விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Wednesday, 22 February 2012

கூடங்குளம்: திரு.உதயகுமாருடன் நேர்காணல். இடிந்தக்கரையில் இருந்து.

கூடங்குளம் அணு உலை நிலநடுக்கம்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களையும் தாங்கும் திறன் கொண்டது.ஆகவே இதனால் ஆபத்து ஏதுமில்லை என்று தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழு கூறியுள்ளது.இந்தக் கருத்து திட்டமிட்டே மத்திய அரசு,மாநில அரசு செய்தி ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் அணு உலையினால் ஏற்படும் பாதிப்பு இயற்கை பேரிடர்களால் மட்டுமல்ல,இயற்கை பேரிடர் ஏற்படாவிட்டாலும், அணு உலையினால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனைத்து தரப்பினரும் மூடி மறைத்து வருகின்றனர்.அதை அம்பலப்படுத்தும் வகையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய திரு உதயக்குமார் எமக்களித்த நேர்காணலை மறுபிரசுரம் செய்கிறோம்.  



1. கூடங்குளத்தில் அணு உலை அமைக்கம் திட்டத்தை எந்த ஆண்டில் இருந்து எதிர்த்து வருகிறீர்கள்?என்ன,என்ன வடிவங்களில் எதிர்த்து போராடி வருகின்றீர்கள்?
1997-98 காலகட்டத்தில் இருந்து இந்த கூடங்குளத்திற்கு எதிரான ஒரு லிப்ட் சர்வ் வச்சிருந்த நான், கம்யுனிசம் வாட்ச் அன் கவர்னர் மானிட்டர் அப்படிங்கர ஒரு லிப்ட் சர்வ் அதுல கூடங்குளம் சம்பந்தமான செய்திகளை தொகுத்து ஒரு செய்தி மடல் மாதிரி தொகுத்து போட்டு கொண்டு இருந்தேன் அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன்.இத்திட்டம் தொடங்கப்பட்ட 1988-89 காலக்கட்டதிலேயே இதற்கு எதிராக நாகர்கோவிலில் பல முயற்சிகள் செய்து இருக்கிறோம்.பிறகு சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகு,கோர்ப்பசோவ் பதவி இழந்த பிறகும்,ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பிறகும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அதற்கு பிறகு 1997-98 காலகட்டத்தில் இதற்கு எதிரான லிப்ட் சர்வில் செய்திகளை தொகுத்து போட்டுகொண்டு இருந்தேன்..பிறகு 2001-ல் திரும்பவும் நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த பிறகு 2001 நவம்பர் மாதம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை மதுரையில்       தொடங்கினோம். இதில் இருந்து தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.
2.அணு உலையால் மீன்வளம் எந்தளவிற்கு பாதிக்கப்படும்?
மீன் வளம் எந்தளவுக்கு பாதிக்கிறது என்றால் அணு உலையின் மையப்பகுதியை கோர் என்று சொல்லுவார்கள்,அதை குளிர்விப்பதற்கு கடலில் இருந்து தண்ணீர் எடுப்பார்கள்.அந்த தண்ணீர் அணு உலையை சுற்றிவரும் போது சூடாகிவிடும்.பின்பு கடலில்  கொட்டுவார்கள்அப்படி கொட்டும் போது,அணு சக்தி துறை என்ன சொல்லுகிறது என்றால் தண்ணீர் 7 டிகிரி தான் சூடாகும் என்கிறது.கல்பாக்கத்தில் 12 டிகிரி தண்ணீர், சூடாகிறது.இந்த தண்ணீரை தொடர்ந்து 24 மணி நேரமும்,வாரத்தில் 7 நாட்களும்,வருடத்தில் 365 நாட்களும் முழுவதும் கடலில் கொட்டும் போது நிச்சயம் அது கடலில் மாற்றத்தை உண்டுபண்ணும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு இருக்கும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு அளவு குறைவாக இருக்கிறது என்று சொன்னாலும் சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் கொஞ்சம், கொஞ்சமாக சிறுக,சிறுக 60 ஆண்டுகளில் இதன் கதிர்வீச்சும் அதிகமாகிவிடும்.இந்த சூடான ,கதிர்வீச்சு கலந்த  தண்ணீர் 60 ஆண்டுகள் கடலில் விடுவதால் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.கதிர்வீச்சால் கடலுக்கு ஆபத்தில்லை என்று சொல்லுவது பொய்.
அதே மாதிரி உப்பகத்தி ஆலை(Desalltation paln) 4 இடத்தில் வைத்துள்ளார்கள்,இதில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும் வெளிவரும்.இது 4 ஆலைகளில் இருந்தா அல்லது ஒரு ஆலையில் இருந்தா என்பது தெரியவில்லை.இப்படி ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும்,கழிவுகளும் உற்பத்தி செய்து இதையும் கொண்டு போய் கடலில் கொட்டினால்,இவைகள் கடலில் உப்பும்,அமிலத்தன்மையும் நிச்சயம் அதிகரிக்கும்.இதனால் இப்பகுதியில் உள்ள மீன் பிடி கிராமங்கள் மீன் பிடி தொழில் நிச்சயம் பாதிக்கப்படும்.அதாவது மீன் வளம் குறையும்,அப்படியே மீன் கிடைத்தாலும் நோய்வாய் பட்டு இருக்கும்.கல்பாக்கத்தில் உள்ள மீனவர்கள் சொல்கிறார்கள், ”எங்கள் பகுதியில் மின்வளம் குறைந்துவிட்டது பல வகையான மின்கள் கிடைப்பதில்லை”, என்று கூறுகிறார்கள்.அங்கு கல்விரால் மீன்கள் தான் கிடைக்கிறது,இதை மக்கள் விரும்பி சாப்பிடுவதில்லை,அப்படியே கிடைத்தாலும் அது நோய்வாய் பட்டு கிடைக்கிறது என்கிறார்கள்.ஆகையால் இந்த கூடங்குளம் அணு உலை செயல்பட ஆரம்பித்தால் இப்பகுதியில் உள்ள தூத்துக்குடி,கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்ட மீன்பிடி தொழில் நிச்சயம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
3.அணு உலையால் விவசாயத் தொழிலில் என்ன,என்ன பாதிப்பு ஏற்படும்?
இதே மாதிரி தான்.கடலில் எப்படி இந்த கழிவுகளை கொண்டு போய் விடுகிறார்களோ,அதே மாதிரி தான்.அதாவது புகை போக்கிகளில் இருந்து ’ தொடர்ச்சியாக தினசரி வெளியேற்றுதல்’ என்ற முறையில் சாதாரணமாகவே கழிவுகள் வெளிவரும்.அதில் அயோடின்,சிசியம்,ஸ்ராந்தியம்,டெலோரியம் இந்த மாதிரியான கதிர்வீச்சு தன்மை கொண்ட தனிமங்கள் காற்றில் கரைந்து,மிதந்து கொண்டே இருக்கும்,அன்று காற்று எந்தப்பக்கம் வீசுகிறதோ அந்த பக்கம் போய் இந்த கதிர்வீச்சு கணிமம் மண்ணில் போய் விழும்.கொஞ்சம் தப்பி வானத்துக்கு போகும்,அப்படி போவது கூட மேகங்களில் அமர்ந்திருந்து விட்டு மழை தண்ணீர் மூலம் மண்ணை அடைகிறது.இது போல தொடர்ந்து 60 ஆண்டுகள் நடைபெறும் போது மண்ணும் கதிர்வீச்சு தன்மையுள்ள மண்ணாகும்.இந்த மண்ணில் விளையும் பயிர்களும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.பசு மாட்டின் பால் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.நாம் சாப்பிடும் காய்கறிகள்,பழங்கள் என அனைத்து உணவு பொருட்களும் இப்படி விஷமாகி போகும்.இதனால் நிச்சயம் விவசாயம் பாதிக்கப்படும்.
4.அணு சக்தி சுற்றுச் சூழலை எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்?
சுற்றுச்சூழல் என்று பார்க்கும் போது மேலே கூறியது போல், காற்று நாசமாகி போகிறது.காற்றில் கதிர்வீச்சு பொருள் மிதந்து வருகிறது.கடல் நாசமாகிப்போகிறது.நிலம் பாழாகிறது.நிலத்தடி நீர் பாழாகிறது.இப்படி ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாழாகிப் போகும்.
5.சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
இப்படி பாதிப்புக்கு உள்ளாகும் போது,இது 60 ஆண்டுகளுக்கு நம்  மண்ணும்,தண்ணீரும்,காற்றும்  தொடர்ந்து கதிர்வீச்சால் பாதிக்கும்.இதனால் நமது உணவு சங்கிலி(food chain) ஆன உணவிற்குள்ளும் கதிர்வீச்சு போகும்.இதனால் நாம் உண்ணும் உணவு,காற்று,குடிக்கின்ற தண்ணீர் அனைத்தும் விஷமாகும்.இதனால் நிச்சயமாக பலவித நோய்கள் உருவாகும்.பலவிதமான நோய் என்று பார்க்கும் போது கதிர்வீச்சு நோய்(Radiational ill) முக்கியமானது.கதிர்வீச்சு என்று பார்க்கும் போது அது எல்லோர் உடலும் ஏற்றுக்கொள்ளாது.
அது வந்தால் எல்லோருக்கும் காய்ச்சல்,தலைவலி,வயிற்றுப்போக்கு வரும்.கதிர்வீச்சு அதிகமாகும் போது தோல் கருத்து புண்ணாகிப்போகும்.உடல் அளவில் பலமாக இருப்பவர்கள் நாளடைவில் கதிர்வீச்சின் தாக்கத்தால் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி புற்று நோய் ஏற்படும்.இவர்களின் குழந்தைகள் புற்றுநோய்,மனவளர்ச்சி குறைபாடு,உடல் உறுப்புகள் குறைபாடு உடையவர்களாக பிறப்பார்கள்.
உதாரணமாக கைகால் குட்டையாக,விரல்கள் குட்டையாக அல்லது குறைவாக இருக்கும்.ரத்த புற்று நோய்,ஒருக்கண்ணோடு பிறக்கும்.இப்படி ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வாழ்வில் அமைதி,நல்வாழ்வு அனைத்தும் பாதிக்கப்படும்.
6.அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழலை மீண்டும் சரி செய்ய முடியுமா?
செய்யலாம்,ஆனால் அது மிகவும் சிரமமானப் பணியாகும்.செர்னோபில் விபத்து நடந்து பக்கத்து நாடுகளான பெலுரு,லாட்வியா,எஸ்டோனியா போன்ற நாடுகளில் எல்லாம் கதிர்வீச்சு கழிவுகளின் படிவம் படிந்து, அந்த நாடுகளின் மண்வளம் பாழாகிவிட்டது.அதற்கு பல லட்சம் டாலர் செலவு செய்து அம்மண்ணை சுத்தம் செய்து, கதிர்வீச்சு இல்லாத உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
இப்போது ஜப்பானிலுள்ள புகுஷிமாவில் விபத்து நடந்து 9 மாதங்கள் ஆகப்போகிறது.அங்கு புவியின் மேலடுக்கு மண் நீக்கப்பட்டு கதிர்வீச்சு இல்லாத மண்ணாக்க முயற்சி செய்கிறார்கள்.ஆனால் இதற்கு மிகப்பெரிய பொருட் செலவு பிடிக்கும்.நம்மை போன்ற ஏழை நாடுகள் இது போன்ற தேவையற்ற செலவு செய்ய முடியாது.அப்படியே செய்தாலும் அது 100 சதவீதம் சுத்தமானதும் அல்ல.
7.மக்களை இந்த போராட்டத்தில் இவ்வளவு உணர்வு பூர்வமாக பங்கேற்க வைக்க
எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாண்டீர்கள்?
2001-ல் இருந்து கிட்டதட்ட ஒவ்வொரு மாதமும் கடலோர கிராமங்களுக்கு சென்று இளைஞர் அமைப்புகள்,பெண்கள் அமைப்புகள்,மீனவ சங்கங்கள்,விவசாய அமைப்புகளில் இந்த அணுமின்நிலையம் வந்தால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதைப்பற்றி பேசினோம்.அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன,அணுக்கரு பிளவு,சேர்ப்பு என்றால் என்ன,புற்றுநோய் இப்படி பல அடிப்படை தகவல்களை மக்களிடம் கொடுத்துள்ளோம்.இதை தொடர்பணியாக 11 ஆண்டுகள் செய்தோம்.இதன் மூலம் மக்களுக்கு அடிப்படை தகவல்கள் சென்று சேர்ந்தது.இவ்வாறு நடந்துகொண்டு இருக்கும் போதே புகுஷிமா அணு உலை விபத்து நடந்தது.இதனால் நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்று மக்கள் தெரிந்து கொண்டனர்.ஆகையால் நாங்கள் சொன்னது அனைத்தும் வெறும் சவடால் அல்ல என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்.மேலும் நாங்கள் வேறு ஆதாயத்துக்கோ,தேர்தலில் நின்று ஓட்டுவாங்குவதற்கோஅல்ல, என்று இதன் அடிப்படையில்தான் மக்கள் இந்த போராட்டத்தில் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.
மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வது வேறெந்த ஆதாயங்களுக்கும் அல்ல.தமது சொந்த வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக்கொள்வதர்குத்தான்.
8.இந்தப் போராட்டத்தில் மீனவ மக்கள் மட்டும் பங்கேற்கிறார்களா?விவசாயிகளும் பங்கேற்கிறார்களா?
மீனவ மக்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.இதற்கு காரணம் மீனவ மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை கொண்டவர்கள்.அவர்களுக்குத்தான் தெரியும்,இயற்கை கெட்டுப்போனால் தமது வாழ்வும் எதிர்காலமும் போய்விடும் என்று.அதனால்தான் அவர்கள் போராட்டத்தில் பெருமளவுன் பங்கேற்கிறார்கள்.
அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் இந்த போராட்டத்தை ஆரம்பத்தில் தவறாக நினைத்தார்கள்.பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.இது மீனவர்களின் பிரச்சனை என்று எண்ணினார்கள்.குறிப்பாக,தலித்,முஸ்லிம் கிராமங்களுக்கு போனால் அவர்கள் தமது பிரச்சனையில்லை என கருதினர்.
புகுஷிமா அணு உலை விபத்திற்கு பிறகுதான் நமது,விவசாயமும் இதன் மூலம் தமது வாழ்வும் பாதிக்கப்படும் என்று உணர்ந்துகொண்டனர்.தாம் உற்பத்தி செய்யும் விலைபொருட்கள்,விலை போகாது அப்படியே போனாலும்,போதிய விலைகிடைக்காது,என்பதையும் உணர்ந்தனர்.
ஆனால் அணுசக்திதுறை 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை தருவோம்.பேச்சுப்பறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவருவோம்,இதனால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என்று பொய் சொன்னார்கள்.இது பொய் என்று மக்கள் உணர்ந்த பிறகு அணுசக்திக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவு கலந்துகொண்டார்கள்.
9.அணு உலை இயற்கை சீற்றத்தினால் மட்டும் பாதிப்பு ஏற்படுமா?மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படுமா?
மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படும்.செர்னேபில் அணு உலை விபத்து முழுக்க மனிதத் தவறுகளால் நடந்தது.
இந்திய உள்ள அணு உலைகளிலும் பல சிறு,சிறு விபத்துகள் மனிதத்தவறுகளால் நடந்துள்ளது.பெரும்பாலான விபத்துகள் மனிதத்தவறுகளால்தான் நடக்கிறது.
இந்தியாவில் அணு உலைகளில் இருந்து வெளியேறும் கன நீரை குடிநீரில் கலக்கவிட்டு,அதனால் என்ன,என்ன வியாதிகள் ஏற்படுகிறது,என்ன சோதனையும் நடந்துள்ளது.இந்தியாவில் மனிதத் தவறுகள் தெரியாமல் மட்டுமல்ல,தெரிந்தே திட்டமிட்டும் நடந்துள்ளது.
10.அணு உலையில் இயல்பாகவே விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதா?
மனித தவறுகள்,இயற்கை சீற்றம் ஆகியவற்றோடு இயல்பாகவே விபத்துக்கள் நடக்கலாம் என்று இப்போது கூடங்குளத்தில் உள்ள விஞ்ஞானிகளும்,அதிகாரிகளும் சொல்கிறார்கள்.இப்போதே பல குழாய்கள் துருபிடித்துவிட்டது.ரஷ்யாவில் இருந்து கொண்டுவரப்படும் உதிரிப்பாகங்கள் தரமற்றவைகளாக உள்ளன.இதனாலும் விபத்துக்கள் ஏற்படும்.மேலும்,இப்போதைய சோதனையின் போதே மனித கால் அளவு தடிமனான ஒயர்கள் எரிந்துவிட்டன என்று சொல்கிறார்கள்.இப்படி பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.நன்றி!
-சூறாவளிக்காக இடிந்தகரையில் இருந்துமுகிலன்.

தொடர்புடைய கட்டுரைகள்:


1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!





Sunday, 19 February 2012

குடிப்பதற்கு கள்,சாவதற்கு அரளி இதுவே நமது மரபாம்! பாகம்-5

மது குடிக்கலாமா, கூடாதா என்பதைப் பற்றி தந்தை பெரியாரின் நிலைப்பாட்டைப் பற்றி  சென்றத் தொடரில் பார்த்தோம்.

மதுவினால் சமூகமும்,உழைக்கும் மக்களும் சந்திக்கும் தீமைகளைப்பற்றி மிக ஆழமான புரிதல் கொண்டிருந்த தந்தைப் பெரியார், அது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று தனது இறுதி மூச்சு வரை போராடினார்.மதுவை மது விலக்கினால் ஒழித்துவிட முடியாது. ஏனென்றால் மதுவிற்கு அடிமையானவர்கள் அதை விட்டுவிட விரும்பினாலும் அவர்களின் உடல் அதைச்செய்வதற்கு அனுமதிப்பதில்லை.

ஏனெனில் மது குடியர்களின் உடலை தனக்கு அடிமைப்படுத்தி விடுகிறது.இப்படி மதுவுக்கு அடிமையான உடல் அவன் உள்ளத்தையும் அடிமைப்படுத்தி விடுகிறது.குடியர்களின் இந்த அவல நிலையை மது விலக்கு கணக்கில் கொள்ளாமல் மறுக்கிறது.

இதனால் குடிகாரர்கள் எப்படியாவது குடிப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகிறது.குடியர்களின் இந்த உளவியலை சமூக விரோதக்கும்பல் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது கல்லாவை நிரப்பிக்கொள்கிறது.

குடியர்களின் இந்த உளவியலை சமூக விரோதக் கும்பலே புரிந்துகொள்ளும் போது அரசுக்கு புரியாதா? புரியும்.புரிந்தேதான் குடியர்களின் தேவையை ஒரே அடியாக மறுத்து அதன் மூலம் சமூக விரோதிகள் ஆதாயம் அடைய வழியை திறந்துவிடுகிறது.இதன் மூலம் அரசின் நோக்கம் நிறைவேறுவதோடு, அதன் இன்னொரு அங்கமான சமூக விரோதக் கும்பலின் நலனையும் நிறைவு செய்கிறது.



அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களை குடியர்களாக ஆக்குவதன் மூலம் அவர்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை,போராடுவதை தவிர்த்து தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது.அதே நேரத்தில் தனது இந்த நோக்கத்தின் நடைமுறையாளர்களாக செயல்படும் சமூக விரோதக் கும்பலுக்கு கூலியாக மதுவின் ஆதாயத்தை தருகிறது.இப்படி மதுவின் மூலம் பெரும் ஆதாயம் அடையும் சமூக விரோதக் கும்பலை நாளடைவில் அரசியலில் பங்கேற்க வைத்து, அவர்களை முன்னணி அரசியல் 

தலைவர்களாகவும்,ஆட்சியாளர்களாகவும் உருவாக்கி அரசுக்கும்,சமூக விரோதக் கும்பலுக்குமான இடைவெளியை குறைத்து விடுகிறது.

இதனால் தான் நிலவுகிற சமூக அமைப்பு நீடிக்கும் வரை மது விலக்கு என்பது சாத்தியம் இல்லை.இதை கோட்பாட்டு ரீதியாக வரையறுத்து தந்தை பெரியார் அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும்,இதை உள்ளடக்கிய தீர்வையே முன் வைக்கிறார்.

நிலவுகிற சமூக அமைப்பில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்பதையும் குடியர்களை ஒரே அடியாய் பட்டினி போடாமல் படிப்படியாக அதிலிருந்து அவர்களை விடுவிப்பது எப்படி என்பதை பற்றிய வழிமுறையை அரசுக்கு பரிந்துரைக்கிறார்.

எந்த ஒரு நிலையிலும் குடிப்பதை நியாயப்படுத்தாமல், குடிப்பதனால் ஏற்படும் தீங்குகளை தொய்வில்லாமல் பிரச்சாரம் செய்த அதே நேரத்தில், அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழிமுறையை தெளிவாக வரையறுத்து கூறுகிறார்.

எனவே மது அருந்தலாமா, கூடாதா என்பதைப்பற்றி நாம் புதியதொரு நிலைப்பாட்டை, வழிமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை.நாம் செய்ய வேண்டியதெல்லாம் தந்தை பெரியார் கடைபிடித்த வழிமுறையை கோட்பாடாக வரையறுத்து புரிந்துகொள்வதும்.அதை மேலும் செம்மைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுதான்.

இப்போது மீண்டும் ஒருமுறை நமது தந்தையின் பாதையையும், தம்மை தமிழகத்தின் புரட்சியாளர்கள் என்று தமக்குத்தாமே எழுதிவைத்துக்கொண்டு திரியும் கும்பலின் மது குடிப்பது பற்றிய வரையறுப்பையும் மீண்டும் ஒரு முறை ஒப்பிட்டு பார்ப்போம்.
“நம்மை பொருத்த வரையில் கள்,சராயம் முதலிய எவ்வகை மதுவையும் கையில் தொட்டது கூட கிடையாது.மலம் சாப்பிடுதைவிட மதுருந்துவதை கேவலமாய் கருதி வருகிறோம்”.

“நம் மாகாணத்தில் உள்ள மொத்த கள்,சாராயக்கடைகளை கணக்கெடுத்து அந்த எண்ணிக்கையை தாலுக்காக்கள்,சர்க்கிள்கள் தோறும் வருடம் கொஞ்சம்,கொஞ்சமாக குறைத்துவந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இல்லாமல் போகும்படியாக செய்துவிட வேண்டும்”. (தந்தை பெரியார்)

கடி உழைப்பாளர்கள் குடிப்பதில் தவறில்லை”.

அதே போல என்றாவது ஒருநாள் குடிப்பதும் பிரச்சனையில்லை,ஆனால் இங்கும் கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்”.(தமிழக புரட்சியாளர்கள்)

மேற்கண்ட இரண்டு நிலைப்பாடுகளில் எது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனை உயர்த்திப் பிடிக்கிறது.என்பதை புரிந்துகொள்வதற்கு தனித்த திறமை எதுவும் தேவையில்லை.

தந்தை பெரியார் தவறியும் குடியை நியாயப்படுத்தவில்லை,ஆதரிக்கவில்லை.
ஆனால் தம்மை உலக புரட்சிக்கே வழிகாட்டி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்தக் கும்பலோ குடியை நியாயப்படுத்துகிறது.கடின உழைப்பாளர்கள் குடிப்பதை ஆதரிக்கிறது.அதோடு கடின உழைப்பாளர்கள் என்று இந்த கும்பலின் வரையறுப்பையும் கீழே தருகிறோம்.

“மறுகாலனியாக்கம்,கடும் உழைப்பு நிறைந்த உதிரித்தொழிலையும்,அதிக பணிச்சுமையையும், வீடு,குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தி இருக்கும் சூழலில் குடி என்பது எளிதில் ஆனால் கொஞ்சம் செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது”,என்கிறது.

குடி,உழைப்பாளிகளை அதிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக உருவாக்கப்படும் உழைப்பாளிகளை எப்படி தனக்கு ஆட்படுத்துகிறது என்பதை வரையறுக்கும் இவர்கள், உள்ளூரிலேயே உள்ள கடின உழைப்பாளர்களையும், கடின உழைப்பில் இல்லாதவர்களையும் வளைத்துவிடும் உளவியலைப்பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்?
கடின உழைப்பாளர்கள் குடியின் பிடியில் சிக்கிக்கொள்வதற்கான  உளவியல் காரணத்தை வரையறுப்பது என்பது அவசியம் என்பதை நாம் மறுக்கவில்லை.ஆனால் இப்படி வரையறுப்பது குடியின் பிடியில் இருந்து குடியர்களை விடுவிப்பதற்கான வழி முறைகளை,உத்தியை உருவாக்குவதற்கா? அல்லது அதை நியாயப்படுத்துவதற்கா? என்பதுதான் நமது விவாதத்திற்குரிய பொருளாகும்.

தந்தை பெரியார் அவர்கள்,அரசு திட்டமிட்டே மக்களை குடியர்களாக ஆக்கியது என்பதை வரையறுத்து அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழி முறைகளைப்பற்றி தெளிவுப்படுத்துகிறார்.

ஆனால் தம்மை ‘புரட்சியாளர்கள்என்று கூறிக்கொள்ளும் இந்தக் கும்பலோ உழைப்பாளிகளின் ஒரு பிரிவினர் குடியின் பிடிக்குள் சிக்கிக்கொள்வதற்கான காரணங்களை வறையறுத்துவிட்டு அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை கூறாமல் கடின உழைப்பாளர்கள் குடிக்கலாம், என்றாவது ஒரு நாள் குடிப்பதில் பிரச்சனையில்லை என்று குடிப்பதை அங்கீகரித்து, நியாயப்படுத்துகிறது.

கடின உழைப்பாளர்கள் குடிக்கலாம் என்றால் கடின உழைப்பாளர்கள் என்று இவர்கள் கூறும் உழைப்பாளர்கள் மட்டுமல்ல மொத்த கடின உழைப்பாளர்களும் அதாவது விவசாயக்கூலிகள்,சிறு,குறு விவசாயிகள் உள்ளடக்கி நாட்டில் உள்ள அனைத்து பிரிவு உழைப்பாளர்களும் குடிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்கள்.

சமூகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பெருபான்மையினர் குடிக்கலாம் என்று ஒரு அமைப்பு வரையறுக்குமானால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பு தன்னை பாட்டாளிவர்க்க அமைப்பு என்று கூறுக்கொள்ள முடியுமா?அதற்குரிய தகுதி இப்படி வரையறுக்கும் ஒரு அமைப்புக்கு எள் முனை அளவாவது இருக்கிறதா?

எப்போதாவது குடிப்பதில் பிரச்சனையில்லை என்பதற்கும்,குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று மது பாட்டிலில் எழுதிவைத்துக்கொண்டே மதுவை விற்கும் அரசின் – முதலாளிகளின் நயவஞ்சக செயல்பாட்டிற்கும் இதற்கு என்ன வேறுபாடு உள்ளது.இவை இரண்டும் இரு வெவ்வேறான நிலைபாடுகள் அல்ல.மதுவினால் ஆதாயம் அடையும் இருவேறு பிரிவினரின் நிலைபாடுகள்தான் மேற்கண்ட இரண்டுமே.
எப்போதாவது குடிப்பது என்பது விதி விலக்கானவர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாகும்.குடிப்பது என்பது மனித உயிர்களின் வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாக இல்லாத போது,அது பெரும்பாலும் மனிதர்கள் அன்றாடம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல்,துன்பம் ஆகியவற்றை சிறிது நேரம் மறப்பதற்கும்தான் மதுவை தேர்வு செய்கிறார்கள்.மது மேற்கண்ட காரணங்களுக்காக அல்லாது ஒரு வகையான இன்பத்திற்காக குடிப்பவர்கள் விதிவிலக்கானவர்கள் மட்டுமே.

ஏனென்றால் மேற்கண்ட துன்பங்களும்,மன உளைச்சல்களும் மனிதர்களுக்கு ஏற்படுவது நிலவுக்கிற சமூக அமைப்பில் தவிர்க்கவியலாத விதியாகும்.இந்த விதிக்கு உட்படாதவர்கள் விதி விலக்கானவர்கள் மட்டுமே இருக்க முடியும்.எனவே மதுவை ஒருவிதமான இன்பத்திற்காக அருந்துபவர்களும்  இவர்கள்தான்.

எனவே பெரும்பான்மையானோர் இன்றைய சமூக வாழ்வில் ஆயிரம், ஆயிரம் வழிகளில் மேற்கண்ட மன உளைச்சல்களுக்கும்,சங்கடங்களுக்கும் ஆட்படுவது என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது.எனவே இதுதான் சமூக வாழ்வாக நிலவும் சூழலில், எப்போதாவது ஒருமுறை குடிப்பது என்பது சாத்தியமேயில்லை.ஒரு முறை குடித்துவிட்டால் அப்படி குடிப்பவர்கள் அதை மீண்டும்,மீண்டும் செய்வதற்குரிய சமூக அடித்தளமே இப்போது நிலவுவதால் எப்போதாவது குடிப்பவர்கள் நிச்சயம் அடிக்கடி குடிப்பவர்களாகத்தான் மாறுவார்கள்.

மதுவினால் யார் ஆதாயம் அடைகிறார்களோ அவர்கள்தான் மக்களிடையே மது அருந்துவதற்குரிய சமூக உளவியலையும் உருவாக்குகிறார்கள்.

குடிப்பதற்கான பழி குடிகாரர்கள் மீது போடப்பட்டாலும், தாம் குடிப்பதற்குரிய சமூக அடிப்படையை தாமே உருவாக்கிக்கொள்வதில்லை.அதை மதுவினால் ஆதாயம் அடையும் கும்பலே மிகவும் நயவஞ்சகமான முறையில் திட்டமிட்டு உருவாக்குகிறது.இப்படி உருவாக்கபடும் இந்த நயவஞ்சக சமூக அடிப்படை மொத்த சமூகத்தின் மீதும் திணிக்கப்படுகிறது.அதுவும் மக்களால் விரும்பி ஏற்கும் வகையில் அதன் செயல்பாடு அமைக்கபடுகிறது.

இந்த நயவஞ்சக முறையை உருவாக்குபவர்களும், சமூகத்தை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களும் ஆக இவ்விரு பிரிவினர் மட்டுமே இதை அறிவர்.
இதனால் ஆதாயம் அடையக்கூடியவர்களான- மது உற்பத்தியாளர்கள்-ஆட்சியாளர்கள்- இவர்களிடம் அண்டி பிழைப்பவர்கள்-மட்டுமே குடிப்பதை அங்கீகரிக்கவும், நியாயப்படுத்தவும் முடியும்.

இரண்டாவது பிரிவினரான பொருள்முதல்வாதிகள் குடிப்பதற்கான சமூக இயங்கியலை வரையறுத்து,அதை களைவதற்கான வழிமுறைகளை மட்டுமே 
பரிந்துரைக்கவும்,நடைமுறைப்படுத்தவும் முடியும்.

மேலே கண்ட இரு தரப்பினரில் தந்தை பெரியார் அவர்கள் பொருள்முதல்வாதம் என்ற சமூக விஞ்ஞானத்தை அறிந்திராவிட்டாலும் தமிழ் மக்கள் மீது தமக்கிருந்த காதலால் அவர்களின் நலன் என்ற வகையில் ஒரு பொருள்முதல்வாதியின் பாத்திரத்தை வகித்துள்ளார்.

ஆனால் ‘தமிழக புரட்சியாளர்கள்தம்மை பொருள்முதல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டாலும் அவர்கள் மதுவினால் ஆதாயம் அடையக்கூடியவர்களிடம் அண்டிப்பிழைக்கும் கும்பல் என்பதை தமது நிலைப்பாட்டின் மூலம் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்திக்கொண்டுள்ளது.

மேலும் இந்தக் கும்பல் முதலாவது பிரிவில் இருப்பதை நிரூபிக்கும் மேலும் ஒரு உதராணத்தையும் பார்ப்போம்.ஒரு மனிதனின் உயிர் பறிபோவதற்கு அரளி விதையை சாப்பிட்டாலும்,பாலிடாயிலை குடித்தாலும்,கத்தியை பயன்படுத்தினாலும்,துப்பாக்கியால் சுட்டாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றுதான்.

நமது மரபு என்பதற்காக சாவதற்கு அரளிவிதையையும்,கத்தியையும், ஒருவன் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியுமா? அல்லது அதை பரிந்துரைக்கத்தான் முடியுமா?

உடல் வலியை போக்குவதற்கான வலி நிவாரணியாக நமது மரபான கொல்லை உயர்த்தி பிடித்தால் அதை நாம் வரவேற்கலாம்,பாராட்டலாம். ஆனால் அதற்கு மாறாக பாலிடாயிலை விட நஞ்சு குறைவு என்பதற்காக சாவதற்கு அரளி விதையை நமது மரபு என்று ஒருவர் பரிந்துரைப்பதற்கு உரிமை ஏதேனும் உண்டா? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியவர்கள் யார்?

கள் நமது மரபு என்று இந்தக் கும்பல் கூறுவது குடியை நியாயப்படுத்தும் செயல் மட்டுமல்ல. மரபு என்ற நமது பண்பாட்டை,நாகரிகத்தை ,விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கொச்சைப்படுத்தும் செயலுமாகும்.

இந்தக் கும்பல் யார் என்பதையும்,இந்த கும்பலின் நோக்கம் என்ன என்பதையும் அடுத்தத் தொடரில் பார்ப்போம்!.

                                                தொடரும்.............
தொடர்புடைய கட்டுரைகள்:

1.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்!  பாகம்-2


2.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்! -1






Wednesday, 15 February 2012

மின்வெட்டுக்கு காரணம்:விவசாயிகளா,பன்னாட்டு நிறுவனங்களா?

தமிழக மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் இன்னல்களில் இப்போது முதன்மையான இடம் பிடித்துள்ளது மின்வெட்டே ஆகும்.அன்றாடம் எப்போது மின்சாரம் வரும்,போகும் என்பது யாருக்கும் தெரியாது.குறைந்தது ஒரு நாளைக்கு பத்துமணி நேரமாவது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் மக்களின் அன்றாட வாழ்வே நிலை குலைந்து போகிறது.சிறு தொழில்கள்,விவசாயம் ஆகியவை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.



மேற்கண்ட இன்னலோடு மேலும் ஒன்றும் சேரப்போகிறது என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயா அறிவித்துள்ளார்.தமிழநாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.இதை தடுக்க இழப்பை குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.விரைவில் மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சந்திக்கும் இழப்பின் காரணமாக திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் இந்த இழப்பு யாரால்,எதனால் ஏற்பட்டது என்பதை அறிவிக்கவில்லை.
ஆனால்,இந்த இழப்பை ஈடுகட்ட அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறையான மக்கள் மீதான மின்கட்டண உயர்வின் மூலம் இழப்பிற்கு மக்கள்தான் காரணம் எனபதை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.அதிலும் தமிழக மக்களில் பெரும்பான்மையினரான விவசாயிகள் மீதுதான் இக்குற்றச்சாட்டை மறைமுகமாக ஜெயா சுமத்தியுள்ளதுடன், அதற்கான தண்டனையையும் அறிவித்துள்ளார். அதுதான் மின்கட்டண உயர்வு.

மின்கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அறிவித்துள்ளாரே தவிர விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்வேன் என்று முதல்வர் அறிவிக்கவில்லையே.அப்படியிருக்கும் போது விவசாயிகளுக்கு தண்டனை அறிவித்துள்ளார் என்று எப்படி கூறமுடியும் என்ற வினா எழலாம்.உண்மைதான் முதல்வர் நேரடியாக விவசாயிகளுக்கு தண்டனை அறிவிக்க வில்லைதான்.

ஆனால் மின்கட்டண உயர்வால அனைத்து பொருட்களின் விலையும்,மின்கட்டண உயர்வுக்கு ஏற்ப உயர்ந்துவிடும்.நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களும்,நாட்டின் இதரப்பிரிவு மக்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவான வருவாய் உடையவர்களுமான விவசாயிகள், விலைவாசி உயர்வின் காரணமாக தமது வாங்கும் சக்தியை மேலும் இழப்பார்கள்.இதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.

நாட்டிலுள்ள மக்கள் பிரிவினரிலேயே விவசாயிகளுக்கு மட்டும்தான் அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது.எனவே மின்வாரியம் சந்திக்கும் இழப்புக்கு காரணமே விவசாயிகள்தான் என்ற தோற்றத்தையும் அரசு மக்களிடையே தோற்றுவித்துள்ளது,உண்மையில் மின்வாரியம் சந்திக்கும் இழப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தால் தான் ஏற்படுகிறதா?வேறு ஏதாவது காரணங்கள் உண்டா?போன்ற வினாக்களுக்கு ஆம்,இல்லை என்ற ஒற்றை வார்த்தை மூலம் விடை காண முடியாது.

மின் உற்பத்தி,நுகர்வு,நிர்வாகம் ஆகிய அம்சங்களை முழுமையாக கணக்கிலெடுத்து ஆய்வு செய்தால்தான் இன்று மின்சார வாரியம் சந்திக்கும் இழப்புக்கான உண்மையான காரணத்தை நம்மால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.இப்படி உண்மை விவரங்களிலிருந்து சரியானதொரு முடிவுக்கு வந்தால்தான், இதை களைவதற்கான தீர்வு என்ன என்பது பற்றிய சரியான முடிவுக்கும் நாம் வரமுடியும்.

எனவே 1947-க்கு பிந்தைய தமிழகத்தின் மின் உற்பத்தி,மின் தேவை,நுகர்வு,மின் ஆற்றல் மூலம் விளைந்த பொருளுற்பத்தி அகியவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்,

வ.எண்
ஆண்டு
மின் பயன்பாட்டு
அளவு மெகாவாட்டில்
மின் பயன்பாட்டு அதிகரிப்பின் அளவு மெகாவாட்டில்
1
1951
110
-
2
1951-61
301
191
3
1961-74
1470
1169
4
1974-80
2224
954
5
1980-90
3344
920
6
1990-97
6019
2675
7
1997-2002
7924
1905
8
2002-2007
10100
2176
9
2007-2011
12000
1900

மேலே கண்ட அளவில்தான் தமிழகத்தின் மின்தேவை அதிகரித்துவந்துள்ளது.இந்த தேவை அதிகரிப்பில் யார்,யார் எந்த விதத்தில் மின்சாரத்தை நுகர்ந்துள்ளனர் என்ற விவரத்தையும் இப்போது பார்ப்போம்.

வ.எண்
நுகர்வோர் பட்டியல்
மின்சார பயன்பாடு சதவிகிதத்தில்
மொத்த நுகர்வோரில் எண்ணிக்கை சதவிகிதத்தில்
1
தொழிற்சாலை
34.92
2.41
2
வர்த்தக நிறுவனங்கள்
10.43
12.63
3
வீடுகள்
27.5
66.56
4
விவசாயம்
20.93
8.83
5
பிற
6.67
9.57

மேலே கண்ட புள்ளி விவரங்களில் இருந்து எந்தத்துறையினர் மிகக் கூடுதலாக மின்சாரத்தை நுகருகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும்.
விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்துவோர் மொத்த நுகர்வோரில் 75.39% பேர்.இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவு 48.05%

மொத்த நுகர்வோரில் வெறுமனே 15.05% பேரே உள்ள தொழிற்துறையினரும்,வர்த்தக நிறுவனத்தினரும் நுகரும் மின்சாரத்தின் அளவோ 45.35%

விவசாயம் என்று தனியே பிரித்து பார்த்தால் மொத்த நுகர்வோரில்  8.83% பேரான இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவோ வெறுமனே 20.93% மட்டுமே

ஆனால் மொத்த நுகர்வோரில் 2.41% பேரான தொழிற்துறையினர் நுகரும் மின்சாரத்தின் அளவோ 34.92% ஆகும்.

அப்படியானால் மின்சாரத்தை அதிகமாக நுகரும்துறை தொழிற்துறையே தவிர விவசாயம் அல்ல.

இனி எதிர்காலத்தில் விவசாயத்திற்கும்,வீடுகளுக்கும் மின்தேவையின் அளவு அதிகரிக்கப் போவதில்லை.ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு வேளாண் பரப்பளவு குறைந்துவிட்டது.இது இனிவரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதேபோன்று தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஏறத்தாழ மின்வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டதால் இதற்கான மின்தேவையும் அதிகரிக்கப்போவதில்லை.

ஆனால் இதற்கு நேர் எதிராக தொழிற்துறைக்கும்,வர்த்தகத்திற்குமான மின் தேவை அதிகரிக்கும்.

எனவே எதிர்கால மின்சாரத்தேவை என்பது முக்கியமாக தொழிற்துறைக்குதான் அவசியமாகிறது.

ஆனால் நமது ஆட்சியாளர்களோ, மின்சாரத்தின் தேவை அனைத்துப்பிரிவு மக்களுக்கும் அதிகரிக்கும் என்பது போல பேசிவருகின்றனர்.மின்சார உற்பத்தியின் அளவை அதிகரிக்காவிட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பீதியூட்டுகிறார்கள்.இப்படி பீதியூட்டுவதன் மூலம் அணு சக்தியினால் மூலம் கடல்வளம்,விவசாயம்,சுற்றுச்சூழல்,மக்களின் உடல்நலம் ஆகியவற்றுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை மறைத்துவிட முயற்சிக்கிறார்கள்.
அதாவது தொழிற்துறையின் தேவைக்காக மொத்த நாட்டு மக்களின் வாழ்வையும் குழிதோன்ற புதைக்க முயற்சிக்கிறார்கள்.

 இங்கு தொழிற்துறையினர் என்றால் அவர்களில் பெருபான்மையினர் வெளிநாட்டு நிறுவனங்கள்தான்.இவர்களின் வருகைதான் நாட்டின் முன்னேற்றம் என்று மத்திய,மாநில அரசுகள் மக்களிடையே கூறிவருகின்றனர்.இப்படி கூறுவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு எல்லாவிதமான சலுகைகளையும்,வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.இவர்களால் நமது நாட்டிற்கு எவ்வித நன்மையும் இல்லை.
அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கினால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாகவும்,அதன் பிறகு சலுகை விலையிலும் மின்சாரம் தருகின்றனர்.தண்ணீரூம் இலவசமாக தருகின்றனர்.இதே போன்று வரியும் விதிப்பதில்லை.

இந்தியாவில் தொழில் தொடங்குவதால் இலவசமாக மின்சாரம்,தண்ணீர்,மலிவான விலையில் மனித உழைப்பு,வரி இல்லாதது ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அந்நிய நிறுவனங்கள் இங்கு படையெடுக்கின்றனர்.

அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவ்வளவு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய,மாநில அரசுகள் உள்நாட்டு தொழிற்துறைக்கு குறிப்பாக சிறு தொழில்களுக்கு எவ்வித சலுகையும் வழங்குவதில்லை.

மேற்கண்ட விவரத்தை தொகுத்து பார்க்கும் போது எதிர்காலத்தில் மின் தேவைக்கான அதிகரிப்பு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஏற்படப்போகிறது.அதோடு இப்போது தொழிற்துறைக்கு அளிக்கப்படும் மின்சாரத்தில் பெருமளவை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உறிஞ்சிக்கொள்கின்றன.அதுவும் இலவசமாக.
ஆனால் நாட்டில் 80% மக்களுக்கு இன்றளவும் வாழ்வுக்கான ஆதாரமாக உள்ள விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் மின்வாரியம் இழப்பை சந்திக்க நேருவதற்கான காரணம் என ஆட்சியாளர்கள் வதந்தி பரப்புகின்றனர்.

மின்வாரியம் மிகப்பெரிய இழப்பை சந்திப்பதற்கான மிக முக்கியக் காரணம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதும்,மின் வாரிய நிர்வாக சீர்கேடு,ஊழல்,மின் திருட்டு,மின் கம்பிகள் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவைதான் மின்சாரத்துறையின் இழப்புக்கு காரணமாகும்.
மின்சாரத்துறையை இழப்பிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மேற்கண்டவற்றை சரி செய்ய வேண்டும்.இதை செய்வதன் மூலம் மின்வாரித்தை லாபகரமான நிலைக்கு உயர்த்த முடியும்.

ஆனால் தமிழக அரசோ இதை செய்வதற்கு பதில் மின்கட்டணத்தை உயர்த்தி அப்பாவிகளான தமிழக மக்களுக்கு தண்டனை தர முயற்சிக்கிறது.

மத்திய அரசோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக, கூடங்குளம் அணு உலை மூலம் தமிழக மக்களின் உயிர்களை காவு கேட்கிறது.அணுக்கதிர் வீச்சின் மூலம் கடல்,நீர்,நிலம்,காற்று,சுற்றுசூழல் அனைத்தையும் மாசுபடுத்தி தமிழகத்தை பாலைவனமாக்கத்துடிக்கிறது.

இந்த அநீதிகளை இனியும் நாம் சகித்துக்கொள்ள போகிறோமா? தொடரும்….. 
 18 டிசம்பர்-2011 அன்று சூறாவளியில் பிரசுரம் ஆன கட்டுரை, தற்போது மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.