விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Tuesday, 25 October 2011

மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? -தோழர் மாவோ

மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? -தோழர் மாவோ
மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா?இல்லை மூளையில் இயல்பாக உள்ளனவா? இல்லை.அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும் தோன்றுகின்றன; உற்பத்திக்கான போராட்டம்,வர்க்க போராட்டம்,அறிவியல் ஆய்வு என்ற மூவகை நடைமுறையிலிருந்து வருகின்றன.


மனிதனின் சமுதாய வாழ்வே அவனது சிந்தனையை நிர்ணயிக்கின்றது.முன்னேறிய வர்க்கத்தின் பண்பாக விளங்கும் சரியான கருத்துகள் ஒருகால் மக்கள் திரளினால் கிரகித்துக் கொள்ளப்பட்டதும்,இக்கருத்து சமூகத்தை மாற்றுக்கின்றன.உலகை மாற்றுகின்ற ஒரு பொருளாயத சக்தியாக வடிவெடுக்கின்றன.




மக்கள்,தமது சமுதாய நடைமுறையில் பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு,தமது வெற்றிகள்.தோல்விகள் இரண்டிலிருந்தும் செழுமையான அனுபவங்களைப் பெறுகின்றனர்.புறநிலை உலகத்தில் எண்ணற்ற தோற்றப்பாடுகள் மனிதனின் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம்புலன்களுக்கும் ஊடாகச் சென்று,அவனுடைய மூளையில் பிரதிபலிக்கின்றன.ஆரம்பித்தில் அறிவு புலக்காட்சியாக இருக்கின்றன.போதிய அளவு புலக்காட்சி அறிவு தொகுக்கப்பட்டதும்,அதில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்து அது பகுத்தறிவாக மாறுகின்றது.அதுவே கருத்துகள் என்று அழைக்கப்படுகின்றது.இது அறிதலின் ஒரு வளர்ச்சி போக்கு. இது அறிதலின் முழு வளர்ச்சி போக்கில் முதலாவது கட்டம்,அதாவது புறநிலை பருப்பொருளிலிருந்து அகநிலை உயர்வுக்கு செல்லுகின்ற,வாழ்நிலையிலிருந்து கருத்துகளுக்கு செல்லுகின்ற கட்டம் ஆகும்.(தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் உட்பட)ஒருவரின் உணர்வு அல்லது கருத்துக்கள் எல்லாம் புறநிலை யதார்த்த உலகை சரிவர பிரதிபலிக்கின்றனவா,இல்லையா என்பது இந்த கட்டத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இக்கட்டத்தில் அவை சரியானவையா,இல்லையா என்று நிச்சயிப்பதும் சாத்தியமாகாது.பின்னர்,அறிதலினுடைய வளர்ச்சிப் போக்கில் இரண்டாவது கட்டம்.அதாவது உணர்விலிருந்து மீண்டும் பருப்பொருளுக்கு கருத்துகளிலிருந்து மீண்டும் வாழ்வுக்கும் செல்லும் கட்டம் வருகின்றது.இந்தக் கட்டத்தில் தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் எல்லாம் எதிர்பார்த்த வெற்றியைத் தருகின்றனவா என்பதை நிச்சயிக்க,முதல் கட்டத்தில் ஈட்டப்பட்ட அறிவு சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கப்படுகின்றது.பொதுவாகச் சொன்னால்,எவை வெற்றி பெருகின்றனவோ அவை சரியானவை ; எவை தோல்வியடைகின்றனவோ அவை பிழையானவை ;குறிப்பாக இயற்கையுடன் மனிதன் நடத்தும் போராட்டத்தில் இது உண்மையாகும்.சமுதாயப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தை பிரதிநிதித்துவ படுத்தும் சக்திகள் சில வேளையில் தோல்வியடைகின்றன;காரணம்,அவர்களுடைய கருத்துகள் தவறானவை என்பதல்ல; மாறாக ,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சக்திகளின் சமநிலையில் தற்காலிகமாக முற்போக்கு சக்திகள் பிற்போக்கு சக்திகளைப் போல் அவ்வளவு பலம் பெற்றிருக்கவில்லை;எனவே அவை தற்காலிகமாக தோல்வியடைகின்றன.ஆனால் இன்றோ,நாளையோ அவை வாகை சூடுவது நிச்சயம்.அடுத்து,நடைமுறை சோதித்தல் மூலம் மனிதனுடைய அறிவில் இன்னொரு பாய்ச்சல் நிகழ்கின்றது.இந்த பாய்ச்சல் முன்னைய பாய்ச்சலிலும் பார்க்க முக்கியமானது.காரணம்,முதலாவது பாய்ச்சலில்,அதாவது பிறநிலை யதார்த்த உலகைப் பிரதிபலிக்கும் போக்கில் வகுக்கப்பட்ட கருத்துக்கள்,தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் ஆகியவற்றின் சரி பிழையை இந்த பாய்ச்சல் மட்டும் நிரூபிக்க முடியும்.இவை தவிர உண்மையை சோதித்தறியும் வழி வேறுகிடையாது.


பருப்பொருளிலிருந்து உணர்வுக்கும்,பின்னர் உணர்விலிருந்து பருப்பொருளுக்கும்,அதாவது நடைமுறையிலிருந்து அறிவுக்கும்,பின்னர் அறிவிலிருந்து நடைமுறைக்கும் சொல்லும் போக்கு திரும்பத் திரும்பப் பல தடவை நிகழ்ந்த பின்னர் மாத்திரம் ஒரு சரியான அறிவுக்கு வரக்கூடிய நிலை அடிக்கடி ஏற்படுகின்றது.இத்தகையது தான் அறிவு பற்றிய மார்க்சிய தத்துவம் அறிவு பற்றிய இயங்கியல் பொருள் முதல்வாத தத்துவம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

வசந்தம் said...

http://mllibray.blogspot.com/2011/10/1963.html
இந்த மொழி பெயர்ப்பு கட்டுரையை சுருக்கி வெளியிட்டது நன்று. அதையே தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், சரியானதாகவும் இருக்கும்.