விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Tuesday, 2 August 2011

சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2



சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2

                     பூனை கண்ணை மூடிக்கொண்டு,
பூலோகமே இருண்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளுமாம்!





சமச்சீர் கல்வி விவகாரத்தில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும்,அதிலும் குறிப்பாக இவர்களின் புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம்,வினவு ஆகிய ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நிலைப்பாட்டை முதன்மையானது என கூறிவருகின்றன.இதை எமது முந்தைய கட்டுரைகளிலும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்
எமது விமர்சனங்களுக்கு மேற்கண்ட அமைப்புகளும்,அவற்றின் ஊடகங்களும் இதுவரை பதிலேதும் தரவில்லை.அதற்குமாறாக தமது நாலாந்தர ஆதரவாளர் ஒருவர் மூலம் எமது விமர்சனத்துக்கு உள்நோக்கம்  கற்பித்து எம்மை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.நாங்கள் இப்படி கூறுவதற்கு என்ன ஆதாரம் என்று வாசகர்களும்,மேற்கண்ட அமைப்பினரும் கேட்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.மேற்கணட அமைப்புகளின் நாலாந்தர ஆதரவாளர் எமது நோக்கத்துக்கு உள்நோக்கம் கற்பித்து கொச்சைப்படுத்துவதையும்,எமது விமர்சனக்கட்டுரைகளுக்கு பதிலேதும் கூறாமல்,இவர்களின் மேற்கண்ட நாலாந்தர ஆதரவாளர் கூறுவதை போன்று எமது விமர்சனக்கட்டுரையை எவரும் சீந்தவில்லை என்ற கருத்துதான் இவர்களிடமும் உள்ளது.என்பதைத் தான் இவர்களின் மெளனம் எமது கணிப்புகளுக்கு ஆதாரம் ஆகும்.தம் மீது விமர்சனம் வைப்பவர்கள் யார் என்பதைவிட அவர்கள் என்ன விமர்சனம் வைத்திருக்கிறார்கள் என்று தான் எந்த ஒரு ஜனநாயகவாதியும்,அதிலும் பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் ஆகும்.
     எமது இரு கட்டுரைகளையும் பார்த்துவிட்டு அவற்றின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளாமலேயே தியாகு,இயக்கம் ஆகியோர் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினர் என்ன எழுதுகிறார்கள் என்பதை பார்க்கமறுத்துவிட்டு அவர்கள் எதை செய்தாலும்,அதை எதிர்ப்பது என்ற கண்ணோட்டத்துடன் தமது இணையத்தளங்களில் அரைவேக்காட்டுத்தனமாக பிதற்றிவருகின்றனர்.தங்களை போன்றேதான் சூறாவளியும்,மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் எதிர்ப்பதாக எமது தலைப்புகளை மட்டுமே பார்த்துவிட்டு எமது கட்டுரைக்கு ஆதரவளிப்பதாக பின்னூட்டம் இட்டிருந்தனர்.இதன் பிறகு தான் நாங்கள் அவர்களின் இணையத்திற்கு சென்று அவர்களின் கட்டுரைகளை வாசித்து,அந்த கட்டுரைகளின் தரத்தை தீர்மானித்தோம்.அதே போன்று எமது இருகட்டுரைகளையும் வாசித்துவிட்டு தற்போது மக இக-அதன் தோழமை அமைப்புகளோடு ஈழ விவகாரத்தில் முரண்பட்டு மேற்கண்ட அமைப்புகளின் தோழமை உறவை இழந்திருக்கின்ற தோழர் இரயாகரன் அவர்கள் எமது இருக்கட்டுரைகளும் சரியான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுவருவதாகவும்,அவற்றை தாங்கள் கவனமாக அவதானித்து வருவதாகவும் பின்னூட்டம் இட்டிருந்தார்.ஈழ விடயத்தில் தோழர் இரயாகரனோடு, அவரின் நிலைப்பாட்டை விமர்சித்து சூறாவளியின் முன்னால் ஆசிரியர் தோழர் மூடக்கிழவன் கூர்மையான விமர்சனக்கட்டுரை ஒன்றை எழுதி, நாங்கள் சூறாவளி இணையம் ஆரம்பிப்பதற்கு முன்பே தோழர் இரயாகரனுக்கும்,வினவுக்கும் அனுப்பியிருந்தோம்.இன்னமும் தோழர் இரயாகரன் மீதான எமது விமர்சனத்தை நாங்கள் மாற்றிக்கொள்ளவில்லை.அதே போன்று வினவு எதை எழுதினாலும்,அதை ஆதரிப்பது என்ற அவர்களின்  ரசிகர்களைப் போன்று வினவுக்கு ஆதரவாக அந்த கட்டுரையை நாங்கள்  எழுதவுமில்லை.இப்படி ஈழவிடயத்தில் எமக்குள் முரண்பாடு நீடித்தாலும் கூட தோழர் இராயாகரன் அவர்களை மிகச்சிறந்த தோழராகவே சூறாவளி கருதுகிறது.தாம் எதை எழுதினாலும்,எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும்,அதை எந்த சந்தர்ப்பத்திலும்,எந்த காரணத்திற்காகவும் மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று கருதும் வரட்டுவாதியல்ல தோழர் இராயாகரன் என்பதை அவரின் இணையதளத்தில் அவர் வெளியிடும் கட்டுரைகளில் இருந்தே ,நாங்கள் கவனமாக ஆவதானித்து வருகிறோம்.அதோடு நாங்கள் மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் சமச்சீர்கல்வி விடயத்தில் அவர்களின் சீர்த்திருத்தவாத கண்ணோட்டத்தை எதிர்ப்பதை,எதிரிக்கு,எதிரி நண்பன் என்ற கண்ணோட்டத்தில் தோழர் இராயாகரன் எம்மை ஆதரிக்கிறார் என்று, வினவின் இரசிகர் பட்டாளம் கருதும்.ஆனால் நாங்கள் அப்படி கருதவில்லை.தோழர் இராயாகரனையும்,அவரது குழுவையும் இன்னமும் மிகச்சிறந்த தோழர்களாக கருதிதான் அவர்கள் எமக்கு தந்த ஆதரவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதற்காக எமது நன்றியை அவர்களுக்கு தோழமை உணர்வோடு தெரிவித்திருக்கிறோம்.எமது கட்டுரைகளுக்கு போலியான பரபரப்பான, விளம்பரமும், ஆதரவும் தேவை என்பதற்காக.,யார் எம்மை ஆதரித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நேர்மையற்ற தனம்,குறுக்கு புத்தி எம்மிடம் கிஞ்சித்தும் இல்லை என்பதை சுட்டிக்காட்டவே மேற்கண்ட விடயங்களை நாங்கள் பதிவு செய்கிறோம்.
     மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் எதை செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.என்று கருதுவர்களின் உளறல்களுக்கெல்லாம் பதில்சொல்லித்தான் தீரவேண்டும் என்று நாங்கள் வாதிடவில்லை.அப்படி செய்வது புரட்சிகர அமைப்புகளின் இணையம் நடத்துவதற்கான நோக்கத்தையையே திசைதிருப்பிவிடும்,என்பதையும் நாங்கள் மிக நன்றாகவே அறிவோம்.
     மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும்,எதை செய்தாலும் அதை எதிர்க்கவெண்டும் என்பதும் மக இக-விடமும் அதன் தோழமை அமைப்புகளிடமும் வெளிப்படுகிற தவறுகளையும்,திசைவிலகல்களையும்,புரட்சியின் மீதுள்ள மாளாகாதலாலும்,மேற்கணட புரட்சிகர அமைப்புகளின்,மீதான தோழமை உறவினாலும்.சூறாவளியில் வெளியிடப்படுகின்ற கட்டுரை என்று பார்க்காமல் அது எதுவாயினும்,எப்படிப்பட்டதாயினும்,அவற்றை தமக்கு எதிராக பார்ப்பது,அதை தமது நாலாந்தர ரசிகர்கள் மூலம் கொச்சைப்படுத்தி ரசிப்பதும்,மேற்கண்ட இருபிரிவினரும் எதிரும்,புதிருமாக நின்றாலும்,இவர்கள் இருவரிடமும் வெளிப்படும் மார்சிய-லெனினியத்திற்கு விரோதமான,அதிகாரவர்க்கத்தின் நலனை பிரதிபலிக்கும் சித்தாந்தமே அடிப்படையாகும்.
     முதலாளிகள் தமக்கிடையில் தொழிற்போட்டியின் காரணமாக இருவேறு முகாம்களாக பிரிந்துகிடப்பதின் பிரதிபலிப்புகள்தான் வினவையும்,அதன் எதிர்ப்பாளர்களையும் அதிகாரவர்க்கம் என்னும் ஒரே சித்தாந்தம் வழி நடத்தினாலும் இருவரும்  ஒரே குடையின் கீழ் ஒன்று சேருவதற்கான தேவை ஏதும் இப்போது இவர்களுக்கு எழவில்லை.ஒருவேளை மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சமச்சீர்கல்வி விவகாரத்தில் மட்டுமல்ல அனைத்துவிவகாரங்களிலும் சீர்திருத்த பாதையில் முழுமுற்றாக மூழ்கி அதிகாரவர்க்கம் என்னும் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாய் முற்றாகமாறிய பின்பு,இப்பிரிவினர்இருவரும் ஒன்றுசேர்வதற்கான தேவையும்,வாய்ப்பும் புரட்சிகர சக்திகள் தவிர்க்கவியலாத பெரும் சக்தியாய் ஆளும்வர்க்கத்தை முறியடிக்கும் அளவிற்கு பலம்பெரும் போது மட்டுமே ஏற்படும் என்பதை உலகின் பல நாட்டு பாட்டாளிவர்க்க வரலாறுகளில் நாம் பார்த்துதான் வருகிறோம்.
     எமது ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு இவ்வமைப்புகள் நேரடியாக பதிலேதும் தராமல்,பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதாக கருதிக்கொள்ளுவதை போன்று எமது விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதன் மூலம் அப்படி ஒரு விமர்சனம் எழவில்லை என்றே கருதிக்கொள்கின்றனர்.எமது விமர்சனங்களுக்கு வாசகர்கள் மத்தியில் பெருத்தவரவேற்பு இல்லை என்றும்,எமது கட்டுரைகளை சீந்துவதற்கு நாதியில்லை என்று வினவின் ரசிகர் எம்மை ஏளனம் செய்வதை வாசகர்கள் அறிவார்கள்.இப்படி அவர் கூறுவதை பார்த்து நாங்கள் வருத்தப்படவில்லை.இப்படி அவர் கூறுவதன் மூலம் அவர் தனது அரசியல் தரத்தையையும்,தனது கதாநாயகன் அரசியல் தரத்தையுமே பறைசாற்றிகொள்கிறார்.அதற்காக அவருக்கும்,அவரை இயக்குபவருக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.    
     தமிழகத்தின் ஒரே புரட்சிகரசக்தி என்று மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் நாங்கள் வரையறுத்து கூறும்போதே சமச்சீர்கல்வி விவகாரத்தில் அவ்வமைப்புகள் சீர்த்திருத்த புதைகுழியில் சிக்கிவிட்டதாக நாங்கள் கூறுவது,முரண்பாடு என்றும்,இதன் மூலம் நாங்கள் எமது நேர்மையின்மையை வெளிப்படுத்துவதாகவும்,ஆள்காட்டி வேளை செய்வதாகவும்,வினவின் ரசிகர்மன்ற தலைவர் தனது அறியாமையை எம்மை கொச்சைப்படுத்துவதாக கருதிக்கொண்டு வெளிப்படுத்திக்கொள்கிறார்.அந்த நபரைப்பற்றி நாங்கள் அறிந்துகொண்டவகையில் அவர் அந்த அமைப்புகளில் ஏதோ ஒன்றில் உள்ளவர் என்பதும்,அதிலும் முக்கிய பொருப்பு வகிப்பவர் என்றும் அடையாளம் கண்டிருக்கிறோம்.எனவே அவர் கூறுகின்றவற்றை அவரின் தனிப்பட்ட பிதற்றலாக நாங்கள் கருதவில்லை.இந்த அமைப்புகளின் சார்பில் இணையதளங்களில் குரல் கொடுப்பவர் என்றே,அவர் எம்மோடு பேஸ்புக்கில் எழுதுவதில் இருந்தும் உறுதியாக நம்புகிறோம்.எனவே அவரின் கூற்றுகள் அனைத்தையும் மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் நிலைபாடாகவே எடுத்துக்கொள்ளுகிறோம்.
     சோவியத்யூனியனில் தோழர் ஸ்டாலின் ஆட்சியின் போது ஏகாதிபத்தியங்களும்,கட்சியில் இருந்த அதிகாரவர்க்க பாதையாளர்களின் சீர்குலைவு வேலைகளினாலும்,சோவியத்யூனியனும்,அதன் மக்களும் பெரும் இழப்புகளை சந்தித்தனர்.இதை சமாளிக்க தோழர் ஸ்டாலின் மிகக்கடுமையாக போரடினார்.இப்போரட்டத்தின் போது அதிகாரவர்க்க கயவாளிகள் உண்மையான கட்சி தோழர்களையும்,மக்களையும் சதிகாரர்கள், தேசத்துரோகிகள் என்று குற்றம்சாட்டி,படுகொலை செய்தனர்.நாட்டில் இவர்களால் ஏற்படுத்தப்பட்ட பெரும்குழப்பத்தின் விளைவாக கட்சியிலும்,ஆட்சியிலும் துரோகிகள் யார்,நேர்மையானவர்கள் யார் என்பதை மிகத்தெளிவாக வரையறுத்து,துரோகிகளை களையெடுக்க முடியாததால்,கட்சிக்குள் இருந்த துரோகிகள் மூலம்,ஏகாதிபத்தியங்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டன.இவர்களின் இந்த எல்லா செயல்களுக்கும் தோழர் ஸ்டாலினே பொறுப்பு என்றும் அவரின் உத்தரவின் பேரிலேயே இப்படுகொலைகள் அனைத்தும் நிகழ்த்தப்பட்டதாகவும் உலகெங்கிலும் ஏகாதிபத்தியங்களும்,ஏகாதிபத்திய ஊடகங்களும் அவர்களின் ஆதரவாளர்களும்,தோழர் ஸ்டாலினை மட்டுமல்ல பொதுவுடமை சித்தாந்தத்தையும் கொச்சைப்படுத்தினர்.முற்றிலும் உண்மைக்கு புறம்பான கதைகளை,ஹாலிவுட் சினிமா பாணியில் ஏகாதிபத்தியங்கள் வீசிய எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்டு தோழர் ஸ்டாலினுக்கு எதிராக புத்தகங்களை எழுதிக்குவித்தனர்.
     சோவியத்யூனியனில் நடந்த மேற்கண்ட நிகழ்வுகளைப்பற்றி ஆய்வு செய்து பரிசிலித்த தோழர் மாவோ,தோழர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டை 60% சரியானது என்றும்,40% தவறானவை என்றும் வரையறுத்தார்.சோவியத்யூனியனின் அனுபவங்களில் இருந்து சீன கம்யுனிஸ்ட் கட்சியின் அதிகாரவர்க்க பாதையாளர்கள்,கட்சியிலும்,ஆட்சியிலும் பெரும்பான்மை பெற்று அவற்றை கைப்பற்றிய போது சீன மக்களின் தன்னிகற்ற தலைவராகவும்,நாட்டின் அதிபராகவும் இருந்த போதும் தோழர் மாவோ ராணுவரீதியான நடவடிக்கை எடுத்து,அதிகாரவர்க்க பாதையாளர்களை ஒடுக்கவில்லை.அதற்குமாறாக எமது மாபெரும் ஆசான் 6 மாதம் தலைமறைவாக இருந்து மக்களைத் திரட்டி மாபெரும் கலாச்சாரப்புரட்சியின் மூலம் அதிகாரவர்க்க பாதையாளர்களின் முதுகெலும்பை முறித்தார்.
     தோழர் ஸ்டாலினின் செயல்பாட்டில் 40% தவறானது என்று தோழர் மாவோ வரையறுத்ததால், தோழர் ஸ்டாலின் அவர்களை கம்யூனிஸ்ட் இல்லை என்று அறிவிக்கவில்லை.அதற்கு மாறாக தோழர் ஸ்டாலின் மக்கள் சக்தியை பயன்படுத்தி அதிகாரவர்க்க பாதையாளர்களை முறியடித்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.இச்சுட்டிக்காட்டுதலை ஊருக்கு உபதேசம் செய்யும் பாணியில்,போகிற போக்கில் சொல்லிவிட்டு போகாமல் தாம் கூறிய மக்கள் திரள் பாதை மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும்,ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்திய அதிகாரவர்க்க பாதையாளர்களுக்கு எதிராக செய்தும் காட்டினார்.
     மேற்கண்ட எமது ஆசான் தோழர் மாவோ உருவாக்கிய கோட்பாட்டு ஒளியில்தான் மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் நாங்கள் எமது நிலைப்பாட்டை வரையறுத்தோம்.சமச்சீர் கல்வி விவகாரத்தில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்திருத்தவாத பாதையில் செயல்படுகின்றன என்ற ஒரு அம்சத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த அமைப்புகளை புரட்சிகர சக்திகள் இல்லை என்று அறிவிக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் கோட்பாட்டு ரீதியான வரட்டுவாதிகளோ,பத்தினிகளோ அல்லர்.அப்படி ஒரு முடிவுக்கு வருவது பாட்டாளிவர்க்க கண்ணோட்டமோ அணுகுமுறையோ அல்ல என்பதை நாங்கள் மிக நன்றாகவே அறிவோம்.
\     அதேவேளையில் மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் சீர்த்திருத்தவாத கண்ணோட்டம்,சமச்சீர்கல்வி விவகாரத்தின் மூலம் அப்பட்டமாக இப்போது வெளிப்பட்டுவிட்டாலும்,அவர்களின் இந்த சீர்த்திருத்தவாத கண்ணோட்டம்,இவ்விவகாரத்தில்தான் முதன் முறையாக ஏற்பட்டதாக நாங்கள் கருதவில்லை.இவர்களிடம் இச்சீர்த்திருத்தவாத சித்தாந்தம் எப்போது,எங்கிருந்து,எந்த வடிவத்தில் உள்ளே நுழைந்தது, அது தற்போது இப்புரட்சிகர அமைப்புகளில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது, இதற்கெதிராக இப்புரட்சிகர அமைப்புகளில் உள்ள உண்மையான,புரட்சிகர தோழர்கள் மத்தியில் இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.இதற்கெதிராக அவர்கள் உட்கட்சி போரட்டம் ஏதேனும் நடத்துகிறார்களா? என்பன போன்ற ஏராளமான விவரங்களை  நாங்கள் சேகரிக்க வேண்டியுள்ளதோடு,இவர்களின்  பல்வேறு கோட்பாட்டு முடிவுகளையும்,செயல்பாடுகளையும் இவர்களின் அதிகாரப்பூர்வ இதழ்களான புதியஜனநாயகம்,புதியகாலாச்சாரம்,வினவு ஆகிய ஊடகங்களில் வந்துள்ள கோட்பாட்டுரீதியான கட்டுரைகளையும்,செய்திகட்டுரைகளையும்,நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.அதற்கான பணியை நாங்கள் ஏற்கனவே துவக்கிவிட்டோம்.எமது இந்த ஆய்வுபணிக்கு இக்குறுகியகாலத்திலேயே மிகமுக்கியமான ஆதாரங்களை திரட்டியிருக்கிறோம்.எமது இந்த பணிக்கு உதவவிரும்பும் தோழர்கள் தம்மிடம் உள்ள ஆதாரங்களை எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்குமாறு தோழமையுடன் கோருகிறோம்.அப்படி மின்னஞ்சல் அனுப்பும் தோழர்களின் பெயர்களை எந்த சந்தர்பத்திலும் வெளியிடமாட்டோம்,அதே நேரத்தில் எமது பணி மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளிடம் வெளிப்படும் பாட்டாளிவர்க்கத்துக்கு விரோதமான கோட்பாடுகளை,இணையதளத்தில் எழுதி அதன் மூலம் திருப்தி அடைவதுமட்டுமே எமது நோக்கமோ,இலக்கோ அல்ல.மேற்கண்ட தோழமை அமைப்புகளின் புரட்சிகர நிலைப்பாடுகள்,செயல்பாடுகள் அனைத்தையும் இணையதளத்தின் மூலம் மட்டுமே ஆதரித்தவர்கள் இல்லை  நாங்கள்!மேற்கணட அமைப்புகளின் ஆதரவாளர்களாக இருந்து அவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றவர்கள் நாங்கள்.இன்னமும் கூட நாங்கள் மேற்கண்ட அமைப்புகளின் உண்மையான ஆதரவாளர்கள்தான்.இப்புரட்சிகர அமைப்புகளின் சீர்திருத்தவாத பாதையை எதிர்ப்பதாலேயே நாங்கள் இவ்வமைப்புகளுக்கு எதிரானவர்கள் இல்லை.இவ்வமைப்புகளோடு நாங்கள் சித்தாந்த ரீதியாக, அடிப்படை நிலைப்படுகளில் மாறுபடவில்லை, ஆயினும் அவர்களிடம் வெளிப்படுகிற புரட்சிகர சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்த எமது அகநிலை மட்டுமே காரணம் என மேற்கண்ட அமைப்புகளும்,அரசியல் சித்தாந்த ரீதியாக அனைத்தையும் சீர்தூக்கி பார்க்க முடியாத காரணத்தால் எம்மீது குற்றச்சாட்டையும்,அவதுறுகளையும் அதன் ரசிகர்கள் பரப்புவார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம்.எமது இந்த எதிர்பார்ப்பின் படியேதான் மேற்கண்டவர்கள் செயல்படுவதையும்,வாசகர்கள் கவணமாக அவதானித்து வருகிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.எமது கட்டுரைகளுக்கு இணையதள வாசகர்களிடையே போதிய ஆதரவு,பின்னூட்டங்கள்  வரவில்லை என்பதாலேயே எமது கருத்துகள்,நிலைபாடுகள் தோற்றுவிட்டதாக மேற்கண்ட அமைப்பினர் வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம்.
     மேற்கண்ட இந்த பணியை  கட்டாயம் செய்வோம் என்றோ,செய்யமாட்டோம் என்றோ முன் தேதியிட்டோ,பின் தேதியிட்டோ முடிவு எதையும் நாங்கள் எடுக்கவில்லை.வரலாறு எமக்கிட்டுள்ள பணியைத்தான் நாங்கள் துவக்கியுள்ளோம்.எமது இந்த பயணத்தில் நாங்கள் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டுமா,இல்லையா? என்பதை எமது குழுவின் அகநிலையல்ல,வரலாற்றின் தேவை தான் அதை தீர்மானிக்க வேண்டும்.வரலாறு எம்மிடம் எதை கோருகிறதோ,அதை எப்படி கோருகிறதோ,எந்த வடிவத்தில் கோருகிறதோ அதை இணையத்தில் மட்டுமே செய்தால் போதுமா அல்லது மக்கள் மத்தியிலும் செய்ய வேண்டுமா? என்பதை வரலாறுதான் தீர்மானிக்க வேண்டும்.ஆகவே இணையத்தில் எமது விமர்சனத்தை கண்டும்காணாமல் இருந்துவிட்டாலே,நாளடைவில் நாங்கள் சோர்ந்துபோவோம் என்று மேற்கண்ட அமைப்பினர் கருதினால் அது எவ்வளவு மூடத்தனம் நிறைந்தது என்பதை வரலாறு அவர்களுக்கு நிரூபிக்கும்.ஒருவேளை இப்பணியை எமது குழுவில் உள்ள தோழர்களின் இறப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளால் தடைபட்டு நின்று போனாலும்,இதை செய்வதற்கு நிச்சயம் வரலாறு பலரை படைக்கும்,என்பதை எம்மை ஏளனம் செய்யும் அன்பர்களுக்கு தோழமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.மார்சியத்தை வரட்டு சூத்திரமாக அல்லாது இயங்கியல் கோட்பாடாக சமூகவிஞ்ஞானமாக கற்றுத்தேறுங்கள்.இதன் மூலம் இந்தியாவில் புரட்சிக்கு தடைகற்களாக உள்ள அனைத்தையும் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அயாராது பாடுபட்டாலும்,குறிப்பிடும் படியான முன்னேற்றம் ஏதும் அடையவில்லை,இனியும் அடையாது என்று கருதுவோரின் கனவுகளை களைப்போம்.இவ்வமைப்புகளின் முன்னேற்றம் என்பது முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டதற்கான காரணத்தை கண்டறிந்து அவற்றை களைய பாடுபடுவோம்! புரட்சிகர பயணத்தில் முன்னேறுவோம்!  
                                                        

தொடப்புடைய கட்டுரை:


 2.சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி-1


                                                                                                   
                                                                                                               தொடரும்…….

                                          புரட்சிகர வாழ்த்துகளுடன்  
                                                                                                                           சூறாவளி நிர்வாகக்குழு

                                                                                              
                                                                                                                                                                    
                                                                                                  .              
    

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

Redmeera said...

தோழர் சூறாவளி//

உங்கள் கருத்துகளை படித்தேன் உங்களுடைய நேர்மையான பாட்டாளி வர்க்க உணர்வு புரிகிறது.வினவு ரசிகர்கள் என்று தாங்கள் கூறுவதை ஏற்க முடியாது. ம.க.இ.கவின் ரசிகர்கள் கிடையாது. இங்கு ஒவ்வொரு தோழரும் தலைமைக்கு வளர்க்கப்படுகிறார்கள்.சமச்சீர் கல்வி போராட்டம் சீர்திருத்தபாதை என்று இருந்தாலும் இதை செய்தற்கு ஜனநாயக கட்சிகள் இங்கு இல்லை.ஆதலால் தான் இங்கு புரட்சிகர அமைப்புகள் களத்தில் இறங்கவேண்டிய தேவை ஏற்ப்பட்டது.சமச்சீர் கல்வி விசியத்தில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தினால் தனியார் கொள்ளையடிப்பது தடுக்கப்படும் என்பது சீர்திருத்தவாதம் தான் தோழர். பொது பாடதிட்டம் அமல்படுத்தப்பட்டால் தனியார் பள்ளி கொள்ளை சிறிது குறையும் என்பதுதான் உண்மை. இதை நான் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் இதை வைத்து எல்லாமே சீர்திருத்த பாதை என்று ஒரு அமைப்பை சொல்வது ஏற்கத்தக்கதல்ல.தவறுகளை திருத்திக்கொள்கிறவர்கள் கம்யுனிஸ்ட்டுகள்.

உங்களுடைய நடைமுறை, செயல்பாடுகள்,அமைப்பின் இயங்கியல் போன்றவற்றை வைத்துதான் உங்களுடைய விமர்சனத்தை மேலும் கூர்மையான பார்வையுடன் நோக்குவதற்கு உதவி புரியும்.ஆதலால் தங்களைப்பற்றியும், தங்களை செயல்பாடுகள் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்

raya said...

வணக்கம் தோழர்களுக்கு

உங்கள் கருத்துகளை தொடர்ந்து அவதானித்து படிக்கின்றோம். எம்;மை மகஇக ஒரு நாளில் துரோகியாக்கிய போது, அதற்கு முன் நாம் அவர்களுக்கு தனிப்பட எழுதிய தொடர்சியான விமர்சனங்களுக்கு பதில் தந்தது கிடையாது. இருந்தும் அவர்களை நாம் புரட்சிகர சக்தியாகவே தொடர்ந்து கருதி வருகின்றோம்.

இது நிற்க நீங்கள் முன்பு எமக்கு எழுதிய அனுப்பிய விமர்சனத்தை நாம் ஈமெயில் தொகுப்பில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிரதி இருந்தால் எமக்கு ஈமெயில் மூலம் அனுப்பிவைக்கவும். இன்று அதை மீளப் படிப்பது எமக்கு முக்கியமானது மட்டுமல்ல, அவசியமானதாக உள்ளது.

தோழமையுடன்
இரயாகரன்

இயக்கம் said...

சூறாவளிக்கு இயக்கத்தின் மறுப்பு

சூறாவளி தோழர்களே,
தாங்கள் இக்கட்டுரையில் //எமது இரு கட்டுரைகளையும் பார்த்துவிட்டு அவற்றின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளாமலேயே தியாகு,இயக்கம் ஆகியோர் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினர் என்ன எழுதுகிறார்கள் என்பதை பார்க்கமறுத்துவிட்டு அவர்கள் எதை செய்தாலும்,அதை எதிர்ப்பது என்ற கண்ணோட்டத்துடன் தமது இணையத்தளங்களில் அரைவேக்காட்டுத்தனமாக பிதற்றிவருகின்றனர்.தங்களை போன்றேதான் சூறாவளியும்,மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் எதிர்ப்பதாக எமது தலைப்புகளை மட்டுமே பார்த்துவிட்டு எமது கட்டுரைக்கு ஆதரவளிப்பதாக பின்னூட்டம் இட்டிருந்தனர்.இதன் பிறகு தான் நாங்கள் அவர்களின் இணையத்திற்கு சென்று அவர்களின் கட்டுரைகளை வாசித்து,அந்த கட்டுரைகளின் தரத்தை தீர்மானித்தோம்.// என்று சொல்லியுள்ளீர்கள்.

ஆனால் உண்மையில் இயக்கம் உங்களுக்கு ஆதரவளிப்பதாகப் பின்னூட்டம் எதுவும் இடவில்லை. இயக்கம் தங்களின் http://suraavali.blogspot.com/2011/07/blog-post_28.html கட்டுரைக்கு அளித்த பின்னூட்டம் இதுதான்: //சூறாவளி தோழர்களுக்கு வணக்கம் மாற்றுக்கருத்து இதழில் சமச்சீர் கல்வி - ஆளும் வர்க்க சதி கட்டுரை வந்துள்ளது அதை படிக்க
http://ieyakkam.blogspot.com/2011/07/blog-post_1768.html
http://ieyakkam.blogspot.com/2011/07/blog-post_5602.html
30 July 2011 08:40//
இதில் தங்களுக்கு ஆதரவளிப்பதாக எந்த வார்த்தையும் இல்லாத போதும், நாங்கள் உங்களுக்கு ஆதரவளித்ததாக நீங்களே சொல்லிக் கொள்வது வினோதமாக உள்ளது. ஒருவேளை நீங்கள் மாஞ்சு மாஞ்சு எழுதியும் வினவும் மகஇக‌வும் நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே என்ற உளவியல் பாதிப்பில், உங்களையும் ஒரு பொருட்டாக மதித்து பின்னூட்டம் போட்டதையே உங்களுக்கான ஆதரவு- அங்கீகாரம் என்று தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்களோ என்னவோ. அந்தப்பின்னூட்டமும் சமச்சீர்கல்வியில் உள்ள ஆளும் வர்க்க சதியை சரியாக‌ப் புரிந்துகொள்ளாமல் அதுபற்றிய‌ கட்டுரைகளை தாங்கள் எழுதியதால் இந்தக்கட்டுரையைப் படியுங்கள் என்று பரிந்துரை செய்வதற்கே இடப்பட்டது. உங்களின் தரநிர்ணயத்திற்கல்ல. எனவே மீண்டும் நாங்கள் தெளிவாக அறிவித்துக் கொள்கிறோம் நாஙகள் உங்களுக்கு ஆதரவளிப்பதாகப் பின்னூட்டம் எதுவும் இடவேயில்லை.

இயக்கம் said...

சூறாவளி தோழர்களே,
உங்களது கட்டுரைகளின் உள்ளடக்கத்தை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களது கட்டுரைகளின் உள்ளடக்கத்தை மட்டுமல்ல; உங்கள் முரண்பாட்டின் உள்ளடக்கம் பற்றியும் எங்களுக்குப் புரிதல் உண்டு. அதையும் தெளிவுபடுத்திவிடுகிறோம். வினவு-மகஇக வுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடு கொள்கை அடிப்படையிலானது அல்ல. ம.க.இக.வின்அடிப்படைக் கொள்கைக்கும் அவர்களது நடைமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை சூறாவளி சுட்டிக்காட்டத் தொடங்கி அதனால் அந்த‌ இணையதளம் அந்த அமைப்பால் தடை செய்யப்படவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக‌ அமைப்பால் சூறாவளி இணையதளம் தடை செய்யப்பட்ட பின்னர் தடையை நீக்க முயன்று முடியாமல் போனதால் அப்போது அமைப்பு கையில் எடுத்திருந்த சமச்சீர்கல்விக்கான போராட்டத்தில் குறை கண்டுபிடிக்க முயன்று....அதற்கு அமைப்பிடமிருந்து எதிர்பார்த்த விளைவு (ஒருவேளை ஒரு கௌரவமான சமரசம்) வராததால் இன்னும் படிப்படியாக முன்னேறி ம.க.இ.க. ஒரு திரிபுவாதக் கட்சி என்ற நிலையை வந்து சேர்ந்திருக்கிறீர்கள். எனவே அமைப்பில் 50 பேருக்கு மேல் தனிநபராக இணையதளம் நடத்தும் போது தோழர் மூடக்கிழவனுக்கு நாங்கள் துவக்கிக் கொடுத்த சூறாவளி இணையத்தை மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை என்ற மனஸ்தாப‌த்தில் இருந்து எழும் குற்றம் கண்டுபிடிக்கும் குழுவாதப் போக்கின் வெளிப்பாடே உங்களது விமர்சனம். இதுவே எங்களது புரிதல்.

ஆனால் உங்கள் அமைப்பிற்குள் நடக்கும் குழு முரண்பாடுகளை வெளிப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஊடகம் இணையதளமெனும் பொதுவெளி என்பதால் அது எல்லோருக்கும் வெளியில் தெரிகிறது. கண்ணாடி வீட்டுக்குள் நடப்பது வெளியில் தெரிகிறது என்பதற்காக உங்கள் வீட்டுக்குள் நடக்கும் குழுச்சண்டையில் ஒருபக்கச் சார்பெடுத்து அதில் அரசியல் குளிர்காயும் அளவிற்கு நாங்கள் அரசியல் இல்லாதவர்கள் அல்ல. எங்களுக்கென்று புரட்சிகர அரசியல் உள்ளது. அந்த அரசியல் வழியில் உங்கள் நிலைபாடுகளை நாங்கள் விமர்சிக்கிறோம், அவ்வளவுதான். அது உங்களுக்கு ஆதரவானதோ அல்லது சூப்பர்லிங்க்ஸ் சொல்வதுபோல்கலைப்பு வாதமோ அல்ல. எங்களின் விமர்சனங்களே உங்களை கலைத்துப் போட்டுவிடும் என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

இயக்கம் said...

சூறாவளி தோழர்களே,
//எமது இரு கட்டுரைகளையும் பார்த்துவிட்டு அவற்றின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளாமலேயே தியாகு,இயக்கம் ஆகியோர் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினர் என்ன எழுதுகிறார்கள் என்பதை பார்க்கமறுத்துவிட்டு அவர்கள் எதை செய்தாலும்,அதை எதிர்ப்பது என்ற கண்ணோட்டத்துடன் தமது இணையத்தளங்களில் அரைவேக்காட்டுத்தனமாக பிதற்றிவருகின்றனர்.// என்று சொல்கிறீர்கள். இது உண்மையில் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினரை மனம்குளிரச் செய்வதற்காகவே இதனைச் சொல்கிறீர்கள் என்று கருதுகிறோம். அவ்வாறு இல்லை என்றால், இயக்கம் தளத்தில் http://ieyakkam.blogspot.com/ மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினருக்கு எதிராக இயக்கம் முன்வைத்துள்ள விமர்சனங்களில் எது அரைவேக்காட்டுத்தனமானது; எது பிதற்றல் என்று குறிப்பிட்டு விமர்சித்தால் விவாதிக்க ஏதுவாக இருக்கும். வினவு-ம.க.இ.க-விடம் நீங்கள் எதிர்பார்க்கும் விமர்சன நேர்மை உங்களிடமும் இருக்கிறது என்றால் அவற்றை குறிப்பிட்டு விமர்சித்திருக்கவேண்டும். அல்லது இப்படி மறைவாக உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்வதை விடுத்து நாங்களும்அறியுமாறு எங்கள் தளத்திலேயேவிமர்சித்திருக்கலாம். அல்லது லிங்க்-ஆவது கொடுத்திருக்கலாம். என்ன ஒரு புரட்சிகர நேர்மையோ! போகட்டும் இப்போதாவது இயக்கம் முன்வைத்துள்ள விமர்சனங்களில் எது அரைவேக்காட்டுத்தனமானது; எது பிதற்றல் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா தோழர்களே.

thiagu1973 said...

http://thiagu1973.blogspot.com/2011/10/blog-post.html

thiagu1973 said...

இயக்கம் தோழர்களே

சூறாவளி தோழர்கள் இந்த கேள்விகளை மூடகிழவன் என்ற தோழரிடம் அனுப்பி இருப்பார்கள் பதில் வர காலதாமதமாகலாம்