உலகில் உள்ள உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டுமே ஆறாவது அறிவை உடைய
உயிரினம். இதனால் தான் மனிதர்கள் தமக்கிடையே உறவு முறைகளை உருவாக்கிக்
கொண்டார்கள். இந்த உறவு முறைகளை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்
உருவாக்கப்பட்டதாயினும், அவற்றை இன்றளவும் மனித குலம் கடைப்பிடித்து வருகிறது.
மனித இனம் இந்த பூமியில் உள்ள வரை இது தவிர்க்கவியலாத அம்சமாகும். ஏனென்றால் ஏனைய
உயிரினங்களிடையே, இனப்பெருக்க காலங்களில் ஏற்படும் ஒற்றுமையின்மை, சீர்குலைவு
ஆகியவற்றிலிருந்து மனித குலத்திற்கு இது மிகச் சிறந்த பாதுகாப்பளிக்கிறது.
மனித குலம் காலத்தின் தேவைக்கேற்ப பழையனகழிதலும், புதியன புகுதலும்
என்ற கோட்பாட்டை கடைபிடித்தாலும், இந்த உறவு முறைகள் என்றென்றும் இளமை மாறாமல்
இன்று வரை நீடித்து நிற்பதற்கு காரணம், அது மனித குல வளர்ச்சிக்கு என்றுமே தீங்கிழைத்ததில்லை.
இதிலிருந்து உறவு முறைகள் மனித வாழ்வின் தவிர்க்கவியலாத அங்கமாகி விட்ட பிறகு, அது
தேவையா என்று கேள்வி எழ வேண்டிய அவசியம் என்ன
என்று நீங்கள் கேட்பது எமக்குப் புரிகிறது.
ஆனால் அது தேவையில்லை என்று கூறும் ஒரு கும்பல் உருவாகி இருக்கிறது
என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா! ஆனால் இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
அப்படி ஒரு கும்பல் உருவாகி இருப்பது மட்டுமல்ல அது பகிரங்கமாக செயல்பட்டும்
வருகிறது. அது தனது செயலை நியாயப்படுத்துவதுடன், தமிழகத்தில் தம்மை முற்போக்கு,
புரட்சிகர சக்தி என்று கூறிக்கொண்டு திரியும் ஒரு கும்பலின் ஆதரவையும்
பெற்றுக்கொண்டதோடல்லாமல், அதன் ஓர் அங்கமாகியும் இருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் செயல் பட்ட கிராமம் ஒன்றில் சகோதர
உறவுடைய இருவர் ஊரை விட்டு ஓடி கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில
ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த மிருகங்கள் ஊருக்குள் நுழைய முயற்சித்த போது அதை நாங்கள்
தடுத்து நிறுத்தினோம். அதோடு இவைகள் எப்போதுமே ஊருக்குள் நுழையக்கூடாது என
நிரந்தரமாகவும் தடைவிதித்தோம்.
இப்படி நாங்கள் தடை விதித்தவுடன் எங்களோடு இருந்த அம்மிருகத்தின்
சகோதரன் ஒருவன் எங்களிடமிருந்து விலகிக்கொண்டதுடன், தம்மோடு பாலியல் ரீதியாக
சீரழிந்த சிலரையும் சேர்த்துக்கொண்டு ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
வரைமுறையற்றவர்கள் ஊருக்குள் நுழையக்கூடாது என்று நாங்கள்
தடைவிதித்தவுடன், அப்போது நாங்கள் செயல்பட்ட அமைப்பின் தலைமை எங்களின் செயல்பாட்டை
ஏற்க முடியாது என்று நிராகரித்தது.
நாங்கள் ஏனென்று கேட்ட போது உறவு முறைகள் என்பது காலத்தின் தேவைக்கேற்ப
மாறக்கூடியது. அதில் நாம் தலையிடக்கூடாது. இப்படி தலையிடுவதன் மூலம் அதை நம்மால்
தடுத்து நிறுத்த முடியாததுடன், அதனால் நமது வழமையான பணிகளும் பாதிக்கப்பட்டு நமது
இலக்கு திசை திரும்பி விடும் என்றனர்.
இதைப் போன்ற செயல்களை நாம் கண்டு கொள்ளாவிட்டால் மனித இனமே மிருகங்கள்
ஆகி விடுமே, அப்போது யாரிடம் போய் நமது இலக்கைப் பற்றி பேச முடியும்! என்று
நாங்கள் கேட்ட போது, ”நாங்கள்
சொல்வதை சொல்லிவிட்டோம், நீங்கள் நமது வேலைகளுக்கு பாதிப்பில்லாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்”, என்று
மிகவும் சாமர்த்தியமாக நழுவிக்கொண்டனர்.
இதைப் போன்ற பல்வேறு காரணங்களால் அந்த அமைப்பில் இருந்து கடந்த சில
மாதங்களுக்கு முன் நாங்கள் வெளியேறி விட்டோம். நாங்கள் வெளியேறியதும் மேற்கண்ட
சகோதர முறை திருமணத்தை ஆதரிக்கும் கும்பலை தமது அமைப்பில் இணைத்துக் கொண்டு ஆசி
வழங்கியுள்ளனர்.
தமக்கு தமிழகம் தழுவிய தலைமை கிடைத்து விட்ட பூரிப்பில், இக்கும்பலில்
உள்ள மேலும் மிருகம் தனது தங்கை முறை பெண்ணோடு திருமண உறவுக்கு கால் கோல் விழா
நடத்திருக்கிறது.
மேற்கண்ட தகவல் எமக்கு கிடைத்து விட்டது என்பதை அந்த கும்பல் தெரிந்து கொண்டவுடன், தமது நோக்கத்திற்கு எங்களால்
இடையூறு ஏற்படும் என்பதை கணித்து எம்மை பயமுறுத்த முயற்சிக்கிறது.
·
இந்த விடயத்தில் நாம் கவனிக்க
வேண்டிய முக்கியமான அம்சம் சீரழிவுக் கும்பல் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள
பகிரங்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
·
ஆனால் சகோதர திருமண உறவை எதிர்ப்பவர்கள்தான் சமூகத்தில் பெரும்பான்மை
என்றாலும் இவர்கள் தமக்கிடையே ஒருங்கிணைப்பின்றி பிரிந்து கிடக்கின்றனர்.
பெரும்பான்மை மக்களின் இந்த சமூக அக்கறையற்ற போக்கு, குறிப்பிட்ட இந்த
விடயத்தில் மட்டுமல்ல, அனைத்து விடயங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. இதுதான்
சமூகத்தின் அனைத்து அங்கங்களிலும் நடைபெறும் எல்லாவித அநீதி, அக்கரமங்களுக்கும்
உந்து சக்தியாக சமூக விரோதிகளுக்கு பயன்படுகிறது.
சகோதர உறவு முறைக்குள் திருமண உறவு கொள்வது என்பது எங்கோ ஓரிடத்தில்
அரிதாய் நடைபெறும் செயல் என்பதற்கு மாறாக, இம்மிருகத்தனம் இப்போது பரவலாக நாடு
முழுக்கவே தென்பட ஆரம்பித்து விட்டது. இது உருவாவதற்கான சமூக அடிப்படையும்
நிலவுகிறது. வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்ற கோட்பாடுதான் இதற்கான அடித்தளமாகும்.
இதைத்தான் இன்றைய திரைப்படங்கள், தொலைக்காட்சிகளின் ஊடாக வலுவாக சமூகத்தின் மீது
திணிக்கப்படுகின்றது.
வயிற்றுப் பசியைப்போன்று, காமமும் ஒருவித பசிதான், இவற்றை போக்கிக்
கொள்வதற்கு தடையேதும் இருக்கக் கூடாது.
அப்படிபட்ட தடையான உறவு, முறைகள் தேவையில்லை என்பதுதான் இது போன்ற கும்பல்களின்
நிலை.
காமப் பசிக்கு அண்ணன் தங்கை என்ற கட்டுப்பாடு கூடாது என்றால்,
வயிற்றுப் பசிக்கு இன்று புழக்கத்தில் உள்ள உணவு முறைகள் என்ற கட்டுப்பாடு தேவையா?
இக்கட்டுப்பாட்டை மீறி பன்றியைப் போல இவர்கள் பீயைத் திண்பார்களா என்றுதானே
கேட்கிறீர்கள்!
இந்தக் கேள்வியை சகோதர உறவு முறைக்குள் திருமண உறவை ஆதரித்து
நடைமுறைப்படுத்தும் கும்பலை தம்மோடு இணைத்துக் கொண்டு தமது பலத்தை பன்மடங்கு
அதிகரித்துக் கொண்டுள்ளதாகக் கருதும் ம.க.இ.க வினரை பார்த்தால் கேளுங்கள்!
அதோடு உங்கள் கருத்துக்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்படிச்செய்தால் புரட்சியாளர்கள் நம்மை பிற்போக்கு வாதிகள் என்று முத்திரை
குத்துவார்கள் என்று தானே யோசிக்கிறீர்கள். பரவாயில்லை நாம் அப்படிப் பட்டவர்களாகவே
இருந்து விட்டு போவோம்!
4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2
தொடர்புடைய கட்டுரைகள்:
3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1

0 comments:
Post a Comment