விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label முல்லைபெரியாறு. Show all posts
Showing posts with label முல்லைபெரியாறு. Show all posts

Monday, 7 May 2012

முல்லை பெரியாறு: பார்ப்பனியத்திற்கெதிரான போராட்டம்!

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான நிபுணர்குழு,முல்லை பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது என்று தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இக்குழு அறிவியல் பூர்வமான சோதனைகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு நடத்திய பின்னரே தனது ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது.



இந்த ஆய்வறிக்கையின் மூலம் கேரள அரசுகள் இதுநாள் வரை எழுப்பிய சர்ச்சைகள அனைத்தும் மோசடியானைவை என்பது அம்பலத்திற்கு வந்துவிட்டது.தம்மை கம்யூனிஸ்டுகள் என்றுக்கூறிக்கொள்ளும் வலது,இடது போலிகள், இந்தியாவை அன்னியர்களுக்கு காட்டிக்கொடுக்கவும்,கூட்டிக்கொடுக்கவும், வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், தமது இழிவான அரசியல் நோக்கத்திற்காகவே கேரள மக்கள் மத்தியில் மலையாள இனவெறியை தூண்டி அடையவே முல்லை பெரியாறு பிரச்சனையை கையிலெடுத்தன என்பது மீண்டும் ஒருமுறை இவ்வுலகிற்கு அம்பலமாகியுள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரம் மலையாள இனவெறியின் அடையாளம் மட்டுமல்ல.இந்த மலையாள இனவெறியின் உள்ளடக்கம் பார்ப்பனிய இழிவாகும்.

பொதுவில் தமிழர்கள் என்றாலே கீழானவர்கள் என்றக் கருத்தே கேரள மக்களிடம் விதைக்கப்பட்டு வேரூன்றி நிற்கிறது.

‘இப்படி தமிழர்களை கீழானவர்களாக பார்க்கும் கண்ணோட்டத்தை பார்ப்பனிய இழிசித்தாந்தமே இவர்களுக்கு அளிக்கிறது.இந்தியாவில் உள்ள மொழிகளிலே,தேசிய இனங்களிலேயே தமிழும்,தமிழர்கள் மட்டுமே, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக சமஸ்கிருதத்தை,பார்ப்பனிய பண்பாட்டை  எதிர்க்கும்,நிராகரிக்கும் பண்பாட்டை ,மரபை கொண்டுள்ளனர்.இம்மரபைச் சமூகம் கொண்டிருப்பதற்கான அடிப்படை தமிழ்மொழியின் வளமும், வளமான பண்பாடுமே ஆகும்.

தமிழ் மொழியின் வளமும்,தமிழ் பண்பாடும் தமிழ் மக்களுக்கு எந்த அளவிற்கு மேன்மையை தருகிறதோ,அதைவிட அதிகமாக பார்ப்பனிய பண்பாட்டிலும்,சமஸ்கிருதத்தாலும் செரிக்கப்பட்ட மொழியையும்,பண்பாட்டையும் கொண்டு உருவாகியுள்ள தேசிய இனங்கள், தமிழ் மக்களை பார்ப்பனிய கண்ணோட்டத்தில் இழிவாக பார்க்கும் மரபை கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களை மேற்கண்ட வகையில் இழிவாகக் கருதும் கண்ணோட்டத்தை இந்து பார்ப்பன மதம் ஒவ்வொரு முறை புதுப்பிக்கப்படும் போதும், மேற்கண்ட அவர்களின் கண்ணோட்டமும் மேலும் கூர்மையான வகையில் புதுப்பிக்கப்படுகிறது.

எனவே மக்களிடையே மேற்கண்ட கண்ணோட்டத்தையே மீண்டும்,மீண்டும் புதுப்பிக்கும் பார்ப்பன மயமாக்கப்பட்ட அரசு இயந்திரம் மற்றும் அரசியல்கட்சிகள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையை நிச்சயம் ஏற்கமாட்டார்கள். இவர்கள் மட்டுமல்ல உச்சநீதிமன்றமே இவ்வறிக்கையை ஏற்குமா என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை!

முல்லை பெரியாறு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 04.05.2012 அன்று நடைபெற்றது. அப்போது அணையை ஆய்வுச் செய்ய, நிபுணர்கள் இட்டத்துளையை மீண்டும் அடைக்க கேரள அரசு அனுமதிக்கவில்லை.அதை செய்வதற்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால்,உச்சநீதிமன்றமோ வழக்கு நிலுவையில் இருப்பதால் துளையை அடைக்க அனுமதி தரமுடியாது என்று மறுத்துள்ளது.முல்லை பெரியாறு அணையில் போடப்பட்ட துளை அணையின் பலத்தை ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே போடப்பட்டதாகும்.வழக்கு நடக்கும்போது நீதிமன்ற வழிகாட்டலில் போடப்பட்ட துளையை நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியே அடைப்பதால் வழக்கின் விசாரணையை எவ்விதத்திலும் பாதிக்கும் செயலாக அமைய முடியாது.

ஏனென்றால் மேற்கண்ட துளைகள் வழக்கிக்கு முன்பே போடப்பட்டவைகள் அல்ல. இருப்பவைகள்.வழக்கின் தேவைக்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் போடப்பட்ட துளைகளை மீண்டும் அடைப்பதில் தவறேதுமில்லை.இதற்கு மாறாக துளைகளை அடைக்க கூடாது என்ற முடிவுதான் அநீதியானது.வழக்கு தொடுக்கும் போது துளைப் போடப்படாத நிலையில்தான் அணை இருந்தது.எனவே அணையை வழக்கு தொடுக்கும் போதிருந்த நிலையில் வைத்திருக்க வேண்டியதுதான் இயல்பான நடைமுறையாக இருக்க முடியும்.

ஆனால் உச்சநீதிமன்றமோ இயல்பான நீதிமன்ற முறைகளுக்கு மாறான நிலையை எடுத்துள்ளது.இதுவே அதன் சார்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.இப்படி உச்சநீதிமன்றம் எடுத்துள்ள முடிவு அபூர்வமானதல்ல.ஏற்கனவே பாபர் மசூதி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளில் அதன் சார்புத்தன்மை வெளிப்பட்டேயுள்ளது.எனவே முல்லைபெரியாறு விவகாரத்தில் அதன் சார்புத்தன்மை வெளிப்பட்டுள்ளது அதிசய நிகழ்வல்ல.பார்ப்பனியமயமாக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் இருந்து சார்புத்தன்மை வெளிப்படுவது இயல்பான ஒரு நிகழ்வேயாகும்.அதே வேளையில் இப்படிபட்ட கட்டமைப்புகளில் இருந்து சார்பற்ற நிலை வெளிப்படுவதுதான் அதிசய நிகழ்வாகும்!

எனவே ஆயிரம் இழப்புகளையும்,பின்னடைவுகளை சந்தித்தாலும், அதைக் கண்டு நாம் துவண்டு போவதற்கு ஏதுமில்லை.பெருமைமிக்க நமது பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம்.தோல்விகள் பின்னடைவுகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்று முன்னேறுவோம்………!

தொடர்புடைய பதிவுகள்:


2.முல்லை பெரியாறு:தற்கொலைக்கு முயலும் கேரளா!




Saturday, 10 December 2011

முல்லைப் பெரியாறு:பொருளாதார முற்றுகையே தீர்வு!

தமக்கு அன்றாட உணவுப்பொருட்களை ஏற்றிவரும் தமிழக சரக்கு வாகனங்களையும், இதர வாகனங்களையும், தமிழர்களையும் கேரள ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகள், தமது ஆதாயத்திற்காக தூண்டிவரும், மலையாள இனவெறிக்கு அடிமையாகி தாக்கும் கேரள மக்களின் செயல் தற்கொலைக்கு சமமானது என்பதை சென்றத் தொடரில் எழுதியிருந்தோம். 

தமிழக வாகனங்களை, தமிழர்களை தாக்குபவர்கள் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணைகட்ட கோருபவர்கள் மலையாளிகள் மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள இடுக்கி மாவட்டம் உட்பட முன்று மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களும்தான்! எனவே இந்த விவகாரம் இனவெறி ஊட்டப்பட்டதென்று கூறமுடியாது என்று தமிழகத்திலும் சிலர் வாதிடுகின்றனர்.

எமது சென்றக் கட்டுரையில் கேரளம், தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுப்பதால், அதற்கு எவ்வித நன்மையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். இது முழுக்க, முழுக்க கேரள ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகள், கேரள மக்களிடைய செல்வாக்குப் பெறவே அடவடித்தனமாக எழுப்பி வருகிறார்கள் என்பதையும் நிரூபித்திருந்தோம்.





கேரள ஓட்டு சீட்டு கட்சிகள் தமது அரசியல் ஆதாயத்திற்காக, பொய்யான பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பி, பீதியூட்டி வருகின்றனர். இந்த பிரச்சாரம் நியாயமான கோரிக்கையிலிருந்து அல்லாமல் மலையாள இனவெறியை அடிப்படையாகக் கொண்டது. இந்த மலையாள இனவெறி பிரச்சாரத்திற்குத்தான், கேரளத்தில் உள்ள தமிழர்களும்  பலியாகி, தமிழக நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இப்படி செயல்படுபவர்கள் தமிழர்களாயினும், அவர்களின் போராட்டத்தின் உள்ளடக்கமும் மலையாள இனவெறிதான்.
கேரளத்தில் உள்ள தமிழர்கள் மலையாள இனவெறியர்களின் பொய்பிரச்சாரத்திற்கு இருவகையில் ஆட்பட்டுள்ளனர்.

1.அணை உடைந்தால் அதனால் தாங்கள் உயிரிழக்க நேரிடும் என்ற அச்ச உணர்வு!

2.கேரளாவில் உள்ள பெரும்பான்மை மக்களோடு தாங்கள் இணைந்து செல்லாவிட்டால், இங்கு தமக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அச்ச உணர்வு!

மேற்கண்ட இரண்டு காரணங்களுமே கேரளத்தில் வாழும் தமிழர்களை, மலையாள இனவெறிக்கு அடிபணிந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.

இப்படி பெரும்பான்மையினரின் இனவெறிக்கு சிறுபான்மையாக உள்ளவர்கள் அடிபணிந்து செல்வது ஒன்றும் அதிசயமான விடயமல்ல. இதே அனுபவம்    மராட்டியத்தில் உள்ள தமிழர்களுக்கும் உண்டு.

சிவசேனாவின் மராட்டிய இனவெறிக்கு ஆரம்ப காலங்களில் பலியானவர்கள்தான் தமிழர்கள். இப்போது சிவசேனை குண்டர்கள் தமிழர்களை தாக்குவதில்லை. இதற்கு மாறாக இவர்களின் பார்வை இந்தி பேசும் வடமாநில மக்கள் மீது திரும்பியுள்ளது. இப்படி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மராட்டிய இனவெறியர்கள் மட்டுமல்ல, மராட்டிய வாழ் தமிழர்களும்தான்.
வட இந்திய மக்களை மராட்டியத்தில் வாழும் தமிழர்கள் தாக்குவது, தமிழ் இனவெறியினால் அல்ல. இந்த தமிழர்கள் மராட்டிய இனவெறிக்கு அடிபணிந்து சிவசேனாவின் அடியாளாக செயல்படுகின்றனர். இப்படி இவர்கள் மாறியதற்கான அடிப்படை மராட்டிய இனவெறியர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்குத்தான்.

எனவே ஒரு செயலை செய்பவர்கள் யார் என்பதை விட, அவர்கள் எதை, எந்த அடிப்படையில் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. இதன் அடிப்படையில் தமிழக வாகனங்களையும், தமிழக மக்களையும் தாக்குபவர்கள், முல்லை பெரியாறு அணையை இடிக்கச் சொல்பவர்கள், அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அவர்களின் செயலின் உள்ளடக்கமும் மலையாள இனவெறிதான்.

இந்த மலையாள இனவெறியின் மூலம் கேரள ஒட்டு சீட்டு அரசியல் கட்சிகள் கேரள மக்களிடையே செல்வாக்கு பெற முயலுகின்றன. இது கேரளத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த பகுதியில் இனவெறி தூண்டப்பட்டாலும், அப்படி செய்பவர்கள் தமது இனத்தின், மாநிலத்தின் நலனுக்காகவே இதை செய்வதாக மக்களிடையே தமது செயலுக்கு நியாயம் கற்பித்துக்கொள்கின்றனர்!

ஆனால் உண்மையில் குறிப்பிட்ட மாநிலத்திற்கோ, மக்களுக்கோ இதனால் எவ்வித நன்மையும் இல்லை. இதற்கு மாறாக இழப்பைத்தான் பரிசாகப் மக்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
இப்படி இனவெறியை தூண்டுபவர்கள் தமது செயலுக்காக கூலியை மட்டுமே பெறுகிறார்கள். உண்மையில் இதனால் ஆதாயம் அடைபவர்கள் இந்திய தேசியவாதிகள்தான்.

இந்தியா என்பது ஒரே தேசம். இங்கு வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர்கள். இவர்கள் எந்த மாநிலத்தை, மொழியை சேர்ந்தவர்களாக,கொண்டவர்களாக இருந்தாலும் இவர்கள் அனைவரின் தேசிய அடையாளம் இந்துத்துவ-பார்ப்பனிய- பண்பாடு என்பதுதான் இந்திய தேசியத்தின் அடிப்படையாகும்.

இந்த இந்திய-இந்து-தேசியவாதிகள் ஒரு குறிப்பிட்ட இனம், மொழியை சேர்ந்தவர்கள் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்தவர்கள். இவர்களால் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இன மக்களும் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்

எனவே இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடம்தான். இந்த சிறைக்கூடத்தில் ஒடுக்கப்படுபவர்கள்,இந்தியை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் மட்டுமல்ல,இந்தி பேசும் மக்களும்தான்!

இந்தியை தாய் மொழியாகக் கொள்ளாத மக்களையும்,இந்தியை தேசிய மொழியாக ஏற்க நிர்ப்பந்திக்கும், இந்திய ஆட்சியாளர்களின் செயல்,இந்தியை தாய் மொழியாக கொண்ட இந்தி மொழி பேசும் மக்கள், இந்தியை தாய் மொழியாக கொள்ளாத மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதைப் போன்ற ஒரு தோற்றத்தை, இந்தி பேசாத மக்களிடையே தோற்றுவித்துள்ளனர்.ஆனால் இந்திய தேசியவாதிகளால், இந்தி பேசாத தேசிய இனங்கள் மீது திணிக்கப்படும் இந்தி, உண்மையில் வட இந்திய மக்களின் பாரம்பரிய இந்தி மொழியல்ல,பார்ப்பனிய சமஸ்கிருதத்தால் கற்பழிக்கப்பட்ட ஒரு மொழியேயாகும்.
இதன் மூலம்  பாரம்பரிய இந்தியை தாய்மொழியாகக் கொண்ட வட இந்திய மக்களின் மொழி,பண்பாடு,கலாச்சாரம் ஆகியவை சிதைக்கப்பட்டுதான் உள்ளது.

இதே போன்று பார்ப்பன சமஸ்கிருத ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரு மொழிதான் மலையாளம்.

பார்ப்பன சமஸ்கிருத மொழியையும்,பார்ப்பன ஆதிக்கத்தையும் இன்று மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து போராடி வரும் ஒரே தேசிய இனம் தமிழினம் மட்டுமே!
மேற்கண்ட காரணத்தினாலேயே இந்திய தேசியவாதிகள் மட்டுமல்ல,பார்ப்பன,சமஸ்கிருதத்திற்கும், பொய்மையான இந்திய தேசியத்திற்கும் அடிமையாகிப்போன மலையாளிகள் உட்பட பலரும் தமிழ் மக்களை தமது எதிரியாகத்தான் பார்த்துவருகின்றனர்.முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழர்களுக்கு எதிரான கேரளத்தவரின் செயலுக்கு உள்ளேயும், இந்த விரோத மனப்பான்மைத்தான் மேலோங்கி நிற்கிறது.

உண்மை இவ்வாறு இருக்க, இதற்கு அடிப்படையான இந்திய பெருமுதலாளிகள்,இவர்களின் பிரதிநிதிகளான ஆட்சியாளர்கள்,அகில இந்திய ஓட்டுக்கட்சிகள் ஆகியவர்களுக்கு எதிராக மக்கள் சிந்திக்கவும்,செயல்படவும் முடியாமல், இவர்களின் தேசியம்’ என்ற பொய்மைக்கு அடிமையாகிப்போன திராவிட கட்சிகள், இந்தி பேசும் மக்கள் மீதுதான் வெறுப்பை உருவாக்கும் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.அதே நேரத்தில் இந்திய தேசிய வாதிகளுடன்,கூட்டுசேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் நலன்களை, உரிமைகளை அடகுவைத்து சுகபோக வாழ்வு வாழுகின்றனர்.

எனவே,காவிரி,பாலாறு,முல்லைபெரியாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள பாரம்பரிய,சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படும் அநீதிக்கு, அடிப்படையான காரணகர்த்தாக்களே இந்திய தேசியவாதிகள்தான்!

தாங்கள் தமிழ் இனத்திற்கு மட்டுமல்ல,இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் நலன்களுக்கும்,உரிமைகளுக்கும் எதிரானவர்கள் என்பதை மூடி மறைப்பதற்கு, தேசிய இனங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதை திட்டமிட்டே ஊக்குவிக்கவும், செயல்படுத்தவும் முனைப்புடன் இந்த தேசியவாதிகள் பணியாற்றுகின்றனர்.மொத்தத்தில் இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் தமக்கிடையில் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.

தேசிய இனங்களுக்கிடையில் பகைமை உணர்வை வளர்ப்பதற்கு, அந்தந்த தேசிய இனங்களை சேர்ந்த ஓட்டுசீட்டு அரசியல்வாதிகள்தான், இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு முகவர்களாக-மாமாக்களாக- செயல்பட்டுவருகின்றனர்.

இவர்கள் தத்தமது மாநில மக்களின் நலன்களையும்,உரிமைகளையும் இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு அடகுவைத்து சுகபோகமாக வாழுகின்றனர்.இது தெரியாமல் இருப்பதற்கு மக்களை அற்ப உணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தி,மயக்கி திசை திருப்புகின்றனர்.
காவிரி,பாலாறு,முல்லைபெரியாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள சட்டபூர்வ உரிமைகளை மறுப்பதன் மூலம் கர்நாடக,ஆந்திர,கேரள மாநிலங்களை சேர்ந்த ஓட்டுசீட்டு அரசியல்வாதிகள் இந்திய தேசியவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.

மேற்கண்ட மூன்று விவகாரங்களிலும்,தமிழகத்துக்கான உரிமையை பெறுவதற்கு விடாப்பிடியான, தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தாமல்,நிலைமை தீவிரமடைந்து உச்சகட்டத்திற்கு செல்லும் போது மட்டும் தற்காலிகமாக குதித்துவிட்டு, பின்னர் இதை மறந்துவிடுவதன் மூலம் தமிழக ஓட்டுசீட்டு அரசியல்வாதிகள் இந்திய தேசியவாதிகளின் நோக்கத்திற்கு சேவை செய்கின்றனர்.

இருப்பவர்கள், அதை பெறுவதற்கு உரிமை உடையவர்களுக்கு அதை மறுக்கிறார்கள்.இவற்றை பெற்றுத்தர வேண்டியவர்கள் தமது சொந்த ஆதாயத்திற்காக அதை விட்டுக்கொடுக்கிறார்கள்.இதன் மூலம் இவர்கள் இந்திய தேசியவாதிகளின் நோக்கத்தை-தேசிய இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையை, அவர்களின் முகவர்களாக-மாமாக்களாக- இருந்து நிறைவேற்றி, அதற்குரிய கூலியை ஆதாயமாக ஒவ்வொரு மாநில ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளும்  பெற்றுக்கொள்கின்றனர்.

இந்தியா என்ற நாடு,இந்த நாட்டில் உள்ள தேசிய இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, ஒற்றுமை ஆகியவற்றால் கட்டபடவுமில்லை! நீடித்திருக்கவுமில்லை!

தேசிய இனங்களுக்கிடையிலான பகைமை,ஒற்றுமையின்மை, ஆளும்வர்க்கங்களின் நயவஞ்சகம்,சூழ்ச்சி,ஒடுக்குமுறை ஆகியவற்றின் மூலமே இந்தியா என்ற கட்டமைப்பு இன்றுவரை உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால்,இந்த உண்மைக்கு மாறாக தேசிய இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மை, இந்தியா என்ற கட்டமைப்பை உடைத்து சிதறடித்துவிடும் என்று தமிழகத்தில் உள்ள ஓட்டுசீட்டு அரசியல்வாதிகள் மக்களை திசைதிருப்புகிறார்கள்.இதன் மூலம் இந்திய தேசியவாதிகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை அமைதிப்படுத்துகின்றனர்.

தேசிய இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மைதான் இந்தியா என்ற கருத்து பலருக்கும் வியப்பாக இருக்கலாம்!ஆனால் இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை.

னென்றால் இந்து என்ற பார்ப்பன மதம் ஏற்றத்தாழ்வையும்,சமத்துவமின்மையையும் அடித்தளமாக கொண்டிருந்தாலும் இந்துமதம் என்பது நீடித்து உயிர்வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.பார்ப்பனர் அல்லாத மக்கள் அனைவரையும் பார்ப்பனர்கள் தமது வைப்பாட்டிகளின் பிள்ளைகள் என்று அன்றாடம் இழிவு படுத்துகிறார்கள்.ஆனாலும்,இப்படி பார்ப்பனர்களால் இழிவு படுத்தப்படும் மக்கள், தம்மை இழிவு படுத்தும் பார்ப்பனர்களையும்,அவர்களின் பண்பாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.இப்படி ஏற்றுக்கொள்வதற்கான சாதிகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வும்,பகைமையுமே அடிப்படைக்காரணமாகும், இதே அடிப்படையில்தான் இந்தியா என்ற கட்டமைப்பும் இன்றுவரை உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கிறது!

தேசிய இனங்கள் தமக்கிடையே புரிந்துணர்வையும்,ஒற்றுமையையும்,உருவாக்கிக்கொண்டால், இந்திய தேசியம் தம்மை சுரண்டுவதையும்,ஒடுக்குவதையும் எதிர்த்து போராட துவங்கிவிடுவார்கள்.இதனால்,இந்தியா என்ற கட்டமைப்பின் மூலம் கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, உலகிலேயே மிகப்பெரிய, பரந்துவிரிந்த சந்தையை இந்திய பெருமுதலாளிகள் இழந்துவிடுவார்கள்.

ஒன்று தேசிய இனங்கள் ஒன்றுபட்டுவிட்டால், இந்தியா என்ற இந்த கட்டமைப்பு சுக்குநூறாக உடைந்து சிதறிவிடும்.அல்லது தேசிய இனங்கள் தமக்கிடையே ஏற்றத்தாழ்வற்ற,சுரண்டலற்ற புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.இதை நோக்கிய பயணம்தான் இன்றைய அத்தியாவசிய தேவையாகும்.ஆனால் இதை சாதிப்பது அத்துணை எளிதான காரியமல்ல! அதுவரை காவிரி,பாலாறு,முல்லைபெரியாறு ஆகியவற்றில் தனக்கான உரிமைக்காக தமிழகம் காத்திருக்கவும் முடியாது!

இப்போது மிகவும் அபாயகரமான கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் முல்லைபெரியாறு விவகாரத்தில், தமிழகம் தனது சட்டபூர்வமான உரிமையை நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமானால், மலையாள இனவெறியை நாம் எதிர்த்து முறியடித்தாக வேண்டும்.

மேற்கண்ட செயலை கேரள மக்களை வைத்தேதான் சாதிக்க வேண்டும்.இதை அறிவுபூர்வமான வாதங்கள்,பரப்புரையின் மூலம் சாதிப்பது என்பது, மலையாள இனவெறியால் நோய்வாய்பட்டுள்ள கேரள மக்களுக்கு மருந்தாக இருக்க முடியாது.
பொருளாதார முற்றுகை ஒன்றுதான் இந்நோயைத்தீர்ப்பதற்கான சிறந்த மருந்தாகும்.இம்மருந்து மிகவும் கசப்பானதாயினும்,இதைத்தவிர சிறந்த மருந்து வேறெதுவுமில்லை.

ஆரம்பக்கட்டத்தில் தமிழகத்தின் இந்த எதிர்வினைக்கு எதிராக, கேரள மக்கள் மேலும் மலையாள இனவெறிக்கு ஆட்பட்டாலும்,தொடர்ச்சியான,விடாப்பிடியான பொருளாதார முற்றுகை என்ற இந்த சிகிச்சை நீண்டகால நோக்கில் சிறந்த பலனைத்தரும்.இதன் மூலம் கேரள மக்களே,இந்திய ஆளும்வர்க்கங்களின் கேரள பிரதிநிதிகளான காங்கிரசு,போலி கம்யூனிஸ்ட் கட்சிகள்,பாரதிய ஜனதா ஆகியோரை எதிர்த்து முறியடிப்பார்கள்!

தமிழகத்தின் இந்தப் பொருளாதார முற்றுகைக்கு, இந்திய தேசியவாதிகளின் தமிழக பிரதிநிதிகளான, தமிழக ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் நிச்சயம் துரோகமிழைக்கவே செய்வார்கள்.

எனவே,இந்த ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளுக்கு வெளியில் வலுவான மக்கள் கூட்டமைப்பு ஒன்றை, உறுதியான தலைமையில் கட்டமைக்க வேண்டும்.இது சாத்தியமா? என்றால் நிச்சயம் சாத்தியமானதுதான்.எப்படி என்றால்,அணு உலைக்கு எதிரான போராட்டத்தை கூடம்குளம் மக்கள் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளுக்கு வெளியே, வலுவான மக்கள் கூட்டமைப்பின் மூலம்தான் இன்றுவரை நாட்டிற்கே முன்னுதாரணமாக நடத்திவருகின்றனர்.

எனவே,முல்லைபெரியாறு அணை விவகாரத்திலும் வலுவான மக்கள் கூட்டமைப்பை, உறுதியான தலைமையில் கட்டமைத்து,மலையாள இனவெறியை முறியடித்து,தமிழகத்தின் சட்டபூர்வமான உரிமைகளை வென்றெடுப்போம்!

*இந்திய தேசியத்தினால் ஆதாயம் அடையும் இந்திய பெருமுதலாளிகள்,ஆட்சியாளர்கள்,ஓட்டு சீட்டு அரசியல்வாதிகளை முறியடிப்போம்!

*இந்திய தேசியத்தினால் சுரண்டலுக்கும்,ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும், அனைத்து தேசிய இனங்களும் ஒன்றுபட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்!

*காவிரி,பாலாறு,முல்லைபெரியாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள தார்மீக மற்றும் சட்டபூர்வ உரிமைகளை சர்வதேச விதிகளுக்கும்,சட்டத்திற்கும் உட்பட்டு தீர்த்துக்கொள்வோம்!

*இதை சாதிப்பதற்கு வலுவான மக்கள்திரள் கூட்டமைப்பை கட்டமைப்போம்!



தொடர்புக்கு: 9842529188


கம்பம் சுற்றுவட்டார விவசாயிகள்,பொதுமக்கள் எழுச்சிகரமாக சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு கேரளாவிற்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கும் பொருளாதார முற்றுகை போராட்டக்காட்சிகள்:
















தொடர்புடைய பதிவுகள்:




2.முல்லை பெரியாறு:தற்கொலைக்கு முயலும் கேரளா!


Thursday, 8 December 2011

முல்லை பெரியாறு:தற்கொலைக்கு முயலும் கேரளா!

கடந்த சில தினங்களாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இனவெறியால் தூண்டப்பட்ட கேரள மக்கள்,தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு செல்லும் தமிழர்களையும்,வாகனங்களையும் தாக்கி வருகின்றனர்.இதனால் தமிழத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை தமிழக போலிசார் தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர்.

”கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் தமிழக லாரிகளை மலையாள இனவெறியர்கள் தொடர்ந்து தாக்கினால், கேரளாவிற்கு சரக்குப்போக்குவரத்தை நிறுத்துவோம்”, என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களைத்தான் இந்த லாரிகள் ஏற்றிச்செல்கின்றன.இந்த சரக்குகள் அன்றாடம் கேரளாவிற்கு செல்லாவிட்டால் கேரளாவில் ஏழு மாவட்டங்கள் அன்றாட உணவுப் பொருட்கள் இன்றி தவித்துப்போகும்.
எனவே தமிழக லாரிகளை தாக்குவது என்பது தங்களின் தற்கொலை முயற்சி என்பதைக்கூட சிந்திக்க முடியாத அளவுக்கு கேரள மக்கள் இனவெறியூட்டப்பட்டப் பட்டிருக்கிறார்கள்.



மலையாள இனவெறிக்கு எதிராக தமிழகத்திலும் எதிர்வினையாற்ற தமிழக மக்கள் தூண்டப்படுகிறார்கள்.இதனால் தமிழகத்திலும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

மலையாள இனவெறியால் இரு மாநில மக்களிடையே வளர்க்கப்படும் பகைமை உணர்வால், இரு மாநில மக்களுக்கும் எவ்விதமான லாபமும் இல்லை.இதன் மூலம் தமிழக மக்களைவிட கேரள மக்களுக்குதான் கடுமையான இழப்புகள் ஏற்படும்.
மலையாள இனவெறியின் மூலம் முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள்.ஏற்கனவே அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்துவிட்டதால் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துவிட்டது.தேனி மாவட்டம் கம்பம் பகுதி மட்டுமே தற்போது 
முல்லைபெரியாறு அணையால் பயன்பட்டு வருகிறது.

முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைத்தாலோ,புதிய அணை கட்டினாலோ கம்பம் பகுதியும் நீர் இன்றி வறண்டுவிடும்.எனவே இழப்பு என்பது ஏற்கனவே தமிழகத்திற்கு கேரளாவினால் உருவாக்கப்பட்டுவிட்டது.

ஆனால் கேரளாவிற்கு, தமிழகத்தினால் இதுவரை எந்தவிதமான இழப்பும் ஏற்படுத்தப்படவில்லை.இப்போதைய மலையாள இனவெறி நடவடிக்கைகள்,தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்தால்,அது கடும் விளைவுகளை மலையாள இனவெறியர்களுக்கு மட்டுமல்ல, கேரள மக்களுக்கும் ஏற்படுத்தும்.ஏனென்றால் அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து அன்றாடம் செல்லாவிட்டால் கேரள மக்களின் அன்றாட வாழ்வே கேள்விக்குள்ளாகி விடும்.

அதே நேரத்தில் கேரளத்தினால் தமிழகத்திற்கு உண்டாக்கப்படும்,நீர் இழப்பை ஈடுகட்டுவதற்கான போதுமான வளம் தமிழகத்தில் உள்ளது.இந்த வளத்தை பயன்படுத்தாததே தமிழகத்தின் மிகப்பெரிய பலவீனம் ஆகும்.மக்கள் விரோத ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வரை தமிழகத்தின் இந்த அவலநிலை தொடரவே செய்யும்.கேரளத்தினால் தமிழகத்திற்கு உருவாக்கப்படும்,இழப்பை விட இந்த ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளின் அலட்சியத்தினாலும்,அக்கறையின்மையினாலும் உண்டாக்கப்படும் இழப்பே பேரிழப்பாகும்.
வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் கிடைக்கும் மழை நீரில் 10 சதவீத்த்தை கூட தமிழகம் தேக்கி பயன் படுத்துவதில்லை.வீணாக கடலில் கலக்கும் 90 சதவீதம் தண்ணீரை தேக்கினாலே தமிழகத்தின்  நீர் தேவையை பெருமளவு ஈடுகட்ட முடியும்.எனவே,கேரளத்தின் அடாவடித்தனத்துக்கு எதிராக போராடுவதோடு,தமிழக ஆட்சியாளர்களின் சமூக அக்கறையின்மைக்கு எதிராகவும் தமிழக மக்கள் போராடுவது அவசர அவசிய தேவையாகும்.

கேரள ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் மட்டுமல்ல,தமிழகத்தில் உள்ள ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளும் தமிழக மக்களை மலையாள இனவெறிக்கு எதிராக, தமிழகத்தில் இனவெறியைத்தூண்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழக மக்களிடையே செல்வாக்கு பெறவே முயலுகின்றனர்.எனவே,தமிழக மக்கள் மலையாள இனவெறிக்கு எதிராக மட்டுமல்ல,தமிழக ஆட்சியாளர்கள்,ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளின் அக்கறையின்மைக்கு எதிராகவும் போராடுவதுதான் தமிழகத்தில் உருவாக்கப்படும் வறட்சிக்கெதிரான,நீர் இன்மையால் மக்களுக்கு ஏற்படும் இழப்பையும்,சரிசெய்வதற்கான சிறந்த வழிமுறையாகும்.

மொத்த தமிழகத்தின் தண்ணீர் தேவையை வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதனால் பெருமளவு ஈடுகட்ட முடியும்.இதோடு மேற்குதொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டின் நீர்பிடிப்பு பகுதியின் அளவு 2588 ச.கி.மீ.  ஆகும்.இந்தப் பகுதியில் ஆண்டு ஒன்றுக்கு 2641 மி.க.மீ நீர் உற்பத்தியாகிறது.இந்த நீர் அணைத்தும் கேரளாவின் பாரத புழா,சாலியாறு,சாலக்குடியாறு,பெரியாறு ஆகியவற்றில்தான் கலக்கிறது.இப்படி கலக்கும் மொத்த நீரும் கேரளத்திற்கு உபரி நீரேயாகும்.

ஆகவே,தமிழகப் பகுதியில் உற்பத்தியாகி, கேரள ஆறுகளின் வழியாக வீணாக அரபிக்கடலில் கலக்கும் தண்ணீரை, தமிழகத்தின் நீர் பிடிப்பு பகுதியிலேயே தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கு கொண்டுவருவதன் மூலமும்.தமிழகத்தின் தண்ணீர் தேவையை நிறைவு செய்துகொள்ள முடியும்.

இப்படி தமிழக நீர் பிடிப்பு பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி சரிவான பாதையில் ஓடும் நீரை அதன் இயல்பான ஓட்டத்திற்கு மாறாக தமிழகத்தின் மேடான பாதையைத்தாண்டி கொண்டுவர முடியுமா? என்றால் நிச்சயம் முடியும்.இதே வழிமுறையில்தான் முல்லை பெரியாறு அணையும் தொழிட்நுட்பம் வளராத 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது.இப்போது நவீன தொழிட்நுட்பமும்,ஆற்றலும் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமான ஒன்றுதான்.
இதற்கு தேவையானது எல்லாம் மக்கள் மீதான, நாட்டின் மீதான ஆட்சியாளர்களின் பற்றும்,அக்கறையுமே ஆகும்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளம் அப்பட்டமாக அடாவடித்தனம் செய்கிறது என்பது உச்சநீதி மன்றத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அதன் அடிப்படையிலேயே தமிழகத்தின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு 142 அடியாக தண்ணீரை உயர்த்திக்கொள்வதற்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தனது கால் தூசுக்கு சம்மாகக் கூட கேரளா மதிக்கவில்லை.கேரளத்தின் இந்த அடாவடித்தனத்தை கண்டிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம்,அதற்கு நேர்மாறாக மீண்டும் ஒரு நிபுணர் குழு அமைத்து பிரச்சனையை இழுத்தடித்துவருகிறது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஆரம்பத்தில் நீர் இருப்பை குறைக்கச் சொன்னது கேரளம். இப்போது அணையையே உடைக்க வேண்டும் என்று அடாவடித்தனம் செய்கிறது.தனது அடாவடித்தனத்தை நிறைவேற்றிக்கொள்ள நன்கு திட்டமிட்டு கேரள மக்களிடையே பெரும் பீதியையும்,அச்சத்தையும் உருவாக்கி மலையாள இனவெறியை தூண்டிவருகிறது.

இதற்காக அணை உடைவது போன்று ஒரு குறும்படத்தையும்,இதே போன்று டேம் 999 என்ற திரைப்படத்தையும் எடுக்கவைத்து இவைகளை கேரள கிராமங்கள் தோறும் போட்டுக்காட்டி வருகிறது.

எனவே,டேம் 999 திரைப்படம் ஒரு தனி நபரால், தற்செயலாக எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல.அணையை உடைக்கும் கேரள அரசின் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இத்திரைப்படம் ஆகும்.

முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு அதற்கு பதிலாக தானே, தனது செலவில் புதிய அணைக்கட்டி தமிழகத்திற்கு தன்ணீர் தரப்போவதாக கேரள மற்றும் தமிழக மக்களை ஏய்த்துவருகிறது கேரள அரசு.கேரள அரசின் இந்த சதித்தனம் புரியாமல் தமிழகத்தில் உள்ள சிலரும் கேரள அரசின் இந்த பொய் பிரச்சாரத்துக்கு பலியாகின்றனர்.

முல்லை பெரியாறு அணையில் தற்போது தேக்கப்படும் நீரில் 104 ஆடி வரை உள்ள நீரை தமிழகம் பயன்படுத்த முடியாது.ஏனென்றால் அணைக்கட்டபட்டுள்ள இடத்தைவிட, தமிழக எல்லைப் பகுதி உயரமானதாகும்.இந்த உயரமான பகுதியில் சுரங்கப்பாதை அமைத்துதான் 104 அடிக்கும் மேல் உள்ள தண்ணீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

கேரள அரசு கட்டத்தீர்மாணித்துள்ள புதிய அணை,  முல்லை பெரியாறு அணையில் இருந்து 350 அடி தூர சரிவான கீழ்ப்பகுதியாகும்.இந்த இடத்தில் அணைக்கட்டினால் 149 அடிவரை உள்ள நீரை தமிழகம் பயன்படுத்த முடியாது.அணையின் உயரம் 150 அடிக்கு மேல் இருந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் வரும்.ஆனால் கேரளா கட்டதீர்மாணித்துள்ள அணையின் உயரமோ வெறுமனே 140 அடி மட்டுமேயாகும்.

எனவே புதிய அணைக்கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்று கேரள அரசு கூறுவது அப்பட்டமான பித்தாலாட்டம் ஆகும்.

இவ்வளவு அடாவடித்தனம் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளத்தின் செயலின் மூலம், கேரள மக்களுக்கும்,கேரளாவிற்கும் ஏதேனும் ஆதாயம் உண்டா என்றால் நிச்சயம் இல்லை.ஏனென்றால் கேரளாவில் விவசாயம் செய்யும் சமவெளிப்பகுதி மிகவும் குறைவாகும்.எனவே,கேரளாவின் விவசாயத்திற்கு இந்த தண்ணீர் பயன் படபோவதில்லை.நீர் மின் திட்டங்களுக்கும், தேவைக்கும் அதிகமாகவே நீர் உபரியாக உள்ளது. இப்படி உபரியாக உள்ள நீரை வீணாக அரபிக்கடலில் கொண்டு விடுவதன் மூலம் கேரளவிற்கு என்ன நன்மை ஏற்பட போகிறது? அப்படியானால் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளத்தின் நோக்கம்தான் என்ன?

தமிழத்திற்கு எதிராக இனவெறியை தூண்டி, கேரள மக்களை தமது பக்கம் கொண்டு வருவதுதான்,கேரள ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளின் நோக்கமாகும்.ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் தமது பிழைப்பிற்காகத்தான் கேரள மக்களை பலிகடா ஆக்குகிறார்கள்.கேரளத்தில் உள்ள அனைத்து ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளும்,குறிப்பாக அகில இந்திய கட்சிகளான கங்கிரசு,போலி கம்யூனிஸ்ட் கட்சிகள்,பாரதிய ஜனதா ஆகியவை போட்டிப்போட்டுக்கொண்டு கேரள மக்களிடையே மலையாள இனவெறியை ஊட்டிவருகின்றனர்.

இப்படி கேரள மக்களிடையே இனவெறி ஊட்டுவதால்,கேரள ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கு மட்டும்தான் ஆதாயமா? இதனால் ஆதாயம் அடைபவர்கள் வேறு யாரேனும் இருக்கிறார்களா?

முல்லை பெரியாறில் மட்டுமல்ல காவேரியிலும்,பாலாற்றிலும்,கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிப்பதையும்,இப்படி வஞ்சிப்பதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயலும் இந்தியா என்ற கட்டமைப்பு உடைந்து சிதறி விடும் என்று கூறப்படும் கூற்று சரிதானா? ஆகிய வினாக்களுக்கான விடையை அடுத்தத் தொடரில் பார்ப்போம்!


தொடர்புடைய பதிவுகள்:


1.டேம் 999:- மலையாள இனவெறியின் அடையாளம்.