதில் பணியாற்றுவதையே வாழ்க்கையின் இல்லக்காக கொள்கின்றனர். தனியாரிடம் கொட்டிக் கொடுத்தப் பணத்தை அரசிடம்  திருப்பி எடுக்க முயற்சிக்கிறார்கள்.

தனியாரிடம் தாம் பெற்ற திறமை இன்மையை, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வெகுமதியாக தர விரும்புகிறார்கள்.

தம்மிடம் உள்ள பணத்தைக் கொண்டு தம்மை முட்டாள்களாக்கிக் கொண்டவர்கள், அதே பணத்தைக் கொண்டு அரசு பணியிடங்களை விலைக்கு வாங்கி, பணமில்லாத ஏழைப் பிள்ளைகளையும் முட்டாள்களாக்க துடிக்கிறார்கள். தம்மைப் போன்றே அனைவரையும் இருக்குமாறு இவர்கள் தமது செல்வாக்கின் மூலம் நிர்ப்பந்திக்கிறார்கள். இதே போல் உயர்கல்வி என்று வந்து விட்டாலும், குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு அரசுக்கல்லூரிகளில் உள்ள இடங்களை இவர்கள்தான் முதலில் ஆக்கரமித்துக் கொள்கிறார்கள். இப்படி நேர்மையற்ற வகையில் நடந்து கொள்வதுதான்  இந்திய சமூகத்தின் இயல்பாகும்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சமூகத்தை இழிநிலையில் வைத்திருப்பதும்  இந்த இழிந்த பண்புதான்.

படிநிலையாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள சாதிகள்,  தமக்கு மேலே உள்ள சாதி தம்மை அழுத்துவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. அதற்கு மாறாக தம்மால் அழுத்தப்படும், தமக்கு கீழே உள்ள சாதியை இழிவுப்படுத்திப் பார்த்து  ஆனந்தமடைகிறது.

தமக்கு மேலே உள்ள அழுத்தத்தை விரும்பி ஏற்றுக் கொண்டு, தமக்கு கீழே உள்ளவர்களை தமது  அழுத்தத்தை  அவர்கள் விரும்பாவிட்டாலும் ஏற்குமாறு நிற்பந்திக்கிறது.

தமக்கு மேலே உள்ளவர்களிடம் உள்ள இழிவை, தமக்கு கீழே உள்ளவர்களுக்கு கடத்தும் ஊடகமாக தம்மை மேல் சாதி என்று கருதிக்கொள்ளும்  ஒவ்வொரு சாதியும் செயல்படுகிறது.

மேற்கண்ட பண்புதான் இந்திய சமூகத்தின் இயல்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்கிறது. இதுதான் இச்சமூகத்தின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் வெளிப்படுகிறது.

மொத்தத்தில் நேர்மை இன்மையே இந்திய சமூகத்தின் இயல்பான பண்பாக திகழ்ந்தது, திகழ்கிறது,திகழவும் அனுமதிக்க போகிறோமா?