விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Monday, 13 October 2014

ஜெயாவுக்கான தண்டனை ஊழலுக்கு அல்ல; ஆணவத்திற்கு….

செப்- 27 கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாராவில் ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்கா அளித்த தீர்ப்பு இந்தியா முழுக்கவே பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதுவரை இந்திய வரலாற்றில் பொருப்பில் இருந்த முதல்வர் ஒருவர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றிருப்பது இதுவே முதல்முறை. அதிலும் இந்திய மாநிலங்களிலேயே வேறு எவரும் கற்பனையிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத வல்லமை மிக்கவர் என்று அவரும், அவரின் கட்சியினராலும் கருதப்படுபட்டவருக்கு நான்கு ஆண்டுகால சிறை தண்டனை!

ஜெய சர்வ வல்லமை மிக்கவர் என கருதிக்கொண்டதில் ஏதேனும் பொருள் உண்டா இல்லையா என்பதை செப்-27-க்கு பின்னர் தமிழகத்தில் ஜெயாவின் அமைச்சரவை சகாக்களும், அவரின் கட்சியினரும் வெளிப்படுத்திய உணர்வுகளிலிருந்தே நாம் கணிக்க முடியும்.

ஜெயாவை சகல வல்லமை மிக்க கட்சித்தலைவராக, முதல்வராக மட்டுமல்ல, அவரின் சகாக்கள் அவரை சகல வல்லமை மிக்க கடவுளாகவும் சித்தரித்ததை தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அவரின் கட்சியினர் செய்துக் காட்டிய செயல்களில் இருந்தே நாம் உணர்ந்து கொள்ள முடிந்தது.இந்த உணர்விலேயே 1990- களுக்கு பின்னர் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்த ஜெயாவுக்கும், அவரது சகாக்களுக்கும் இந்தத் தீர்ப்பு நம்பமுடியாததாக, தமது கால் நூற்றாண்டு கால இனியக் கனவு கலைந்து போன அதிர்வலைகள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டதில்,வெளிப்படுவதில் வியப்பேதும் இல்லை.










ஜெயாவின் இந்தப் பெரும்கனவுக்கும், இதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் அவரின் கட்சிகாரர்களுக்கு மட்டுமே பங்கிருப்பதாக நாம் கருதிவிடமுடியாது,கூடாது. அவரை சகல வல்லமை மிக்க தலைவராக மட்டுமல்ல கடவுளாகவும் உசுப்பேற்றி விட்டதில், அவருக்கு வாக்களித்த தமிழக பெருங்குடி மக்களுக்குத்தான் மிகமுக்கிய பங்கிருக்கிறது.
அவர் திரைப்பட நடிகையாக இருந்து, அதன்மூலம் எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்தவராக ,கட்சியின் பொதுச்செயலாளராக, அவரின் வாரிசாக 1991-ல் ஆட்சிக்கட்டிலை பிடித்த போதே, அவரை தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்த போதே தமிழ்ச்சமூகம் தனது தரத்தை வெளிப்படுத்திக் கொண்டது.

சமூக அக்கறையோ,அரசியல் ஈடுபாடோ இவைகளில் எவ்வித அனுபவமோ அற்ற ஒருவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவர் அதிலும் ஆசைநாயகி என்கிற சமூகத்தால் இழிவாக சித்தரிக்கப்படும் நிலையில் இருந்த ஒருவரை தமிழக முதல்வராக இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்த தமிழ்ச் சமூகத்தின் செயல்பாடுதான், அவர் தன்னை சகல சக்திமிக்கவராக, நிலவுகிற சமூகத்தின் சட்டம்,அரசு இயந்திரம்,நீதிமன்றம்,பாராளுமன்றம்,சட்டமன்றம் இன்னபிற ….. இவை எதுவுமே தன்னைவிட உயர்ந்தது அல்ல.இவைகள் அனைத்தும் தனக்கு கீழ்பட்டவையே . இந்த அமைப்புகள் எதுவும் தன்னை எதுவும் செய்துவிடமுடியாது என்ற ஆணவமே அவறை மிக அப்பட்டமான தவறுகளை கூட எவ்வித ஒளிவும்,மறைவும் இன்றி அனைத்தையும் மிக வெளிப்படையாக செய்ய வைத்தது.

ஜெயாவின் கட்சியினர் மட்டுமல்ல , அரசு அதிகாரிகள் கூட அவர் நினைத்த போதெல்லாம் பந்தாடப்பட்டனர்.அவரின் அபிமானத்தை, நம்பிக்கையை பெறுவதற்கான விசுவாசத்தின் அளவுகோல் என்னவென்று தெரியாமல் அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும் நித்தம்,நித்தம் ஆடித்தான் போயினர்.அந்த அளவுகோலை இலக்கண சுத்தமாக அறிந்த சிந்தாந்தவாதி இந்தியாவில் சோ மட்டுமே என்றால், அதன் வடிவ அடையாளம் தற்போதைய முதல்வர் மட்டுமே.
ஜெயாவிற்கு சட்டவிரோதமாக வந்த பணத்தை சட்டபூர்வமாக்கும் செயல் படாத பங்குதாரர்களாக 1990- களில் சசிகலா,இளவரசி,சுதாகரன் என்றால் இப்போதைய செயல்படும் பங்குதாரர் OPS.இந்த உண்மையும் ஒரு காலத்தில் வெளிச்சத்திற்கு வரும்……..

தானே சகலத்திலும் வல்லமை மிக்கவர் என்ற ஜெயாவின் ஆணவமே அவரின் தவறுகளுக்கான மூலமாகவும்,தண்டனைக்கான காரணியாகவும் அமைந்துவிட்டது.இந்த உண்மை பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பிலேயே உள்ளடங்கியிருப்பதை நாம் தெளிவாக காண முடியும்.
1.ஜெயா முதல்வராக 1991- ல் பதவியேற்ற போது அவரின் சொத்துமதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 965 –க இருந்தது.

அதுவே 1996- ல் பதவி காலத்தின் முடிவில் அவரது சொத்து மதிப்பு ரூ.53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 – ஆக உயர்ந்துவிட்டிருந்தது.

2.இந்த சொத்துமதிப்பு உயர்வுக்கான வருமானம் தனக்கு சரியான வழியில்தான் வந்தது என்பதை ஜெயாவால் நீதிமன்றத்தில் எந்த நிலையிலும் நிரூபிக்கவே இயலவில்லை.மாறாக அவைகள் தவறான வழியில்தான் வந்தது என்பதற்கான ஆதாரங்களை மிகத்தெளிவாக எவ்வித குழப்பமோ ,ஒளிவு மறைவோ இன்றி வெளிப்படையாக வைத்திருந்தார்.அந்த அளவிற்கு ஆணவம் அவரின் கண்களை மறைத்திருந்தது.

3.அதே போன்று தனது வீட்டில் வைத்திருந்த 27.588 கிலோ தங்க நகையில் வருவாய்க்கு பொருந்தாத வகையில் 20 கிலோ தங்கத்திற்கு அவரால் கணக்கேதும் காட்ட இயலவில்லை.

இப்படி அவரின் ஒளிவு, மறைவற்ற மிகவும் துணிச்சலான தவறுகளின் பட்டியலை அடிக்கிக் கொண்டே போகலாம்,
சட்டத்திற்குட்பட்ட,சமூக நியதிகளுக்கு உட்பட்டவராக தன்னை ஜெயா கருதியிருந்தால் 1 ஏக்கர் விளைநிலத்தை 10 ஆயிரம் ரூபாய்க்கும் , 900 ஏக்கர் தேயிலை தோட்டத்தை வெறுமனே ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கும் வாங்கியதாக சட்டபூர்வமாகவே பதிவு செய்திருப்பாரா?

எனவேதான் அவர் தனது ஆணவத்திற்கு கொடுத்த விலைதான் ஊழல் வழக்கில் அவர் அடைந்த இந்த சிறை தண்டனை.

ஆனால் அவரின் கட்சிக்காரர்களோ இன்னமும் அவரை உசுப்பேற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே மொட்டையடித்து, தேங்காய் உடைத்து………………………..

அல்லாகு அக்பர்- அல்லாவே அனைத்திலும் பெரியவர் என்ற திருக்குரானின் புனித வாசகத்தை அவரின் கட்சியில் உள்ள சில கழிசடைகள் சிறைவளாகத்தில் ஓதுகின்றன. அதாவது ஜெயாவே அல்லாவிலும் பெரியவர் என்று……….
கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக தாங்களே தமிழகத்தின் ஆட்சியாளர்கள் என்பதை மறந்து சட்டத்திற்கு விரோதமாக அவர்கள் ஆடியக்கூத்துக்களை நாம் அனைவரும் அறிந்ததுதான்.

ஜெயா சகாக்களின் இந்த ஆட்டங்களும் ,கூத்துக்களும் எதிர்பாரா நிகழ்வுகள் அல்ல.பொய்வழக்கு, வேறு யாரும் ஊழல் செய்யவில்லையா,கருணாநிதி குடும்பம் ஊழல் செய்யவில்லையா போன்றக் கேள்விகள் அவர்கள் கேட்காமல் இருந்திருந்தால் மட்டுமே நாம் அதிசயப்பட வேண்டும்.

ஆனால் பிரச்சனையே தம்மை முற்போக்குகள் , புரட்சியாளர்கள் என்றுக் கருதிக் கொள்வோர் ஜெயா மீதான தீர்ப்பு பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் ஊதிப்பெருக்கி காட்டுவதுதான்!

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கின் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை ஒரு வக்கீல் குமாஸ்தாவோ (அ) முதலாமாண்டு சட்டகல்லூரி மாணவரோ படித்தால் கூட மிக எளிமையாக இவ்வழக்கில் தீர்ப்பு சொல்லிவிட முடியும்.பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டாலும் மிகச்சாதாரண வழக்கு இது என்பதை ஒரு பாமரன் கூட சொல்லிவிட முடியும்.ஆனால் இவர்களோ இந்த தீர்ப்புக்கு பின்னால் பெரும் பூகம்பங்கள் ஒளிந்திருப்பதாக சரடு விடுகின்றனர்.தமது பங்குக்கு இவர்களும் ஜெயாவை அசகாய சூரராக ஊதிப்பெருக்கிக் காட்டி ஆனந்த மடைகின்றனர்..
அரசியல் பழிவாங்கல்,கார்ப்பரேட்டுகளின் சதி,காங்கிரசின் சதி,கருணாநிதியின் சதி,பாஜக விடம் மோதியதின் எதிர் விளைவு ……………….  போன்ற வெளிப்படுத்தல்களின் மூலம் இவர்கள் தம்முடைய மேதாவித்தனத்தை காட்டுவதாக கருதிக்கொள்கினறார்கள்.

எது எப்படியோ இவ்வளவு கலேபரத்திலும் இவர்கள் ஜெயாவும், அவரை சார்ந்தோரும் அனைவரும் தம்மையே அறிந்தும்,அறியாமலும் ஒரு உண்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
இந்தியாவில் அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு அங்கமும் நிர்வாக எய்ட்ஸ் நோயான லஞ்சம்-ஊழலால் பாதிப்பிற்குள்ளாகிவிட்டதைப் போன்றே நீதித்துறையும் ஆகிவிட்டுள்ளது.

ஆயிரமாயிரம் தமது குற்றவழக்குகளில் நீதித்துறையை விலைக்கு வாங்கியதை போன்றே இந்த வழக்கிலும் அதை விலைக்கு வாங்கிவிடலாம்,மிரட்டி பணிய வைத்துவிடலாம் என்ற அவர்களின் கணக்குத்தான் தவறாகிப் போனது.இதுதான் இவர்களை ஆத்திரம் கொள்ள வைக்கிறது.

நீதிபதி குன்கா வளைந்து கொடுக்காத நேர்மையாளராக கூட இருக்கலாம்,இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.ஆனால் ஒட்டுமொத்த நீதித்துறை என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கும்போது சாராயம் காய்ச்ச அனுமதி தந்துவிட்டு அதற்கு மாமுலும் வாங்கும் போலிசு,சில நேரங்களில் கள்ளச்சாராய கும்பலை பிடித்ததாக கூறி பரப்பரப்பாக ஊடகங்களுக்கு செய்தி தரும் நடவடிக்கைக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு!.

                 

Wednesday, 27 February 2013

ஊழல், முறைகேடு - இந்திய சமூகத்தின் பாரம்பரியம்!

வான் உலங்கு ஊர்தி – எலிகாப்டர்- வாங்குவதில் மீண்டும் ஓர் ஊழல் அம்பலமாகி இருக்கிறது. இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அடங்கிய மிக முக்கிய அரசுத்தலைவர்களின் பயன்பாட்டிற்காக இத்தாலி நிறுவனத்திடமிருந்து வான் உலங்கு ஊர்தி வாங்க செய்து கொண்ட ஒப்பந்தத்தில்தான் இது நடைபெற்றுள்ளது. இத்தாலியின் ஃ பின் மெக்கனிகா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் – மிருந்து 12 வான் உலங்கு ஊர்தியை பெற கடந்த 2010-ம் ஆண்டு ரூ 3600 கோடிக்கு இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத் தொகையில் 10 சதவீதம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக தரப்பட்டுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது. இப்படி லஞ்சம் தந்த இத்தாலி நிறுவனத்தின் தலைவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. இதன் பின்னர் தான் இந்தச் செய்தி இந்திய மக்களுக்கு தெரியவந்துள்ளது.
தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தையில் நிலவும் கடுமையான போட்டியை சமாளித்து வெற்றி பெறுவதற்கு கமிஷன் – லஞ்சம் – கொடுப்பது என்பது முதலாளித்துவ நிறுவனங்களின் வழமையான நடவடிக்கையாகும். அதிலும் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கூடுதலான லஞ்சம் கொடுத்து ஒப்பந்தத்தை பெறுகின்றன.
தரமான பொருட்களை வாங்குவதன் மூலம் குறைவான லஞ்சம் கிடைக்கிறது என்பதால்தான் தரம் குறைந்த பொருட்களை வாங்கி கூடுதலான ஆதாயம் அடைகின்றனர் இந்திய அதிகார வர்க்கத்தினர்.
இந்திய அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் தான் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்கள் தரமானதா, இல்லையா என்பதைவிட கூடுதல் லஞ்சம் கிடைக்குமா, இல்லையா என்பதிலிருந்து தான் ஒப்பந்தம் செய்து கொள்வதில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பவர்கள்.
உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குபவர்களுக்கு கமிஷன் என்றப்பெயரால் லஞ்சம் கொடுப்பது என்பது அவைகளின் இயல்பான நடவடிக்கையாகும். இது கமிஷன் என்றப்பெயரில் சட்டப்படியே அங்கீரிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
இப்படி இருக்கும் போது இத்தாலி நிறுவனத்தின் தலைவர் லஞ்சம் கொடுத்தார் என்று எதற்காக கைது செய்யப்பட வேண்டும்? என்ற நியாயமான கேள்வி எழவே செய்கிறது.
இப்படி வழங்கப்படும் கமிஷன் தொகை நிறுவனத்தின் இடைத்தரகர்களாக செயல்படுவர்களுக்கே வழங்கப்படும். பொருளை கொள்முதல் செய்பவர்களுக்கு நேரிடையாக தரப்படுவதில்லை. இப்படி வழங்கப்படும் கமிஷன் தொகை அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேல் செல்கிற போதுதான் அது லஞ்சமாக கருதப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் இப்படி கூடுதலாக கமிஷன் – லஞ்சம் – வழங்கப்படுவது தனியார் நிறுவனங்களில், அதன் உரிமையாளரின் ஒப்புதலின் பேரிலேயே வழங்கப்படுவதால் அவைகள் வெளியே வருவதில்லை. இப்படிப்பட்ட நிகழ்வுகள் பொருளைப் பெற ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகளின் அரசியல் ரீதியான காரணங்களினாலேதான் பெரும்பாலும் வெளிவருகின்றன.
ஆனால் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனமோ இத்தாலி அரசு நிறுவானமாகும். இதனால் ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் இத்தாலி அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாட்டு நடவடிக்கைகளின் கண்காணிப்பிற்கும் உள்ளாகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவுடனான ஒப்பந்த விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு வெளியே வந்துள்ளது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு மேல் கமிஷன் தொகை கைமாறியதுதான் குற்றமாக வெளியே வந்துள்ளது.
பாவம், இத்தாலி நிறுவனத்தின் தலைவருக்கு விவரம் புரியவில்லைபோலும்! தனக்கு புரியாத ஒன்றைப்பற்றி அவர் இந்திய அதிகாரிகளிடம் கேட்டிருந்தால், அவர்கள் மிகவும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியிருப்பார்கள். அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு குறைவாக கமிஷன் தந்ததாக ஆவணங்களில் பதிவு செய்து தனது நாட்டு அரசிடமிருந்து அவர் பாராட்டையும் பெற்றிருக்கலாம்!
இத்தாலியில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தரப்பட்டுள்ள கூடுதல் தொகை லஞ்சம் என கூறப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால் இந்நிகழ்வு இந்தியாவில் எப்படிப்பட்ட விளைவுகளை, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது? அதிலும் மக்கள் மத்தியில் என்றால் அப்படி எதுவும் இல்லை என்றுதான் கூறவேண்டும், இதை பல பத்திரிக்கைகளும் வெளிப்படுத்தியுள்ளன.
மக்களின் உணர்வே மரத்துப் போய் விட்டதாக அங்கலாய்க்கின்றனர். இப்படி ஊடகங்கள் வெளிப்படுத்தும் உணர்வும், உணர்ச்சியும் கூட உயிரோட்டமானதா என்றால் இல்லவே, இல்லை என்பது மக்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.
ஊடகங்கள் தமது தொழில் காரணமாகவே இவைகளை வெளிப்படுத்துவதும், அங்கலாய்ப்பதும் நடக்கிறதே தவிர உண்மையான உணர்வின் வெளிப்பாட்டால் அல்ல. லஞ்சம், ஊழல், முறைகேடு ஆகியவற்றின் ஒரு அங்கம்தான் ஊடகங்களும்! இவைகளை கட்டித் தழுவிக் கொள்ளாமல் ஒரு கணம் கூட இவைகளால் உயிர் வாழமுடியாது!
இந்திய ஊடகங்களின் அன்றாட செயல்பாடுகள் மட்டுமல்ல, அதன் உரிமையாளர்களின் இன்றைய இருப்பே முறைகேடுகளின் ஊடாக அடைந்தவைகளே ஆகும். இந்திய நிறுவனங்களின் இருப்பு மட்டுமல்ல, இந்திய மக்கள் ஆகபெரும்பான்மையினரின் இருப்பும் முறைகேடுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல. இதில் சமூகத்தின் மேல் நிலையில் இருப்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே அளவு ரீதியான வேறுபாடு உள்ளதே தவிர, பண்பு ரீதியான வேறுவாடு ஏதுமில்லை.
இந்தியசமூகம் ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான அதிர்வலைகள் எழுவதற்கான உள்ளடக்கத்தை வாழ்வியல் முறையாக கொண்டதல்ல. மாறாக அதில் தனது பங்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஏக்கத்தை எப்போதுமே கொண்டதே ஆகும். இந்த நிலைப்பாட்டிலிருந்துதான் அரசு அதிகாரிகளுக்கு இடையிலும், அரசுகளுக்கு இடையிலும், அரசியல் கட்சிகளுக்கு இடையிலும், மக்கள் ஒவ்வொருவருக்கு இடையிலும் முறைகேடுகள் பற்றிய சிந்தனாமுறை எழுகிறது. இதன் காரணமாகத்தான் ஊழல், முறைகேடுகள் இந்திய சமூகத்தில் பெருத்த அதிர்வலைகளை உருவாக்குவதில்லை.
இதில் ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட அதிர்வலைகளும் தற்போது நிறுவனமயமாக்கப்பட்டு விட்டது. சமூகம் முழுமைக்கும் இது பொதுமையாக்கப்பட்டு விட்டது. நமக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்போம் என்பதுதான் அந்தப் பொதுமையாகும். இந்த பொதுமையான உணர்வும் அதன் அடிப்படையிலான செயல்பாட்டு வடிவமும் இந்திய சமூகத்தில் எப்படி நிலை நாட்டப்பட்டது? அதற்கான கூறுகளும், வாய்ப்புகளும் இச்சமூகத்திற்கு எங்கிருந்து எப்படி கிடைத்தன போன்ற ஐயங்களுக்கான விடையை இனி பார்ப்போம்!
இன்றைய இந்திய சமூகத்தின் மேல்நிலையில் முதலாளிகள், நிலச்சுவான்தார்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் – உள்ளிட்டவர்களாயினும், நடுத்தர பிரிவினர் ஆயினும், ஏன் தொழிலாளிகள், தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள், வரை ஆகப்பெரும்பான்மையினர் இந்த விநாடி வரை சிந்தனையால் மட்டுமல்ல, நடைமுறையிலும் மேல் சாதிகளாக வாழ்பவர்கள்தான்.
இந்த மேல்சாதி என்ற தகுதி இவர்கள் தமது தகுதி, திறமையின் ஊடாக பெற்றவையா? இல்லை. இது பிறப்பின் அடிப்படையில் கிடைப்பதாகும். இது இந்தியாவில் மனிதர்கள் உருவான காலத்திலிருந்தே நிலவிக் கொண்டிருக்கும் ஓர் பண்பாடா என்றால் நிச்சயம் இல்லை! இந்திய சமூகத்தில் சாதியும் அதன் அடிப்படையான வேறுபாடுகளும் இல்லாத காலமும் ஒன்று இருக்கவே செய்தது. கடந்த இரண்டாயிரத்திலிருந்து, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகத்தான் சாதியும், சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் இச்சமூகத்தில் வேரூன்றி உள்ளது.
ஆரிய வருகை, பூர்வகுடி மக்களுடனான போராட்டம், அதில் அவர்களின் வெற்றி, இனக்கலப்பு, வெற்றியாளர்களின் மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், இதை எதிர்த்த பூர்வகுடி மக்களின் போராட்டம், இதில் பெரும்பான்மையினர் காட்டிக்கொடுத்தல், இதற்கு கைமாறாக அடைந்த வாழ்வுதான் நாம் மேலே அவதானித்த ஆகப்பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை.
பூர்வகுடி மக்களில் பெரும்பான்மையானர் தனது சமூகத்தின் ஒரு பகுதியினரை பகுதி, பகுதியாக, சிறுக, சிறுக வெற்றியாளனுக்கு காட்டிக்கொடுத்து அடைந்த வாழ்வாதாரம் தான், இன்றுவரை எப்படிப்பட்ட வரலாற்றுச் சூழலிலும் நீடித்து, நிலைப்பெற்று ஏற்ற இறக்கங்களுடன் நிலவி வருகிறது. வாழ்க்கைக்கான அடிப்படையாகவே இவைகள்தான் திகழ்வதால்தான் ஒற்றுமைக்கான கூறுகள் இச்சமூகத்தில் மிகவும் அரிதான ஒன்றாக ஆகிவிட்டுள்ளது.
முதலாளித்துவ கூறுகள் குறைவாக இருந்த காலத்தில் ஒவ்வொரு சாதிக்குள்ளேயான ஒற்றுமைக் கூறுகள் ஒப்பீட்டளவில் மேலானதாக இருந்தது. சாதிகளுக்கிடையில் மேல், கீழ் அடிப்படையில் ஓர் தொடர்பையும், இயக்கத்தையும் கொண்டிருந்தது.
ஆனால் இன்றோ ஒற்றுமைக்கான கூறுகள் அனைத்து மட்டங்களிலும் ஏறத்தாழ அறுந்தே போயுள்ளது. இப்போது சாதிகளிலேயே கடைநிலை தீண்டத்தகாத சாதிகளுக்கு எதிராக மட்டுமே ஒற்றுமைக்கான கூறுகளை மட்டுமே இச்சமூகம் கொண்டுள்ளது. இதுவும் கூட சிந்தனா ரீதியான ஒற்றுமையே வலிமையானதாகும். இதுதான் நடைமுறை ரீதியாக, ஒதுக்குதல் என்பதைவிட ஒதுங்கிக்கொள்ளல் என்பதை வலுவாக கடைபிடிக்க வைக்கிறது. இது சில நேரங்களில் மட்டுமே நேரடி நடவடிக்கையாக மாறுகிறது.
மேல் சாதிகள் என்று தம்மை நம்பக்கூடிய இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையினோரை ஒருங்கிணைக்கும் ஒரே ஒரு கூறு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சிந்தனையும், செயல்படுகளுமே ஆகும்.
இவர்களுக்கிடையில் பிற அனைத்து அம்சங்களிலும் ஒற்றுமைக்கான கூறுகள் இல்லவே, இல்லை. ஒற்றுமையின்மைக்கான கூறுகள் மட்டுமே மேலும், மேலோங்கி வருகிறது. மேலும் இது எந்த அளவிற்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவிற்கு அதன் வெளிப்பாடுகள் குழுச்செயல்பாடுகளாக சமூகத்தின் அனைத்து அங்கங்களிலும் பிரதிபலிக்கிறது.
முதலாளித்துவ நுகர்வு பண்பாடு எந்த அளவிற்கு சமூகத்தில் பெருக்கெடுக்கிறதோ அந்த அளவிற்கு ஒற்றுமை இன்மைக்கான கூறுகள் இங்கு வீரியமடைகின்றன.
இவைகள் இன்று சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்துவிட்டுள்ளது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக நிலைநிறுத்ப்பட்டுள்ளது.
முறைகேடுகள் இச்சமூகத்தின் பிரிக்க வியலாத, ஓர் அங்கமாக அன்றாட, இயல்பான நிகழ்வாக மாறிப்போனதற்கான அடிப்படையே, இச்சமூகத்தின் வாழ்வியல் முறையாகவே காட்டிக்கொடுத்தல் என்பதை கொண்டிருப்பதால்தான். லஞ்சம், ஊழல், முறைகேடுகளும் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல்தான் என்பதை உணரும் போதுதான் மேலே கண்ட உண்மையையும் புரிந்து கொள்ளமுடியும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தனது மூதாயர்களின் காட்டிக் கொடுத்தல், அதன் அடிப்படையிலான வாழ்வியல் ஆகியவற்றை இச்சமூகம் குற்றமாக, இழிவாக கருதாத வரை, இச்சமூகத்தில் போபோர்ஸ், பேர்பாக்ஸ், 2G, வான் உலங்கு ஊர்தி முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்தும் அன்றாட நிகழ்வுகளாகவே நீடிப்பதை எவராலும் தடுத்து விடமுடியாது!

Wednesday, 28 December 2011

லோக்பால்,அன்னா அசாரே:நாய் வாலை நிமித்த முடியுமா?

தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான,உணர்ச்சி பூர்வ நிகழ்வு என்றால் அது முல்லை பெரியாறு! இந்திய அளவில் பரபரப்பான செய்தியாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி லோக்பால் மசோதா! அன்னா ஹசாரே என்ற கிழடை வைத்து பார்ப்பன கும்பல் நடத்தும் மாயாஜால வித்தைதான் லோக்பால் விவகாரம்.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் ,சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கும் களங்கத்தையும் ஏற்படுத்தும் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு லோக்பால் மசோதாவே ஒரே வழியென்று பார்ப்பன ஊடகங்கள் ஒருமித்தக்குரலில் எழுதுகின்றன.

சமூக ஆர்வலர் என்று அன்னாவுக்கு பட்டமும் அளித்து கவுரவிக்கின்றனர்.இந்த கிழட்டு நரிக்கு இப்போது வயது என்பது.இத்துணை ஆண்டு காலம் வராத ஞானோதயம் இப்போதுதான் வந்துள்ளது.

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1990- களிலிருந்து நடந்துவரும் போராட்டத்தை மறைத்துவிட்டு,இத்தனை ஆண்டுகளாக போராடமால்,இப்போது அணு உலையை எதிர்த்து போராடும் போராட்டக்குழுவின் நோக்கம் என்ன? என்று கேட்கும் பார்ப்பன கும்பல்,இதே கேள்வியை அன்ன ஹசாரேவை கேட்காமல் அவருக்கு மலர் மகுடம் சூட்டுகிறார்கள்.

இந்தியாவில் ஊழல் வரலாறு நேருகாலத்திலிருந்து துவங்கிவிட்டது.மூக்கிருக்கும் வரை சளியிருக்கும் என்பதைப்போன்று அன்று தொடங்கிய ஊழல் இன்று 2G,3G என ஆலமரமாய் வளர்ந்து சமூகமெங்கும் வேர் பரப்பிவிட்டது.அது இல்லாத இடம் என்று எங்குமில்லை.ஊழல் இன்று ஒவ்வொரு இந்தியன் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.லஞ்சமும்,ஊழலும்!



கிராமத்தில் உள்ளூராட்சி அமைப்பிலிருந்து,டெல்லி செங்கோட்டை வரை அது இல்லாத இடமேயில்லை.அரசுத்துறையானாலும்,தனியார் துறையானாலும் அவற்றில் எது இருக்கிறதோ,இல்லையோ நிச்சயம் அது இருக்கிறது!

லோக்பால் மசோதா பற்றியும், அதை நிறைவேற்றுவதைப்பற்றியும் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர்,சிபிஐ,டி பிரிவு ஊழியர்கள் வரை சேர்க்கவேண்டும் என்று காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது.

ஆனால்,நாட்டின் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம்,ஊழலில் ஈடுபடுவர்களிடம் அதன் சுவடுகூட தென்படவில்லை.வழக்கம் போல அவர்களின் பணியை செவ்வனே செய்துவருகின்றார்கள்.
தமிழகத்தில் TNPSC முன்னால்,இன்னால் அதிகாரிகளின் வீடுகளில், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் தீவிர சோதனை நடத்துகிறார்கள் என்ற செய்தி நாளேடுகளிலும்,தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது.அதே நேரத்தில் சத்துணவு,அங்கன்வாடி பணியாளர்கள் 28 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு பணியிடத்திற்கு ஒன்றைரை லட்ச ரூபாய் விலை போகிறது.ஒரு ஆசிரியர் பணியிடம் 5 லட்சம் வரை …..இங்கு எங்கேயும் லோக்பாலின் எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதோடு மட்டுமா, தமிழக அரசின் இலவசத்திட்டங்கள் கூட இதில் இருந்து தப்பிக்கவில்லை.

1.இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற ரூபாய் 2 ஆயிரம்.

2.பசுமை குடில் பெறுவதற்கு ரூபாய் 25 ஆயிரம்.

3.சாதி மாற்றி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் அதன் விலை ரூபாய் ஐந்து ஆயிரம்.                   

4.குடும்ப அட்டை ரூபாய் 5 ஆயிரம்,அட்டை வீடு தேடி வரும்.

5.அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சீட்டுவாங்க ஐந்து ரூபாய்.சீட்டே இல்லாமல்  பத்து ரூபாய் கொடுத்தால் இரண்டு ஊசி.

இவை எல்லாமே அன்றாடம் மிக இயல்பாக நடக்கிறது.இப்படி செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்,நான் லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு வந்தேன்.எவனாவது எனக்கு இலவசமாகவா வேலை கொடுத்தான்!

எந்த வேலையும் இலவசமாக கிடைப்பதுமில்லை!,லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருவோர்.அதை திருப்பி செய்வதற்கு கூச்சப்படுவதுமில்லை!.நூறு சதவீத வேலைகளும் லஞ்சம் பெற்றுதான் தரப்படுகிறது.எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் யாராவது ஒருவர் நேர்மையாக நடந்துகொண்டால், அவர் தனது வேலையை விரைவிலேயே இழந்துவிடுவார்.
ஊழலை தடுப்பதற்கு என்று எத்தனையோ துறைகளும், நூற்றுக்கணக்கான சட்டங்களும் உள்ளன.ஆனால் இந்த சட்டங்கள் அனைத்தும் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருகின்றவர்கள் மூலம்தான்  நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

லோக்பால் சட்டம் வந்தாலும்,அந்த சட்டமும் மனிதர்களால்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.எப்படிப்பட்ட சிறந்த சட்டமாக இருந்தாலும் அதை மனிதர்கள் தான் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தான் அதன் நோக்கம் நிறைவேறுவதில்லை.அதனால் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை பணி அமர்த்தலாம் என்றாலும், அந்த ரோபோக்களுக்கும் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பவர்களும் மனிதர்கள்தான்.சரி மிருகங்களை அமர்த்தலாம் என்றால் அவைகளை பழக்குபவர்களும் மனிதர்கள்தான்.

எனவே சட்டங்கள் ஆயிரங்கள் இருந்தாலும்.அவற்றை நடைமுறைப்படுத்துவது இந்த சமூக அமைப்பில் சாத்தியமில்லை.

இந்த எளிய உண்மை ஹசாரேவுக்கும்,பார்ப்பன ஊடகங்களுக்கும் தெரியாதா என்ன? தெரியும்!பிறகு எதற்காக உயிரற்ற சட்டத்திற்காக இவ்வளவு வரிந்துக்கட்டி கொண்டு நிற்கிறார்கள்?



இதற்கான பதிலும் மிகவும் எளிமையானதுதான்.நிலவுகிற இந்த சமூக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்  போக்கு மிக வேகமாகி வருகிறது.இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கிறது.

இந்த சமூக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையின்மைதான் ’வால் தெரு’ போராட்டமாக உலகெங்கிலும் வெடித்திருக்கிறது.இதில் இருந்து மக்களின் கவனத்தை முடிந்தவரை திசை திருப்புவதுதான் இவர்களின் நோக்கம்.இதை போய் யார் நம்புவார்கள் என்கிறீர்களா? இந்த திசை திருப்பும் நாடகங்கள் உலகின் வேறு பகுதிகளில் எடுபடுகிறதோ, இல்லையோ இந்தியாவில் அது நிச்சயம் நடக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஒரு சாதிக்காரன் ஏற்றுக்கொண்டால்,அதை இன்னொரு சாதிக்காரன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.ஒரு மாநிலம் சரி என்றால் இன்னொரு மாநிலம் முடியாது எனக் கூறும்.ஒரு மதம் ஒப்புக்கொண்டால் இன்னொரு மதம் ஒப்புக்கொள்ளாது.இவர்கள் இவற்றில் ஏதோ ஒன்றை துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.பிறகென்ன! அவர்கள் நினைப்பது நடக்காமலா போய்விடும்!

சரி இதற்கு என்ன தான் வழி! லஞ்சம் ஊழலை எப்படித்தான் ஒழிப்பது! அது முடியாதா என்றால் அதற்கான பதில் இதுதான்.

நிலவுகிற இந்த சமூக அமைப்பின் அடிப்படை போட்டி உற்பத்தி. பொருள் உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகள் சந்தையை கைப்பற்றுவதற்கும் அதை தக்கவைத்து கொள்வதற்கும்,தமது அரசியல் பிரதிநிதியான அரசியல் கடசிகளுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் கோடி,கோடியாய் கொட்டிகொடுக்கிறார்கள்.இவ்விரு பிரிவினரையும் வைத்துக்கொண்டு,தமக்கு வேண்டியதை சாதித்துகொள்கிறார்கள்.உலகில் உள்ள  ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு பிரிவு முதலாளிகளின் நலனை பாதுகாக்க செயல்படுபவைதான்.

இதுதான் ஊழலுக்கான ஆணி வேர்.அரசியல் கட்சிகளின் தலைமை, அரசு எந்திரத்தின் உயர்மட்டம் ஆகியோரின் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் கீழ்மட்டங்களும் அதே வழியை பின்பற்றுகிறார்கள்.இது கிளையாக வளர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் போட்டியும், பற்றாக்குறையும் சமூகத்தில் இருக்கும் வரை லஞ்சமும்,ஊழலும் இருந்துகொண்டே இருக்கும்.

நிலத்தில் கோரையை ஒழிக்கவேண்டுமானால்,அதன் கிழங்கோடு பிடுங்கி எறியவேண்டும்.கிழங்கை விட்டுவிட்டு அதன் மேல் பகுதியை கிள்ளுவதால் மட்டும் அது ஒழிந்துவிடாது.கிழங்கு மண்ணிற்குள் மறைந்து இருக்கும்வரை,அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.இதைப் போன்றுதான் ஊழலின் ஆணி வேரான போட்டி பொருளுற்பத்தியை தூக்கியெறியாமல் லஞ்சமும்,ஊழலும் மீண்டும், மீண்டும் முளைவிட்டுகொண்டேதான் இருக்கும்.

மறைந்து இருக்கும் ஆணிவேரை பற்றி பேசாமல் வெளியில் தெரியும் கிளையைக்காட்டி நம்மை திசை திருப்புவதுதான் ஹசாரே கும்பலின் இலக்கு,நோக்கம்!
அதுமட்டுமல்லாமல்,ஹசாரேவும் இதை இயக்கும் கும்பலும் நாய் வாலை நிமிர்த்தி விடப்போவதாக கொக்கரிக்கிறார்கள்.இதை நம்மையும் நம்ப சொல்கிறார்கள்!
இதை நம்புவதற்கு நீங்கள் தயாரா?  

(இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது)

Friday, 23 December 2011

அன்னா அசாரேவும்-நாய்வாலும்!

தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான,உணர்ச்சி பூர்வ நிகழ்வு என்றால் அது முல்லை பெரியாறு! இந்திய அளவில் பரபரப்பான செய்தியாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி லோக்பால் மசோதா! அன்னா ஹசாரே என்ற கிழடை வைத்து பார்ப்பன கும்பல் நடத்தும் மாயாஜால வித்தைதான் லோக்பால் விவகாரம்.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் ,சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கும் களங்கத்தையும் ஏற்படுத்தும் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு லோக்பால் மசோதாவே ஒரே வழியென்று பார்ப்பன ஊடகங்கள் ஒருமித்தக்குரலில் எழுதுகின்றன.

சமூக ஆர்வலர் என்று அன்னாவுக்கு பட்டமும் அளித்து கவுரவிக்கின்றனர்.இந்த கிழட்டு நரிக்கு இப்போது வயது என்பது.இத்துணை ஆண்டு காலம் வராத ஞானோதயம் இப்போதுதான் வந்துள்ளது.




கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1990- களிலிருந்து நடந்துவரும் போராட்டத்தை மறைத்துவிட்டு,இத்தனை ஆண்டுகளாக போராடமால்,இப்போது அணு உலையை எதிர்த்து போராடும் போராட்டக்குழுவின் நோக்கம் என்ன? என்று கேட்கும் பார்ப்பன கும்பல்,இதே கேள்வியை அன்ன ஹசாரேவை கேட்காமல் அவருக்கு மலர் மகுடம் சூட்டுகிறார்கள்.
இந்தியாவில் ஊழல் வரலாறு நேருகாலத்திலிருந்து துவங்கிவிட்டது.மூக்கிருக்கும் வரை சளியிருக்கும் என்பதைப்போன்று அன்று தொடங்கிய ஊழல் இன்று 2G,3G என ஆலமரமாய் வளர்ந்து சமூகமெங்கும் வேர் பரப்பிவிட்டது.அது இல்லாத இடம் என்று எங்குமில்லை.ஊழல் இன்று ஒவ்வொரு இந்தியன் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.லஞ்சமும்,ஊழலும்!

கிராமத்தில் உள்ளூராட்சி அமைப்பிலிருந்து,டெல்லி செங்கோட்டை வரை அது இல்லாத இடமேயில்லை.அரசுத்துறையானாலும்,தனியார் துறையானாலும் அவற்றில் எது இருக்கிறதோ,இல்லையோ நிச்சயம் அது இருக்கிறது!

லோக்பால் மசோதா பற்றியும், அதை நிறைவேற்றுவதைப்பற்றியும் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர்,சிபிஐ,டி பிரிவு ஊழியர்கள் வரை சேர்க்கவேண்டும் என்று காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது.

ஆனால்,நாட்டின் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம்,ஊழலில் ஈடுபடுவர்களிடம் அதன் சுவடுகூட தென்படவில்லை.வழக்கம் போல அவர்களின் பணியை செவ்வனே செய்துவருகின்றார்கள்.
தமிழகத்தில் TNPSC முன்னால்,இன்னால் அதிகாரிகளின் வீடுகளில், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் தீவிர சோதனை நடத்துகிறார்கள் என்ற செய்தி நாளேடுகளிலும்,தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது.அதே நேரத்தில் சத்துணவு,அங்கன்வாடி பணியாளர்கள் 28 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு பணியிடத்திற்கு ஒன்றைரை லட்ச ரூபாய் விலை போகிறது.ஒரு ஆசிரியர் பணியிடம் 5 லட்சம் வரை …..இங்கு எங்கேயும் லோக்பாலின் எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதோடு மட்டுமா, தமிழக அரசின் இலவசத்திட்டங்கள் கூட இதில் இருந்து தப்பிக்கவில்லை.

1.இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற ரூபாய் 2 ஆயிரம்.

2.பசுமை குடில் பெறுவதற்கு ரூபாய் 25 ஆயிரம்.

3.சாதி மாற்றி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் அதன் விலை ரூபாய் ஐந்து ஆயிரம்.                   

4.குடும்ப அட்டை ரூபாய் 5 ஆயிரம்,அட்டை வீடு தேடி வரும்.

5.அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சீட்டுவாங்க ஐந்து ரூபாய்.சீட்டே இல்லாமல்  பத்து ரூபாய் கொடுத்தால் இரண்டு ஊசி.

இவை எல்லாமே அன்றாடம் மிக இயல்பாக நடக்கிறது.இப்படி செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்,நான் லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு வந்தேன்.எவனாவது எனக்கு இலவசமாகவா வேலை கொடுத்தான்!

எந்த வேலையும் இலவசமாக கிடைப்பதுமில்லை!,லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருவோர்.அதை திருப்பி செய்வதற்கு கூச்சப்படுவதுமில்லை!.நூறு சதவீத வேலைகளும் லஞ்சம் பெற்றுதான் தரப்படுகிறது.எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் யாராவது ஒருவர் நேர்மையாக நடந்துகொண்டால், அவர் தனது வேலையை விரைவிலேயே இழந்துவிடுவார்.

ஊழலை தடுப்பதற்கு என்று எத்தனையோ துறைகளும், நூற்றுக்கணக்கான சட்டங்களும் உள்ளன.ஆனால் இந்த சட்டங்கள் அனைத்தும் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருகின்றவர்கள் மூலம்தான்  நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

லோக்பால் சட்டம் வந்தாலும்,அந்த சட்டமும் மனிதர்களால்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.எப்படிப்பட்ட சிறந்த சட்டமாக இருந்தாலும் அதை மனிதர்கள் தான் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தான் அதன் நோக்கம் நிறைவேறுவதில்லை.அதனால் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை பணி அமர்த்தலாம் என்றாலும், அந்த ரோபோக்களுக்கும் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பவர்களும் மனிதர்கள்தான்.சரி மிருகங்களை அமர்த்தலாம் என்றால் அவைகளை பழக்குபவர்களும் மனிதர்கள்தான்.

எனவே சட்டங்கள் ஆயிரங்கள் இருந்தாலும்.அவற்றை நடைமுறைப்படுத்துவது இந்த சமூக அமைப்பில் சாத்தியமில்லை.

இந்த எளிய உண்மை ஹசாரேவுக்கும்,பார்ப்பன ஊடகங்களுக்கும் தெரியாதா என்ன? தெரியும்!பிறகு எதற்காக உயிரற்ற சட்டத்திற்காக இவ்வளவு வரிந்துக்கட்டி கொண்டு நிற்கிறார்கள்?

இதற்கான பதிலும் மிகவும் எளிமையானதுதான்.நிலவுகிற இந்த சமூக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்  போக்கு மிக வேகமாகி வருகிறது.இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கிறது.

இந்த சமூக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையின்மைதான் ’வால் தெரு’ போராட்டமாக உலகெங்கிலும் வெடித்திருக்கிறது.இதில் இருந்து மக்களின் கவனத்தை முடிந்தவரை திசை திருப்புவதுதான் இவர்களின் நோக்கம்.இதை போய் யார் நம்புவார்கள் என்கிறீர்களா? இந்த திசை திருப்பும் நாடகங்கள் உலகின் வேறு பகுதிகளில் எடுபடுகிறதோ, இல்லையோ இந்தியாவில் அது நிச்சயம் நடக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஒரு சாதிக்காரன் ஏற்றுக்கொண்டால்,அதை இன்னொரு சாதிக்காரன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.ஒரு மாநிலம் சரி என்றால் இன்னொரு மாநிலம் முடியாது எனக் கூறும்.ஒரு மதம் ஒப்புக்கொண்டால் இன்னொரு மதம் ஒப்புக்கொள்ளாது.இவர்கள் இவற்றில் ஏதோ ஒன்றை துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.பிறகென்ன! அவர்கள் நினைப்பது நடக்காமலா போய்விடும்!

சரி இதற்கு என்ன தான் வழி! லஞ்சம் ஊழலை எப்படித்தான் ஒழிப்பது! அது முடியாதா என்றால் அதற்கான பதில் இதுதான்.

நிலவுகிற இந்த சமூக அமைப்பின் அடிப்படை போட்டி உற்பத்தி. பொருள் உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகள் சந்தையை கைப்பற்றுவதற்கும் அதை தக்கவைத்து கொள்வதற்கும்,தமது அரசியல் பிரதிநிதியான அரசியல் கடசிகளுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் கோடி,கோடியாய் கொட்டிகொடுக்கிறார்கள்.இவ்விரு பிரிவினரையும் வைத்துக்கொண்டு,தமக்கு வேண்டியதை சாதித்துகொள்கிறார்கள்.உலகில் உள்ள  ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு பிரிவு முதலாளிகளின் நலனை பாதுகாக்க செயல்படுபவைதான்.

இதுதான் ஊழலுக்கான ஆணி வேர்.அரசியல் கட்சிகளின் தலைமை, அரசு எந்திரத்தின் உயர்மட்டம் ஆகியோரின் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் கீழ்மட்டங்களும் அதே வழியை பின்பற்றுகிறார்கள்.இது கிளையாக வளர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் போட்டியும், பற்றாக்குறையும் சமூகத்தில் இருக்கும் வரை லஞ்சமும்,ஊழலும் இருந்துகொண்டே இருக்கும்.

நிலத்தில் கோரையை ஒழிக்கவேண்டுமானால்,அதன் கிழங்கோடு பிடுங்கி எறியவேண்டும்.கிழங்கை விட்டுவிட்டு அதன் மேல் பகுதியை கிள்ளுவதால் மட்டும் அது ஒழிந்துவிடாது.கிழங்கு மண்ணிற்குள் மறைந்து இருக்கும்வரை,அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.இதைப் போன்றுதான் ஊழலின் ஆணி வேரான போட்டி பொருளுற்பத்தியை தூக்கியெறியாமல் லஞ்சமும்,ஊழலும் மீண்டும், மீண்டும் முளைவிட்டுகொண்டேதான் இருக்கும்.

மறைந்து இருக்கும் ஆணிவேரை பற்றி பேசாமல் வெளியில் தெரியும் கிளையைக்காட்டி நம்மை திசை திருப்புவதுதான் ஹசாரே கும்பலின் இலக்கு,நோக்கம்!

அதுமட்டுமல்லாமல்,ஹசாரேவும் இதை இயக்கும் கும்பலும் நாய் வாலை நிமிர்த்தி விடப்போவதாக கொக்கரிக்கிறார்கள்.இதை நம்மையும் நம்ப சொல்கிறார்கள்!
இதை நம்புவதற்கு நீங்கள் தயாரா?  

Tuesday, 11 October 2011

இப்போதைக்கு ஒரு குறையுமில்லை!

நாட்டில் அன்றாடம் ஆயிரம் பிரச்சனைகள்…. குடிநீர் இல்லை,சாலைகள் இல்லை,அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை,எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் லஞ்சம் தராமல் ஒரு காரியமும் நடப்பதில்லை.வேலையில்லை,விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலையில்லை.சிறு தொழிலில் உள்ளவர்களுக்கோ எவ்வித உத்தரவாதமும் இல்லை.இப்படி மக்களுக்கு அன்றாடம் ஆயிரமாயிரம் பிரச்சனைகள். இவற்றை தட்டிக்கேட்கவோ,போராடவோ விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தவிர வேறு எவரும் இல்லை என்ற அவல நிலை.

அண்மையில் சமச்சீர் கல்வி விவகாரத்துக்காக போராடியவர்கள் ஒரு சிலரே,ராஜிவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவரையும் துக்கில் போட நாள் குறித்த மிகவும் உணர்ச்சி பூர்வமான பிரச்சனையில் கூட சமூகத்தில் ஆகப்பெரும்பான்மையோர்  வேடிக்கையே பார்த்தனர்!

மேற்கண்ட பரிதாபகரமான சூழல்தான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.சமூக விவகாரங்களில் பங்கேற்கும், தலையிடும் நபர்களின் எண்ணிக்கை நாளும் குறைந்து கொண்டே போகும் அவலம்.
இப்படிப்பட்ட சூழலில்தான் தீடீர் என 4 லட்சத்து 11 ஆயிரத்து 177 பேர் தமிழகமெங்கும் சமூக பணியாற்ற களத்தில் குதித்துள்ளனர்.இவர்கள் தனியாக அல்ல,ஒவ்வொருவரும் குறைந்தது தம்மோடு ஒரு 20-பேரையாவது அழைத்தும் வந்துள்ளனர்.இது நம்மை திக்குமுக்காட வைத்துவிட்டது! மேற்கண்ட நபர்களின் எவருமே நேற்றுவரை, ஏன் இப்போது கூட தனது வீட்டிற்கு முன்பு சாலையின் குறுக்கே சாக்கடை ஓடினாலும் கூட அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாதவர்கள்.மூக்கை பொத்திக்கொண்டு அடக்கம்,ஒடுக்கமாக சாலையை கடந்து சென்றவர்கள்.தனது வீட்டுற்குள் சாக்கடை நாற்றமடித்தாலும், அது தெரியாமல் இருப்பதற்காக தனது வீட்டினுல் வாசனை திரவியங்களை தெளித்துக் கொண்டு இருப்பவர்கள்.இப்போது சமூக பணியாற்ற ஓடோடி வந்திருக்கிறார்கள்!

இவர்கள் சமூக பணியாற்ற களத்திற்கு வந்தவுடன் அரசின் வருவாய் பல மடங்காக உயர்ந்துவிட்டது.ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கிறதோ இல்லையோ, மக்கள் கேட்காமலேயே பாட்டில்,பாட்டிலாக சீமை சாரயம் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறது.வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தமிழக ’குடி’ மக்கள் நிம்மதியாய் உள்ளனர்.சுதந்திரமாய் வீதிகளில் வாந்தி எடுத்து,விழுந்து புரள்கின்றனர்.

நேற்றுவரை ஊரில் நாதியற்றவர்களாக இருந்தவர்கள் உட்பட அனைவரும் இவர்களின் நலன் விசாரிப்புகளில் நனைந்து போகிறார்கள்.மொத்தத்தில் தமிழகமெங்கும் அன்பும்,பந்தமும்,பாசமும்,நேசமும் அப்பப்பா என்னமாய் கரை புரண்டு ஓடுகிறது! இப்படிபட்ட நிலையை ஏற்படுத்தியுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் என்பதற்கு பதில் ஆண்டுக்கு ஒருமுறை வரக்கூடாதா? என்று மக்களை ஏங்க வைக்கிறது!

ஒரு ஓட்டு ரூபாய் ஆயிரம் முதல் ரூபாய் 5 ஆயிரம் வரை நல்ல விலைக்கு விலை பேசப்படுகிறது.உள்ளூராட்சி தேர்தல்களில் நிற்கும் 4 லட்சத்து 11 ஆயிரத்து 177 பேரும் அச்சகங்களை நோக்கி ஓடுகிறார்கள்.இந்த அச்சகங்களில் அன்றாடம் நடைபெறும் வேலைகளை விட நூறு மடங்குக்குமேல் வேலையும்,லாபமும் கொழிக்கிறது.கிராமங்களிலும்,நகரங்களிலும் உள்ள உணவகங்களில் உணவக உரிமையாளர்களால் சோறு வடித்து கொட்டமுடியாத அளவுக்கு விற்பனை சூடுபறக்கிறது.

இப்படி உள்ளூராட்சி தேர்தல் மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கானோர் ஆதாயம் அடைகின்றனர்.தாங்கள் சமூக சேவைக்காக தேர்தெடுக்கப்படுவதற்கு முன்பே மக்களை இப்படி மகிழ்ச்சி  வெள்ளத்தில் ஆழ்த்தும் உள்ளூராட்சி வேட்பாளர்கள் தாங்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் என்னவெல்லாம் செய்து மக்களை திகைப்பில் ஆழ்த்த போகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.

ஊராட்சி மன்ற கூட்டங்கள் எங்கேயும்,எப்போதும் நடத்தப்படுவதே கிடையாது.இப்படி நடக்காத கூட்டங்கள் நடந்ததாகவும்,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஊராட்சி மன்றத்தலைவர் நீட்டும் இடங்களில் கைநாட்டு இடும்,கையோழுத்து போடும் ஒவ்வொரு பஞ்சாயத்து உறுப்பினருக்கும் ரூபாய் 50 இனாம்.இதோடு தீபாவளி,பொங்களுக்கு வேட்டி,சேலை ஊராட்சி மன்றத்தலைவரால் வழங்கப்படும்.100-நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு போகாமலேயே சம்பளம் கிடைக்கும்.
ஊராட்சிமன்றத்தலைவர் அன்றாட செலவினங்களுக்காக ரூபாய் 5ஆயிரம் வரை ஒவ்வொரு மாதமும் எடுத்துக்கொள்ளலாம்.இந்தத் தொகையை கொண்டு மக்களுக்கான குடிநீர், தெருவிளக்கு ஆகியவற்றை பராமரிக்கவேண்டும்.தெருவிளக்கு எரிகிறதோ இல்லையோ குழாயில் தண்ணீர்வருகிறதோ இல்லையோ பராமரிப்புத்தொகை மட்டும் மாதாமாதம் எடுக்கப்பட்டுவிடும்.மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இவற்றிற்கு நீர் ஏற்றும் மின்மோட்டார்கள், தெருவிளக்கு பராமரிப்பு ஆகிய பணிகளை ஒரு பொருளின் விலையைவிட ஒன்றுக்கு பத்தாக பில் எழுதி அதிகாரிகளுக்கு பாதி,தனக்கும் கடைக்காரருக்கும் பாதி என பிரித்துக்கொள்வது தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும்!

நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 100-பேர் வேலை செய்தால் 200-பேர் என பொய்கணக்கு எழுதி அதிகாரிகளுக்கு பாதி,மீதி ஊராட்சி எழுத்தர்,மக்கள் நலப்பணியாளர் ஆகியோருக்கு கொடுத்தது போக எஞ்சியதை தலைவர் எடுத்துக்கொள்வார்.

ஊராட்சியில் அமைக்கப்படும் சிமெண்ட் சாலைகள் வடிகால் வாய்க்கால்கள், அரசு கட்டிடங்கள் உட்பட அனைத்து ஒப்பந்த பணிகளிலும் ஒப்பந்ததாரர் தலைவருக்கு ஒரு பரிசுத்தொகையை தருவார்.அதை பெற்றுக்கொண்டு நடைபெறும் பணிகளின் தரத்தை பற்றி மக்களில் யாராவது கேள்வி கேட்டால் அவர்களை கையாளும் பொறுப்பை தலைவர் எடுத்துக்கொண்டு ஒப்பந்ததாரருக்கு பாதுகாப்பு தருவார்.

ஊரில் உள்ள அரசுப்பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சித்தலைவரின் கூட்டுக்கணக்கிலும், பொருப்பிலும் கட்டப்படுகிறது.இந்த கட்டிடங்களை தலைவர் அல்லது தலைமையாசிரியர் இருவரில் ஒருவர் பொருப்பெடுத்து கொண்டு கட்டுகின்றனர்.கட்டிடம் கட்டுபவர் மற்றவருக்கு உரிய தொகையை பரிசாக தந்துவிடுவார்.

நகராட்சிகளிலும்,மாநகராட்சிகளிலும் நடைபெறும் அனைத்து பணிகளும் ஒப்பந்த முறையிலேயே நடைபெறும்.இந்த ஒப்பந்தங்களை கவுன்சிலர்களே பெறுவார்கள்.அல்லது ஒப்பந்ததாரரிடம் உரிய பரிசை பெற்றுக்கொள்வார்.இப்படி தொடர்ந்தும் பரிசு பெறுவதற்காக தமது பகுதியில் வேலை நடை பெறுவதற்கு கூட்டங்களில் விடாப்பிடியாக வாதாடுவார்.

ஊராட்சிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரை நடைபெறாத பணிகள் நடைபெற்றதாக கணக்கு காட்டி அதிகாரிகளுடன் சேர்ந்து கூட்டுகொள்ளை அடிப்பது இவர்களின் தலையாய பணிகளில் ஒன்றாகும்.தமது பொருப்புகளின் மூலம் அரசு அதிகாரிகளிடம் கிடைக்கும் அறிமுகத்தை வைத்துக்கொண்டு பிறப்பு,இறப்பு சான்றிதழ் உட்பட மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே இடைத்தரகராக செயல்படுவது போலிஸ் நிலையங்களிலும் இடைத்தரகராக செயல்படுவதும்தான் இவர்களின் நிரந்தர தொழிலாகவும் மாறிவிடுகிறது.
இதனால்தான் உள்ளூராட்சி தேர்தல்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.இவர்கள் மட்டுமல்ல தம்மோடு இவர்கள் தமது உறவினர்கள்,நண்பர்கள்,ஊரில் வேலை வெட்டி இல்லாத போக்கிரிகள் ஆகிய அனைவரையும் குளிப்பாட்டி தம்மோடு ஒரு கூட்டத்தையே வைத்துக்கொண்டு வலம் வருகின்றனர்.

இந்த தேர்தல்களில் சாதி,உட்சாதி,வகையறா,கொத்து,தெரு,ஊர் என அனைத்து பிரிவினைகளையும் தூண்டிவிட்டு ஆதாயமடைய துடிக்கின்றனர!.

தேர்தல்கள் முடியும் வரை தமிழக ‘குடி’ மக்களுக்கும்,வேலை வெட்டியில்லா கூட்டத்துக்கும் ஒரு குறையுமில்லை!
தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு குறையும் இருக்கப்போவதில்லை!

ஆனால் நமக்கு………..?

இதுதான் ஜனநாயகத்தை பரவலாக்கும் செயலாம்! மக்கள் பணத்தை திருடுவதும்,கொள்ளையடிப்பதுமே ஜனநாயகம் என்ற கருத்து மக்கள் மனங்களில் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது.இப்படி திருடுவதற்கும்,கொள்ளையடிப்பதற்கும் மக்களிடம் உரிமை பெறும் உரிமைன் பெறும் நடவடிக்கைத்தான் இந்ததேர்தலும்,தேர்தலில் மக்களுக்கு வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளும் ஆகும்.

இந்த சமூகத்தில்தான் ஊழலை ஒழிக்கப்போவதாக அன்னா ஹசாரேக்கலும்,அத்வானிகளும் வலம் வந்து, நம் காதுகளில் பூ சுற்றுகின்றனர்.அதிகம் வேண்டாம் குறைந்தது இந்த மாபெரும் ஜனநாயகவாதிகள் முகங்களில் காறியாவது துப்புங்கள்!  

Saturday, 27 August 2011

ஊழலை ஒழிக்குமா, லோக்பால்?- பிரபல பத்திரிக்கையாளர் பி. சாய்நாத்

ஜூலை 8, 2011 அன்று 'தி இந்து' பத்திரிக்கையில் பி. சாய்நாத் எழுதிய கட்டுரையின் சாரம்




"
எது எப்படி இருந்தாலும் நமது பிரதமர் மிகவும் நேர்மையானவர்" என்று பெருமையாகவும் பிறகு தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளவும் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், சமீபத்தில் இந்த வாக்கியம் நம் காதிற்கு வருவதில்லை. ஏனெனில், மிக நேர்மையான நம் பிரதமர் வரலாறு காணாத ஊழல் நிறைந்த அரசுக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். 

இந்த ஊழலுக்கான காரணங்களை பற்றி பலர் பல கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால், முக்கியமான இந்த மூன்று விசயங்களை ஆராயாவிட்டால் இந்திய ஊழலை பற்றிய எந்த ஆய்வும் முழுமை கிடையாது. 

1.
இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு, பணமும், வசதியும் ஒரு இடத்தில் குவிப்பது. வர்க்கம் மற்றும் சாதிகளினாலான ஏற்றத்தாழ்வு மற்றும் பல. 

2.
இந்த ஏற்றத்தாழ்வுகலை வலுப்படுத்தி, அதை நியாயப்படுத்தும் இந்திய பொருளாதாரக்கொள்கை. 

3.
பல விதிவிலக்குகள், தனிச்சையான முடிவெடுக்கும் தன்மை மற்றும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத கலாச்சாரம். இவற்றினால் பணம், பதவி உள்ளவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் எனும் நிலைமை. ஆளும் வர்க்கத்தை பகைத்துக் கொள்ளாமல் இருந்தால், எந்த வரிச்சட்டத்தையும் உடைத்து வரி காட்டாமலேயே சமாளித்துவ்ட முடியும் என்கிற நிலைமை. 

ஊழலை அதன் அடிப்படையிலிருந்து சரி செய்ய தவறுவது, குழாய் திறந்திருக்கும் பொழுது தரையை துடைத்து ஈரத்தை போக்க முயற்சிப்பது போல் ஆகும். 

கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் பொருளாதார கொள்கையினால் இந்திய அரசு கம்பெனிகளை மேலும் செல்வச் செழிப்புமிக்கவைகளாக்கும் கருவியாய் குறுகிவிட்டது. தனியார் முதலீட்டுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவே அரசு இயங்கி வருகிறது. 

கடந்த 6 பட்ஜெட்களில் மட்டும் ரூ. 21 லட்சம் கோடி அரசு, வரிவிலக்கு என்ற பெயரில் கம்பெனிகளுக்கு நன்கொடை வாரிவழங்கியிருக்கிறது. அதே காலகட்டத்தில் உணவு மற்றும் விவசாயத்திற்கான மானியங்களும் பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளன. 

புதிய பொருளாதார கொள்கை, கம்பெனிகளின் தேவைகளை மிக விசுவாசமாக பூர்த்தி செய்யும் பணியாளராக அரசை மாற்றியுள்ளது. அதுவும் மக்கள் வரிப்பணத்தில். நிலம், தண்ணீர், அலைவரிசை போன்ற இந்தியாவின் வளங்களை கொண்டு தனியார் கம்பெனிகளின் லாபத்தை அதிகரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. 

இந்து மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 825 எம்.எல்.ஏக்கள் வெளியிட்ட தகவ்ல் படி அவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ. 2128 கோட். இவர்கள் வெளியிடாத சொத்து மதிப்பு இன்னும் எவ்வளவோ? தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் 825 பேர் இதே பணத்தை சம்பாதிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா? வெறும் 2000 ஆண்டுகளே. இதை 10,000 பேர் சேர்ந்து சம்பாதித்தால் கூட 170 ஆண்டுகளாகும். இது தான் நம் நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வு. 

நாட்டின் பல இடங்களில் தன்னுடைய வலமான நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுதல், கட்டாயமாக வளமான நிலங்களை கையகப்படுத்துதல் போன்ற அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். ஊழலை எதிர்த்து போராட வேண்டுமா? அதற்கு லோக்பால் மட்டும் போதாது. 

சமுதாய ஏற்றத்தாழ்வு, பொருளாதார கொள்கை போன்ற போராட்டங்களுடன் ஊழல் எதிர்ப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு சின்ன லோக்பால் கூட்டம் செய்துவிடமுடியாது. மக்களின் மிகப்பெரிய போராட்டமாக இது அமையும். 

-
மொழிபெயர்ப்பாளர் : திரு. பாலாஜி 

ஆகஸ்ட் மாத தோழமை இதழிலிருந்து.