விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Friday, 7 October 2011

பொருளும்,சிந்தனையும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால்,ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்துகொண்டுள்ளது-தோழர் மாவோ.

இயற்கையில் உள்ள செல்வத்தை-சமூக செல்வத்தை மனிதர்கள் தங்களுக்கிடையில் எப்படி பகிர்ந்துகொள்கிறார்கள்,அவற்றின் மீதான அவர்களின் பங்கும் ,பங்களிப்பும் என்ன என்பதில் இருந்து மனித சமூகத்தில் நிலவும் மக்கள் தொகுதிகளே வர்க்கங்களாகும்.

சமூகத்தில், சமூக செல்வத்தில் மக்கள் தொகுதிகளுக்குள் நிலவும் பங்கும் பங்களிப்பும்தான் ஒருவர் எப்படி சிந்திவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.இதைத்தான் வாழ்நிலை என்கிறோம்.இங்கு வாழ்நிலை என்பது ஒரு மனிதன் சமூக உற்பத்தில் ஆற்றும் பங்கும், பங்களிப்புமேயாகும்,அதவது வர்க்கமேயாகும்.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து, இந்திய பூர்வகுடி மக்களோடு போரிட்டு வெற்றி,பூர்வகுடி மக்களுடனான இனக்கலப்பு ஆகியவற்றுக்கு  பின்னர்தான் நால்வருண கோட்பாட்டு அடிப்படையில் பார்ப்பன மதத்தை தோற்றுவித்தனர்.இந்த பார்ப்பனிய மதம் தோன்றுவதற்கு முன்னர் இந்தியாவில் மதங்கள் இருந்ததற்கான சான்றுகள் ஏதும் வரலாற்றில் இல்லை.இந்த நாள் வருண கோட்பாடு மக்களை கூறுபோட்டததுடன்.அவர்களை இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது.இதனால் இதை எதிர்த்த தத்துவமார்க்கங்கள் உண்டாயின. அவை வட இந்தியாவில் சாங்கியம்,சமணம்,பெளத்தம் ஆகியவைகள் தோன்றின.இந்த தத்துவப் பிரிவுகள் பார்ப்பனிய நால்வருண கோட்பாடுகளை மறுத்ததுடன் கடவுள் மறுப்புக் கொள்கையையும் அடிப்படையாக கொண்டிருந்தன.இவைகள் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் கூட பார்ப்பனியத்தை முறியடிக்கும் அளவுக்கு வலிமை பெற்றவைகளாக இல்லாதிருந்தன.

இத்தத்துவ மரபுகள் கருத்து அடிப்படையிலான ஆரம்பகால பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டிருந்தன.இவற்றை விஞ்ஞான பூர்வமாக நிருபிக்க தேவையான அடிப்படைகளை கொண்டிருக்கவில்லை.இந்த பலவீனத்தின் காரணமாக பார்ப்பனிய கருத்து முதல்வாத தத்துவத்தை தமது ஆரம்ப நிலை பொருள்முதல்வாத தத்துவத்தால் வெற்றி கொள்ள இயலவில்லை.இதன் காரணமாக இத்தத்துவ புரிவுகள் நாளடைவில் கரைந்து ,தேய்ந்து போயின அல்லது அவைகள் காணடிக்கப்பட்டன.

இந்த நிலைமை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமே பொருந்தும் ஒரு பொது பண்பாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துவந்த இந்த தத்துவ போராட்டம் 18-ம் நூற்றாண்டில்தான் ஒரு முடிவுக்கு வந்தது.இந்நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட விஞ்ஞான கண்டுபிடுப்புகள் அதிலும் உடல் இயங்கியல் துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் கருத்து முதல்வாத தத்துவதற்கு ஆப்பறைந்தது.கருத்து முதல்வாத,பொருள்முதல்வாத தத்துவங்களுக்கிடையிலான மிக நீண்ட நெடிய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.

தோழர் காரல் மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவம் மாபெரும் பாய்ச்சலை இத்துறையில் கொண்டு வந்தது.

இந்த புரட்சிகரமான மாற்றம் விஞ்ஞான துறையில் மட்டுமல்ல,சமூகத்துறையில் வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகவும் தோழர் காரல் மார்க்சால் வளர்த்தெடுக்கப்பட்டது.

கருத்து முதல்வாதத்தை, இயங்கியல் பொருள்முதல்வாதம் தத்துவார்த்த ரீதியாக வெற்றி கொண்டு இருந்தாலும், விஞ்ஞான துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தை முதலாளித்துவ வர்க்கம் தமது வர்க்க நலன்களுக்கு ஏற்ப மடைமாற்றிக்கொண்டன.இதனால் சமூகம் விஞ்ஞான பூர்வமான கண்டுபிடிப்புகள் மூலம் முழுமையாக மாற்றமடைவதை தடுத்து தனது வர்க்க நலன்களுக்கு ஏற்ப மட்டுமே  வரம்புக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தியது.இதன் மூலம் நவீன விஞ்ஞானத்தின் பலன்களை சமூகம் முழுமைக்கும் கிடைக்காமல்.சமூகத்தின் ஒரு சிறு கும்பல் மட்டுமே அனுபவிக்கும் ஒன்றாக வெட்டிச்சுருக்கியது.

இயங்கியல் பொருள்முதல்வாதம் போன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் தனக்குத்தானே இயங்கி  மாற்றத்தை உருவாக்கிக் கொள்ள கூடிய தத்துவமல்ல.இதை மனிதர்கள்தான் தமது நடைமுறை மூலம் மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டும்.


ஆகவே உலகில் சமூக மாற்றத்தை விரும்பும் அனைவரும் தமக்கான வழிகாட்டி தத்துவமாக மார்க்சியத்தையே கைக்கொள்ள முடியும்.மார்க்சியத்தை தமது வழிகாட்டி தத்துவமாக ஏற்கும் அனைவரும் தமது ஒவ்வொரு நிகழ்வையும் பொருள்முதல்வாத அடிப்படையிலேயே பார்க்கும் கண்ணோட்டத்தை பெற்றிருக்க வேண்டும்,இப்படி பார்க்கும்  ஆற்றல் கொண்ட அமைப்புகள்தான் பாட்டாளிவர்க்க அமைப்புகளாக இருக்கமுடியும்.பொருளியல் காரணங்களை அடிப்படையாக கொள்ளாமல் கருத்தியலை அடிப்படையாக கொண்டு சிந்திக்கும், செயல்படும் அமைப்புகள் பாட்டாளிவர்க்க அமைப்புகள் அல்ல.அவைகள் சொத்துடைமை வர்க்கத்தின்-ஆளும்வர்க்கத்தின் நலனை பிரதிபலிக்கும் அமைப்புகளேயாகும்.

இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவம் மாற்றம் ஒன்றையே மாறாத உண்மையாக கொண்ட தத்துவமாகும்.இந்த தத்துவமே சமூக மாற்றத்தையும் தவிர்க்கவியலாத ஒன்றாகவே போதிக்கிறது.ஆகவே இந்த தத்துவம் அதாவது இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவம் எப்போதுமே பாட்டாளிவர்க்கத்தின் தத்துவமாக உள்ளது.


ஆனால் கருத்துமுதல்வாத தத்துவமோ இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவத்திற்கு நேர்மாறாக மாற்றத்தை நிராகரிக்கிறது.இதன் காரணமாக இந்த கருத்து முதல்வாத தத்துவம் சொத்துடைமை வர்க்கத்தின் – ஆளும்வர்க்கத்தின் தத்துவமாக உள்ளது.எனவேதான் ஒரு அமைப்பை பற்றி நாம் கணிக்கும் போதும்,அந்த அமைப்பை ஆய்வுக்கு உட்படுத்தும் போதும் அந்த அமைப்பின் எழுத்துபூர்வமான கொள்கை கோட்பாடுகளை மட்டுமே வைத்துகொண்டு அந்த அமைப்பின் வர்க்கத்தன்மையை தீர்மானிக்க கூடாது.அமைப்புகளின் சமூக பிரச்சனைகளின் மீதான கண்ணோட்டம்,கணிப்பு,நடைமுறை ஆகியவற்றை மிகவும் நுட்பமாக கூர்ந்து கவனித்து ஆய்வுக்குட்படுத்தித்தான் முடிவுக்கு வரவேண்டும்.
ஒரு பொருள் போலியானதா உன்மையானதா என்பதை அதன் வடிவத்தை வைத்து முடிவுக்கு வரக்கூடாது.அதன் உள்ளடக்கத்தை சோதிப்பதன் மூலம்தான் அது போலியானதா,உண்மையானதா என்பதை உறுதிசெய்ய முடியும்.

இதை போன்றுதான் தம்மை பாட்டாளிவர்க்க அமைப்புகள் என்று பலரும் கூறிக்கொண்டாலும் இந்த கூற்றை வைத்துக்கொண்டோ அல்லது அவர்களின் கவர்ச்சிகரமான வர்த்தைகளை வைத்துக்கொண்டோ நாம் முடிவுக்கு வரக்கூடாது.மா-லெ-மா என்கிற இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவ ஒளியில் பரிசீலனைக்கும்,ஆய்வுக்கும் உட்படுத்திதான் முடிவுக்கு வரவேண்டும்.

மேற்கண்ட அணுகுமுறையின் அடிப்படையில் தனியார் ஆங்கில பள்ளிக்கான கட்டண நிர்ணயம்,சமச்சீர் கல்வி,ராஜீவ் கொலையில் தூக்குதண்டனை பெற்ற மூவர் விவகாரம் ஆகியவற்றில் மக இக வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்த்திருத்தவாத புதைகுழியில் மூழ்கிவிட்டன என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் எமது தொடர் கட்டுரைகளின் மூலம் நிருபித்தோம்.இவர்கள் சீர்த்திருத்தவாத புதைகுழியில் சிக்கி முழ்கி போனதற்கு அந்த அமைப்புகளின் தலைமையை ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவான அதிகாரவர்க்கம் கைப்பற்றிவிட்டது என்பதையும் வரையறுத்து கூறினோம்.எமது இந்த நிரூபணங்களுக்கு பதில் கூறமுடியாத இந்த அமைப்புகளின் ஆதரவாளர்களில் சிலர் இதை உட்கட்சி போராட்டத்தின் மூலம் தீர்த்திருக்கலாம் என கற்பனையாக பேசுகின்றனர்.நாங்கள் இந்த அமைப்புகளின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டது இந்த அமைப்புகளின் வெகுசன அரங்குகளின் ஆதரவாளர்கள் என்பதைதான்.அமைப்பிற்குள் எந்த வகையிலும் உள்ளே வராத நாங்கள் உட்கட்சி போராட்டத்தின் மூலம் இப்பிரச்சனையை எப்படி தீர்க்க முடியும் என்பதை இப்படி முன்மொழிபவர்கள்தான் கூற வேண்டும்.

ஆனால் உட்கட்சி போராட்டத்தை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தியும் எவ்வித தீர்வையும் முன்னேற்றத்தையும் நோக்கி எமது போராட்டம் நகரவில்லை என்றும் இதனால் நாங்கள் உட்கட்சி போராட்டம் என்ற எல்லையை தாண்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்றும் தோழர் மூடக்கிழவன் எமக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை படித்திருப்பீர்கள்.ஒரு பாட்டாளிவர்க்க அமைப்பில்தான் உட்கட்சி போராட்டம் என்ற வடிவம் ஆக்கப்பூர்வமான விளைவுகளையும்,தீர்வுகளையும் தரமுடியும்.ஆனால் பட்டாளிவர்க்க அமைப்பு என்று வார்த்தைகளில் மட்டும் கூறிக்கொள்ளும் அமைப்புகளிடம் இருந்து இப்படிப் பட்ட ஆக்கபூர்வமான விளைவுகள் ஏதும் ஏற்படாது என்பதைத்தான் தோழர் மூடக்கிழவனின் கடிதம் எமக்கு உணர்த்துகிறது.


இனி தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம்,சமச்சீர்கல்வி,மூவர் துக்கு ஆகிய விவகாரங்களில் மக இக சார்ந்த அமைப்புகளின் நிலைப்பாடுகளை இயங்கியல் பொருள்முதவாத கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வோம்.

                                தொடரும்……   

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

thiagu1973 said...

//மேற்கண்ட அணுகுமுறையின் அடிப்படையில் தனியார் ஆங்கில பள்ளிக்கான கட்டண நிர்ணயம்,சமச்சீர் கல்வி,ராஜீவ் கொலையில் தூக்குதண்டனை பெற்ற மூவர் விவகாரம் ஆகியவற்றில் மக இக வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்த்திருத்தவாத புதைகுழியில் மூழ்கிவிட்டன என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் எமது தொடர் கட்டுரைகளின் மூலம் நிருபித்தோம்.இவர்கள் சீர்த்திருத்தவாத புதைகுழியில் சிக்கி முழ்கி போனதற்கு அந்த அமைப்புகளின் தலைமையை ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவான அதிகாரவர்க்கம் கைப்பற்றிவிட்டது என்பதையும் வரையறுத்து கூறினோம்//


ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவான அதிகார வர்க்கம் என்றால் ஜெயலலிதாவா அல்லது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசா யார் கைபற்றி விட்டார்கள்

thiagu1973 said...

நீங்கள் செய்த உட்கட்சி போராட்டத்தை விரிவாக விளக்குங்கள்

ஏனெனில் எதிர்த்து பேசுபவர்களை “ஓடுகாலின்னு “ ஏசுவார்களே

சேம் பிளட் உங்களுக்கு வந்து இருக்கும்னு நினைக்கிறேன்

எனிகெள்

என்ன செய்ய போகிறீர்கள் மக இகவின் உண்மையான தொண்டர்களை திரட்டவும் ஒரு விழிப்புணர்வு கொண்டு வரவும் முயற்சி செய்யலாமே

த.சிவக்குமார் said...

சூறாவளி தோழர்களே
உங்கள் இலக்கிலிருந்து வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன்.
"விவசாயிகளின் முன்னேற்றமே நாட்டின்முன்னேற்றம்,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்" என்ற அறிமுகத்துடன் விவசாயிகள் பிரச்னைக்கென்றே ஒருதளம் என்று சூறாவளி இணையதளத்தை துவக்கினீர்கள். ஆனால் நீங்கள் பதிவிட்டுள்ள 56 கட்டுரைகளில் "ஒரு கண்ணுக்கு வெண்ணை,ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு!" என்ற ஒரு கட்டுரை மட்டும்தான் விவசாயிகளின் இன்றையநிலை பற்றி லேசாகத் தொட்டுள்ள கட்டுரை. அதிலும் நீங்கள் //விவசாயத்தை ஆளும்வர்க்கங்கள் நன்கு திட்டமிட்டே சிதைத்து வருவதற்கு எதிரானதாக, பிரச்சனையை தீர்ப்பதற்கான நேரடியான கோரிக்கைகளையோ முழக்கங்களையோ புரட்சிகர ஜனநாயக சக்திகள் முன்வைப்பதில்லை.தமது வெவ்வேறு திட்டத்தின் ஊடாக விவசாயத்தையும்,விவசாய பிரச்சனைகளையும் தொட்டுவிட்டு செல்லுகின்றனர்.இவைகள் விவசாயிகள் அனுபவிக்கும் பிரச்சனைக்கான அடிப்படையைக் கவனத்தில் கொண்டதாக இருப்பதில்லை...............நாளடைவில் விவசாயிகள் தமது அமைப்பில் இணைய முன்வராததை ஏனென்று ஆய்வுக்கு உட்படுத்தாமல்,விவசாயிகளை விவரமற்றவர்களாகவும்,பிற்போக்குவாதிகளாகவும் கருதிக்கொண்டு, இவர்கள் எந்த ஒரு போராட்டத்திற்கும் வரமாட்டார்கள் என்ற இயங்கியலுக்கு புறம்பான முடிவுக்கு வருவதோடு தாமும் விரக்தி அடைந்துவிடுகின்றனர்......// என்று கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லிவிட்டு நீங்களும் இதற்கு முந்தய "புரட்சிகர ஜனநாயக சக்திகள்" போலவே "பிரச்சனையை தீர்ப்பதற்கான நேரடியான கோரிக்கைகளையோ முழக்கங்களையோ " முன்வைக்காமல் "விவசாயிகள் அனுபவிக்கும் பிரச்சனைக்கான அடிப்படையைக் கவனத்தில் கொள்ளாமல்" "விவசாயத்தையும்,விவசாய பிரச்சனைகளையும் தொட்டுவிட்டு " //ஆகவே, விவசாயத்தை பாதுகாப்போம்! விவசாயிகளை பாதுகாப்போம்!! நாட்டை பாதுகாப்போம்!!! வாரீர்! // என்ற கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பழைய முழக்கங்களையே முன்வைத்து முடித்துக் கொண்டீர்கள்.

இருந்தாலும் உங்களை "விவசாயிகள் அனுபவிக்கும் பிரச்சனைக்கான அடிப்படையைக் கவனத்தில்" கொள்ளுமாறு செய்வதற்கே நான் //சூறாவளி தோழர்களே, இந்த அரசு விவசாயத்தை புறக்கணிக்கிறது; விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளது என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். நிலப்பிரபுவின் தொழிலே விவசாயம்தான். அதைத்தாண்டி அவன் வேறு துறையில் முதலீடு செய்கிறான் என்றால் அவன் நிலப்பிரபுவாகவே இருக்க முடியாது. அப்படியிருக்க, நிலப்பிரபுவின் விவசாயத்திற்கே இந்த அரசு முன்னுரிமை வழங்கவில்லை என்பதைப் பார்க்கும் போது நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு இந்த அரசில் என்ன பங்கு உள்ளது? நிலப்பிரபுத்துவ வர்க்கமும் ஓர் ஆளும் வர்க்கமாக இருந்தால் இந்த அரசின் அணுகுமுறை ஏன் அதன் வாழ்வாதாரமான விவசாயத்தையே புறக்கணிப்பதாக உள்ளது? அது ஆளும் வர்க்கமாக இல்லை ஆளப்படும் வர்க்கமாகவே இருக்கிறது என்றாலோ அல்லது நிலப்பிரபுத்துவ வர்க்கமே இந்தியாவில் இல்லை என்றாலோ "இந்தியாவின் அடிப்படை முரண்பாடு நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலானது" என்ற மா.லெ அரசியல் சித்தாந்தத்தின் வரையறுப்பு இன்றும் செல்லுபடியாகக் கூடியதுதானா? கிராமப்புரத்தில் வர்க்கப் போராட்டம் எந்தெந்த வர்க்கங்களுக்கிடையில் நடைபெறுகிறது அல்லது நடத்தப்பட வேண்டும்?2 October 2011 11:09 // என்ற பின்னூட்டம் இட்டேன்.

ஆனால் அதனை தாங்கள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இப்போது இந்தக் கட்டுரையிலும் //இனி தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம்,சமச்சீர்கல்வி,மூவர் துக்கு ஆகிய விவகாரங்களில் மக இக சார்ந்த அமைப்புகளின் நிலைப்பாடுகளை இயங்கியல் பொருள்முதவாத கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வோம்.// என்று தான் சொல்கிறீர்களே ஒழிய இந்த ஆய்வுப் பட்டியலிலும் விவசாயிகள் பிரச்னை இடம் பெறவில்லை.

நீங்கள் விவசாயிகள் பிரச்னையில் மக இக சார்ந்த அமைப்புகளின் நிலைப்பாடுகளை இயங்கியல் பொருள்முதவாத கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வதில் இருந்து துவக்கினால் உங்களது அடிப்படை இலக்கிலிருந்து விலகாமலேயே மகஇகவுடனான விவாதத்தை தொடரமுடியும் என்று கருதுகிறேன்.அல்லது அந்தப்பிரச்னையில் மகஇகவுடன் உங்களுக்கு உடன்பாடு உள்ளதோ?

தெனாலி ராமன் said...

நல்லா கேளுங்க சிவக்குமார். விவசாயத்த விட்ட அப்புறம் எப்பிடி நிலப்பிரபு நிலப்பிரபுவா இருப்பான். அவனோட உசிரான விவசாயத்துக்கே அரசு கொள்ளி போட்டுச்சுனா அவனுக்கே போட்ட மாதிரிதானே. நிலப்பிரபு சந்தைக்கு காய் கொண்டு போன அன்னிக்கே விவசாயிங்கிற பாத்திரத்த மறந்திருவாரே. அவரு ரைஸ் மில் கட்டுனா முதலாளி ஆயிடுவாறே. ரைஸ் மில் வச்ச நிலப்பிரபு ஒடுக்கும் வர்க்கமாவும், மத்த நிலப்பிரபு ஒடுக்கப்படும் வர்க்கமாவும் அரசோட பார்வை பட்டதால இருக்கிறாங்க• சரிதானுங்க• விடாதீங்க சூறாவளிய‌

வலையுகம் said...

சூறாவளி குழுவினர்க்கு நன்றி

நல்ல கேப் விட்டு எழுதி இருக்கிறீர்கள் படிக்க ஈஸியாக இருக்கு

நன்றி

SURYAJEEVA said...

உட்கட்சி போராட்டம் புக் கையில் இருந்தாலே நம்மளை கொலைகாரன பார்க்கிற மாதிரி இல்ல பார்ப்பாங்க

அதிரடியான் said...

சூறாவளித் தோழர்களின் கவனத்திற்கு...

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்!

http://athiradiyaan.blogspot.com/
2011/10/1.html

http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html

http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html

http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html

அன்புடன்,

அதிரடியான்

ரிஷி said...

தற்போது எளிதாக புரிவதுபோல எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

அடுத்த கட்டுரையில் சொல்வதாக சொன்னீர்களே... ஆளும் வர்க்கத்தின் அதிகார வர்க்கப்பிரிவு என்று. அது யார்னு இன்னும் சொல்லலியே..?!!

suraavali said...

ரிஷி அவர்களுக்கு //ஆளும் வர்க்கத்தின் அதிகார வர்க்கப்பிரிவு// என்று கூறியுள்ளீர்கள்.இந்த புரிதலே தவறானது.நாங்கள் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவான அதிகாரவர்க்கமாக மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் மாறிவிட்டனர் என்றுதான் கூறியுள்ளோம்.

ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவான அதிகாரவர்க்கம் தோழர் ஸ்டாலினுக்கு பிறகு சோவியத் ஒன்றியத்திலும்,தோழர் மாவோக்கு பிறகு சீனத்திலும் ஆட்சியை கைப்பற்றி சீன,சோவியத் சோசலிச குடியரசுகளை அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடுகளாக மாற்றினர்.இந்த வகையான ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாகத்தான் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் மாறிவிட்டன என்பதே எனது விமர்சனம்.

ரிஷி said...

//ரிஷி அவர்களுக்கு //ஆளும் வர்க்கத்தின் அதிகார வர்க்கப்பிரிவு// என்று கூறியுள்ளீர்கள்.இந்த புரிதலே தவறானது.நாங்கள் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவான அதிகாரவர்க்கமாக மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் மாறிவிட்டனர் என்றுதான் கூறியுள்ளோம்.//

ஓ! சரி..சரி. தற்போது தெளிவாக புரிகிறது.

//இவர்கள் சீர்த்திருத்தவாத புதைகுழியில் சிக்கி முழ்கி போனதற்கு அந்த அமைப்புகளின் தலைமையை ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவான அதிகாரவர்க்கம் கைப்பற்றிவிட்டது என்பதையும் வரையறுத்து கூறினோம்//

ஆனால் மேற்குறிப்பிட்டதைச் சொன்னது தாங்கள்தான். அதனால்தான் கைப்பற்றியது யாரெனத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.