விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Saturday, 19 November 2011

பேருந்து,பால்விலை உயர்வு:நாய் என்றால் குரைக்கும்…கழுதை என்றால் உதைக்கும்...!

மாமா ஆட்சியாளர்கள் என்றால் மக்களின் வாழ்வை பறிப்பார்கள்! மேற்கண்டவைகள் இவைகளின் இயற்கை குணாம்சங்கள்.நவம்பர் 17- அன்று தமிழக அமைச்சரவை, ஜெயா தலைமையில் கூடி பேருந்துக் கட்டணம் உயர்வு,பால் விலை உயர்வு ஆகியவற்றை அறிவித்து, அன்று நள்ளிரவே அவைகள் நடைமுறைக்கும் வந்துவிட்டன.

1947 ஆட்சி மாற்றம் நள்ளிரவில்தான் நடந்தது.அதனால் தானோ என்னவோ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்கள் அனைத்துமே, மக்கள் நன்றாக உறங்கும் நள்ளிரவில்தான் நடைமுறைக்கு வருகிறது.விரைவில் மின்கட்டணத்தையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தப் போவதாகவும் மக்களின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார்.



நவம்பர்- 18 அன்று காலை வழக்கம் போல, அனைத்து கட்சித் தலைவர்களும், இது மக்கள் விரோத செயல் என்று அறிக்கை விட்டுள்ளனர்.இதில் கருணாநிதியும்,காங்கிரஸ்காரர்களும் அடக்கம்.கருணாநிதி ஆட்சி காலத்தில் பேருந்துக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் மறைமுகமாக ஏற்றினார்.சாதாரணக்கட்டணத்தில் இயங்கும் ஒன்றிரண்டு பேருந்துகளை மட்டும் சாலையில் ஓடவிட்டுவிட்டு, எஞ்சியவற்றை பல்வேறு ரக பேருந்துகளாக தரம் பிரித்து பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினார்.

அந்த உத்தமர்தான் இப்போது ஜெயாவின் விலைவாசி உயர்வு அறிவிப்பை மக்கள் விரோத செயல் என்றகிறார்.கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்றப் பெயரில் ஏழைகளை அந்த வலையில் சிக்க வைத்துவிட்டு, சிமெண்ட்,செங்கல்,கம்பி ஆகியவற்றின் விலையை பன்மடங்கு உயர்த்தி ஏழைகளை நடுத்தெருவில் நிறுத்தியதுடன்,கடன்காரர்களாகவும் ஆக்கியவர். கருணாநிதி மக்களின் கழுத்தை ஒசை படாமல் அறுப்பவர்.ஆனால் ஜெயாவோ ஆரவாரமாக அறிவித்து மக்களின் கழுத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு பலிகொடுக்கிறார்.

நிலப்பிரபு மூப்பனாரின் வாரிசு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இந்த விலை உயர்வு 
சாதாரண மக்களை பாதிக்கும் என்று வெட்கமே இல்லாமல் பத்திரிக்கைகளுக்கும்,தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி அளிக்கிறார்.மத்தியில் ஆட்சியாளும் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் பெட்ரோல்,டீசல்,சமையல் எரி வாயுவின் விலை உயர்வை நியாயப்படுத்தும், இந்த காங்கிரஸ் கழிசடை,தமிழகத்தில் பேருந்துக் கட்டண,பால் விலை உயர்வை எதிர்ப்பதாக நாடகம் ஆடுகிறது.

போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் தாங்கள் ஆண்ட மாநிலங்களில் விலையை உயர்த்திவிட்டு, இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று ஜெயாவைப் போன்றே தமது செயல்களுக்கு நியாயம் கற்பித்து கொண்டார்கள்.ஆனால் தாங்கள் ஆளாத மாநிலங்களில் விலை ஏற்றத்தை எதிர்ப்பதாக ஊளையிடுகிறார்கள்.

ஒவ்வொரு ஓட்டு சீட்டு அரசியல் கட்சியும் எதிர்கட்சியாக இருக்கும் போது, விலை உயர்வை எதிர்ப்பதும்,ஆளும் கட்சியாக மாறியதும் விலை உயர்வை நியாயப்படுத்துவதும் தமது வழக்கமான செயல்களாக கொண்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள 100 கோடி உழைக்கும் மக்களும் நாட்டிற்கு தேவையற்றவர்களாக ஆட்சியாளர்கள் அனைவரும் கருதுகின்றனர்.தமக்கு ஓட்டுப் போடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தான் மக்கள்.இந்த 100 கோடி மக்களின் உழைப்பையும், நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் அமெரிக்க,ஐரோப்பிய நாட்டு  கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டுவதற்கும்,கொள்ளை அடிப்பதற்கும் இந்த மக்கள் விரோத கும்பலான முதலாளி மாமாக்களும்,ஆட்சி,அதிகாரத்தில் உள்ள மாமாக்களும்,அதிகார வர்க்க மாமாக்களும் அனுமதித்துவிட்டு, அதற்கு கைமாறாக பல்லாயிரம் கோடி ரூபாய்களை பெற்றுக்கொண்டு, அதை அன்னிய வங்கிகளில் மறைத்து வைத்துக்கொண்டு சொகுசாக வாழுகின்றனர்.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களான விவசாயம்,சில்லரை வியாபாரம்.சிறு தொழில்கள்,ஆடு,மாடு,கோழி என அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளே செய்வதற்கும், அவர்களே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றுவதற்கும், முன்னோட்டமாக விலைவாசி உயர்வை மக்கள் விரோத ஆட்சியாளர்கள் அறிவிக்கின்றனர்.

மேற்கண்ட மக்கள் விரோத கொள்கைகள்தான், நாட்டை முன்னேற்றுவதற்கான சிறந்தப் பாதை என்று ஆட்சியாளர்கள் சித்தரிக்கின்றனர்.கூடங்குளத்தில் அணு உலைப் பற்றிய தமிழக மக்களின் அச்சத்தை போக்க வக்கற்ற மாமா மன்மோகன்சிங், அமெரிக்க முதலீட்டாளர்களின் அச்சம் நீக்கப்படும் என அமெரிக்க அதிபரின் அகம் மகிழ அறிவித்துள்ளார்.அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் இந்தியாவில் அணு உலை அமைக்க வழங்கும் கருவிகள்,மூலப் பொருட்கள் உள்ளிட்டவைகளில் உத்திரவாதம் அளித்துள்ள காலத்திற்கு பின் விபத்து ஏற்பட்டால், அதற்கு அந்த நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று மிகவும் விசுவாசமாக வாலை ஆட்டியுள்ளார் மாமா.
மேலே கண்ட கொள்கைகள்தான் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கொள்கையாக கொண்டுள்ளன.தாங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது, இதை எதிர்ப்பதாக நாடகம் ஆடிவிட்டு, ஆளும் கட்சியானதும் நடைமுறைப்படுத்துகின்றனர்.

மக்கள்தான் சொரணையற்றவர்களாக, மாற்று தெரியாதவர்களாக எப்படியாவது வாழ்ந்து விட முடியும் என்று கனவு காண்கின்றனர்.ஒருவர் மாற்றி ஒருவருக்கு மாறி,மாறி ஓட்டுப் போடுகின்றனர்.

ஓட்டுப் பொறுக்கிகள் தம்மைப் போன்றே தமக்கு வாக்களிப்பவர்களையும் மாற்றிவிட்டார்கள் என்பதற்கு ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தல்களும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

எனவே,விலைவாசி உயர்வை எதிர்க்கிற அருகதையை,தார்மீக பலத்தை மக்கள் இழந்துவிட்டனர் என்பதை ஆட்சியாளர்களும்,ஓட்டுப் பொறுக்கிகளும் மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.இந்த தைரியத்தில்தான் எவ்வித அச்சமும்,கூச்சமும் இன்றி விலையை உயர்த்துகின்றனர்.

கருணாநிதியும்,ஜெயாவும் ஒவ்வொரு ஓட்டையும் விலை கொடுத்துதான் வாங்கியுள்ளனர்.ஒரு முறைக்கு மேல் மக்கள் தமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று அறிந்தே வைத்துள்ளனர்.எனவே ஐந்தாண்டு ஓய்வுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு தேவையான பணத்தையும்,பல தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களையும் குவித்துக்கொள்கின்றனர்.

எல்லா ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளும் மக்கள் விரோதசக்திகள்தான். மக்கள் விரோத கொள்கைகளைத்தான் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியும்.

இதைப் பார்த்து புலம்புவதைத் தவிர வேறு எதையும் மக்களால் செய்ய முடியாது.அடுத்த முறை தங்களால் தூக்கி எரியப்பட்ட கருணாநிதிக்கு வாக்களிப்பார்கள்.அதற்கு அடுத்த முறை ஜெயாவுக்கு வாக்களிப்பார்கள்.

சொரணை அற்றவர்களாக மக்கள் இருக்கும் வரை,இதற்கு விடிவே இல்லை.ஜனநாயக சிந்தனையின் சாயல் கூட நமது மக்களிடையே கிடையாது.

ஆனால் மேலை நாட்டு மக்களோ, தத்தமது நாடுகளில் தமது சொந்த அனுபவத்தின் மூலமே, தமது நாட்டு ஆட்சியாளர்களை எதிர்த்து வீதிகளில் லட்சக்கணக்கில் திரளுகின்றனர்.தமது நாட்டின் ஆட்சியாளர்களை மிரள வைக்கிக்கின்றனர்.

இதைப்போன்று நமது நாட்டு மக்களையும் உருவாக்கும் அடிப்படையான பணியில், நாம் ஈடுபட வேண்டும்.நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக சிந்தனையை உருவாக்குவதுதான் சமூக அக்கறையுள்ளவர்களின் தலையாய உடனடிப் பணியாகும்.

இதை சாதிக்காமல் விலை உயர்வை எதிர்ப்பதாக கும்பலோடு சேர்ந்துகொண்டு கோவிந்தா போடுவதன் மூலம் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.மக்களுக்கு ஜனநாயக சிந்தனையை ஊட்ட மக்களின் வாழ்நிலையில் இருந்து ஆக்கப்பூர்வமான மாற்றுத்திட்ட்த்தை முன்வைக்காமல் இதை சாதிப்பது சாத்தியமும் இல்லை.

மக்களுக்கு புரியாத மொழியில்,மக்களின் வாழ்நிலையில் இருந்து மாற்றுத்திட்டம் எதுவும் இன்றி அமெரிக்க,ஐரோப்பிய மக்களிடம் பேசவதைப் போன்று, நமது நாட்டு பின் தங்கிய மக்களிடம் பேசி மக்களை வெறுமனே உண்டியலில் காசு போடுபவர்களாக மட்டுமே பார்க்கும் பார்வையுள்ளவர்கள்தான், தங்களை புரட்சியாளர்கள் என்று தமிழகத்தில் மார்தட்டிக்கொள்கின்றனர்.எவ்வித அரசுப் பதவியும் இன்றியே ஆபத்தற்ற வகையில் லட்சாதிபதியாகி உலகிலுள்ள புரட்சியாளர்கள் அனைவருக்கும், முன்னோடிகளாக,எடுத்துக்காட்டுகளாக உருவாகி வலம்வருகின்றனர்.

நாடெங்கும் அவன் ஊழல் செய்தான்,இவன் ஊழல் செய்தான் என்று பக்கம்,பக்கமாக எழுதிக் கிழிக்கும் இப்புரட்சியாளர்கள், தாங்கள் லட்சாதிபதியாகும் ரகசியத்தை மட்டும் சொல்ல முடியாது என்கிறார்கள்.இந்த புரட்சியாளர்களில் ஒருவர் இரண்டே மாதத்தில் அரை கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.இவரும், இவரை போன்றவர்களும்தான் இப்போதைய ஜெயாவின் விலை உயர்வு அறிவிப்பை எதிர்ப்பதாக மார்தட்டி கொள்கிறார்கள்.மக்களே அணிதிரளுங்கள் என்று அறை கூவல் விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் புரட்சியாளர்களாக வலம் வரும்போது,இவர்களின் அறை கூவலை மக்கள் எப்படி ஏற்பார்கள்,நம்புவார்கள்? எவனும் யோக்கியன் இல்லை என்று மக்கள் கருதுவதில் தவறேதுமில்லை.இவர்களைப் பார்த்து ஒதுங்கிப்போவதும் இதை தடுப்பதற்கான சிறந்த வழியுமில்லை.மக்களின் ஒதுங்கும் போக்குதான் இப்படிபட்டவர்களுக்கான  சமூக அடித்தளமாகும்.

அப்படிப் பட்ட புரட்சியாளர்கள் யார் என்கிறீர்களா? அவர்கள்தான் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பினாமி அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பாகும்.இந்த உத்தம முதலாளிகளின் தயவில்தான் புரட்சியாளர்கள் சொகுசான வாழ்க்கை வாழுகின்றனர்.

இப்படிப்பட்ட போலி புரட்சியாளர்களை கண்டு உழைக்கும் மக்களே ஒதுங்கிப் போகாதீர்கள்.கோடிஸ்வர்களும்,லட்சாதிபதிகளும் தங்களுக்குள் ஆயிரம் கழுத்தறுப்புகள் இருந்தாலும் நம்மை ஏய்ப்பதில் மட்டும் ஒன்றுபட்டு நிற்கின்ற்னர்.இவர்களால் பஞ்சை பராரிகளாக ஆக்கபடும் நாமோ பிரிந்துகிடக்கிறோம்.

இனி நாம் இந்த நாட்டில் வாழவேண்டுமானால், நாம் ஒன்றுபட்டு அமைப்பாய் திரளுவதைத்தவிர வேறு வழியில்லை.இதை சாதிக்காமல் விலைவாசி உயர்வை தடுப்பதும் சாத்தியமில்லை!

தொடர்புக்கு:9842529188


தொடர்புடைய கட்டுரைகள்:



3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2









     

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

SURYAJEEVA said...

உண்மையான மக்கள் நலன் நாடும் நபர்கள் இதற்க்கு ஒரு மாற்றி யோசிக்க வேண்டும்.. பெரும் விவாதம் நடக்க வேண்டும்.. எது சரி எது தவறு என்று ஆராயப் பட வேண்டும்... மக்களை குறை கூறுவதும், மற்ற அமைப்புகளை குறை கூறுவதையும் விட்டு விட்டு.. இதற்க்கு என்ன மாற்று வழி இருக்கிறது என்று முன் மொழிய வேண்டும்... அதற்க்கு இனைய தளம் அருமையான விவாத களம்.. தனி நபர் தாக்கு இல்லாமல் இந்த விவாதம் நடை பெற்றால் சிறப்பே

suraavali said...

தோழர் suryajeeva அவர்களுக்கு தங்களின் ஆலோசனைக்கு நன்றி.இதற்கான பதிலை நாளை ஒரு இடுக்கையாவே வெளியிடுகிறோம்.
தொடர்ந்து விவாதிப்போம்.ஆக்கபூர்வமான விவாதத்திற்கு நன்றி.