விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label கதிர்நிலவன். Show all posts
Showing posts with label கதிர்நிலவன். Show all posts

Tuesday, 20 September 2011

தவளை தன் வாயால் கெடும் ...!

எமது சென்ற காயடிக்கும் கட்சி என்ற கட்டுரைக்கும்,”சமச்சீர் கல்வி :முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனதுவினவும் அதன் தோழமை அமைப்புகளும் என்ற தொடர் விமர்சனக்கட்டுரைக்கும் பல்வேறு நண்பர்கள்,பதிவர்கள்,தோழர்கள் கருத்துகளையும்,விமர்சனங்களையும், கூறியிருந்தீர்கள். அதற்கு தற்போது விடையளிக்கின்றோம்.

1.ஹைதர் அலி.
”வினவுக்கு எதிராக எழுத வேண்டும் என்ற வரட்டுத்தனம் உங்கள் பதிவுகளில் தெரிகிறது”.என்று கூறி இருக்கிறீர்கள்,அது என்னவென்று குறிப்பாக எழுதுங்கள் விவாதிப்போம்!

2.வலிப்போக்கன்.
பாடுபட்டு கட்சியை வளர்த்தவர்களில் எங்களின் பங்களிப்பும் உள்ளதை ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.பிரச்சனை அதுவல்ல.நந்தவனத்தில் ஒர் ஆண்டி,அவன் ஆறேழு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தானடி ஒரு தோண்டி,அதை கூத்தாடி,கூத்தாடி போட்டுடைத்தாண்டி”,என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.இதைப்போன்று பல ஆயிரம் பேர் ரத்தம் சிந்தி,உயிர் துறந்து ,பல்வேறு தியாகங்களால் வளர்த்த அமைப்பை அதிகாரவர்க்கத்துக்கு பலி கொடுப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.இப்படி செய்வதுதான் உண்மையாகவே பாட்டாளிவர்க்க விடுதலையை நேசிப்போரின் கடமை.
இணையத்தளத்தின் தன்மைக்கு ஏற்ப, ஒரே பதிவாக அல்லாமல் எமது விமர்சனங்களை பலப் பிரிவுகளாக வெளியிடவேண்டியதாகிறது.இதைத்தான் நீங்கள் அவர்களை சுற்றி,சுற்றி வருவதாக கூறுகிறீர்கள்.அவர்கள் உங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது அவர்களின் பாட்டாளிவர்க்க தன்மையை வெளிப்படுத்தவில்லை.இதைப் பற்றி நீங்கள் அவர்களிடம் தான் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்!

3.கதிர்நிலவன்.
எமக்கு அரசியல், சித்தாந்தம் கற்பித்த தோழர் மூடக்கிழவனைப் பற்றி நாங்கள் எமது கட்டுரையில் ஏற்கனவே எழுதியுள்ளோம்.அவர் சார்ந்துள்ள அமைப்பு அவரை சூறாவளியில் எழுதக்கூடாது என்று தடைவிதித்ததால் அவர் சூறாவளியில் எழுதவில்லை.ஆனால் நாங்கள் மீண்டும் சூறாவளியை இயக்க ஆரம்பித்த பின்னர், தமது பகுதியில் நடந்த இருப்போராட்டச்செய்திகளை சூறாவளியில் வெளியிடுமாறு அனுப்பிவைத்தார்,அச்செய்திகள் இரண்டையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

நாங்கள் அமைப்பின் ஆதரவாளராக வெளியில் இருந்துதான் ஆதரவளித்தோம்,இப்போது நாங்கள் உங்கள் அமைப்பை ஆதரிக்கவில்லை என்பது எமது தொடர்கட்டுரைகளில் நாங்கள் எழுதியதிலிருந்து கூடவா உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை?
தோழர் மூடக்கிழவன் தற்போது உங்கள் அமைப்பில் எந்த நிலையில் உள்ளார் என்பது எங்களுக்கு தெரியாது.எமக்கு அரசியல்,சித்தாந்தம் போதித்த தோழர் மூடக்கிழவன் தற்போது,தமது அமைப்பில் உட்கட்சி போராட்டம் நடத்துவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.அண்மையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய போது கூட உங்கள் அமைப்பினர் தரவிரும்புவதாக கூறிய பொருளாதார ரீதியான உதவியை அவர் நிராகரித்துவிட்டார்,என்பதில் இருந்துதான் மேற்கண்ட முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.அதே நேரத்தில் அவரின் இருதய அறுவை சிகிச்சைக்கு நாங்கள் அளித்த பொருளாதார உதவியை ஏற்றுக்கொண்டார் என்பதில் இருந்துதான், அவர் எம்மையும்,உங்கள் அமைப்பின் மீதான எமது விமர்சனங்களையும்,ஏற்றுக்கொண்டிருக்கலாம் எனவும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.


விவிமு போராட்ட லேபில்களை நாங்கள் பயன்படுத்துவதாக கூறியிருக்கிறீர்கள்,அது என்னவென்று குறிப்பாக கூறுங்கள்!


வினவி-ல்இருந்து நாங்கள் எடுத்து மறுபிரசுரம் செய்த செய்திக்கட்டுரை விருத்தாசலம் விவிமு செய்தி என்பதையும் அதை சூறாவளியில் வெளியிடுமாறு தோழர் மூடக்கிழவன் எமக்கு வேண்டுகோள் வைத்தார் என்பதால் தான், அச்செய்தியை நாங்கள் மறுபிரசுரம் செய்தோம்.
விருத்தாசலம் வட்டார விவிமு கல்விக்கான மக்களின் உரிமை,விருத்தாசலத்தில்நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை,என்ற கட்டுரையை நாங்கள் 22.06.2011 அன்று சூறாவளியில் வெளியிட்டோம்.இதே செய்தியை செங்கொடி,பறையோசை ஆகியோர் தமது இணையதளத்திலும்,டாக்டர் ருத்ரன் அவர்கள் தனது முகநூலில்(face book) எழுதிய கட்டுரை ஒன்றிலும் கோடிட்டுகாட்டியிருந்தார்,ஆனால் வினவோ இந்தச் செய்தியை வெளியிடவில்லை.புதிய ஜனநாயகமும் தான் வெளியிட்ட கட்டுரையில், உண்ணாவிரதத்தின் மூலம் தனியார் ஆங்கில பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயக்குழுக்களின் நீதிபதி கோவிந்தராசன் குழு,நீதிபதி ரவிராச பாண்டியன் குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக்கோரியும்,தமிழகத்தில் நடத்தப்பட்ட உண்ணாவிரதங்கள் பற்றி எழுதப்பட்டிருந்த விமர்சனங்களை தவிர்த்துவிட்டுத்தான் அச்செய்தியை வெளியிட்டிருந்தது.ஆனால் செங்கொடி,பறையோசை இணையதளங்களும்,சூறாவளியும் விருத்தாசலம் விவிமு-வினர் அனுப்பிய செய்தியை முழுமையாக வெளியிட்டிருந்தோம்.மேற்கண்ட செய்தியை அரைகுறையாக வெளியிட்ட புதிய ஜனநாயகம்,அதை முழுமையாகவே வெளியிடாத வினவு ஆகியோர்களின் செயல்களைப் பற்றி உங்களால் அவர்களை கேள்விகேட்கமுடியுமா?


அமைப்பின் பலதோழர்கள் இணையதளம் ஆரம்பித்தது போன்றுதான் நாங்களும் தோழர் மூடக்கிழவனுக்கு இணையதளம் ஆரம்பித்துத் தந்தோம்.ஆனால் சூறாவளியோ வினவின் ரசிகராக இருந்துவிசில் அடிக்காமல் விவிமு-விற்கும், விவசாயிகளுக்கும் எப்படிப்பட்ட செய்திகள் தேவையோ அதை மட்டுமே ஆக்கப்பூர்வமாக எழுதி வெளியிட்டு வந்தார்.”உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது”, என்ற பழமொழி எந்த காலத்தில் உருவானது என்பதை சங்காலத்தில் இருந்து தொடங்கி களப்பிரர் காலம் வரை  முன்று ஆய்வுக்கட்டுரைகளை, மல்லாந்து துப்பினால் மார்பில்” என்ற கட்டுரைகளின் மூலம் எழுதி வெளியிட்டு வந்தார்.அந்த கட்டுரைக்கு தமிழ்மணம் நடத்திய போட்டியில் பரிசும் கிடைத்தது.


விருத்தாசலம் பகுதி தோழர்கள் மட்டுமே சூறாவளிக்கு தமது பகுதி போராட்டச்செய்திகளை அனுப்பிவைத்தனர்.அதைத்தான் சூறாவளியில் நாங்கள் அப்போதும்,இப்போதும் வெளியிட்டு வருகிறோம்.பிற பகுதி தோழர்களும் தமது பகுதி செய்திகளை எங்களுக்கு அனுப்பிவைத்தால் அவைகள் அரசியல்,சித்தாந்த ரீதியாக சரியாக இருக்குமேயானால்.அவற்றையும் வெளியிட நாங்கள் இப்போது கூட தயாராகவே இருக்கிறோம்.


அது சரி! எங்களை இப்படி கேள்விகேட்கும் நீங்கள், உங்கள் அமைப்பில் சுமார் ஐம்பது பேர்வரை இணையதளம் நடத்துகிறீர்களே? அவர்கள் உங்கள் பல்வேறு பகுதி அமைப்புகளின் செய்திகளை தமது இணையதளங்களில் வெளியிடுகிறீர்களா என்ன? அது பற்றி இதுவரை  நீஙகள் கேள்வி எழுப்பி இருக்கிறீர்களா?

விருத்தாசலம் வட்டாரத்தில் நடக்கும் போராட்ட செய்திகளை,அவர்கள் மண்டபத்தில் வைத்து எழுதுகிறார்களா? வெறு எங்கு வைத்து எழுதித்தருகிறார்கள் என்பதை இன்னமும் உங்கள் அமைப்பில் இயங்கிவரும் விருத்தாசலம் வட்டார விவிமு தோழர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்.இப்போதும் உங்களோடு இணைந்து செயல் படும் ஒருவட்டார பகுதியின் தோழர்களையே,இவ்வளவு தரக்குறைவாக உங்களால் எழுத முடிகிறது என்றால்,எங்களை எவ்வளவு வன்மத்தோடு பார்ப்பீர்கள் என்பதை அரசியல்,சித்தாந்த ரீதியாக ஏற்கனவே நாங்கள் கணித்தே வைத்துள்ளோம்.உங்களின் கருத்துகள் அனைத்தையும்,உங்களின் தனிப்பட்ட கருத்தாக நாங்கள் கருதவில்லை.நீங்கள் சார்ந்துள்ள வினவு மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் கருத்தாகவே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.இந்த அளவுக்கு ஒரு வட்டார பகுதி தோழர்களை நீங்கள் இழிவாக எழுதிய பின்னரும் கூட, விருத்தாசலம் விவிமு தோழர்கள்தான் இந்த அமைப்பில் தாங்கள் தொடர்ந்தும் இருப்பதை பற்றிய முடிவை  எடுக்க வேண்டும்.


வலிப்போக்கன்,கதிர்நிலவன் ஆகியோர் எம்மிடம் எழுப்பியுள்ள கேள்விகள் மூலம் வினவும் அதன் தோழமை அமைப்புகளும் கேள்விகளுக்கும்,விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இந்த கண்ணோட்டம்தான் அதிகாரவர்க்கத்தின் இயல்பான கண்ணோட்டம் ஆகும்,சோவியத் மற்றும் சீன சோசலிச குடியரசுகளில் பொருளுற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமூக உடைமைகளாக ஆக்கப்பட்டு இருந்தன,இவற்றை சோவியத்தில் தோழர் ஸ்டாலினுக்கு பின்னரும்,மக்கள் சீனத்தில் தோழர் மவோவிற்கு பின்னரும் கட்சியையும்,ஆட்சியையும் கைப்பற்றிய அதிகாரவர்க்க பாதையாளர்கள்,அதிகாரவர்க்க உடைமையாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக உருமாற்றம் செய்தனர்.அவர்களின் சீடர்களாகிய நீங்களும் அப்படித்தான் தங்களை கேள்விகளுக்கும்,விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக கருதிக்கொள்கிறீர்கள்.உங்களது அதிகாரவர்க்க மனோபாவத்தை இதன் மூலம் மீண்டும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.


4.கடவுள்.
சமச்சீர்கல்வியால் தனியார்  பள்ளிகளில் கல்விக்கட்டணம்,குறையாது என்பதற்கான பதிலை எமது முதலாவது கட்டுரையான சமச்சீர்கல்வி….!கார்ப்ரேட்மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பனக்கும்பலுக்கு விழுந்த அடி! என்ற கட்டுரையிலேயே மிகத்தெளிவாக எழுதியுள்ளோம்.அக்கட்டுரையையும் அதனோடு தொடர்புடைய ஏனைய கட்டுரைகளையும் கவனமாக வாசியுங்கள்.உங்களது கேள்விகளுக்கான விடை அவற்றில் நீங்கள் பெறலாம்.


புரட்சி,புரட்சிக்கு பின்னால் அமையும் சமூக அமைப்பு ஆகியவற்றின் மீது நக்சல்பாரி அமைப்பின் நிலைப்பாடே ,எமது நிலைப்பாடாகும்.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஒரே புரட்சிகர அமைப்பாக விளங்கிய மக இக சார்ந்த அமைப்பின் நிலைப்பாடே எமது நிலைப்பாடாகும்,இந்த நிலைபாடுகளுக்கு விரோதமாகத்தான் இந்த அமைப்புகள் தற்போது செயல் படுகின்றன என்பதே எமது விமர்சனமாகும்.


நாங்கள் தற்போதைய  சமூக சூழலில் மேற்கண்ட நிலைபாடுகளில் ஏதேனும் மாற்றம் தேவையா என்பதைப் பற்றி இனிமேல்தான் ஆய்வு செய்ய வேண்டும்.


எமது சென்ற கட்டுரையில்”இந்த அமைப்புகள் பற்றி நாங்கள் கட்டுரை எழுதுவதற்கு முன்பே முழுமையாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவில்லை.கட்டுரைகளின் வளர்ச்சிப் போக்கில்தான் ஆய்வு செய்தோம்.இதனால்தான் இந்த அமைப்புகளைப் பற்றி எமது ஆரம்பக்கட்டுரைகளில்,அரசியல்,சித்தாந்த ரீதியாக உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அதே நேரத்தில்,இந்த அமைப்புகளிடம் தோழமை ரீதியான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தோம்”, என்று எழுதியுள்ளோம்.இந்தகட்டுரையும் இது தொடர்புடைய ஏனைய கட்டுரைகளையும் கவனமாக வாசியுங்கள்! நன்றி!..

தொடர்புடைய கட்டுரைகள்:
                      


3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2